Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
2 posters
Page 1 of 1
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஜெ., அமைச்சர் நீக்கம் இன்றுடன் 19 வது முறை என்பது முக்கிய இடம் பிடிக்கிறது.
தமிழக முதல்வர் ஜெ., இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்படுவதாகவும், இவருக்கு பதிலாக பி.வி.,ரமணா நியமிக்கப்படுவதாகவும், இவர் இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்த வரை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இவரது மகன்கள் கண்ணதாசன், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பல்வேறு அரசு துறை பணிகள் டெண்டருக்கு தனி கமிஷன் கலெக்சன் பண்ணி வந்தனராம். மேலும் மணல் வளம் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரேதாமாக குவாரிகளை கொண்டு கொள்ளை லாபம் அடித்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் குவாரிகள் தி.மு.க.,காரர்களுக்கு வழங்கிட அமைச்சர் துணை போனார் என்றும் ஒரு தரப்பு கூறப்படுகிறது. கட்சியில் பொறுப்புகள் வாங்கி தரவேண்டுமென்றால் மாவட்ட செயலராக இருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு ஒரு தொகை கல்லா கட்ட வேண்டுமாம். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு : சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது. வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் அருகே, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுரேஷ்பாபு, 35, ராணிபேட்டை அன்பு, 24 ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பாலைத் திருட, ஒரு வாகனத்தில் கேன்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர். இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது.
சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
பால்வளத்துறை அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பி.விரமணா புதிய அமைச்சரானார்.கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..
முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி. ரமணா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்..
பால்வளத்துறை அமைச்சர் வி. மூர்த்தி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நேற்றுமுன்தினம் விடுவித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவிப்பு விடுத்திருந்தார்.அதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்று அமைச்சர் பொறுப்பிலிருந்து வி. மூர்த்தியை விடுவித்திருப்பதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.இதை தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.ரமணாவை புதிய அமைச்சராக முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் கவர்னர் நியமனம் செய்திருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை மாதவரம் வி. மூர்த்தி வகித்து வந்த பால்வளத்துறையை பி.வி.ரமணாவுக்கு ஒதுக்கியிருப்பதாகவும் கவர்னர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்தது.
நேற்றுமாலை 6.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பி.வி. ரமணாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பி.விரமணா பதவிப்பிரமாணம் எடுத்துக் .கொண்டார் இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் எம்,எல்.ஏக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்
.நேற்றுமுன்தினம் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவிப்பு விடுத்திருந்தார்.திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தை இரண்டு மாவட்டமாக பிரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக புதிய அமைச்சராக பதவியேற்கும் பி.வி.ரமணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி (தனி), ஆவடி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுகவின் செயலாளராக சிறுணியம் பி. பலராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பொன்னேரி (தனி), மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பி.விரமணா புதிய அமைச்சரானார்.கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..
முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி. ரமணா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்..
பால்வளத்துறை அமைச்சர் வி. மூர்த்தி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நேற்றுமுன்தினம் விடுவித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவிப்பு விடுத்திருந்தார்.அதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்று அமைச்சர் பொறுப்பிலிருந்து வி. மூர்த்தியை விடுவித்திருப்பதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.இதை தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.ரமணாவை புதிய அமைச்சராக முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் கவர்னர் நியமனம் செய்திருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை மாதவரம் வி. மூர்த்தி வகித்து வந்த பால்வளத்துறையை பி.வி.ரமணாவுக்கு ஒதுக்கியிருப்பதாகவும் கவர்னர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்தது.
நேற்றுமாலை 6.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பி.வி. ரமணாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பி.விரமணா பதவிப்பிரமாணம் எடுத்துக் .கொண்டார் இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் எம்,எல்.ஏக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்
.நேற்றுமுன்தினம் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவிப்பு விடுத்திருந்தார்.திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தை இரண்டு மாவட்டமாக பிரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக புதிய அமைச்சராக பதவியேற்கும் பி.வி.ரமணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி (தனி), ஆவடி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுகவின் செயலாளராக சிறுணியம் பி. பலராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பொன்னேரி (தனி), மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக
கூறப்படுகிறது.
-
இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே
காரணமாக இருந்துள்ளாராம்....
-
கூறப்படுகிறது.
-
இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே
காரணமாக இருந்துள்ளாராம்....
-
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|