புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சலீம் - விமர்சனம்
Page 1 of 1 •
"நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!!
கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்!
விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல!
புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.
சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்!
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது!
மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!
தினமலர் விமர்சனம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திரை விமர்சனம்: சலீம் : இந்து டாக்கீஸ் குழு
ஒரு டாக்டர், கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரிகிறான். மருத்துவத் தொழிலை உன்னதமான சேவையாகக் கருதும் அவன், ஏழைகளுக்குக் குறைந்த விலை மருந்துகளை எழுதிக் கொடுப்பது, அனாவசிய மருத்துகளைப் பரிந்துரை செய்யாமல் இருப்பது என்று செயல்படுகிறான். நிஷா என்னும் பெண்ணை அவனுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.
நிஷா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் படபடக்கும் பெண். தொழிலில் இவனுக்கு இருக்கும் அதீத ஈடுபாடு, அவனுடைய அளவுக்கதிகமான பொறுமை ஆகியவை அவளை வெறுப்படையச் செய்கின்றன. இவர்களுக்கிடையேயான ஒவ்வொரு சந்திப்பும் பிரச்சினையில் முடிகிறது.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் ஒரு பெண்ணைத் தற்செயலாகப் பார்க்கும் சலீம், அவளுக்கு மருத்துவம் செய்கிறான். ஆனால் அவளுக்கு அநீதி இழைத்தவர்களை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சலீமின் போக்கு தங்களுக்கு ஒத்துவராததால் மருத்துவமனை நிர்வாகம் அவனை வெளியே அனுப்புகிறது. காதலியும் அவனைப் புறக்கணிக்கிறாள். அவமானமும் புறக்கணிப்பும் வெறுப்பின் உச்சத்துக்கு அவனை இட்டுச் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் வெடிக்கிறான். அந்த வெடிப்பு அவனை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே மீதிக் கதை.
முதல் பாதி முழுவதும் அவமானம், புறக்கணிப்பு, நல்லுணர்வின் வீணான முயற்சிகள் என நகரும் படம் பின் பகுதியில் த்ரில்லராக முகம் மாறுகிறது. அமைச்சரின் பையனையும் அவன் நண்பர்களையும் பிடித்துவைத்துக்கொண்டு ஆடும் விறுவிறுப்பான ஆட்டமாக உருவெடுக்கிறது. முக்கியமான சமூகப் பிரச்சினையைக் கையாளும் படம், அதை த்ரில்லர் வகையில் கையாண்டிருந்தாலும் முதல் பாதி உதிரிச் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது. உறவுச் சிக்கல்கள், தொழில் நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை முதல் பாதி கையாள்கிறது. இரண்டாம் பாதி ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.
சாது மிரண்டால்... என்பதற்கு ஏற்ற கதையும் அதற்கேற்ற பாத்திரப் படைப்பும் தமிழ்த் திரையில் புதிதல்ல. எனவே படம் புதிய அனுபவம் எதையும் தரவில்லை. சாது நாயகன் வீர அவதாரம் எடுக்கும்போது சூர சம்ஹாரம் செய்யும் பராக்கிரமசாலியாகக் காட்டாமல் புத்திசாலித்தனத்தையும் சேர்த்திருப்பது ஆறுதல். முன் பாதியில் காட்டப்பட்ட பிரச்சினையைப் பிற்பகுதியில் கவனமாகக் கோர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
இயக்குநர் என்.வி. நிர்மல் குமார் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் படம் முழுவதும் ஒரு ஓட்டலுக்குள்ளேயே நடந்தாலும் வேகம் குறையவில்லை. பிணைக் கைதிகளைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு பேசும் பேரங்களும் அப்போது நடக்கும் திருப்பங்களும் விறுவிறுப்பாக உள்ளன.
நாயகனின் உருமாற்றத்திற்கான காட்சிகள் வலுவாக அமையவில்லை. இரவு பார்ட்டியிலிருந்து வெளியே வந்து போலீஸிடம் மாட்டிக்கொள்வது, போலீஸிடமிருந்து தப்பிப்பது ஆகிய காட்சிகள் வலுவாக அமையவில்லை; கவரவில்லை. பிணைக் கைதிகளை விடுவித்து, வில்லனின் தாக்குதலிலிருந்தும் தப்பிக்கும் சலீம் தனியாக நிற்கும் காட்சியில் தொடரும் என்று போட்டு முடிக்கிறார்கள். இவனைப் பற்றிச் சகல விவரங்களும் அறிந்த போலீஸிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதை அடுத்த படத்தில் காட்டுவார்களோ?
கைதிகளைப் பிடித்துவைத்திருப்பவன் பெயர் சலீம் என்றதும் அவனை பயங்கரவாதி எனச் சந்தேகப்படும் போலீஸ் அதிகாரிக்கு சலீம் தரும் பதில் நச்சென்று உள்ளது.
விஜய் ஆண்டனி நல்ல தேர்வு. இறுக்கமான அமைதி பொருந்திய அவரது முகம் இந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. ஆனால் அவர் முகபாவங்களில் மாற்றங்களைப் பார்க்கவே முடியவில்லை. நுட்பமான நடிப்பு என்றால் சலனமே இல்லாத நடிப்பு என்று நினைத்துவிட்டார்போல.
பூசினாற்போன்ற தோற்றம் கொண்ட அக்ஷா பர்தசானி சட்டுச் சட்டென்று மாறும் முக பாவங்கள் மூலம் கவனிக்கவைக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படும் பெண்ணைச் சரியாகவே பிரதிபலிக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தில் நிற்கும்படி செய்திருக்கிறார்.
மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்.ஆர். மனோகர் நன்றாக நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இசையில் மஸ்காரா பாடல் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல இதிலும் பெண்களைக் காதல் துரோகிகளாகச் சித்தரிக்கும் பாடல் இருக்கிறது. ஆனால் அதைக் கதைக்குள் கொண்டுவராமல் தந்திரமாகப் புகுத்தியிருக்கிறார்கள்.
முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சலீம் அழுத்தமான தடம் பதித்திருப்பான்.
ஒரு டாக்டர், கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரிகிறான். மருத்துவத் தொழிலை உன்னதமான சேவையாகக் கருதும் அவன், ஏழைகளுக்குக் குறைந்த விலை மருந்துகளை எழுதிக் கொடுப்பது, அனாவசிய மருத்துகளைப் பரிந்துரை செய்யாமல் இருப்பது என்று செயல்படுகிறான். நிஷா என்னும் பெண்ணை அவனுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.
நிஷா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் படபடக்கும் பெண். தொழிலில் இவனுக்கு இருக்கும் அதீத ஈடுபாடு, அவனுடைய அளவுக்கதிகமான பொறுமை ஆகியவை அவளை வெறுப்படையச் செய்கின்றன. இவர்களுக்கிடையேயான ஒவ்வொரு சந்திப்பும் பிரச்சினையில் முடிகிறது.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் ஒரு பெண்ணைத் தற்செயலாகப் பார்க்கும் சலீம், அவளுக்கு மருத்துவம் செய்கிறான். ஆனால் அவளுக்கு அநீதி இழைத்தவர்களை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சலீமின் போக்கு தங்களுக்கு ஒத்துவராததால் மருத்துவமனை நிர்வாகம் அவனை வெளியே அனுப்புகிறது. காதலியும் அவனைப் புறக்கணிக்கிறாள். அவமானமும் புறக்கணிப்பும் வெறுப்பின் உச்சத்துக்கு அவனை இட்டுச் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் வெடிக்கிறான். அந்த வெடிப்பு அவனை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே மீதிக் கதை.
முதல் பாதி முழுவதும் அவமானம், புறக்கணிப்பு, நல்லுணர்வின் வீணான முயற்சிகள் என நகரும் படம் பின் பகுதியில் த்ரில்லராக முகம் மாறுகிறது. அமைச்சரின் பையனையும் அவன் நண்பர்களையும் பிடித்துவைத்துக்கொண்டு ஆடும் விறுவிறுப்பான ஆட்டமாக உருவெடுக்கிறது. முக்கியமான சமூகப் பிரச்சினையைக் கையாளும் படம், அதை த்ரில்லர் வகையில் கையாண்டிருந்தாலும் முதல் பாதி உதிரிச் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது. உறவுச் சிக்கல்கள், தொழில் நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை முதல் பாதி கையாள்கிறது. இரண்டாம் பாதி ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.
சாது மிரண்டால்... என்பதற்கு ஏற்ற கதையும் அதற்கேற்ற பாத்திரப் படைப்பும் தமிழ்த் திரையில் புதிதல்ல. எனவே படம் புதிய அனுபவம் எதையும் தரவில்லை. சாது நாயகன் வீர அவதாரம் எடுக்கும்போது சூர சம்ஹாரம் செய்யும் பராக்கிரமசாலியாகக் காட்டாமல் புத்திசாலித்தனத்தையும் சேர்த்திருப்பது ஆறுதல். முன் பாதியில் காட்டப்பட்ட பிரச்சினையைப் பிற்பகுதியில் கவனமாகக் கோர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
இயக்குநர் என்.வி. நிர்மல் குமார் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் படம் முழுவதும் ஒரு ஓட்டலுக்குள்ளேயே நடந்தாலும் வேகம் குறையவில்லை. பிணைக் கைதிகளைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு பேசும் பேரங்களும் அப்போது நடக்கும் திருப்பங்களும் விறுவிறுப்பாக உள்ளன.
நாயகனின் உருமாற்றத்திற்கான காட்சிகள் வலுவாக அமையவில்லை. இரவு பார்ட்டியிலிருந்து வெளியே வந்து போலீஸிடம் மாட்டிக்கொள்வது, போலீஸிடமிருந்து தப்பிப்பது ஆகிய காட்சிகள் வலுவாக அமையவில்லை; கவரவில்லை. பிணைக் கைதிகளை விடுவித்து, வில்லனின் தாக்குதலிலிருந்தும் தப்பிக்கும் சலீம் தனியாக நிற்கும் காட்சியில் தொடரும் என்று போட்டு முடிக்கிறார்கள். இவனைப் பற்றிச் சகல விவரங்களும் அறிந்த போலீஸிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதை அடுத்த படத்தில் காட்டுவார்களோ?
கைதிகளைப் பிடித்துவைத்திருப்பவன் பெயர் சலீம் என்றதும் அவனை பயங்கரவாதி எனச் சந்தேகப்படும் போலீஸ் அதிகாரிக்கு சலீம் தரும் பதில் நச்சென்று உள்ளது.
விஜய் ஆண்டனி நல்ல தேர்வு. இறுக்கமான அமைதி பொருந்திய அவரது முகம் இந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. ஆனால் அவர் முகபாவங்களில் மாற்றங்களைப் பார்க்கவே முடியவில்லை. நுட்பமான நடிப்பு என்றால் சலனமே இல்லாத நடிப்பு என்று நினைத்துவிட்டார்போல.
பூசினாற்போன்ற தோற்றம் கொண்ட அக்ஷா பர்தசானி சட்டுச் சட்டென்று மாறும் முக பாவங்கள் மூலம் கவனிக்கவைக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படும் பெண்ணைச் சரியாகவே பிரதிபலிக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தில் நிற்கும்படி செய்திருக்கிறார்.
மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்.ஆர். மனோகர் நன்றாக நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இசையில் மஸ்காரா பாடல் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல இதிலும் பெண்களைக் காதல் துரோகிகளாகச் சித்தரிக்கும் பாடல் இருக்கிறது. ஆனால் அதைக் கதைக்குள் கொண்டுவராமல் தந்திரமாகப் புகுத்தியிருக்கிறார்கள்.
முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சலீம் அழுத்தமான தடம் பதித்திருப்பான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நன்றி
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
சலீம் - திரை விமர்சனம் - வெப்துனியா
அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் நேர்மையான மருத்துவர் ஒருவர், சமூகத்தின் குற்றவாளிகளைத் தோலுரிப்பதற்காகத் துப்பாக்கி பிடிக்கும் படம்.
கார்ப்பரேட் மருத்துவமனையில் மருத்துவராகச் சலீம் என்ற பாத்திரத்தில் விஜய் ஆண்டனி. அன்பு, கனிவு, நேர்மை, பொறுமை என அனைத்து நல்ல குணங்களும் கொண்டவர். ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து, அவர்கள் தரும் ஐந்து ரூபாயைப் பெற்றுக் கொள்கிறார். குறைந்த விலையில் உள்ள தரமான மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். மருத்துவமனையில் தங்காமல், வீட்டிலேயே தங்கி வைத்தியம் பார்க்கலாம் என ஆலோசனை வழங்குகிறார்.
மருத்துவமனையில்தான் அப்படி என்றால், வெளியில் இன்னும் ஒரு படி மேலே. ஆதரவற்றவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கிறார். அநாதை இல்லத்துக்குச் சென்று உதவுகிறார். தன் வீட்டுக்கு வெளியே தன் காரை எடுக்க முடியாமல், குறுக்கே அவரது காரை நிறுத்தியிருக்கும் எதிர் வீட்டுக்காரருடன் சண்டைக்குப் போகாமல், ஷேர் ஆட்டோவில் வேலைக்குப் போகிறார்.
இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணே, அக்ஷா பர்தசானி. வளமான உடற்கட்டுடன் அழகான சிரிப்பை அவர் வீசும்போது, முதல் காட்சியிலேயே வசீகரிக்கிறார். துடுக்குத்தனமும் படபடப்பும் முன்கோபமும் கொண்ட பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். அவசர சிகிச்சையின் காரணமாகச் சலீம் தாமதமாக வருவதும் குறித்த நேரத்தில் வராமல் போவதுமாக இருக்க, கோபத்தில் பட் படார் என்று வெடிக்கிறார்.
இந்நிலையில், பாலியல் வன்முறையால் சிதைக்கப்பட்டு, சாலையோர முட்புதர்களுக்கு நடுவே கிடைக்கும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவம் பார்க்கிறார். அது அவரது வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது.
இதற்கிடையே, சலீமுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், சலீமை மணக்க மறுக்கிறார். "நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" எனச் சலீம் கேட்க, "நீங்க தப்பே பண்றதில்லை. அதுதான் பிரச்சினையே. எப்போதும் அமைதியா, பொறுமையா, நேர்மையாக இருந்தால், வாழ்க்கையில் ஒரு பெப்பர் அண்ட் சால்டே இருக்காது. அதனால் வேண்டாம்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
அதே சமயம், சலீமின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போக, மருத்துவமனை முதலாளி, அவரை வேலை விட்டு நீக்குகிறார். இந்த விரக்தியில் தண்ணி அடித்துவிட்டு, நடுவீதியில் நின்றுகொண்டு, 'நோ எண்ட்ரி'யில் செல்பவரை நிறுத்தி அறிவுரை சொல்கிறார். அந்த நபர், காவல் துறை அதிகாரியாக இருந்துவிட, இவரைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கிறார். அவரிடமிருந்து அவர் துப்பாக்கியுடன் தப்பிக்கும் சலீம், ஒரு நட்சத்திர விடுதியில் அமைச்சரின் மகனையும் அவன் நண்பர்களையும் சிறை பிடிக்கிறார்.
அவர்களைச் சலீம் ஏன் சிறை பிடிக்கிறார்? அவரது நோக்கம் நிறைவேறியதா? என்பதை வெள்ளித் திரையில் காணலாம்.
இறுக்கமான முக பாவத்துடன், விறைப்பான உடல் மொழியுடன், தனக்கு ஏற்ற பாத்திரத்தை விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்திருக்கிறார். நான் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது நடிப்பாற்றலை இந்தப் படம் செம்மையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இயல்பான மருத்துவராக மட்டுமின்றி, பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கூட அவர் சிறப்பாகப் பரிமளித்திருக்கிறார். காதலி தன்னைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்து நிற்கையில், "கடைசி வரை அநாதையாகவே இருக்க வேண்டியதுதானா?" என்ற ஒரே வசனத்தில் தன் தவிப்பைப் புரிய வைக்கிறார்.
முன்பாதியில் சாந்த சொரூபியாக இருக்கும் சலீம், பின்பாதியில் ஒட்டுமொத்தக் காவல் துறை, அரசியல் புள்ளிகள், ரவுடிப் பட்டாளம், ஊடகத்தினர் எனப் பலரையும் கதிகலங்க வைக்கிறார். அமைச்சர் மகனைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பவரிடம் உங்களுக்கு இப்ப என்ன வேணும் எனக் காவல் துறை அதிகாரி கேட்க, "சூடா ஒரு டீ" எனக் கேட்கும்போது, ரசிகர்களிடையே விறுவிறுப்பு ஏறுகிறது.
அமைச்சராக நடித்துள்ள ஆர்.என்.ஆர்.மனோகர், தனது பெரிய கண்களை உருட்டி மிரட்டுகிறார். அவ்வப்போது அவரே காமெடி பீஸாக மாறுவதும் நடக்கிறது.
எம்.சி.கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, தெளிவு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை, படத்துக்குப் பெரிய வலுவாக அமைந்துள்ளது. மஸ்காரா, அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் ஆகிய பாடல்கள், பிரபலம் அடைந்து வருகின்றன.
பிற்பாதி ஓரளவு விறுவிறுப்பாகச் சென்றாலும் மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' படம் நினைவுக்கு வருகிறது. அதிலும் இப்படித்தான் நல்லவரான ஒருவர் ஒரே ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவெல்லாம் மாநகரைச் சுற்றி வந்து பரபரப்பு ஊட்டுவார். சலீமில் அதன் பாதிப்பு இருக்கிறது.
நீதியை நிலை நாட்டுவதற்காகத் துப்பாக்கியுடன் புறப்படும் சலீம், காவல் துறையிடமிருந்து தப்பித்துச் செல்லும்போது, தொடரும் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது. இது, அமைதி வழியில் சாதிக்க முடியாது. துப்பாக்கிதான் தீர்வு என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஷங்கரின் இந்தியன் படமும் இதையே வேறு காட்சிகளில் சொன்னது.
இயக்குநர் என்.வி. நிர்மல் குமார், திரைக் கதை அமைப்பிலும் அதைத் திரையில் கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், நேர்மையாக நடப்பவன் கடைசியில் துப்பாக்கியைத் தூக்கித்தான் ஜெயிக்க முடியும் எனக் காட்டியதன் மூலம், கருத்தியல் ரீதியாகத் தோற்றிருக்கிறார்.
நல்லவனாக வாழ்வது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைச் சலீம், படம் நெடுகக் காட்டுகிறது. இப்படியான படங்கள், மக்களை நல்லவராக வாழ்வதற்குத் தூண்டாமல், அதற்கு எதிரான மனநிலையை அவர்களிடம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இத்தகைய கதைகளும் காட்சிகளும், காந்தியத்தின் தேவையை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சலீம் - சினிமா விமர்சனம்-ஆனந்தவிகடன்
மனிதாபிமான மருத்துவர் விஜய் ஆண்டனி, நோயாளிகளிடம் கட்டணக் கொள்ளைக்கு உடன்படாததால், அவரை அதட்டுகிறது மருத்துவமனை நிர்வாகம். 'ரொம்ப நல்லவனா இருக்க... உன்னைக் கட்டிக்கிட்டா வாழ்க்கையில பெப்பர்-சால்ட்டே இருக்காது’ என்று விட்டுவிலகுகிறாள் வருங்கால மனைவி. பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு பெண், சிகிச்சைக்கு நடுவே திடீரென காணாமல்போகிறாள். ட்ரிபிள் மன உளைச்சலில், ட்ரிக்கர் அழுத்தி விஜய் ஆண்டனி வெடிக்கும் அதிரடியே பின்பாதி!
விஜய் ஆண்டனியின் 'நான்’ படத் தொடர்ச்சியாகவும், 'எக்கச்சக்க’ வித்தியாச கதைக் களத்துடனும் படத்தைப் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நிர்மல் குமார். நச்சரிக்கும் காதலி, எச்சரிக்கும் நிர்வாகம், துச்சமாக மதிக்கும் சமூகம்... என ஓர் அப்பாவி சாமான்யனின் தினசரி சங்கடங்களை நிறுத்தி நிதானமாக டீடெய்ல் செய்கிறது முன்பாதி.
சின்சியர் டாக்டராகவும், மிரட்டல் கிரிமினலாகவும் விஜய் ஆண்டனி... செம காஸ்ட்டிங்! காதலியின் உதாருக்குப் பம்மிப் பதுங்குவதும், பார்ட்டியில் 'என்னா...’ என்று ஒற்றை வார்த்தையில் உறுமுவதும், 'ரெஸ்பெக்ட்... ரெஸ்பெக்ட் வேணும்’ என்று கடத்தல் டீல் ஆரம்பிப்பதும்... அட்டகாசம்!
படத்தின் இரண்டாவது ஹீரோ... பின்பாதி திரைக்கதையும், செந்திலின் வசனங்களும்தான். கடத்தல் பேச்சுவார்த்தையில் 'சூடாக டீ’ கேட்பதும், 'நீ அடங்க மாட்ட... வாசலுக்கு போய்ப் பாரு’ என்று மந்திரியை முந்திரிபோல உருட்டுவதும், எதிர்பாராத நபர் மந்திரி மகனைப் பற்றிய ரகசியத்தை விஜய் ஆண்டனிக்கு ஹின்ட் கொடுப்பதுமாக... செம ரேஸ் ஸ்க்ரீன்ப்ளே!
'சந்தோஷப்பட்டிருப்பேங்கிறதைக்கூட 'உடம்பு சரியில்லை’ங்கிற மாதிரி சொல்றியே!’, 'இவ்வளவு சத்தமாப் பேசுறதுக்கு எதுக்குடா தனியாப் போனீங்க?’, 'சலீம்ங்கிறது வெறும் பேர்தான் சார். வேணும்னா நீங்க என்னை விஜய்னு கூப்பிடுங்க... இல்லை ஆண்டனினு கூப்பிடுங்க’, 'அங்கே என்னய்யா புடுங்கிட்டு இருக்கீங்க? ஏன், நீ வேணும்னா வந்து கொஞ்ச நேரம் புடுங்கிப் பாரேன்!’ என அப்ளாஸ் வசனங்கள்.
கொஞ்சநஞ்சமல்ல... படம் முழுக்கவே லாஜிக் பஞ்சம். இரவின் சில மணி நேரங்களிலேயே மாநிலத்தையே கிடுகிடுக்கும் திட்டத்தைத் தீட்டி, அதைக் கடைசி திருப்பம் வரை கச்சிதமாகச் செயல்படுத்துவது இத்தனை ஈஸியா என்ன? ஒற்றை அறையில் ஒற்றை துப்பாக்கியை வைத்திருக்கும் விஜய் ஆண்டனியை எத்தனை வழிகளில் பிடிக்க முடியும்? ஆனால், அத்தனை புத்திசாலி ப்ளஸ் துப்பாக்கி போலீஸோ அவருக்கு வழிவிட்டு தேமே என்று வேடிக்கை பார்ப்பது என்ன லாஜிக்ஜி?
மந்திரியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், நடிப்பில் அராஜகம் பண்ணியிருக்கிறார். 'என்ன சொல்றார் உங்க சி.எம்?’ என்று போலீஸ் உயர் அதிகாரிகளை வறுப்பதும், 'என்னப்பா பேசிட்டு இருக்கும்போதே கட் பண்ணிட்ட. உனக்கு என்ன வேணும்?’ என்று விஜய் ஆண்டனியிடம் பம்முவதுமாக ஸ்கோர் செய்கிறார். கொழுக் மொழுக் நாயகி அக்ஷா அலட்டலும் அதட்டலுமாக 'அன்லைக்’ குவிக்கும் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க மிரட்டி விரட்டுகிறது. ஒற்றை ஹோட்டல் அறை, கட்டுப்பாட்டு அறை, மாடி ஜன்னல்... என மினி ஸ்க்ரீன்களிலும் சினிமாஸ்கோப் காட்டுகிறது கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு.
'நல்லது செய்தல் நலம்... சமயங்களில் கெட்ட காரியம் மூலமாகவும்!’ என்ற மெசேஜை அக்கறையுடன் பதிவுசெய்த சலீமுக்கு... சலாம்!
- விகடன் விமர்சனக் குழு
மனிதாபிமான மருத்துவர் விஜய் ஆண்டனி, நோயாளிகளிடம் கட்டணக் கொள்ளைக்கு உடன்படாததால், அவரை அதட்டுகிறது மருத்துவமனை நிர்வாகம். 'ரொம்ப நல்லவனா இருக்க... உன்னைக் கட்டிக்கிட்டா வாழ்க்கையில பெப்பர்-சால்ட்டே இருக்காது’ என்று விட்டுவிலகுகிறாள் வருங்கால மனைவி. பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு பெண், சிகிச்சைக்கு நடுவே திடீரென காணாமல்போகிறாள். ட்ரிபிள் மன உளைச்சலில், ட்ரிக்கர் அழுத்தி விஜய் ஆண்டனி வெடிக்கும் அதிரடியே பின்பாதி!
விஜய் ஆண்டனியின் 'நான்’ படத் தொடர்ச்சியாகவும், 'எக்கச்சக்க’ வித்தியாச கதைக் களத்துடனும் படத்தைப் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நிர்மல் குமார். நச்சரிக்கும் காதலி, எச்சரிக்கும் நிர்வாகம், துச்சமாக மதிக்கும் சமூகம்... என ஓர் அப்பாவி சாமான்யனின் தினசரி சங்கடங்களை நிறுத்தி நிதானமாக டீடெய்ல் செய்கிறது முன்பாதி.
சின்சியர் டாக்டராகவும், மிரட்டல் கிரிமினலாகவும் விஜய் ஆண்டனி... செம காஸ்ட்டிங்! காதலியின் உதாருக்குப் பம்மிப் பதுங்குவதும், பார்ட்டியில் 'என்னா...’ என்று ஒற்றை வார்த்தையில் உறுமுவதும், 'ரெஸ்பெக்ட்... ரெஸ்பெக்ட் வேணும்’ என்று கடத்தல் டீல் ஆரம்பிப்பதும்... அட்டகாசம்!
படத்தின் இரண்டாவது ஹீரோ... பின்பாதி திரைக்கதையும், செந்திலின் வசனங்களும்தான். கடத்தல் பேச்சுவார்த்தையில் 'சூடாக டீ’ கேட்பதும், 'நீ அடங்க மாட்ட... வாசலுக்கு போய்ப் பாரு’ என்று மந்திரியை முந்திரிபோல உருட்டுவதும், எதிர்பாராத நபர் மந்திரி மகனைப் பற்றிய ரகசியத்தை விஜய் ஆண்டனிக்கு ஹின்ட் கொடுப்பதுமாக... செம ரேஸ் ஸ்க்ரீன்ப்ளே!
'சந்தோஷப்பட்டிருப்பேங்கிறதைக்கூட 'உடம்பு சரியில்லை’ங்கிற மாதிரி சொல்றியே!’, 'இவ்வளவு சத்தமாப் பேசுறதுக்கு எதுக்குடா தனியாப் போனீங்க?’, 'சலீம்ங்கிறது வெறும் பேர்தான் சார். வேணும்னா நீங்க என்னை விஜய்னு கூப்பிடுங்க... இல்லை ஆண்டனினு கூப்பிடுங்க’, 'அங்கே என்னய்யா புடுங்கிட்டு இருக்கீங்க? ஏன், நீ வேணும்னா வந்து கொஞ்ச நேரம் புடுங்கிப் பாரேன்!’ என அப்ளாஸ் வசனங்கள்.
கொஞ்சநஞ்சமல்ல... படம் முழுக்கவே லாஜிக் பஞ்சம். இரவின் சில மணி நேரங்களிலேயே மாநிலத்தையே கிடுகிடுக்கும் திட்டத்தைத் தீட்டி, அதைக் கடைசி திருப்பம் வரை கச்சிதமாகச் செயல்படுத்துவது இத்தனை ஈஸியா என்ன? ஒற்றை அறையில் ஒற்றை துப்பாக்கியை வைத்திருக்கும் விஜய் ஆண்டனியை எத்தனை வழிகளில் பிடிக்க முடியும்? ஆனால், அத்தனை புத்திசாலி ப்ளஸ் துப்பாக்கி போலீஸோ அவருக்கு வழிவிட்டு தேமே என்று வேடிக்கை பார்ப்பது என்ன லாஜிக்ஜி?
மந்திரியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், நடிப்பில் அராஜகம் பண்ணியிருக்கிறார். 'என்ன சொல்றார் உங்க சி.எம்?’ என்று போலீஸ் உயர் அதிகாரிகளை வறுப்பதும், 'என்னப்பா பேசிட்டு இருக்கும்போதே கட் பண்ணிட்ட. உனக்கு என்ன வேணும்?’ என்று விஜய் ஆண்டனியிடம் பம்முவதுமாக ஸ்கோர் செய்கிறார். கொழுக் மொழுக் நாயகி அக்ஷா அலட்டலும் அதட்டலுமாக 'அன்லைக்’ குவிக்கும் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க மிரட்டி விரட்டுகிறது. ஒற்றை ஹோட்டல் அறை, கட்டுப்பாட்டு அறை, மாடி ஜன்னல்... என மினி ஸ்க்ரீன்களிலும் சினிமாஸ்கோப் காட்டுகிறது கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு.
'நல்லது செய்தல் நலம்... சமயங்களில் கெட்ட காரியம் மூலமாகவும்!’ என்ற மெசேஜை அக்கறையுடன் பதிவுசெய்த சலீமுக்கு... சலாம்!
- விகடன் விமர்சனக் குழு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மிக நேர்த்தியாக எடுத்திருக்கலாம் - இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இதற்கிடையே, சலீமுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், சலீமை மணக்க மறுக்கிறார். "நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" எனச் சலீம் கேட்க, "நீங்க தப்பே பண்றதில்லை. அதுதான் பிரச்சினையே. எப்போதும் அமைதியா, பொறுமையா, நேர்மையாக இருந்தால், வாழ்க்கையில் ஒரு பெப்பர் அண்ட் சால்டே இருக்காது. அதனால் வேண்டாம்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். //
இது தான் இன்றைய பெண்களின் மன நிலை நல்லவனை பண்ணிக்க கசக்கும்........ஏன்னா இவ வந்து திருத்த ஒண்ணும் இருக்காது பாருங்கோ
.
ஆனால், படம் எனக்கு பிடித்திருந்தது. விஜய் இன்னும் கொஞ்சம் ஸ்பீட் ஆக நடந்து இருக்கலாம், நடித்திருக்கலாம். ரொம்ப slow வாக இருந்தது படம்
இது தான் இன்றைய பெண்களின் மன நிலை நல்லவனை பண்ணிக்க கசக்கும்........ஏன்னா இவ வந்து திருத்த ஒண்ணும் இருக்காது பாருங்கோ
.
ஆனால், படம் எனக்கு பிடித்திருந்தது. விஜய் இன்னும் கொஞ்சம் ஸ்பீட் ஆக நடந்து இருக்கலாம், நடித்திருக்கலாம். ரொம்ப slow வாக இருந்தது படம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|