புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
33 Posts - 43%
heezulia
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
5 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
2 Posts - 3%
mini
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%
Saravananj
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
80 Posts - 43%
mohamed nizamudeen
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
9 Posts - 5%
mini
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
3 Posts - 2%
prajai
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நலமுடன் வாழ்வோம் Poll_c10நலமுடன் வாழ்வோம் Poll_m10நலமுடன் வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலமுடன் வாழ்வோம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 8:46 pm

அடிக்கடி வாய்ப்புண் வருவதை தடுப்பது எப்படி?

'சாலையோர கடைகளில் சாப்பிடுவோருக்கு, உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய உணவு சாப்பிடுவதாலும், இந்த பாதிப்பு வரும். காலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் வரும்' என, டாக்டர்கள் எச்சரித்தனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, குடல், இரைப்பை பிரிவு சார்பில், 'உணவு பழக்கமும், உடல் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குடல் இரைப்பை சிகிச்சைத் துறைத் தலைவர் சந்திரமோகன், சண்முகம், ரகுநந்தன், நாராயணசாமி, பழனிச்சாமி மற்றும் மீனாட்சி உள்ளிட்ட நிபுணர் குழு, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தது.
பொதுமக்களின் கேள்விகளும், நிபுணர்களின் பதில்களும்:

1. உணவுக்குழாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?
குடல், இரைப்பை சிகிச்சை பிரிவு சார்பில், புற்றுநோய் பாதித்தோரிடம் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில், தெருவோர கடைகளில் உணவு சாப்பிடுவதால், பெருமளவு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்துள்ளது. எண்ணெய் சுத்தமாக இருப்பதில்லை. பாமாயில் போன்ற குறைந்த விலை எண்ணெய் மட்டுமின்றி, ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இதற்கு காரணம் என, தெரிய வந்தது.

2. வேறு காரணம் உண்டா? பழைய சாதம் சாப்பிட்டாலும் ஆபத்து என்கின்றனரே?
உண்மை தான். புகை பழக்கத்தால் புற்றுநோய் வரும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஊறுகாய், வற்றல், மிளகாய் பொடி சாதம் அதிகம் சாப்பிடுவோருக்கும் பாதிப்பு வருகிறது. இவர்கள் காய்கறி, கீரை, பழங்களை அதிகம் சாப்பிடுவதில்லை. சுடச்சுட டீ, காபி சாப்பிடுதல், புளிக்குழம்பு, பழைய சாதம் சாப்பிடுவதாலும் புற்றுநோய் வரும். புளித்த பழைய சாதத்தை சாப்பிட அதிக உப்பு, ஊறுகாய் எடுத்துக் கொள்வதே இதற்கு காரணம். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

3. சர்க்கரை நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக 'சுகர் பிரீ' பயன்படுத்துவது சரியா? அதனாலும் பாதிப்பு வருமா?
நீரிழிவு நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக, 'சுகர் பிரீ' சேர்த்துக் கொள்ளலாம்; பெரிதாக பாதிப்பு வராது. ஆனால், 'சுக்ரோஸ்' உள்ள,
சுகர் பிரீ பவுடர்களை தேர்வு செய்வது நல்லது. மற்ற சுகர் பிரீக்கள், ஒவ்வொரு விதமா நோய் பாதிப்புள்ளோருக்கு, வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இரண்டு வாரத்திற்கு, டீ, காபியை சர்க்கரை இன்றி சாப்பிட பழகிவிட்டால், இயல்பாகிவிடும். அதன்பின் சர்க்கரை தேவைப்படாது. சிறு சர்க்கரை சேர்த்தாலே பாயசம் போல் இனிக்கும். இந்த நிலைக்கு சர்க்கரை நோயாளிகள் மாறுவதே நல்லது.

4. இன்று 'ஸ்வீட்' சாப்பிட்டு விட்டேன் என, அரை மாத்திரை கூடுதலாக போட்டுக் கொள்வது சரியா?
ஏதாவது ஒரு நாள் இப்படி, 'ஸ்வீட்' சாப்பிட நேர்ந்தால், அதற்கு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கூடுதலாக நடை பயிற்சி செய்யுங்கள். ஆனால், இதுவே பழக்கமாகி விடக்கூடாது. அதற்காக மாத்திரை எடுத்துக் கொள்வது சரியல்ல. இரவு நேரத்தில் அதிக இனிப்பு சாப்பிட்டு, அதற்காக, மாத்திரை எடுத்துக் கொண்டால், தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். லோ சுகர் வந்து, ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கும் போகும் ஆபத்து உள்ளது. மிகவும் கவனம் தேவை.

5. 50 வயதுக்கு மேற்பட்டோர் அசைவ உணவு சாப்பிடலாமா?
அசைவ உணவில் நார் சத்து இல்லை; புரதச் சத்து மட்டுமே உள்ளது. முட்டை மஞ்சக்கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு, பாயா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. முட்டை வெள்ளைக்கரு எடுத்துக் கொள்ளலாம். மீன் சாப்பிடுவது நல்லது. குழம்பு வைத்தோ, பொரியலாகவோ சாப்பிடலாம். அதற்காக பொரித்து சாப்பிடுவது கூடாது. இறாலும் எடுத்துக் கொள்ளலாம். அதை, 28 கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

6. சிலருக்கு ஈரல் குழம்பு, ரத்த பொரியல் சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனரே?
அனிமியா (ரத்த சோகை) நோய் பாதிப்பு உள்ளோருக்கு, இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதற்காக, ஈரல் குழம்பு, ஆட்டு ரத்த பொரியல் சாப்பிடச் சொல்வது வழக்கம். அதோடு, நெல்லிக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அவ்வாறு எந்த அறிவுரையும் டாக்டர்கள் தருவதில்லை.

7. சாப்பாட்டில் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. எண்ணெய் சேர்ப்பது சரியா, எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?

எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகம். ஒரு நபருக்கு மாதத்திற்கு, அரை லிட்டர் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம். அதை, 250 கிராம் நல்லெண்ணெய், 250 கிராம் மற்றொரு எண்ணெய் என, பயன்படுத்தலாம். இரண்டையும் கலந்து விடக்கூடாது. பாமாயில் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளதால், பயன்படுத்த வேண்டாம்.

8. ஓட்ஸ் தினமும் எடுத்துக் கொள்ளலாமா?; இதற்கு மாற்று என்ன பயன்படுத்தலாம்?
ஓட்சில் நிறைய சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் அவற்றை கஞ்சியாக குடிக்கக்கூடாது. இதை பவுடராக்கி, பிற மாவுடன் கலந்து பயன்படுத்தலாம். ஓட்சுக்கு நிகரானது என்று, ஏதும் சொல்ல முடியாது. இரவு நேரத்தில் வேண்டுமானால், சம்பா கோதுமை, கேழ்வரகு சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

9. அடிக்கடி வாய்ப்புண் வருகிறது; மாதவிடாய்க்கு முன் இதுபோன்ற பாதிப்பு வருகிறது. என்ன செய்வது?
'வைட்டமின் - டி' குறைபாடு தான் இதற்கு காரணம். மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். வெடிப்பு வந்தால் நெய் தடவிக் கொள்வது நல்லது.

10. தொடர்ந்து இரவு நேர பணிக்கு செல்வோர், 'பிரேக் பாஸ்ட்' சாப்பிடுவதில்லை. இது சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனரே?
ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோர் தான் இந்த மாதிரி சிக்கலுக்கு ஆளாகின்றனர். 'பேச்சுலர்' ஆக உள்ள வாலிபர்களும், காலை உணவு எடுப்பதில்லை. இதுபோன்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வரும். தொடர்ந்து இரவு நேர பணிக்குச் செல்லாமல், 'ஷிப்டு'களை மாற்றிக் கொள்வது நல்லது. காலை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லதல்ல.

11. உணவுக்கிடையே எவ்வளவு இடைவெளி தேவை? நோய் பாதிப்பு வராமல் இருக்க என்ன வழி?
பொதுவாக, ஒரு முறை உணவு எடுத்த பின், அடுத்த உணவு சாப்பிட, இரண்டு மணி நேரமாவது இடைவெளி தேவை. மதிய உணவுக்கும், இரவு டிபனுக்கும் இடையே, ஐந்து மணி நேர இடைவெளி இருப்பது அவசியம். சரியான நேரத்தில் உணவு, உணவில், கீரை, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், சரியான தூக்கம், தேவையான உடற்பயிற்சியும் இருந்தால், நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 8:47 pm

தூக்கம்... - எட்டு மணி நேரம் தான்

தினமும் இரவில், 8 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7,000 பேர்களை, 10 ஆண்டுகளுக்கு மேல், ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பகல் நேரத்தில் போடும் குட்டித் தூக்கம், இந்த எட்டு மணி நேரக் கணக்கில் சேராது. எனவே, இரவு நேரத் தூக்கம், 8 மணி நேரத்திற்குள் இருந்தால் நல்லது. அதற்கு, இரவு உணவின் அளவை குறைக்க வேண்டும். அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால், எட்டு மணி நேர தூக்கத்தை குறைக்க முடியாது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 8:48 pm

ஜாகிங்... - நலம் பெற நல்ல வழி

முதலில், 55 கஜ தூரத்தை (ஒரு கஜ தூரம் என்பது 3 அடி) மட்டும், நான்கு தடவை மெல்லோட்டமாக நடங்கள். பின், இதே தூரத்தை, நான்கு முறை சாதாரண நடையாக நடங்கள். இந்த முறையில், மாற்றம் செய்யாமல் ஆறு வாரம் நடக்கவும்.
* பிறகு, 110 கஜ தூரத்தை, 45 விநாடிகளில் ஜாகிங் (மெல்லோட்டம்) செய்து கடக்கவும். இதை ஒரு வாரப் பயிற்சிக்குப் பின், 110 கஜ தூரத்தை 30 விநாடிகளில் கடக்கவும். கூடுதலாகவோ குறைவாகவோ செய்ய வேண்டாம்.
* கால் பாதங்களில் முக்கியமான, 52 வகையான நரம்புகள் முடிகின்றன. மெதுவாக ஓடும்போது, இவை அதற்கேற்ப தயாராகும். இதற்குப் பிறகு, ஆறு மாதத்திற்கு ஒரு மைல் தூரத்தை, ஒன்பது நிமிடங்களில், கடக்கும்படி ஓடுங்கள்.
* பிறகு வாழ்நாள் முழுவதும், ஒன்பது நிமிடங்கள் மட்டும் 'ஜாகிங்' செய்தால் போதும். அக்குபிரஷர் சிகிச்சை போல, 52 வகையான நரம்புகளும் உடலை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 8:50 pm

குளிர்பானங்களுக்கு 'குட் பை' சொல்லிட்டு வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!

வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர், மருத்துவர்கள்.
அப்படியென்ன பலன்களை வெந்நீர் தந்து விடப் போகிறது என, சிந்திப்போருக்காக, சில விஷயங்கள் இதோ:
வடை, பக்கோடா, பூரி என, எண்ணெயில் பொரித்த அயிட்டங்களையோ அல்லது இனிப்புகளையோ சாப்பிட்ட பின் நெஞ்சுக்குள் சிலருக்கு எரிச்சல் தோன்றும். உடனே நாம் எடுப்பது, 'ஜெலுசில் அல்லது டைஜின்' மாத்திரைகளை தான். ஆனால், அதெல்லாம் தேவையில்லை. ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து, மெதுவாக பருகுங்கள் போதும். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போன இடம் தெரியாது.
* உண்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வெந்நீர் கைகண்ட மருந்து. உடனடி நிவாரணம் நிச்சயம்.
* உடம்பு வலியா? வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடித்தால் போதும். பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு நீங்கி விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்து, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்து விடும்.
* கால் கடுக்க நின்றாலோ, அலைந்து திரிந்தாலோ, கால் பாதங்கள் வலி எடுக்கும். அதற்கும் வெந்நீர் தான் உடனடி மருத்துவம். பெரிய வாளியில், சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். காலில் அழுக்கு இருக்குமானால், வெந்நீரில் கொஞ்சம், 'டெட்டால்' ஊற்றுங்கள்; காலில் இருந்த வலியும் போகும்; அழுக்கும் நீங்கும்.
* வெந்நீரில், 'விக்ஸ்' அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு, அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை பெறலாம். திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாதீர்கள். ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்.
* கிராமங்களில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பர். உணவு கட்டுப்பாடு இல்லாமல், அஜீரணக் கோளாறுக்கு ஆளாவோர், சுக்கு வெந்நீரை வாரந்தோறும் அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
* வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
* வெயிலில் திரிந்து விட்டு, வீடு திரும்பியதும் தாகத்தை போக்க, ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள். சற்று வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்க நல்ல வழி. ஈஸ்னோபோலியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்போர், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக, வெந்நீர் தான் அருந்த வேண்டும். விருந்துகளில், செமையாக கட்டி முடித்ததும், கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம்ஸ் பக்கம் போகாமல், ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள்; உடம்புக்கு நல்லது.
* ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; வீட்டு உபயோகத்திற்கும் வெந்நீரின் உதவி பெரிது. நெய், எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இருக்காது என்பது, பெண்மணிகளுக்கு தெரியாத விஷயமல்ல.
அதுபோலவே தரையை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருந்தால், வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைத்தால் கிருமிகள் மடியும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 8:52 pm

உடலில் வைட்டமின் - டி அதிகமானால் குடல் புற்றுநோய் பாதிப்பு குறைவே

'குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் ரத்தத்தில், வைட்டமின் - டி சத்து அதிகமாக இருந்தால், நோய் பாதிப்பின் வேகம் குறைவாக இருக்கும்' என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மனித உடலுக்கு, சூரியஒளி மூலமும், உணவுகள் மூலமும் கிடைக்கும் சத்து, வைட்டமின் - டி. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள வைட்டமின் - டி அளவை இணைத்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: ரத்தத்தில் வைட்டமின் - டி அளவு அதிகமாக இருந்தால், நோயாளிகளுக்கு குடலில் தோன்றியுள்ள புற்றுநோய் கட்டி பெரிதாக இருந்தாலும், அது பரவுவதில்லை. இப்படிப்பட்டவர்கள், குடல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும், அதிக நாட்கள் வாழ்கின்றனர். அதே நேரம், ரத்தத்தில் வைட்டமின் - டி அளவு குறைவாக இருந்தால், இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் சீக்கிரமே நிகழ்ந்து விடுகிறது. இதிலிருந்து, புற்றுநோய் பாதித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கும், அவர்களின் ரத்தத்தில் உள்ள வைட்டமின் - டி சத்தின் அளவுக்கும் தொடர்பு உள்ளது உறுதியாகிறது.
அதனால், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கீமோதெரபி சிகிச்சையோடு, வைட்டமின் - டி மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளச் செய்தால், அவர்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியுமா என்பது தொடர்பாக, தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை, இளம் வெயிலில் நடைப் பயிற்சி மேற்கொண்டால், இயற்கையாகவே நம் உடலில், வைட்டமின் - டி சுரக்கும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 8:56 pm

பி.டி.ஏ., என்றால் என்ன?

கருணாகரன், தென்காசி: என் 11 வயது மகளுக்கு, 'எக்கோ' பரிசோதனையில், பி.டி.ஏ., என வந்துள்ளது. இது என்ன வியாதி, நான் என்ன செய்ய வேண்டும்?

பி.டி.ஏ., என்பது, Patent Ductus Arteriosus என்பதன் சுருக்கம். இது பிறவியில் இருந்தே இதயத்தில் இருக்கும் ஒரு ஓட்டையைக் குறிக்கிறது. இந்நோயை கண்டு அஞ்சத் தேவையில்லை. தற்போது நவீன சிகிச்சையாக, அறுவை சிகிச்சையின்றி, Coil closure முறையில் எளிதில் மூட முடியும். உங்கள் மகளுடன், இதய டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 11:00 pm

நலமுடன் வாழ்வோம் 103459460 நலமுடன் வாழ்வோம் 1571444738 அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக