உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
+3
ஜாஹீதாபானு
உமேரா
krishnaamma
7 posters
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்

இதோ அந்த குறிப்புகள்

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 10:34 am; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
அங்காய பொடி 3
அங்காய பொடி 3
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
கலத்துக்கு பொடி
கலத்துக்கு பொடி
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
சம்பா பொடி
சம்பா பொடி
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்

குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
மணத்தக்காளி வத்தல்
மணத்தக்காளி வத்தல்
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
யாரும் பார்க்கலையா ?


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
நாரத்தை இலை பொடி
நாரத்தை இலை பொடி - இது தான் 'வேப்பிலை கட்டி' என்று சொல்லப்படுவது
பேர் தான் நாரத்தை இல்லை பொடி, வேப்பிலை கட்டி என்று சொல்றோமே தவிர இதை எலுமிச்சை இலைகளில் தான் செய்வோம் 
தேவையானவை :
2 கைப்பிடி அளவு எலுமிச்சை இலைகள்.
2 கைப்பிடி அளவு நாரத்தை இலைகள் ( கிடைத்தால் ஓகே இல்லாவிட்டால் வெறும் எலுமிச்சை இலைகளில் செய்ய வேண்டியது தான்
)
கொஞ்சம் மிளகாய் வற்றல்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
1/2 - 1 ஸ்பூன் புளி பேஸ்ட்
செய்முறை :
இலைகளை சுத்தம் செய்து அலசி தண்ணிரை வடியவும்.
தண்ணீர் நன்கு வடிந்ததும், மேலே சொன்ன பொருட்களுடன் மிச்சி இல் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும் .
காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
சுடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இதையும் போட்டு பிசைந்து சாப்பிட கொடுக்கவும்.
உடம்புக்கு ரொம்ப நல்லது இது, துவர்ப்பு, புளிப்பு காரம் என்று அருமையாக இருக்கும் வாய்க்கு


தேவையானவை :
2 கைப்பிடி அளவு எலுமிச்சை இலைகள்.
2 கைப்பிடி அளவு நாரத்தை இலைகள் ( கிடைத்தால் ஓகே இல்லாவிட்டால் வெறும் எலுமிச்சை இலைகளில் செய்ய வேண்டியது தான்

கொஞ்சம் மிளகாய் வற்றல்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
1/2 - 1 ஸ்பூன் புளி பேஸ்ட்
செய்முறை :
இலைகளை சுத்தம் செய்து அலசி தண்ணிரை வடியவும்.
தண்ணீர் நன்கு வடிந்ததும், மேலே சொன்ன பொருட்களுடன் மிச்சி இல் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும் .
காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
சுடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இதையும் போட்டு பிசைந்து சாப்பிட கொடுக்கவும்.
உடம்புக்கு ரொம்ப நல்லது இது, துவர்ப்பு, புளிப்பு காரம் என்று அருமையாக இருக்கும் வாய்க்கு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
சுக்கு திப்பிலி மருந்து - இதுக்கும் கண் அளவு தான் 
சுக்கு
கண்டதிப்பிலி
ஓமம்
மிளகு
சீரகம்
விரளி மஞ்சள்
தனியா
வெல்லம்
நெய்
இஞ்சி சாறு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் தனித்தனியாக கருகாமல் வறுக்கணும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.
வறுத்தவைகளை மிக்சி இல் பொடிக்கவும்.
வெல்ல கரைசலுடன் சேர்த்து கரைக்கவும்.
அத்துடன் இஞ்சி சாறும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
அது கொஞ்சம் கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறவும்.
அது லேகியப்பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
காலையில் பால் சாப்பிட்டதும் அல்லது வெறும் வயற்றில் கூட இதை சாப்பிட்டு விட்டு சூடாக வெந்நீர் அல்லது பால் சாப்பிடலாம்
குறிப்பு: எங்க பாட்டி செய்வா இதை, ஆனால் எல்லாம் கண் அளவாய்த்தான் போடுவா, எனவே எனக்கு அளவு தெரியலை

சுக்கு
கண்டதிப்பிலி
ஓமம்
மிளகு
சீரகம்
விரளி மஞ்சள்
தனியா
வெல்லம்
நெய்
இஞ்சி சாறு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் தனித்தனியாக கருகாமல் வறுக்கணும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.
வறுத்தவைகளை மிக்சி இல் பொடிக்கவும்.
வெல்ல கரைசலுடன் சேர்த்து கரைக்கவும்.
அத்துடன் இஞ்சி சாறும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
அது கொஞ்சம் கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறவும்.
அது லேகியப்பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
காலையில் பால் சாப்பிட்டதும் அல்லது வெறும் வயற்றில் கூட இதை சாப்பிட்டு விட்டு சூடாக வெந்நீர் அல்லது பால் சாப்பிடலாம்

குறிப்பு: எங்க பாட்டி செய்வா இதை, ஆனால் எல்லாம் கண் அளவாய்த்தான் போடுவா, எனவே எனக்கு அளவு தெரியலை

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
மருந்து பொடி 2
இது பொதுவாக அவரவர்கள் வீட்டு வழக்கப்படி இருக்கும். இதோ மற்றும் ஒரு பொடி..
சுக்கு 250 gm
‘திப்பலி’ 5 gms
மிளகு 20 gms
ஓமம் 5 gms
‘வரளி மஞ்சள் ’ 1
‘ஜாதிக்காய் 1/4
ஜாதி பத்திரி 2 -4
கிராம்பு 8 - 10
ஏலக்காய் 2
பனை வெல்லம் 50 gm
நெய் தேவையான alavu
செய்முறை :
சுக்கு, திப்பிலி. ஓமம், மஞ்சள் மற்றும் மிளகாய் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் மெத் என்று நல்ல பொடியாக பொடிக்கவும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
லேகியம் தேவையான போது, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடிக்கவும்.
அடுப்பில் பனைவெல்லத்தை பிறகு காய்ச்சவும்.
மறு அடுப்பில் ஒரு சின்ன வாணலி இல் நெய் விட்டு, ஏலப்பொடி ஜாதிக்காய் பொடிகளை போடவும்.
முன்பே பொடித்து வைத்துள்ள சுக்கு பொடி கலவையையும் இதில் போட்டு கிளறவும்.
சிம் இல் வைக்கவும்.
பனை வெல்லம் பாகானதும், அதை நெய் மற்றும் பொடிகள் உள்ள வாணலி இல் விடவும்.
நன்கு கிளறவும்.
லேகியப்பதம் வந்து நெய் பிரிய ஆரம்பித்ததும் இறக்கவும்.
பிள்ளை பெற்றவளுக்கு தினமும் 2 வேளை தரவும்.
அம்மைக்கும் குழந்தைக்கும் அஜீரண கோளாறு வராமல் காக்கும் லேகியம் இது
இது பொதுவாக அவரவர்கள் வீட்டு வழக்கப்படி இருக்கும். இதோ மற்றும் ஒரு பொடி..
சுக்கு 250 gm
‘திப்பலி’ 5 gms
மிளகு 20 gms
ஓமம் 5 gms
‘வரளி மஞ்சள் ’ 1
‘ஜாதிக்காய் 1/4
ஜாதி பத்திரி 2 -4
கிராம்பு 8 - 10
ஏலக்காய் 2
பனை வெல்லம் 50 gm
நெய் தேவையான alavu
செய்முறை :
சுக்கு, திப்பிலி. ஓமம், மஞ்சள் மற்றும் மிளகாய் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் மெத் என்று நல்ல பொடியாக பொடிக்கவும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
லேகியம் தேவையான போது, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடிக்கவும்.
அடுப்பில் பனைவெல்லத்தை பிறகு காய்ச்சவும்.
மறு அடுப்பில் ஒரு சின்ன வாணலி இல் நெய் விட்டு, ஏலப்பொடி ஜாதிக்காய் பொடிகளை போடவும்.
முன்பே பொடித்து வைத்துள்ள சுக்கு பொடி கலவையையும் இதில் போட்டு கிளறவும்.
சிம் இல் வைக்கவும்.
பனை வெல்லம் பாகானதும், அதை நெய் மற்றும் பொடிகள் உள்ள வாணலி இல் விடவும்.
நன்கு கிளறவும்.
லேகியப்பதம் வந்து நெய் பிரிய ஆரம்பித்ததும் இறக்கவும்.
பிள்ளை பெற்றவளுக்கு தினமும் 2 வேளை தரவும்.
அம்மைக்கும் குழந்தைக்கும் அஜீரண கோளாறு வராமல் காக்கும் லேகியம் இது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
பகிர்வுக்கு நன்றி அம்மா ..
உமேரா- பண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மதிப்பீடுகள் : 152
குழம்பு பொடி
முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்.
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரளி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 முறை போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு : இது நான் முன்பே கொடுத்தது தான் என்றாலும் இந்த திரிக்கு தேவை என்பதால் மீண்டும் தருகிறேன்
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரளி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 முறை போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு : இது நான் முன்பே கொடுத்தது தான் என்றாலும் இந்த திரிக்கு தேவை என்பதால் மீண்டும் தருகிறேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
இப்ப புளி பேஸ்ட்
குழம்பு பொடி அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இன்றைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது.
இப்ப புளி பேஸ்ட் :
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
இப்ப புளி பேஸ்ட் :
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1085118உமேரா wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா ..
ம்.....நேத்திலேருந்து போடறேன்..............யாரும் பாக்கலியோ என்று நினைத்தேன்.......நீங்க பார்த்துவிட்டிங்க


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
பூண்டு, வெண்டைக்காய், அவரைக்காய், வெங்காயம் போடலாம்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு அல்லது குழம்பு வடாம் போட்டும் வற்றல் குழம்பு வைக்கலாம்.
பூண்டு, வெண்டைக்காய், அவரைக்காய், வெங்காயம் போடலாம்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு அல்லது குழம்பு வடாம் போட்டும் வற்றல் குழம்பு வைக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
குழம்பு வடாம்
தேவையானவை:
பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?
அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும். இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் போது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும். மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
குறிப்பு: மேல் கூறிய வற்றல்களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும். இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் போது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும். மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
குறிப்பு: மேல் கூறிய வற்றல்களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|