Latest topics
» நாவல்கள் வேண்டும்by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
+3
ஜாஹீதாபானு
உமேரா
krishnaamma
7 posters
Page 2 of 13
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 10:34 am; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
தொட்டுக்கொள்ள : சுட்ட உளுந்து அப்பளம் அல்லது தளிர் வடாம் .................. உப்பு நார்த்தங்காய், உப்பு எலுமிச்சை, வேப்பிலை கட்டி, கருவேப்பிலை பொடி, கொத்தமல்லி பொடி, புதினா பொடி போன்றவை. அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை தொட்டுக்கொள்ளலாம்.
அம்மாக்கு பால் குறைவாக இருப்பது போல தெரிந்தால், பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட சொல்லலாம் கஷ்டமானால் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டு சேர்ந்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை
துவரம்பருப்பு கூடவே கூடாது
முதலில் பொடி சாதம்தான். தினமும் சாப்பிட உட்கார்ந்ததும் 2 ஸ்பூன் நெய் கை இல் முதலில் தரணும். அதை அப்படியே சாப்பிட்டு விடனும் பிறகு ஏதாவது ஒரு பொடி சாதம். அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை போட்டு நொறுக்கி சாதம் சாப்பிடனும். பிறகுதான் கூட்டு அல்லது ரசம், குழம்பு எல்லாம். தயிர் சாதத்துடன் முடிக்கணும். நல்லா கெட்டித் தயிர் ஏடுடன் இருக்கணும்
இரவு படுக்கும் முன் பால் குடிக்கணும். வெற்றிலை போடணும். டாக்டர் சொல்லும் பழங்கள் சாப்பிடலாம்
அம்மாக்கு பால் குறைவாக இருப்பது போல தெரிந்தால், பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட சொல்லலாம் கஷ்டமானால் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டு சேர்ந்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை
துவரம்பருப்பு கூடவே கூடாது
முதலில் பொடி சாதம்தான். தினமும் சாப்பிட உட்கார்ந்ததும் 2 ஸ்பூன் நெய் கை இல் முதலில் தரணும். அதை அப்படியே சாப்பிட்டு விடனும் பிறகு ஏதாவது ஒரு பொடி சாதம். அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை போட்டு நொறுக்கி சாதம் சாப்பிடனும். பிறகுதான் கூட்டு அல்லது ரசம், குழம்பு எல்லாம். தயிர் சாதத்துடன் முடிக்கணும். நல்லா கெட்டித் தயிர் ஏடுடன் இருக்கணும்
இரவு படுக்கும் முன் பால் குடிக்கணும். வெற்றிலை போடணும். டாக்டர் சொல்லும் பழங்கள் சாப்பிடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
பொரித்த கூட்டுப்பொடி :
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் பால் வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம்
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் பால் வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
சீரகப்பொடி
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது உப்பு மற்றும் இந்த சீரகப்பொடி போட்டு குடிக்கலாம்
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது உப்பு மற்றும் இந்த சீரகப்பொடி போட்டு குடிக்கலாம்
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அங்காய பொடி
அங்காய பொடி
தேவையானவை :
வேப்பம் பூ 1 tab.sp
‘திப்பிலி ’ 6
‘சுண்டைகாய் ’ வத்தல் 1 tab sp
‘மணத்தகாளி வத்தல் ’ 1 tab sp
'துவரம் பருப்பு' 1 tab sp
தனியா 1 tea sp
மிளகு 1 tea sp
சீரகம் 1 tea sp
உப்பு
மிளகாய் வற்றல் 4
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
தேவையானவை :
வேப்பம் பூ 1 tab.sp
‘திப்பிலி ’ 6
‘சுண்டைகாய் ’ வத்தல் 1 tab sp
‘மணத்தகாளி வத்தல் ’ 1 tab sp
'துவரம் பருப்பு' 1 tab sp
தனியா 1 tea sp
மிளகு 1 tea sp
சீரகம் 1 tea sp
உப்பு
மிளகாய் வற்றல் 4
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அங்காய பொடி 2
அங்காய பொடி 2
இதில் கொடுத்துள்ளவை எல்லாமே கண் அளவு தான், எனக்கு அளவு தெரியாது ஆனால் பருப்புகள் மற்றும் தனியா அதிகமாகவும் சுக்கு 4 - 5 ம் எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
வேப்பம் பூ
‘அரிசி திப்பிலி ’
‘சுண்டைகாய் ’ வத்தல்
‘மணத்தகாளி வத்தல் '’
'கடலை பருப்பு'
உளுத்தம் பருப்பு
சுக்கு
தனியா
மிளகு
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயப்பொடி
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: இந்த பொடியை பிள்ளை பெற்றவள் மட்டும் சாப்பிடணும் என்று இல்லை, சிறு குழந்தைகளுக்கும் தரலாம், வாய் கசப்பாக 'பீல்' பண்ணுகிறவர்களும் உணவு ஜெரிக்கதவர்களும் கூட சாப்பிடலாம்
இதில் கொடுத்துள்ளவை எல்லாமே கண் அளவு தான், எனக்கு அளவு தெரியாது ஆனால் பருப்புகள் மற்றும் தனியா அதிகமாகவும் சுக்கு 4 - 5 ம் எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
வேப்பம் பூ
‘அரிசி திப்பிலி ’
‘சுண்டைகாய் ’ வத்தல்
‘மணத்தகாளி வத்தல் '’
'கடலை பருப்பு'
உளுத்தம் பருப்பு
சுக்கு
தனியா
மிளகு
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயப்பொடி
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: இந்த பொடியை பிள்ளை பெற்றவள் மட்டும் சாப்பிடணும் என்று இல்லை, சிறு குழந்தைகளுக்கும் தரலாம், வாய் கசப்பாக 'பீல்' பண்ணுகிறவர்களும் உணவு ஜெரிக்கதவர்களும் கூட சாப்பிடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அங்காய பொடி 3
அங்காய பொடி 3
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலத்துக்கு பொடி
கலத்துக்கு பொடி
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சம்பா பொடி
சம்பா பொடி
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணத்தக்காளி வத்தல்
மணத்தக்காளி வத்தல்
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
யாரும் பார்க்கலையா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
» வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
» வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்
Page 2 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|