புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 4%
viyasan
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:55 am


கடந்த காலத் தெளிவும் நிகழ்காலக் கோபமும் கொண்ட வரலாற்றின் பொக்கிஷங்களில் ஒன்று தன்னுடைய மூச்சுக்காற்றை நிறுத்திக் கொண்டது. பிபன் சந்திரா தனது 86-வது வயதில் இறந்து போய்விட்டார்.

மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! P30

'தி ஸ் அண்ட் குரோத் ஆஃப் எக்னாமிக் நேஷனலிஸம்’, 'இன் தி நேம் ஆஃப் டெமாக்ரஸி’, 'நேஷனலிஸம் அண்ட் கலோனியலிஸம் இன் மார்டன் இந்தியா’, 'தி மேக்கிங் ஆஃப் மார்டன் இந்தியா’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் பல்வேறு நூலகங்களின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. டெல்லி பல்கலைக்கழக நூலகம், நாடாளுமன்ற நூலகம், ஆவணக் காப்பகங்கள் என்று கடந்த அரை நூற்றாண்டு காலமாக அவர் நூலகங்களில்தான் வாழ்ந்தார். இந்திய வரலாறு மற்றும் பொருளாதார உலகுக்குக் பெரும் பங்களிப்புகளைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். வயதான நிலையிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் எழுதிக்கொண்டே இருந்தார். தன்னுடைய சுயசரிதையையும் பகத் சிங்கின் தியாக வரலாற்றையும் அவர் இப்போது எழுதி வந்தார். இன்னும் அந்தப் படைப்புகள் முற்றுப் பெறவில்லை. அறிவுச்சூழலில் யாராலும் இட்டு நிரப்ப முடியாத பள்ளம் அவரது இழப்பு.

டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா வரிசையில் வரலாற்றுக்குப் புதிய பார்வை கொடுத்தவர் பிபன் சந்திரா. வரலாற்றை ஆண்டு வரிசைப்படுத்திய நாள்காட்டியாக எழுதியவர்கள் பலர். இன்னும் சிலர், தனிமனிதர்களின் சாகசங்களை வியந்து எழுதி பிரமித்து நிற்பார்கள். ஆனால், சிந்தனை வளர்ச்சியும் இயக்கங்களின் எழுச்சியும்தான் வரலாற்றை வழிநடத்துவதாகக் கணித்தவர் பிபன் சந்திரா.

'இந்தியா என்பது நம்முடைய மண், இங்கு மிலேச்சர்களான பிரிட்டிஷார் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து மண்ணை மீட்பதற்காக யுத்தம் நடந்தது. அதுதான் சுதந்திரப் போராட்டம்’ என்ற பார்வையை மாற்றியவர் பிபன் சந்திரா. இந்தியாவின் நிதி மூலதனத்தை கொள்ளையடிக்க வந்தவர்கள் பிரிட்டிஷார். அவர்களுக்கு எதிராக நின்ற தாதாபாய் நௌரோஜி, ரானடே, கோகலே, திலகர், ஜி.சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் தேசிய அளவில் மாற்றுப் பொருளாதார சிந்தனையுடன் சுயசார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தியவர்கள் என்று அவர் எழுதிய 'இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 1880-1905’ என்ற புத்தகம் அறிவுச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காலனி ஆதிக்கம் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்தவர் பிபன் சந்திரா. காலனிய அரசு, அதன் நிறுவனங்கள், வர்க்கம், கலாசாரம், மனிதர்கள் ஆகியவை இணைந்து காலனியத்தை எப்படிக் கட்டமைக்கிறது என்பதை எழுதினார். இவரது பார்வையைப் பின்பற்றி பூபேந்தர் யாதவ், நீரஜா சிங், சசி ஜோஷி... போன்ற ஏராளமான ஆய்வுப் படையே டெல்லியில் உருக்கொண்டது.

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு வெகுமக்கள் தொடர்பு அரிதாகவே இருக்கும். ஆனால் பிபன் சந்திரா, தன் காலத்தில் இருந்த தான் மதிக்கத்தகுந்த அனைத்துப் படைப்பாளிகளுடனும் நெருக்கமாக இருந்தார். அவருடைய எந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும், அதனுடைய கையெழுத்துப் பிரதியை ரொமிலா தாப்பர், எஸ்.கோபால், கே.என்.பணிக்கர், மிருதுலா முகர்ஜி, ஆதித்யா முகர்ஜி போன்றவர்கள் படித்துக் கருத்துச் சொன்னதை பிபன் சந்திரா பதிவுசெய்தார். தன்னுடைய மாணவர்களில் யாரெல்லாம் இதைப் படித்து திருத்தங்கள் சொன்னார்கள் என்பதையும் சொன்னார். பல ஆளுமைகளிடம் இல்லாத பண்பு இது.

கடந்த காலத்தைப் பற்றி ஆக்ரோஷமாக விமர்சனம் செய்யும் அறிவு ஜீவிகள், நிகழ்காலத்தில் நடக்கும் மாபெரும் பேரழிவுக்குக்கூட மறந்தும் கருத்துத் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், பிபன் சந்திரா நிகழ்கால நிகழ்வுகள் அனைத்துக்கும் தன்னுடைய கடுமையான எதிர்வினையை ஆற்றினார். குறிப்பாக மதச்சார்பின்மைக்கு ஆதரவான அவரது எழுத்துகள் ஆணித்தரமானவை.

'நவீன இந்தியாவில் வகுப்புவாதம்’ என்ற தலைப்பில் பிபன் சந்திரா எழுதியது முக்கியமான நூல். 'நமது மரபில் வகுப்புவாதப் பார்வை இல்லை. இது பண்டைக்கால உணர்ச்சி அல்ல. வகுப்புவாதப் பகைமை கடந்த காலத்திலிருந்து மரபு வழியில் வந்த பிரச்னை அல்ல. வகுப்புவாதம் தற்காலத்துக்கானது. வகுப்புவாதம் ஒருவகையில் உணர்வுப்பூர்வ மோசடி; அல்லது உணர்வுபூர்வமற்ற சுய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. வகுப்புவாதி பிறரை ஏமாற்றுகிறார். சரியாகக் குறிப்பிட்டால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார்’ என்று எழுதினார். மேலும் மதச்சார்பின்மை பேசுபவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிபன் சந்திரா வரையறுத்தார்.

1. கடந்த கால இந்தியாவின் சாதனைகளை கண்மூடித்தனமாகவோ, ஆதாரங்கள் இல்லாமலோ மதிப்பிடக் கூடாது. அசலாக மதிப்பிட வேண்டும்.

2.உண்மையான மதம், தார்மீக அரசியல் ஆகியவற்றிலிருந்து வகுப்புவாதம் வேறுபட்டது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

3.வகுப்புவாதக் கட்சிகள், அனைத்து வகையிலும் தேசவிரோதச் சக்திகள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

4.அனைத்துச் சிறுபான்மை, பெரும்பான்மை வகுப்புவாதங்களும் ஒரே சமயத்தில் எதிர்க்கப்பட வேண்டியவை.

5.தேர்தல் நேரத்தில் மட்டும் சிலர் வகுப்புவாத எதிர்ப்பு வீரர்களாக மாறுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவார்கள். மாறாகத் தொடர் பிரசாரம் அவசியம்.

6.தீபாவளி, ஹோலி, ஈத், ஓணம், கிறிஸ்துமஸ் போன்ற திருவிழாக்களைக் குறிப்பிட்ட மத விழாக்களாக இல்லாமல் பொதுவிழாக்களாக முன்னிறுத்த வேண்டும்

- என்று நடைமுறை சார்ந்து பிபன் சந்திரா கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றுதலே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 12:19 pm

அவர் மூச்சு நின்றாலும் வரலாற்றில் அவர் பற்றிய பேச்சு நிலைத்திருக்கும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக