ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!

3 posters

Go down

சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! Empty சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!

Post by சிவா Tue Sep 02, 2014 11:49 pm

கடந்த இரு மாதங்களில் சிமென்ட் விலையை 50 கிலோ மூட்டைக்கு ரூ.60 உயர்த்தியுள்ளன சிமென்ட் ஆலைகள். அதாவது கடந்த மாதம் ரூ.300-க்கும் குறைவாக இருந்த சிமென்ட் மூட்டை விலை தற்போது ரூ.340 அல்லது ரூ.350 ஆக சந்தையில் விற்கப்படுகிறது. டான்செம் போன்ற அரசுத்துறை நிறுவன சிமென்ட் விலை மட்டும் உயராமல் இருக்கிறது.

இந்த விலை உயர்வை கட்டுநர்கள் சங்கங்கள் எதிர்த்துள்ளன. வாங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. அப்படி இவர்கள் போராட்டம் நடத்தினால், கட்டுமானச் செலவு கூடி பெரும் இழப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது சிமென்ட் ஆலைகளுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என். சீனிவாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, கட்டுமானத் துறையில் சிமென்ட் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் குறைவு. ஒரு சதுர அடிக்கு அரை மூட்டை சிமென்ட் செலவாகும். அந்த வகையில் சிமென்ட் விலை உயர்வு ஒரு சதுர அடிக்கு ரூ.30 தான். இதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கலாம், அவ்வளவுதான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார். சிமென்ட் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சராசரி நடுத்தர வகுப்பினரும்கூட!

உலகிலேயே அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில்,  முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 185 பெரிய சிமென்ட் ஆலைகள் அதில் 97 சதவீத உற்பத்தியை செய்கின்றன. இதில் 77 ஆலைகள் தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 21 சிமென்ட் ஆலைகள் உள்ளன.

சிமென்ட் ஆலைகளில் 98 சதவீதம் தனியார் ஆலைகள். சிமென்ட் இன்றியமையாப் பொருள் பட்டியலில் இல்லை. ஆகவே, தனியார் ஆலைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. இடுபொருள் விலையேற்றம், ஊழியர் சம்பள உயர்வு ஆகியனதான் சிமென்ட் விலையேற்றத்திக்குக் காரணம் என்று வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், இந்தியாவில் எந்த சிமென்ட் ஆலையும் நஷ்டத்தில் இயங்கவில்லை. பல நூறு கோடி லாபத்தில் தான் இயங்குகின்றன.

இவர்கள் வியாபார நெறிமுறைக்கு ஒவ்வாத கூட்டணி அமைத்து, செயற்கையான  தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் காரணமாக விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.

இந்தியாவில் கட்டுமானத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுவதில் சிமென்ட் தேவை ஆண்டுதோறும் 17 சதவீதம் அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 12-வது திட்டக் காலத்தில் (2012-17) டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்தியாவில் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்தி தனியார் சிமென்ட் ஆலைகளின் கூட்டணி கொள்ளை லாபத்தை அடைய முனைகிறது.

சிமென்ட் நுகர்வில் 60 சதவீதம் வீடுகள் கட்டவும், 17 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும், 13 சதவீதம் வணிகப் பயன்பாட்டுக்கும், 6 சதவீதம் தொழில் துறைக்கும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளிடம் நேரடியாக முன்விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்யும்போது, அவர்களால் இந்த விலை உயர்வை சமாளிக்கவும், தொடர்ந்து லாபத்தில் வீடுகளை விற்கவும் முடியும். சிமென்ட் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது வீடு கட்டும் சராசரி, நடுத்தரப் பிரிவினர் மட்டுமே.

அகில இந்திய அளவில் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முனைகிறதோ, இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் நினைத்தால் சிமென்ட் தயாரிப்பாளர்கள் கூட்டணியின் அடாவடித்தனத்திற்கு நிச்சயமாக முடிவு கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்கப்பட்டு, 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு, "டான்செம்' சிமென்ட்டின் விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நகர்ப்புற, ஊரக, நடுத்தர மக்களும் முதல்வரை வாழ்த்துவார்கள்.

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சிமென்ட்டை இன்றியமையாப் பொருள்கள் பட்டியலில் சேர்த்து, அதன் விலையையும் விற்பனையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே. உண்ண உணவு, தவித்த வாய்க்குத் தண்ணீர், நியாய விலையில் மருந்து என வழங்கும் தமிழக முதல்வர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கவும் வழிகோல வேண்டும்!

[thanks]தினமணி [/thanks]


சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! Empty Re: சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!

Post by ayyasamy ram Wed Sep 03, 2014 5:09 am

'அம்மா' - சிமென்ட் விரைவில் அறிவிக்கப்படலாம்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! Empty Re: சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 6:28 am

சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! 103459460 சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்! Empty Re: சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
»  டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum