Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
3 posters
Page 1 of 1
சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
கடந்த இரு மாதங்களில் சிமென்ட் விலையை 50 கிலோ மூட்டைக்கு ரூ.60 உயர்த்தியுள்ளன சிமென்ட் ஆலைகள். அதாவது கடந்த மாதம் ரூ.300-க்கும் குறைவாக இருந்த சிமென்ட் மூட்டை விலை தற்போது ரூ.340 அல்லது ரூ.350 ஆக சந்தையில் விற்கப்படுகிறது. டான்செம் போன்ற அரசுத்துறை நிறுவன சிமென்ட் விலை மட்டும் உயராமல் இருக்கிறது.
இந்த விலை உயர்வை கட்டுநர்கள் சங்கங்கள் எதிர்த்துள்ளன. வாங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. அப்படி இவர்கள் போராட்டம் நடத்தினால், கட்டுமானச் செலவு கூடி பெரும் இழப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது சிமென்ட் ஆலைகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என். சீனிவாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, கட்டுமானத் துறையில் சிமென்ட் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் குறைவு. ஒரு சதுர அடிக்கு அரை மூட்டை சிமென்ட் செலவாகும். அந்த வகையில் சிமென்ட் விலை உயர்வு ஒரு சதுர அடிக்கு ரூ.30 தான். இதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கலாம், அவ்வளவுதான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார். சிமென்ட் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சராசரி நடுத்தர வகுப்பினரும்கூட!
உலகிலேயே அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 185 பெரிய சிமென்ட் ஆலைகள் அதில் 97 சதவீத உற்பத்தியை செய்கின்றன. இதில் 77 ஆலைகள் தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 21 சிமென்ட் ஆலைகள் உள்ளன.
சிமென்ட் ஆலைகளில் 98 சதவீதம் தனியார் ஆலைகள். சிமென்ட் இன்றியமையாப் பொருள் பட்டியலில் இல்லை. ஆகவே, தனியார் ஆலைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. இடுபொருள் விலையேற்றம், ஊழியர் சம்பள உயர்வு ஆகியனதான் சிமென்ட் விலையேற்றத்திக்குக் காரணம் என்று வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், இந்தியாவில் எந்த சிமென்ட் ஆலையும் நஷ்டத்தில் இயங்கவில்லை. பல நூறு கோடி லாபத்தில் தான் இயங்குகின்றன.
இவர்கள் வியாபார நெறிமுறைக்கு ஒவ்வாத கூட்டணி அமைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் காரணமாக விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் கட்டுமானத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுவதில் சிமென்ட் தேவை ஆண்டுதோறும் 17 சதவீதம் அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 12-வது திட்டக் காலத்தில் (2012-17) டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்தியாவில் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்தி தனியார் சிமென்ட் ஆலைகளின் கூட்டணி கொள்ளை லாபத்தை அடைய முனைகிறது.
சிமென்ட் நுகர்வில் 60 சதவீதம் வீடுகள் கட்டவும், 17 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும், 13 சதவீதம் வணிகப் பயன்பாட்டுக்கும், 6 சதவீதம் தொழில் துறைக்கும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளிடம் நேரடியாக முன்விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்யும்போது, அவர்களால் இந்த விலை உயர்வை சமாளிக்கவும், தொடர்ந்து லாபத்தில் வீடுகளை விற்கவும் முடியும். சிமென்ட் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது வீடு கட்டும் சராசரி, நடுத்தரப் பிரிவினர் மட்டுமே.
அகில இந்திய அளவில் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முனைகிறதோ, இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் நினைத்தால் சிமென்ட் தயாரிப்பாளர்கள் கூட்டணியின் அடாவடித்தனத்திற்கு நிச்சயமாக முடிவு கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்கப்பட்டு, 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு, "டான்செம்' சிமென்ட்டின் விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நகர்ப்புற, ஊரக, நடுத்தர மக்களும் முதல்வரை வாழ்த்துவார்கள்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சிமென்ட்டை இன்றியமையாப் பொருள்கள் பட்டியலில் சேர்த்து, அதன் விலையையும் விற்பனையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே. உண்ண உணவு, தவித்த வாய்க்குத் தண்ணீர், நியாய விலையில் மருந்து என வழங்கும் தமிழக முதல்வர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கவும் வழிகோல வேண்டும்!
[thanks]தினமணி [/thanks]
இந்த விலை உயர்வை கட்டுநர்கள் சங்கங்கள் எதிர்த்துள்ளன. வாங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. அப்படி இவர்கள் போராட்டம் நடத்தினால், கட்டுமானச் செலவு கூடி பெரும் இழப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது சிமென்ட் ஆலைகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என். சீனிவாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, கட்டுமானத் துறையில் சிமென்ட் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் குறைவு. ஒரு சதுர அடிக்கு அரை மூட்டை சிமென்ட் செலவாகும். அந்த வகையில் சிமென்ட் விலை உயர்வு ஒரு சதுர அடிக்கு ரூ.30 தான். இதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கலாம், அவ்வளவுதான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார். சிமென்ட் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சராசரி நடுத்தர வகுப்பினரும்கூட!
உலகிலேயே அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 185 பெரிய சிமென்ட் ஆலைகள் அதில் 97 சதவீத உற்பத்தியை செய்கின்றன. இதில் 77 ஆலைகள் தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 21 சிமென்ட் ஆலைகள் உள்ளன.
சிமென்ட் ஆலைகளில் 98 சதவீதம் தனியார் ஆலைகள். சிமென்ட் இன்றியமையாப் பொருள் பட்டியலில் இல்லை. ஆகவே, தனியார் ஆலைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. இடுபொருள் விலையேற்றம், ஊழியர் சம்பள உயர்வு ஆகியனதான் சிமென்ட் விலையேற்றத்திக்குக் காரணம் என்று வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், இந்தியாவில் எந்த சிமென்ட் ஆலையும் நஷ்டத்தில் இயங்கவில்லை. பல நூறு கோடி லாபத்தில் தான் இயங்குகின்றன.
இவர்கள் வியாபார நெறிமுறைக்கு ஒவ்வாத கூட்டணி அமைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் காரணமாக விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் கட்டுமானத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுவதில் சிமென்ட் தேவை ஆண்டுதோறும் 17 சதவீதம் அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 12-வது திட்டக் காலத்தில் (2012-17) டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்தியாவில் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்தி தனியார் சிமென்ட் ஆலைகளின் கூட்டணி கொள்ளை லாபத்தை அடைய முனைகிறது.
சிமென்ட் நுகர்வில் 60 சதவீதம் வீடுகள் கட்டவும், 17 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும், 13 சதவீதம் வணிகப் பயன்பாட்டுக்கும், 6 சதவீதம் தொழில் துறைக்கும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளிடம் நேரடியாக முன்விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்யும்போது, அவர்களால் இந்த விலை உயர்வை சமாளிக்கவும், தொடர்ந்து லாபத்தில் வீடுகளை விற்கவும் முடியும். சிமென்ட் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது வீடு கட்டும் சராசரி, நடுத்தரப் பிரிவினர் மட்டுமே.
அகில இந்திய அளவில் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முனைகிறதோ, இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் நினைத்தால் சிமென்ட் தயாரிப்பாளர்கள் கூட்டணியின் அடாவடித்தனத்திற்கு நிச்சயமாக முடிவு கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்கப்பட்டு, 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு, "டான்செம்' சிமென்ட்டின் விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நகர்ப்புற, ஊரக, நடுத்தர மக்களும் முதல்வரை வாழ்த்துவார்கள்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சிமென்ட்டை இன்றியமையாப் பொருள்கள் பட்டியலில் சேர்த்து, அதன் விலையையும் விற்பனையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே. உண்ண உணவு, தவித்த வாய்க்குத் தண்ணீர், நியாய விலையில் மருந்து என வழங்கும் தமிழக முதல்வர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கவும் வழிகோல வேண்டும்!
[thanks]தினமணி [/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
'அம்மா' - சிமென்ட் விரைவில் அறிவிக்கப்படலாம்...!!
-
-
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|