ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரன்!

+2
ayyasamy ram
தமிழ்நேசன்1981
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாமரன்! - Page 2 Empty பாமரன்!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:55 pm

First topic message reminder :

பாமரன்!
பாமரன்! - Page 2 P30b
பல தருணங்களில், பிரச்னை எதுவானா லும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், அந்தப் பிரச்னைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத சாமான்ய மனிதர்கள்தான்.

நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஓர் ஆசிரியர், ஒரு டாக்டர், வழக்கறிஞர், பாதிரியார் மற்றும் பாமரன் ஒருவன் என ஐந்து பேர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சினிடையே வக்கீல், ''நான் எல்லோரது வழக்குகளும் ஜெயிக்க வாதாடுகிறேன். நான் இல்லையென்றால் நாட்டில் பிரச்னைகள் அதிகமாகி யிருக்கும்'' என்றார். பாதிரியாரோ, ''நான் எல்லோரும் சுகமாக வாழ, கடவுளை தினமும் வேண்டுகிறேன். அதனால்தான் நாட்டில் அமைதி நிலவுகிறது'' என்று சொன்னார். ''நான் எல்லோரையும் நோயிலிருந்து காப்பாற்றுகிறேன். எனவே, நான் கடவுளுக்குச் சமமானவன்'' என்றார் டாக்டர். ஆசிரியரோ, ''நான் எல்லோருக்கும் கல்வி தந்து அறிவை வளர்க்கிறேன். என் பணியே உயர்ந்தது! மாதா, பிதாவுக்கு அடுத்து குருவைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் தெய்வம் சொல்லப்பட்டுள்ளது!'' என்று பெருமையுடன் சொன்னார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பாமர மனிதன், ''அது சரி, உங்கள் அனைவருக்கும் நான்தானே பணத்தைக் கொட்டி அழுகிறேன். ஆகவே, உங்களைவிட நானே உயர்ந்தவன்'' என்றானாம் விரக்தியுடன்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:31 pm

நஷ்டம்... பத்து லட்சம்!
பாமரன்! - Page 2 P80a
திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிராமத்தான் ஒருவன் திடீரென ஓவென்று அழ ஆரம்பித்தான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து விசாரித்தார்கள். ''அநியாயமா பத்து லட்சம் ரூபாய் நஷ்டமாயிடுச்சே!'' என்று கதறித் தீர்த்தான். 'எப்படி நஷ்டம் வந்தது? உனக்கு ஏது அவ்வளவு பணம்? எந்த வியாபாரத்தில் போட்டு நஷ்டம் அடைந்தாய்?’ என்றெல்லாம் அக்கறையுடன் விசாரித்தார்கள்.

''இந்த பேப்பரில் ராஜஸ்தான் லாட்டரிச் சீட்டு ரிசல்ட் வந்திருக்கிறது. முதல் பரிசு 10 லட்சம், அதுதான் நஷ்டமாகிவிட்டது!'' என்று அவன் தேம்பி அழுதான்.

''நீ லாட்டரிச் சீட்டு வாங்கி, அதைத் தொலைத்து விட்டாயா?'' என்று கேட்டார்கள் சுற்றி இருந்தவர்கள்.

''இல்லை. லாட்டரிச் சீட்டு வாங்க மறந்து விட்டேன். அதனால்தான் அழுகிறேன்!'' என்றான் அந்தக் கிராமத்தான்.

இப்படித்தான், இல்லாத பிரச்னைகளை எண்ணி எண்ணி, அதற்காகவே கவலைப்பட்டு, பயந்து, மன இறுக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:36 pm

கீதை வரிகளில் கிருஷ்ணன்

அது 11-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பிய ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வாழ்ந்த காலம்.

ஒருமுறை, நாம சங்கீர்த்தனத்தின் மகிமையைப் பரப்பும் நோக்கில், தென்னிந்திய யாத்திரை மேற்கொண்டு, கால்நடையாகவே பூரியிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்துக்கு வந்தார் மஹாபிரபு.
பாமரன்! - Page 2 P70
அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் கோபால பட்டர் என்ற விஷ்ணு பக்தர் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த சமஸ்கிருத பண்டிதர். தினமும் ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்று, சந்நிதியில் அமர்ந்து, பகவத்கீதை பாராயணம் செய்வார். ஆனால், அவர் கீதை படிக்கும்போது தட்டுத் தடுமாறிப் படிப்பார். வார்த்தைகளைத் தப்பும் தவறுமாக உச்சரிப்பார். தொடர்ச்சி இல்லாமல் படிப்பார். ஆலயத்தில் பூஜை செய்யும் பட்டர்களும் பட்டாச்சாரியார்களும் இதனால் மிகவும் மனம் வருந்தினார்கள். பலமுறை கோபால பட்டரை அணுகி, ''இப்படி ஆலயத்தில் வந்து தப்பும் தவறுமாக கீதை பாராயணம் செய்வது பகவத் அபசாரம் அல்லவா? இதை நிறுத்திவிடுங்கள்; அல்லது, வேறு எங்காவது சென்று பாராயணம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

கோபால பட்டர் அவர்கள் பேச்சைக் காதிலேயே வாங்கவில்லை. ''பகவத் கீதையை பகவத் சந்நிதானத்தில் படிப்பது ஒரு வைஷ்ணவனின் உரிமை. என்னை யாரும் தடுக்க முடியாது. தடுத்தால் அதுதான் பகவத் அபசாரமாகும். அது தெய்வ நிந்தனையும் ஆகும்'' என்று கூறிவிட்டார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்று அனைவரும் ஒதுங்கிவிட, ஆலயத்தில் கோபால பட்டரின் பாராயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஸ்ரீரங்கம் வந்தபோது, ரங்கநாதர் ஆலயத்தில் அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் வருகிற நேரத்தில் கோபால பட்டர் கீதையைத் தப்பும் தவறுமாகப் பாராயணம் செய்து கொண்டிருந்தால், அது மஹாபிரபுவின் மனதை வேதனைப்படுத்துமே என்று எண்ணிய ஒரு சில பட்டர்கள் கோபால பட்டரை அணுகி, அன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது பாராயணத்தை வடக்கு கோபுர வாயிலில் வைத்துக்கொள்ளுமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டனர். கோபால பட்டரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

சைதன்ய மஹாபிரபுவை மேளதாளம் முழங்க, வேத கோஷம் ஒலிக்க, ஆலயத்துக்கு அழைத்து வந்தார்கள். ஆலயத்தின் ராஜகோபுரத்தில் நுழைந்ததுமே, சைதன்ய மஹாபிரபு பரவச நிலையடைந்தார். ''இங்கு எங்கோ பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. நான் அங்கே போகவேண்டும்'' என்று கூறி, கூட்டத்தினரைத் தாண்டிக்கொண்டு ஓட்டமாக ஓடி, கோயிலுக்குள் நுழைந்து, வடக்கு கோபுர வாசலை அடைந்தார். அங்கே கோபால பட்டர் கீதை பாராயணம் செய்வதைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தார். கண்களில் நீர் மல்க கோபால பட்டர் பாராயணம் செய்ததைக் கேட்ட மஹாபிரபுவின் கண்களிலிருந்தும் வெள்ளம்போல் நீர் சுரந்தது.

கோபால பட்டர் பகவத் கீதையில் ஓர் அத்தியாயம் படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து, மஹா பிரபுவைப் பார்த்ததும் பரவசமானார். மஹா பிரபு, கோபால பட்டரைப் பார்த்து ''ஸ்வாமி, நீர் மஹா பெரிய பண்டிதர். ஆனாலும், கீதை வரிகளைப் படிக்கும்போது ஏன் உச்சரிப்புப் பிழை ஏற்படுகிறது?'' என்று கேட்டார். அதற்கு, ''பிரபு, எப்படியாவது கீதையை மனப்பாடம் செய்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் தினமும் தவறாமல் பாராயணம் செய்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏடுகளைத் திறந்தால் அதில் பகவான் கிருஷ்ணன்தான் என் கண்களுக்குத் தெரிகிறானே தவிர, எழுத்துக்கள் சரியாகத் தெரிவதில்லை'' என்றார் கோபால பட்டர். உணர்ச்சிவசப்பட்ட சைதன்ய மஹா பிரபு, கோபால பட்டரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.

''எவன் ஒருவன் கீதையின் வாசகங்களிலும் வரிகளிலும் கிருஷ்ணனைக் காண்கிறானோ, அவனால்தான் கீதையின் தத்துவங்களை நன்கு உணரமுடியும்'' என்றார் மஹாபிரபு.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by சிவா Tue Sep 02, 2014 10:36 pm

அனைத்துக் கதைகளும் சிறந்த நீதியை நிலைநாட்டுவதாக உள்ளது. மிகவும் அருமையான திரி. தொடருங்கள் தமிழ் நேசன்!


பாமரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 10:48 pm

சிவா wrote:அனைத்துக் கதைகளும் சிறந்த நீதியை நிலைநாட்டுவதாக உள்ளது. மிகவும் அருமையான திரி. தொடருங்கள் தமிழ் நேசன்!
மேற்கோள் செய்த பதிவு: 1084375 நன்றி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by jesifer Thu Sep 04, 2014 10:10 am

இப்பதான் பாமரன் கதையை படித்து முடித்தேன்... பாவம் அந்த பாமரன்...வக்கீலிடமும்..டாக்டரிடமும் மாட்டி தவிக்கின்றார்..
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by M.Saranya Thu Sep 04, 2014 2:03 pm

தமிழ்நேசன்1981 wrote:அன்பால் புலியையும் வெல்லலாம்!
பாமரன்! - Page 2 P28a
குருவும் சிஷ்யனும் காட்டு வழியே சென்றுகொண்டி ருந்தனர். அப்போது, திடீரென புலியின் உறுமல் அருகில் கேட்டது. சிஷ்யன் நடுநடுங்கிப் போனான். ''குருவே, இங்கிருந்து ஓடிவிடலாமா?'' என்று பரிதாபமாகக் கேட்டான்.

''ஓடிவிடலாம்தான். ஆனால், புலி நம்மைத் துரத்தாமல் விடாது. புலியை எதிர்த்துப் போராடலாம் என்றாலோ, நம்மிடம் ஆயுதம் எதுவுமில்லை. பேசாமல், கடவுளை வேண்டிக் கொண்டு, கண்களை மூடி, தியானத்தில் அமரலாம். ஆனால், கடவுளின் தீர்ப்பு யார் பக்கம் இருக்கும் என்று நமக்குத் தெரியாது. எனவே, சற்றுப் பொறுமையாக இரு!'' என்ற குரு, தன் மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் ஈடுபட்டார். புலி சற்று நேரத்தில், வேறு வழியில் சென்று மறைந்தது.

''குருவே, என்ன அற்புதம் செய்து புலியை விரட்டினீர்கள்?'' என்று கேட்டான் சிஷ்யன்.

''ஒன்றும் பெரிதாகச் செய்ய வில்லை. என் மனத்திலிருந்து எதிர்மறை எண்ணங்களை வெளி யேற்றி, ஆழ்மன சக்தியை வெளிக் கொண்டு வந்தேன். புலியின் மன நிலையை அது பாதித்து, அமைதியை ஏற்படுத்தியது. எனவே, அது சாந்தமாகி, விலகிச் சென்றது. நம் உள் மனமும் அறிவும் ஒருமுகப்பட்டு, அமைதியும் சாந்தமும் நிலவும்போது, அந்த சாந்த நிலை வெளியேயும் பரவி, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அமைதியடையச் செய்கிறது!'' என்றார் குரு.
மேற்கோள் செய்த பதிவு: 1084348

எவ்வளவு உண்மை இக்கதையில்
இதை கணவன் மனைவி இருவரும் கடைப்பிடித்தால் குடும்பமே கோவில் தான்....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாமரன்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by krishnaamma Tue Sep 09, 2014 8:50 pm

எல்லா கதைகளுமே ரொம்ப அருமையாக இருக்கு நேசன்......தொடருங்கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாமரன்! - Page 2 Empty Re: பாமரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum