ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுமந்து வந்தது யார்?

+4
விமந்தனி
jesifer
M.Saranya
தமிழ்நேசன்1981
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுமந்து வந்தது யார்? Empty சுமந்து வந்தது யார்?

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:44 pm

சுமந்து வந்தது யார்? P24b

குருவும் சீடனும், ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்தனர். கரையோரத்தில் ஓர் அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் காலில் காயம் பட்டு, நடக்க முடியாமல் இருந்தாள்.

''ஸ்வாமி! என்னைத் தூக்கிக்கொண்டு போய் அக்கரையில் விட்டுவிடுகிறீர்களா?'' என்று அந்தப் பெண், குருவிடம் கேட்டாள். அவரும் மறுவார்த்தை சொல்லாமல், அவளைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரையில் விட்டார். சீடனுக்கு அதிர்ச்சி!

'சன்னியாசியான தன் குரு ஓர் இளம் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாமா? அது தர்மமா?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தான். கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும், மெதுவாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குருவை அணுகி, ''குருவே! அந்த அழகான பெண்ணைத் தொட்டுத் தூக்கினீர்களே! தாங்கள் இப்படிச் செய்யலாமா? இது தர்மமா? நியாயமா?'' என்று கேட்டான்.

''அடே! நான் அவளை அப்போதே இறக்கி விட்டுவிட்டேன். நீதான் இன்னமும் அவளைத் தூக்கிக்கொண்டு வருகிறாய். இனியாவது இறக்கிவிடு!'' என்றார் குரு.

பெண்ணை அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதை ஒரு ஆத்மா, மற்றொரு ஆத்மாவுக்குச் செய்யும் தொண்டாகவே குரு கருதியதால், அவர் மனத்தில் சஞ்சலம் இல்லை. உடல் உறுப்புகளைவிட, மனமே சீடனின் உணர்ச்சிகளை ஆட்டிப்படைத்ததால், அவன் கலக்கமுற்றான்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:52 pm

யானையும் வண்டும்
சுமந்து வந்தது யார்? P154d
ஒரு காட்டில் யானை ஒன்று, மரத்தின் இலைகளைப் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வண்டு அதன் காதுப்புறமாகப் பறந்து ரீங்காரம் செய்தது. யானை அதை லட்சியம் செய்யாமல் தன் காதுகளை அசைத்தவாறு, இலைகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தது.

ஆனால், வண்டு மீண்டும் மீண்டும் சத்தமிட்டபடியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பொறுமை இழந்த யானை ஒரு கட்டத்தில் வண்டைப் பார்த்து, ''நீ ஏன் இப்படி அமைதியில்லாமல் சத்தமிட்டபடி பறந்துகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டது.

அதற்கு வண்டு, ''நான் இங்கே பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புகிறேன். பல வண்ணப் பூக்களை நுகர்கிறேன். அவற்றில் தேன் குடித்து மகிழ்கிறேன். எனவே, உற்சாக மிகுதியில் ரீங்காரம் செய்கிறேன். அது சரி, நீ எப்படி இவ்வளவு இரைச்சலுக்கிடையேயும் அமைதியாக இருக்கிறாய்?'' என்று கேட்டது.

''என்னுடைய புலன்கள் என்னை ஆட்டிப் படைக்க நான் அனுமதிப்பது இல்லை. நான் செய்கின்ற வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். இப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த வேலையில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன். ஆதலால், அமைதியாக இருக்கிறேன்'' என்றது.

புலன்களை அடக்கிச் செயல் புரிந்தவன், அமைதியும் நிம்மதியும் நிச்சயம் பெறுவான்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 4:28 pm

விந்தியனை வென்ற அகத்தியன்!
சுமந்து வந்தது யார்? P46c
சிவபெருமான் ஆணைப்படி, பூமியை சமநிலைப்படுத்த குறுமுனி அகத்தியர், இமயத்தில் இருந்து குமரி நோக்கிச் சென்றார். வழியில், விந்தியமலை தடையாக நின்றது. ஆணவம் மிக்க விந்தியன், தன் பெயரைச் சொல்லி வணங்கினால் வழிவிடுவதாகக் கூறினான். இறைவனுக்கும் ஞானி களுக்கும் மட்டுமே தலைவணங்கும் அகத்தியருக்கு இது பிரச்னையாக அமைந்தது.

விந்தியனை வணங்காமல், அவனது கர்வத்தை அடக்கி மலையைத் தாண்டுவதுதான் பிரச்னைக்குத் தீர்வு. மலையைச் சிறிதாக்க அவர் நினைக்கவில்லை. அவரே விஸ்வரூபம் எடுத்தார். விந்தியமலை அவர் பாதத்தைவிட சின்னதாகப் போயிற்று. ஒரே எட்டில் மலையைத் தாண்டிச் சென்றார். விந்தியன் மலைத்து நின்றான். ஆணவம் நீங்கி, அகத்தியர் அடிபணிந்தான்.

பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by M.Saranya Tue Sep 02, 2014 4:51 pm

சிறந்த பதிவு
நல்ல கருத்து


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சுமந்து வந்தது யார்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by jesifer Tue Sep 02, 2014 5:15 pm

சூப்பர் அறிவுரைகள்...
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by விமந்தனி Tue Sep 02, 2014 5:32 pm

பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!
சுமந்து வந்தது யார்? 3838410834 சுமந்து வந்தது யார்? 3838410834


சுமந்து வந்தது யார்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசுமந்து வந்தது யார்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சுமந்து வந்தது யார்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by ஜாஹீதாபானு Tue Sep 02, 2014 6:12 pm

மூன்றும் முத்தான கதைகள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by ayyasamy ram Tue Sep 02, 2014 6:59 pm

குருவும் சீடனும் கதை பகிர்வு அருமை
-
இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர்
சிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - ஆவார்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:17 pm

M.Saranya wrote:சிறந்த பதிவு
நல்ல கருத்து
மேற்கோள் செய்த பதிவு: 1084289
jesifer wrote:சூப்பர் அறிவுரைகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1084297
விமந்தனி wrote:
பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!
சுமந்து வந்தது யார்? 3838410834 சுமந்து வந்தது யார்? 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1084307
ஜாஹீதாபானு wrote:மூன்றும் முத்தான கதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1084311
சுமந்து வந்தது யார்? 1571444738 நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by krishnaamma Tue Sep 02, 2014 7:32 pm

//பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!//

சூப்பர் புன்னகை நல்லா இருக்கு எல்லா கதைகளும் நேசன் புன்னகை பகிர்வுக்கு நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுமந்து வந்தது யார்? Empty Re: சுமந்து வந்தது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum