ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!

2 posters

Go down

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! Empty சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!

Post by தமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 8:19 pm

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! P54a

ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நோய்வாய்ப்படுகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்!

இது எந்த அளவுக்குத் தீவிரமான விஷயம் என்பது, அதன் பாதிப்புகளை பொது மருத்துவர் நா.எழிலன் விவரித்தபோது புரிந்தது.

'சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால், மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ என்கிறோம். 1980 - 90-களில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், புகை பிடிக்காத பலரும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கி இறந்தனர். பிறகுதான் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் வீட்டிலும் சிகரெட் புகைப்பவர் (Active smokerMain ) ஒருவர் இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, 2006-ல், 'பேஸிவ் ஸ்மோக்கிங்’ உண்டாக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் அறியப்பட்டன.

வீட்டில் அல்லது பொது இடங்களில் ஒருவர் சிகரெட் புகைத்தால், அதிலிருந்து வெளியாகும் 4000 ரசாயனப் பொருட்களை, சுற்றிலும் இருக்கும் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ சுவாசிக்க நேர்கிறது. அவற்றுள் 69 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. ஒருவர் புகை பிடிக்கும்போது, அவர் உள்ளே இழுக்கும் புகையைவிட (stream smoke), வெளியே விடும் புகை (Side stream smoke) அதிகம். இரண்டு புகையிலுமே, நிகோட்டின், காட்டினின், தையோசயனைட்ஸ், பென்சீன் கூட்டுப்பொருட்கள் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் உள்ளன.

ஒரே வீட்டில் வசிக்கும், புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்காதவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரே அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையின் உச்சம்!

புகைப்பவரின் அருகே, புகை உண்டாகும்போது கூடவே இருப்பவர்களை 'இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்’ (2nd hand smoker) என்போம். அந்தப் புகை கலைந்துபோன பின்னும், அந்தச் சுற்றுச்சூழலில் புகையின் துகள்கள் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும். அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களை 'மூன்றாம் நிலை புகைபிடிப்பவர்’ (3rd hand smoker) என்று சொல்வோம். இந்த இரு வகையினருக்குமே (நேரடியாக சிகரெட்டைத் தொடாதவர்கள்) புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் உண்டு. அதேபோல், இதய அடைப்பு நோய்கள், ஆன்ஜைனா போன்றவை வரும் வாய்ப்பும் 30 சதவிகிதம் உண்டு.

இவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்களுக்கான அபாயம் அதிகம்.

இதைவிடக் கொடுமை... வீட்டில் கர்ப்பிணிப் பெண் இருந்தால், அவருக்குக் குறைப் பிரசவம் ஏற்படலாம். கரு கலையவும் வாய்ப்பு உண்டு. புகைக்கும் சூழலில் இருக்கும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், ஐ.க்யூ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம். சொல்லப்போனால், கருவில் குழந்தையின் வளர்ச்சியே சுருங்கிவிடும். குழந்தையின் அப்பா, தொடர்ந்து புகைபிடிப்பவர் என்றால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா, நிமோனியா மற்றும் பிராங்காய்ட்டீஸ் (சுவாசக்குழாய் சுருக்க நோய்) வருவதற்கும், மற்ற குழந்தைகளைவிட 15 - 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம்.

வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும்கூட ஆபத்து நேர்வதைப் புகைபிடிக்கும் ஆண்கள் உணரவேண்டும். பொது இடம், கழிப்பறை, வீட்டின் வெளியே என எங்குமே புகைபிடிக்கக் கூடாது.

குடும்ப நலனில் அக்கறையும், சுற்றுசூழலில் ஆர்வமும் குறிப்பாக மனித நேயம் உள்ளவர்களாகவும் இருப்பவர்களால் மட்டுமே புகைப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியும்'' என்கிறார் டாக்டர் எழிலன்.

சிந்தியுங்கள் சகோதரர்களே... இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்!

பொது இடங்களில் புகைக்குத் தடை... நோய்க்கு விடை!

'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’-க்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேலைநாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புகை பிடிப்பவரது குடும்பத்தினரின் முடி, தோல், சுவாசக்குழாய், மூக்கு நுழைவுக்குழாய் போன்ற உறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில்தான், நச்சுக்களின் படிமானம் அந்த உறுப்புகளில் படிந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன் பிறகு, புகையை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் கேடுகளை மனதில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை உத்தரவு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், மேலைநாடுகளில் தடை செய்த இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழலில் இருந்தவர்களிடம் மாதிரி எடுத்து ஆராய்ந்தபோது, அங்கெல்லாம் பிரசவ பாதிப்புகள், புற்றுநோய், நிமோனியா, இதய நோய் போன்றவற்றின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! Empty Re: சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!

Post by krishnaamma Sun Aug 31, 2014 11:14 pm

//சிந்தியுங்கள் சகோதரர்களே... இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்!

பொது இடங்களில் புகைக்குத் தடை... நோய்க்கு விடை!//


ஆமாம் நேசன், புகை பிடிக்காதவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு நோய்வர சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum