ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

4 posters

Go down

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Empty தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Post by சிவா Wed Aug 27, 2014 10:30 pm


இந்தோனேசியா போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுதல் பற்றியும், தாய்மார்களுக்கு பால் கட்டி கொண்டால், எப்படி பராமரிப்பது என்பது பற்றியும், சொல்லிக் கொடுப்பதற்கு, தனி அமைப்புகள் இருப்பது, எத்தனை பேருக்கு தெரியும்.அந்தளவுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் அறிந்து செயல்படுகின்றனர் அங்கே. அதற்கிணையாக இங்கே, அந்த பணியை, பெண்ணின் குடும்பத்தினர் சிறப்புற செய்து வருகின்றனர். அவர்கள் தான், பிரசவித்த பெண்ணுக்கு, தாய்ப்பால் எப்படி கொடுப்பது என்பதை சொல்லித் தருகின்றனர் என்கிறார், சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமாரி.

தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்குவதற்காக, இந்த மருத்துவமனை சார்பில், இயக்குனர் டாக்டர் சுந்தரி தலைமையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் நல டாக்டர்கள் பலர் பேசினர். அவர்கள் கூறிய முக்கிய தகவல்கள் இங்கே: டாக்டர் பரமகுரு:

அந்த காலத்தில், ஒவ்வொரு பெண்ணும், தன் குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் முதல், நான்கு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்தனர். இன்று, மூன்று மாதம் கூட முழுமையாக தர முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணம் தேடக் கூடாது.

என்றைக்கு குடும்ப உறவுகளை உதறி விட்டு, தனிக் குடித்தனத்திற்கு சென்றனரோ, அதனால் வந்த பிரச்னை தான் இது. தனிக் குடித்தனத்திற்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது தான், மருத்துவ கண்டுபிடிப்பு.

டாக்டர் ஹேமமாலினி:
பாட்டில் மூடியை திறந்தோமா, ஆரோக்யா பாலோ, ஆவின் பாலோ ஏதாவது ஒன்றை ஊத்தினோமா என்கிறது இல்லை, தாய்ப்பால் புகட்டுவது. இதில், தாய்மார்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் வர வேண்டும். இல்லையென்றால், தாய்ப்பால் கிடைக்காது. தாய்ப்பாலின் தாரக மந்திரமே, 'Willing Mother and A Sucking Child' என்பது தான். தாயிடமிருந்து பாலை உறிய, குழந்தை நிறைய சிரமப்படும். ஆனால், புட்டியில் பால் அருந்த குழந்தை அதிகம் சிரமப்படாது. அதனால், புட்டிப் பாலையே குழந்தை அதிகம் விரும்பும். எது நன்மை என்பது அதற்கு தெரியாது. அதை, 'Nipple Confusion' என்று, மருத்துவ ரீதியாக குறிப்பிடுகிறோம்.

டாக்டர் கோமதி ப்ரியா:
தாய்மார்களுக்கு, முதல் மூன்று நாட்கள், பால், நீர் போல் வரும். அதன் பெயர், சீம்பால். அதனால், குழந்தைக்கு பால் பற்றாது என்று, புட்டிப் பால் கொடுக்கின்றனர். இது தவறு. குழந்தைக்கு முதல் ஆறு மாதம், தாய்ப்பால் தான் சிறந்தது. தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், பால் கட்டி, அதில் கிருமி தொற்று ஏற்பட்டு விடும். மீண்டும் பால் சுரக்காமல் போய், நோய் முற்றி விடும்.

டாக்டர் ராஜேந்திரன்:
ஒரு தாய், தன் சேய்க்கு பால் புகட்ட வேண்டுமானால், அந்த தாய்க்கு சத்தான உணவு அவசியம். பிரசவித்த பெண்களுக்கு முதலில் சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். இன்றைய தாயால், ஆறு மாதத்திற்கு மேல் பால் கொடுக்க முடியாமல் போவதற்கு, அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும், வேலைப்பளுவும் தான் காரணம். அதற்கு காரணம், தனிக்குடித்தனம்.

தினமலர்


தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Empty Re: தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Post by M.M.SENTHIL Wed Aug 27, 2014 11:03 pm

சிவா wrote:
ஒரு தாய், தன் சேய்க்கு பால் புகட்ட வேண்டுமானால், அந்த தாய்க்கு சத்தான உணவு அவசியம். பிரசவித்த பெண்களுக்கு முதலில் சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். இன்றைய தாயால், ஆறு மாதத்திற்கு மேல் பால் கொடுக்க முடியாமல் போவதற்கு, அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும், வேலைப்பளுவும் தான் காரணம். அதற்கு காரணம், தனிக்குடித்தனம்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1083042

சரியான கூற்று, ஒப்புக் கொள்ள வேண்டியதும் கூட.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Empty Re: தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Post by ayyasamy ram Thu Aug 28, 2014 10:34 am

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? DJLcg7GYSaex9qgwAhxx+mother
-
பயனுள்ள பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Empty Re: தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Post by M.Saranya Thu Aug 28, 2014 10:55 am

மிகவும் பயனுள்ள பகிர்வு
நன்றி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Empty Re: தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum