Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
+3
உமேரா
அசுரன்
ந.க.துறைவன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
First topic message reminder :
*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
இழப்பு…!!
*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….!!
*
*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1086568ந.க.துறைவன் wrote:இழப்பு…!!
*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….!!
*
ஹா ஹா அருமை ஐயா
அவர்களும் எப்படித் தான் பிழைப்பதாம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி பானு மேடம்...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
உணர வைக்கும்…!!
.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.
*
.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
தீபாவளி….!!
*
விடியல்பொழுதின் நேரம்
விழிக்கும் பறவைகளெல்லாம்
குரல் கொடுக்கவில்லை.
மரக்கிளைகள் எங்கும்
அசைவற்று கிடக்கின்றன.
மேகமூட்டமாயிருக்கின்றன
மழைத் தொடருமென்று அடிக்கடி
வானிலை மையம் அறிவிக்கின்றது.
இன்று தீபாவளி என்பதால்
விழித்துக் கொண்ட மக்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
என அனைவரும் உற்சாகமாய்
குளித்து மங்கலகரமாய்
அழகான புத்தாடையில்
காட்சியளிக்கின்றார்கள்.
பட்டாசு வெடிக்கும் சிறுவர்களுக்கு
உதவியாகப் பெற்றோர்கள்
அருகில் நின்று பாதுகாப்பு
எச்சரிக்கையோடு குரல் கொடுத்து
மகிழச்சியோடு சிரிக்கிறார்கள்.
பாதையில் போவோர் வருவோர்
வெடிகள் வெடித்தப் பிறகே
பாதையிலிருந்து நகர்ந்துப்
போகின்றார்கள்.
செல்போனில் வாழ்த்துச்
செய்திகள் சொல்பவர்களுக்கு
வெடிச் சத்தம் பெரும்
இடைஞ்சலாகவே இருக்கின்றது.
பறவைகள், விலங்குகள் எல்லாம்
ஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்
பாதுகாப்பான இடந்தேடிப் போய்
பதுங்கியிருக்கின்றன.
பட்டாசுப் புகை வான்நோக்கி
உயர்ந்துச் செல்கின்றன
மனிதர்களின் மகிழ்ச்சியின்
பெருங் கொண்டாட்டமாய்….!!
*
*
விடியல்பொழுதின் நேரம்
விழிக்கும் பறவைகளெல்லாம்
குரல் கொடுக்கவில்லை.
மரக்கிளைகள் எங்கும்
அசைவற்று கிடக்கின்றன.
மேகமூட்டமாயிருக்கின்றன
மழைத் தொடருமென்று அடிக்கடி
வானிலை மையம் அறிவிக்கின்றது.
இன்று தீபாவளி என்பதால்
விழித்துக் கொண்ட மக்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
என அனைவரும் உற்சாகமாய்
குளித்து மங்கலகரமாய்
அழகான புத்தாடையில்
காட்சியளிக்கின்றார்கள்.
பட்டாசு வெடிக்கும் சிறுவர்களுக்கு
உதவியாகப் பெற்றோர்கள்
அருகில் நின்று பாதுகாப்பு
எச்சரிக்கையோடு குரல் கொடுத்து
மகிழச்சியோடு சிரிக்கிறார்கள்.
பாதையில் போவோர் வருவோர்
வெடிகள் வெடித்தப் பிறகே
பாதையிலிருந்து நகர்ந்துப்
போகின்றார்கள்.
செல்போனில் வாழ்த்துச்
செய்திகள் சொல்பவர்களுக்கு
வெடிச் சத்தம் பெரும்
இடைஞ்சலாகவே இருக்கின்றது.
பறவைகள், விலங்குகள் எல்லாம்
ஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்
பாதுகாப்பான இடந்தேடிப் போய்
பதுங்கியிருக்கின்றன.
பட்டாசுப் புகை வான்நோக்கி
உயர்ந்துச் செல்கின்றன
மனிதர்களின் மகிழ்ச்சியின்
பெருங் கொண்டாட்டமாய்….!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
நோம்பு விரதம்…!!
*
நிர்மலமான வானம் வெண்மேகங்களால்
தெளிந்திருந்தது கதிரொளியின் வெப்பத்
தகிப்பின் தீவிரம் இன்னும் தணியவில்லை.
காற்றின்மையால் மரங்களில் அசைவில்லை.
எங்கும் மேயப் போகாமல் மரநிழலில்
ஒய்வெடுக்கின்றன மாடுகள்.
பாதையில் வாகனங்களின் இரைச்சல்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சத்தம்.
குடும்ப வேலைகளைக் கருத்தாகக்
கவனித்துக் கொண்டு தீபாவளி
விடுமுறையினைக் கழிக்கும் ஆண்கள்
பத்திரிகைச் செய்தியில் முகம்
மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் அடுக்களையில் விதவிதமாய்
சமைத்துக் கொண்டு, அவ்வப்போது
தேனீர் அருந்தி பசியடக்கிக் கொண்டு
நோம்பு விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
தலை தீபாவளி கொண்டாடும்
மாப்பிள்ளை – பெண்
காலையிலிருந்தே சிரிப்பு வெடிப்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,
குழந்தைகள் நேற்று வாங்கி
வைத்திருந்தப் பலகாரங்களை
அடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போய்
நண்பர்களோடு மகி்ழ்ச்சியாய் பகிர்ந்துச்
சாப்பிடுகிறார்கள். பரபரப்பில்லாமல்
தட்டுகளில் பலகாரம் பூ பழங்கள் கயிறு
எல்லாம் அடுக்கி வைத்துப் பின்னர்
அழகான புதியப் பட்டுப் புடவையில்
கௌரிப் பூசைக்காக கோயிலுக்குப்
புறப்படுகிறார்கள் அங்கு வரிசையில்
காத்திருக்கும் பெண்களின் கூச்சல்
பட்டாசு வெடிச் சத்தத்தை மிஞ்சியது.
கோயிலுக்குப் போனவர்கள் வரும் வரை
வீட்டில் பூசைக்காகக் காத்திருக்கிறாள்
அலங்கார பூஷிதையாய் அம்மன்.
அப்பாக்களை நச்சரிக்கிறார்கள்
பசி தாங்க முடியாத சிறுவர்கள்
இன்னும் சிறிது நேரத்தில்
முடியப் போகிறது நோம்பு விரதம்….!!
*
*
நிர்மலமான வானம் வெண்மேகங்களால்
தெளிந்திருந்தது கதிரொளியின் வெப்பத்
தகிப்பின் தீவிரம் இன்னும் தணியவில்லை.
காற்றின்மையால் மரங்களில் அசைவில்லை.
எங்கும் மேயப் போகாமல் மரநிழலில்
ஒய்வெடுக்கின்றன மாடுகள்.
பாதையில் வாகனங்களின் இரைச்சல்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சத்தம்.
குடும்ப வேலைகளைக் கருத்தாகக்
கவனித்துக் கொண்டு தீபாவளி
விடுமுறையினைக் கழிக்கும் ஆண்கள்
பத்திரிகைச் செய்தியில் முகம்
மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் அடுக்களையில் விதவிதமாய்
சமைத்துக் கொண்டு, அவ்வப்போது
தேனீர் அருந்தி பசியடக்கிக் கொண்டு
நோம்பு விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
தலை தீபாவளி கொண்டாடும்
மாப்பிள்ளை – பெண்
காலையிலிருந்தே சிரிப்பு வெடிப்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,
குழந்தைகள் நேற்று வாங்கி
வைத்திருந்தப் பலகாரங்களை
அடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போய்
நண்பர்களோடு மகி்ழ்ச்சியாய் பகிர்ந்துச்
சாப்பிடுகிறார்கள். பரபரப்பில்லாமல்
தட்டுகளில் பலகாரம் பூ பழங்கள் கயிறு
எல்லாம் அடுக்கி வைத்துப் பின்னர்
அழகான புதியப் பட்டுப் புடவையில்
கௌரிப் பூசைக்காக கோயிலுக்குப்
புறப்படுகிறார்கள் அங்கு வரிசையில்
காத்திருக்கும் பெண்களின் கூச்சல்
பட்டாசு வெடிச் சத்தத்தை மிஞ்சியது.
கோயிலுக்குப் போனவர்கள் வரும் வரை
வீட்டில் பூசைக்காகக் காத்திருக்கிறாள்
அலங்கார பூஷிதையாய் அம்மன்.
அப்பாக்களை நச்சரிக்கிறார்கள்
பசி தாங்க முடியாத சிறுவர்கள்
இன்னும் சிறிது நேரத்தில்
முடியப் போகிறது நோம்பு விரதம்….!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மழை…!!
*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*
*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அருமையான வரிகள்
"எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?"
இந்த வரிகள் அருமை
"எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?"
இந்த வரிகள் அருமை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி நண்பரே...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|