புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:53 pm

First topic message reminder :

கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 P12a
கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!

யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி

ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 2:23 pm

வாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 P86
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 P86a
சிங்காரச் சென்னையின் பல பகுதிகள், அந்தக் காலத்தில் வயலும் வாழையுமாகப் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தது. குளங்களும், ஏரிகளும் நிறைய உண்டு!

ஒருநாள், அன்பர் ஒருவர் குளத்தில் இறங்கிக் குளிக்கும்போது, காலில் ஏதோ இடறியது. அதை எடுக்கலாம் என்றால், நகர்த்தக் கூடமுடியவில்லை! அருகில் இருந்தவர்களின் துணையுடன் அதனை தண்ணீருக் குள்ளிருந்து வெளியே எடுத்துப் பார்க்க... அது, செம்பினால் ஆன விநாயகர் விக்கிரகம்! பக்தியுடன் விநாயகரை எடுத்து வந்து, வயல்வெளியில் பிரதிஷ்டை செய்து, சிறிய கோயிலும் கட்டி வழிபடத் துவங்கினர். இவருக்கு ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர் என்று திருநாமமும் சூட்டப்பட்டது.

நாளடைவில்... விளைச்சல் பூமி, சிறுசிறு ஊர்களாக மாறிப்போனது. மடிப்பாகம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய 3 ஊர்களுக்கும் பொதுவாக இந்த விநாயகர் வீற்றிருப்பதால், இவரை வணங்கிவிட்டே, பொழுதைத் துவக்குகின்றனர், பக்தர்கள்! 1965-ல் கோயில் விரிவு படுத்தப்பட்டது. நடிகர் சிவாஜிகணேசன், இந்த விநாயகர் மீது கொண்ட பக்தியால், 'ஆலய மணி’யை வழங்கி, வழிபட்டுள்ளார். சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ளது உள்ளகரம் - புழுதிவாக்கம். இங்குதான் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர். விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள், கும்பாபிஷேகம் செய்த ஆண்டு விழா என்பதால், வருஷாபிஷேகம், அன்னதானம் என ஆலயம் களை கட்டும். விநாயகர் சதுர்த்தியன்று, அலங்கார ஆராதனை களுடன் வழிபாடுகள் அமர்க்களப்படுமாம்!

இங்கே, ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் நவக்கிரகங்களும் உள்ளனர். ஸ்ரீபாதாள விக்னேஸ்வரருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை அல்லது அவல் பொரி அல்லது சுண்டல் நைவேத்தியம் படைத்து, மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்; பள்ளத்தில் இருக்கிற நம்மை உயரத்தில் கொண்டு வந்து, நம் வாழ்க்கையை உயர்த்துவார் என்றுப் போற்றுகின்றனர், பக்தர்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 2:24 pm

நவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 P68
நவசித்தி விநாயகரைத் தரிசித்து வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகிவிடும்; இல்லத்தில், நன்மைகள் அனைத்தும் குடியேறும் என்கின்றனர், பக்தர்கள்.

சென்னை- வேலூர் சாலையில் உள்ளது வாலாஜாபேட்டை. இங்கிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை கிராமம் (அடிக்கடி பேருந்து வசதி உண்டு). இந்த ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. பயணித்தால், ஒட்டனேரியை அடையலாம். தற்போது 'விநாயகபுரம்’ என்று அழைக்கப்படுகிற இந்த ஊரில்தான், அருளையும் பொருளையும் அள்ளித் தரும் ஸ்ரீநவசித்தி விநாயகர் கோயில்கொண்டிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள ஊர் என்பதாலோ என்னவோ, ஆந்திர கோயிலைப் போலவே அமைந்துள்ளது ஸ்ரீநவசித்தி விநாயகர் ஆலயம். உள்ளே, மகா மண்டபத்தில் விநாயகப்பெருமானின் 32 திருவுருவங்களையும் தரிசிக்கலாம். அதையடுத்து, எங்கு திரும்பினாலும் விநாயகரின் அற்புதத் தரிசனம் சிலிர்க்க வைக்கிறது. கருவறையில், ஸ்ரீநவசித்தி விநாயகர்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 P68a
இவரை மனதாரப் பிரார்த்தித்தால், மனக் குழப்பங்கள் யாவும் விலகும்; புத்தியில் தெளிவு பிறந்து, உற்சாகத்துடன் செயலாற்றலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கருவறைச் சந்நிதியில், மூலவருடன் சுயம்புவாகத் தோன்றிய இரண்டு விநாயகப் பெருமானையும் தரிசிக்க முடிகிறது. இதில், நடுவில் சிவலிங்க வடிவினராக காட்சி தரும் சுயம்பு மூர்த்தத் தில் ஒரு விசேஷம் உண்டு!

இந்த மூர்த்தத்தின் நடுப்பாகத்தைக் கண்டால் ஸ்ரீவிநாயகரின் திருமுகமும், மேல் பாகத்தைக் கவனித்தால், நாகம் ஒன்று படமெடுத்த நிலையில் இருப்பது போலவும் தோன்றும் என்று பூரிப்புடன் விவரிக்கின்றனர் பக்தர்கள். ஆகவே, இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட ராகு-கேது தோஷங்களும் நிவர்த்தியாகும் எனும் நம்பிக்கையுடன் சுற்று வட்டார மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டுச் செல் கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 4 P69
சங்கடஹர சதுர்த்தி நாளில், ஸ்ரீநவசித்தி விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. அந்தத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநவசித்தி விநாயகரை மனதாரப் பிரார்த்தித்தால், தீராத வினைகளும் தீரும்; நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

வருடந்தோறும் விநாயக சதுர்த்தி நன்னாளில், இங்கு சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படுமாம். அந்த நாளில், வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவின் சித்தூர் முதலான பல இடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரண்டு வந்து, நைவேத்தியங்கள் படைத்து, ஸ்ரீநவசித்தி விநாயகரை தரிசித்துச் செல்கின்றனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 3:01 pm

நல்லா இருக்கு, பொறுமையாய் தான் படிக்கணும் நேசன், பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக