புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!
கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!
யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.
சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!
தோரண கணபதியை வழிபடும்முறை:
மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.
மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.
சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.
இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி
ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)
திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!
பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக
மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!
பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!
சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!
கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!
யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.
சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!
தோரண கணபதியை வழிபடும்முறை:
மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.
மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.
சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.
இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி
ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)
திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!
பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக
மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!
பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!
சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வியாசர் சென்ன விநாயகர் திருநாமங்கள்
மகாஸ்காந்த புராணத்தின் தொடக்கத்தில் கணபதியின் பதினாறு நாமங்களை வியாசர் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்தத் திருநாமங்களை, கல்வி பயிலத் தொடங்கும்போதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், வெளியில் புறப்படும்போதும், போர்க்களத்திலும், துன்பங்கள் ஏற்படும்போதும் கூறினால், எப்போதும் மங்கலமே உண்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வியாசர். வினை தீர்க்கும் அந்தத் திருநாமங்கள்
ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் - யானைக்காது உடையவன்
லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்
விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்
விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது - தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் - யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்
மகாஸ்காந்த புராணத்தின் தொடக்கத்தில் கணபதியின் பதினாறு நாமங்களை வியாசர் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்தத் திருநாமங்களை, கல்வி பயிலத் தொடங்கும்போதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், வெளியில் புறப்படும்போதும், போர்க்களத்திலும், துன்பங்கள் ஏற்படும்போதும் கூறினால், எப்போதும் மங்கலமே உண்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வியாசர். வினை தீர்க்கும் அந்தத் திருநாமங்கள்
ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் - யானைக்காது உடையவன்
லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்
விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்
விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது - தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் - யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1082731தமிழ்நேசன்1981 wrote:ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!
கணபதியே சரணம்!
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!
'முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!
வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.
'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.
'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!
ரொம்ப அருமையாக தொகுத்திருக்கிங்க நேசன் நான் இந்த பிள்ளையாரை சேவித்திருக்கேன் ரொம்ப அழகாய் ரொம்ப பெரிய மூர்த்தி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1082735தமிழ்நேசன்1981 wrote:வியாசர் சென்ன விநாயகர் திருநாமங்கள்
மகாஸ்காந்த புராணத்தின் தொடக்கத்தில் கணபதியின் பதினாறு நாமங்களை வியாசர் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்தத் திருநாமங்களை, கல்வி பயிலத் தொடங்கும்போதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், வெளியில் புறப்படும்போதும், போர்க்களத்திலும், துன்பங்கள் ஏற்படும்போதும் கூறினால், எப்போதும் மங்கலமே உண்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வியாசர். வினை தீர்க்கும் அந்தத் திருநாமங்கள்
ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் - யானைக்காது உடையவன்
லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்
விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்
விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது - தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் - யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்
ஆமாம் இதை "ஷோடச (16) நாமங்கள்" என்று சொல்லுவார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
ரொம்ப சக்தி வாய்ந்த சுலோகம் இது, நான் கூட போட்டிருக்கேன் இதை இங்கு ஏதாவது வேண்டிக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து 11 முறை சொல்லணும், அப்படி சொன்னால் வேண்டிக்கொண்டது கண்டிப்பாக பலிக்கும்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஸ்ரீவெள்ளை விநாயகருக்கு கல்யாணம்!
தஞ்சாவூர் கீழவாசல்
ஸ்ரீவல்லப விநாயகர் கோயில்
ஆனைமுகனை கல்யாணக் கோலத்தில் தரிசிக்க, தஞ்சை கீழவாசலில் அமைந்துள்ள ஸ்ரீவல்லப அம்பிகா சமேத ஸ்வேத (வெள்ளை) விநாயகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்!
வெள்ளை விநாயகர் கோயில் எது என்று கேட்டால், பளிச்சென்று வழி சொல்வார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்ஸவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார்.
வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார் கணபதி. 'மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்' என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்; அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.
எனவே, இந்த ஆலயத்தில் திருக்கல்யாண உற்ஸவம் விசேஷம்! ஆவணி மாதம் 10 நாள் நடைபெறும் விழாவில், விநாயக சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாணம். திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் இங்கு வந்து, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.
ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத் துள்ளார். சுவாமிகள், இங்கே 1008 பைரவ பூஜை செய்ததாகவும் சொல்கின்றனர். வியாழக் கிழமைகளில் ஸ்ரீபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநடராஜரின் சுதைச் சிற்பத்தையும் இங்கு தரிசிக்கலாம். கோயிலின் ஸ்தல விருட்சம் - நாகலிங்கமரம். விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை, தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறுமாம். 3-ஆம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம்!
சங்கடஹர சதுர்த்தி கூட்டு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொள்வர். தினமும் 4 கால பூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில் 5 கால பூஜைகள் நடைபெறும். பிரம்ம முகூர்த்த வேளையில், அபிஷேக- ஆராதனைகள் அமர்க்களப்படும்! சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்றும் பெயர் உண்டு!
தஞ்சாவூர் கீழவாசல்
ஸ்ரீவல்லப விநாயகர் கோயில்
ஆனைமுகனை கல்யாணக் கோலத்தில் தரிசிக்க, தஞ்சை கீழவாசலில் அமைந்துள்ள ஸ்ரீவல்லப அம்பிகா சமேத ஸ்வேத (வெள்ளை) விநாயகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்!
வெள்ளை விநாயகர் கோயில் எது என்று கேட்டால், பளிச்சென்று வழி சொல்வார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்ஸவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார்.
வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார் கணபதி. 'மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்' என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்; அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.
எனவே, இந்த ஆலயத்தில் திருக்கல்யாண உற்ஸவம் விசேஷம்! ஆவணி மாதம் 10 நாள் நடைபெறும் விழாவில், விநாயக சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாணம். திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் இங்கு வந்து, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.
ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத் துள்ளார். சுவாமிகள், இங்கே 1008 பைரவ பூஜை செய்ததாகவும் சொல்கின்றனர். வியாழக் கிழமைகளில் ஸ்ரீபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநடராஜரின் சுதைச் சிற்பத்தையும் இங்கு தரிசிக்கலாம். கோயிலின் ஸ்தல விருட்சம் - நாகலிங்கமரம். விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை, தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறுமாம். 3-ஆம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம்!
சங்கடஹர சதுர்த்தி கூட்டு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொள்வர். தினமும் 4 கால பூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில் 5 கால பூஜைகள் நடைபெறும். பிரம்ம முகூர்த்த வேளையில், அபிஷேக- ஆராதனைகள் அமர்க்களப்படும்! சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்றும் பெயர் உண்டு!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கதை கதையாம்... கணபதியாம்!
நாயகர் என்றால் தலைவன் என்று பொருள். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத முதன்மை நிலையில் இருப்பவர் ஆதலால், பிள்ளையாரை 'விநாயகர்' என்று போற்றுகிறோம். திருப் பெயர் மட்டுமா? பிள்ளையாரைக் குறித்த புராணக் கதைகளும் அற்புதமானவை!
சகல பாவங்களையும் களைந்து, கோடானுகோடி புண்ணியத்தையும் சர்வ மங்கலங்களையும் அள்ளித் தரும் ஆனைமுகத்தானின் அருள்கதைகளை நாமும் படித்துப் பலன் பெறுவோமா?!
கச்சியப்ப சிவாச்சார்யரின்
கந்த புராணம் கூறும் கதை...
திருக்கயிலையில், பல்வேறு ஓவியங்கள் நிறைந்த அழகிய மண்டபம் ஒன்று இருந்தது. ஒருநாள் பரமசிவனும் பார்வதியும் அந்த மண்டபத்தைப் பார்வையிடச் சென்றனர். அங்கு சமஷ்டிப் பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரண்டு மந்திரங்களும் ஓவியமாக வரையப்பட்டிருந்தன. அவற்றை சிவனும், சக்தியும் தங்கள் அருட்கண்களால் நோக்கினர். அப்போது, நான்கு கரங்களுடனும் யானை முகத்துடனும் தோன்றிய குமாரன் ஒருவன் சிவ-சக்தியரை வணங்கி நின்றான். அவனை ஆசீர்வதித்து, சிவகணங்களுக்குத் தலைவராக இருக்கும்படி நியமித்தருளினார் ஈசன்.
சிவ குடும்பத்தில் எவரும் தாய் வயிற்றில் தோன்றிப் பிறப்பதில்லை. கணபதி, பிரணவத்திலிருந்து தோன்றினார்; முருகன், ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினார்; சிவசக்தி தம்பதியரின் சினத்திலிருந்து வீரபத்திரர் தோன்றினார் என்று விவரிக்கிறது கந்த புராணம்.
பிரும்மாண்ட புராணம் என்ன சொல்கிறது?
ஸ்ரீலலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர் புரியச் சென்றாள். அம்பிகையின் படைகளை வீரத்தால் வெல்வது அரிது என்று பண்டாசுரன் உணர்ந்தான். குறுக்கு வழியில் வெல்லத் தீர்மானித்தான்.
அசுரனின் தம்பியாகிய விசுக்கிரன் என்பவன், மாய மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவன். அவன், வெற்றிக்குத் தடை செய்யும் 'ஜயவிக்ன யந்த்ரம்' என்ற மந்திரத் தகட்டை உருவாக்கி, சக்தி சேனையின் முகாமில் தந்திரமாக ஒளித்து வைத்தான். இதனால், அம்பிகையின் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது; வெற்றி தடைப்பட்டது.
இந்த நிலையில் விசுக்கிரனின் சூழ்ச்சியை அறிந்த அம்பிகை, போர்ப் பாசறையில் காமேஸ்வரன் என்ற பெயருடன் எழுந்தருளியிருந்த சிவனாரை தன்னுடைய கண்களால் சற்றே நோக்கினாள். இறைவனும் தேவியை நோக்கினான். அந்த அருட்பார்வைகளின் சங்கமத்தால், 'மகா கணேசன்' தோன்றினார். யானை முகத்துடன் தோன்றிய மகா கணேசன், விசுக்கிரனின் மந்திரத் தகட்டைக் கண்டுபிடித்து, தனது துதிக்கையால் உடைத்துத் தூளாகச் செய்தார். பின்னர் அம்பிகைக்குத் தொடர்ந்து வெற்றிகள் கிட்டின.
சிவமகா புராணமோ, ஸ்ரீகணபதியை உமாதேவி படைத்தருளியதாகக் கூறுகிறது!
ஒருநாள்... ஜயை, விஜயை என்ற தன்னுடைய தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பார்வதிதேவி. அப்போது விஜயை, ''தேவி! சிவனாருக்குப் பணிவிடைகள் செய்திடப் பலரும் உள்ளனர். அதுபோல், தங்களுக்குப் பணிவிடை செய்ய... குறிப்பாக, காவல் பணியை மேற்கொள்ள ஒருவர் தேவை'' என்றாள். அப்போது, அந்தக் கருத்தைப் பார்வதிதேவி ஒரு பொருட்டாக எண்ணவில்லை. பிறிதொருநாள், பார்வதியாள் நீராடிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ஈசன் அங்கு வந்துவிட்டார். அதனால் பரபரப்பு அடைந்த பார்வதிதேவி, விஜயை கூறியபடி, தனக்கென ஒருவர் காவல் பணியில் இருத்தல் அவசியம் என்று உணர்ந்தாள்.
உடனே, சிவனாரைத் தியானித்து, தனது திருமேனியில் இருந்த நறுமணப் பொருட்களைத் திரட்டி ஒரு குமாரனைப் படைத்தாள். யானை முகத்துடன் தோன்றிய அந்தக் குமாரனுக்கு, 'கணன்' என்று பெயரிட்டாள். தேவியின் அந்தப்புரக் காவல் பணியில் இருந்த கணனின் ஆற்றலை அறிந்த ஈசன், அவரைக் கணங்களுக்குத் தலைவராக இருக்கச் செய்தார். அது முதல் கணர், கணபதி ஆனார் என்கிறது சிவமகாபுராணம்.
லிங்க புராணம் வேறு விதமாகச் சொல்கிறது!
தேவர்களின் உயர்வைக் கண்டு பொறாமை கொண்ட அசுரர்கள், தாங்களும் அத்தகைய உயர்வைப் பெற்று, தேவர்களை அடக்கியாள விரும்பினர். அதற்குரிய வரங்களைப் பெற, ஈசனை நோக்கித் தவமிருந்தனர். ஈசனும் அசுரர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்தருளினார். இதனால் ஆணவம் கொண்ட அசுரர்கள், தேவர்களைப் பலவாறு கொடுமைப்படுத்தினர். துன்பம் பொறுக்காத தேவர்கள் ஈசனைப் பணிந்து, அசுரர்கள் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகவும், அவர்களை அடக்கியாளவும் வல்லமை படைத்த ஒரு மகனைத் தோற்றுவிக்கும்படி வேண்டினர். அதன்படி, ஈசன் தனது ஓர் அம்சத்தை யானை முகமுடைய மகனாகப் படைத்தருளினான் என்று விவரிக்கிறது லிங்க புராணம்.
விக்னங்களைத் தடுத்தருள்பவர் விக்னேஸ்வரர் என்று சிறப்பிக்கிறது வராக புராணம்!
ஆதிகாலத்தில் முனிவர்களுக்குத் தக்க வழிகாட்டும் நூல்களோ ஆசான்களோ இல்லை. அவர்கள் நற்செயல்களை மட்டுமே செய்ய விரும்பினர். அப்போது, முனிவர்களின் செயல்களுக்கு வழிகாட்டத்தக்க ஒரு மகனைச் சிவபெருமான் தோற்றுவித்தார். ஈசனின் அருட் பார்வையிலிருந்து தோன்றிய மகன், முனிவர்கள் செய்த நற்செயல்கள் தொடரவும், தீய செயல்கள் தடைப்படவும் செய்தான். தீய செயல்களுக்குத் தடையை (விக்கினத்தை) ஏற்படுத்திய அந்தக் குமாரனே விக்னேஸ்வரன் ஆனார்.
ஈசன் தந்த காணிக்கை!
வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அருந்ததி படைத்த கொழுக்கட்டை
ஒருமுறை, வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவரது ஆஸ்ரமத்துக்கு எழுந்தருளினார் விநாயகர். அவருக்கு ஏற்ற புதிய நிவேதனம் ஒன்றைச் செய்ய விரும்பினாள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.
சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.அருந்ததி உருவாக்கிய புதிய, இனிய மோதகத்தை கணபதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம்.
நாயகர் என்றால் தலைவன் என்று பொருள். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத முதன்மை நிலையில் இருப்பவர் ஆதலால், பிள்ளையாரை 'விநாயகர்' என்று போற்றுகிறோம். திருப் பெயர் மட்டுமா? பிள்ளையாரைக் குறித்த புராணக் கதைகளும் அற்புதமானவை!
சகல பாவங்களையும் களைந்து, கோடானுகோடி புண்ணியத்தையும் சர்வ மங்கலங்களையும் அள்ளித் தரும் ஆனைமுகத்தானின் அருள்கதைகளை நாமும் படித்துப் பலன் பெறுவோமா?!
கச்சியப்ப சிவாச்சார்யரின்
கந்த புராணம் கூறும் கதை...
திருக்கயிலையில், பல்வேறு ஓவியங்கள் நிறைந்த அழகிய மண்டபம் ஒன்று இருந்தது. ஒருநாள் பரமசிவனும் பார்வதியும் அந்த மண்டபத்தைப் பார்வையிடச் சென்றனர். அங்கு சமஷ்டிப் பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரண்டு மந்திரங்களும் ஓவியமாக வரையப்பட்டிருந்தன. அவற்றை சிவனும், சக்தியும் தங்கள் அருட்கண்களால் நோக்கினர். அப்போது, நான்கு கரங்களுடனும் யானை முகத்துடனும் தோன்றிய குமாரன் ஒருவன் சிவ-சக்தியரை வணங்கி நின்றான். அவனை ஆசீர்வதித்து, சிவகணங்களுக்குத் தலைவராக இருக்கும்படி நியமித்தருளினார் ஈசன்.
சிவ குடும்பத்தில் எவரும் தாய் வயிற்றில் தோன்றிப் பிறப்பதில்லை. கணபதி, பிரணவத்திலிருந்து தோன்றினார்; முருகன், ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினார்; சிவசக்தி தம்பதியரின் சினத்திலிருந்து வீரபத்திரர் தோன்றினார் என்று விவரிக்கிறது கந்த புராணம்.
பிரும்மாண்ட புராணம் என்ன சொல்கிறது?
ஸ்ரீலலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர் புரியச் சென்றாள். அம்பிகையின் படைகளை வீரத்தால் வெல்வது அரிது என்று பண்டாசுரன் உணர்ந்தான். குறுக்கு வழியில் வெல்லத் தீர்மானித்தான்.
அசுரனின் தம்பியாகிய விசுக்கிரன் என்பவன், மாய மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவன். அவன், வெற்றிக்குத் தடை செய்யும் 'ஜயவிக்ன யந்த்ரம்' என்ற மந்திரத் தகட்டை உருவாக்கி, சக்தி சேனையின் முகாமில் தந்திரமாக ஒளித்து வைத்தான். இதனால், அம்பிகையின் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது; வெற்றி தடைப்பட்டது.
இந்த நிலையில் விசுக்கிரனின் சூழ்ச்சியை அறிந்த அம்பிகை, போர்ப் பாசறையில் காமேஸ்வரன் என்ற பெயருடன் எழுந்தருளியிருந்த சிவனாரை தன்னுடைய கண்களால் சற்றே நோக்கினாள். இறைவனும் தேவியை நோக்கினான். அந்த அருட்பார்வைகளின் சங்கமத்தால், 'மகா கணேசன்' தோன்றினார். யானை முகத்துடன் தோன்றிய மகா கணேசன், விசுக்கிரனின் மந்திரத் தகட்டைக் கண்டுபிடித்து, தனது துதிக்கையால் உடைத்துத் தூளாகச் செய்தார். பின்னர் அம்பிகைக்குத் தொடர்ந்து வெற்றிகள் கிட்டின.
சிவமகா புராணமோ, ஸ்ரீகணபதியை உமாதேவி படைத்தருளியதாகக் கூறுகிறது!
ஒருநாள்... ஜயை, விஜயை என்ற தன்னுடைய தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பார்வதிதேவி. அப்போது விஜயை, ''தேவி! சிவனாருக்குப் பணிவிடைகள் செய்திடப் பலரும் உள்ளனர். அதுபோல், தங்களுக்குப் பணிவிடை செய்ய... குறிப்பாக, காவல் பணியை மேற்கொள்ள ஒருவர் தேவை'' என்றாள். அப்போது, அந்தக் கருத்தைப் பார்வதிதேவி ஒரு பொருட்டாக எண்ணவில்லை. பிறிதொருநாள், பார்வதியாள் நீராடிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ஈசன் அங்கு வந்துவிட்டார். அதனால் பரபரப்பு அடைந்த பார்வதிதேவி, விஜயை கூறியபடி, தனக்கென ஒருவர் காவல் பணியில் இருத்தல் அவசியம் என்று உணர்ந்தாள்.
உடனே, சிவனாரைத் தியானித்து, தனது திருமேனியில் இருந்த நறுமணப் பொருட்களைத் திரட்டி ஒரு குமாரனைப் படைத்தாள். யானை முகத்துடன் தோன்றிய அந்தக் குமாரனுக்கு, 'கணன்' என்று பெயரிட்டாள். தேவியின் அந்தப்புரக் காவல் பணியில் இருந்த கணனின் ஆற்றலை அறிந்த ஈசன், அவரைக் கணங்களுக்குத் தலைவராக இருக்கச் செய்தார். அது முதல் கணர், கணபதி ஆனார் என்கிறது சிவமகாபுராணம்.
லிங்க புராணம் வேறு விதமாகச் சொல்கிறது!
தேவர்களின் உயர்வைக் கண்டு பொறாமை கொண்ட அசுரர்கள், தாங்களும் அத்தகைய உயர்வைப் பெற்று, தேவர்களை அடக்கியாள விரும்பினர். அதற்குரிய வரங்களைப் பெற, ஈசனை நோக்கித் தவமிருந்தனர். ஈசனும் அசுரர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்தருளினார். இதனால் ஆணவம் கொண்ட அசுரர்கள், தேவர்களைப் பலவாறு கொடுமைப்படுத்தினர். துன்பம் பொறுக்காத தேவர்கள் ஈசனைப் பணிந்து, அசுரர்கள் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகவும், அவர்களை அடக்கியாளவும் வல்லமை படைத்த ஒரு மகனைத் தோற்றுவிக்கும்படி வேண்டினர். அதன்படி, ஈசன் தனது ஓர் அம்சத்தை யானை முகமுடைய மகனாகப் படைத்தருளினான் என்று விவரிக்கிறது லிங்க புராணம்.
விக்னங்களைத் தடுத்தருள்பவர் விக்னேஸ்வரர் என்று சிறப்பிக்கிறது வராக புராணம்!
ஆதிகாலத்தில் முனிவர்களுக்குத் தக்க வழிகாட்டும் நூல்களோ ஆசான்களோ இல்லை. அவர்கள் நற்செயல்களை மட்டுமே செய்ய விரும்பினர். அப்போது, முனிவர்களின் செயல்களுக்கு வழிகாட்டத்தக்க ஒரு மகனைச் சிவபெருமான் தோற்றுவித்தார். ஈசனின் அருட் பார்வையிலிருந்து தோன்றிய மகன், முனிவர்கள் செய்த நற்செயல்கள் தொடரவும், தீய செயல்கள் தடைப்படவும் செய்தான். தீய செயல்களுக்குத் தடையை (விக்கினத்தை) ஏற்படுத்திய அந்தக் குமாரனே விக்னேஸ்வரன் ஆனார்.
ஈசன் தந்த காணிக்கை!
வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அருந்ததி படைத்த கொழுக்கட்டை
ஒருமுறை, வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவரது ஆஸ்ரமத்துக்கு எழுந்தருளினார் விநாயகர். அவருக்கு ஏற்ற புதிய நிவேதனம் ஒன்றைச் செய்ய விரும்பினாள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.
சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.அருந்ததி உருவாக்கிய புதிய, இனிய மோதகத்தை கணபதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆரஞ்சு விநாயகர்
நாக்பூரில் அருளும் 'டேக்டி கணபதி'
''டேக்டி போகலாமா?'' என்று நாக்பூரில் கேட்டால், ''போகலாமே'' என்று பயபக்தியுடன் விடை வரும். 'டேக்டி' என்றால் மராத்தியில் 'குன்று' என்று அர்த்தம். ஆனாலும், நாக்பூர் மக்களுக்கு 'டேக்டி' என்றால், 'டேக்டி கணபதி' ஆலயத்தையே குறிக்கும்!
ஆரஞ்சுப் பழத்துக்குப் பிரபலமான நாக்பூர், டேக்டியின் ஆரஞ்சு (செந்தூர) விநாயகருக்கும் பிரபலமான ஊர்! சுமார் 250 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் டேக்டி கணபதி!
அரச மரத்தால் ஆன பிள்ளையாராம் இவர். அந்த மரம் இன்றைக்கும் ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனைச் சுற்றித்தான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மிகச் சிறிய ஷெட் ஒன்றுக்குள், சின்னதான நடைமேடையில்தான் இருந்தார் ஸ்ரீகணபதி. பிறகு, ராணுவத்தினரின் வசம் இந்தப் பகுதி வந்ததும், ஆலயம் விரிவுபடுத்தப்பட்டதாம்!
''இந்தப் பிள்ளையார், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக வளர்ந்து கொண்டே வருகிறார். இதை எங்கள் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்'' எனப் பரவசத்துடன் சொல்கின்றனர், நாக்பூரில் வசிக்கும் பெரியவர்கள்.
1965-ஆம் வருடம், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான சவான், ஆலயம் மற்றும் அதன் அமைவிடத்தை, ஒரு டிரஸ்ட்டிடம் ஒப்படைத்தார். அதை யடுத்து நன்கொடைகள் குவிந்தன; இன்னும் இன்னும் பிரமாண்ட மானது திருக்கோயில்.
தினமும் மூன்று முறை தீபாராதனை பூஜை சிறப் புற நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்று, ஸ்ரீகணபதியின் அருளைப் பெற, எண்ணற்ற பக்தர்கள் குவிகின்றனர். முக்கியமாக, இங்கே பிரசாதமாகத் தரப்படும் கொழுக்கட்டையைப் பெறுவதற்காக பக்தர்கள் அலைமோதுவர்.
விநாயக சதுர்த்தி நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமான் தங்கக் கிரீடம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் அழகே அழகு!
நாக்பூர் டேக்டி விநாயகர் சுயம்புத் திருமேனி; இவரின் திருவுருவம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது என்பவற்றைத் தவிர, இந்த ஆலயத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.
அதென்ன?
சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், பாலகங்காதர திலகர் போன்ற எண்ணற்ற இந்தியத் தலைவர்கள், டேக்டி விநாயகர் கோயிலுக்கு அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தைக் கூட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுழக்கமிட்டதாகச் சொல்கின்றனர் நாக்பூர் மக்கள்!
நாக்பூரில் அருளும் 'டேக்டி கணபதி'
''டேக்டி போகலாமா?'' என்று நாக்பூரில் கேட்டால், ''போகலாமே'' என்று பயபக்தியுடன் விடை வரும். 'டேக்டி' என்றால் மராத்தியில் 'குன்று' என்று அர்த்தம். ஆனாலும், நாக்பூர் மக்களுக்கு 'டேக்டி' என்றால், 'டேக்டி கணபதி' ஆலயத்தையே குறிக்கும்!
ஆரஞ்சுப் பழத்துக்குப் பிரபலமான நாக்பூர், டேக்டியின் ஆரஞ்சு (செந்தூர) விநாயகருக்கும் பிரபலமான ஊர்! சுமார் 250 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் டேக்டி கணபதி!
அரச மரத்தால் ஆன பிள்ளையாராம் இவர். அந்த மரம் இன்றைக்கும் ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனைச் சுற்றித்தான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மிகச் சிறிய ஷெட் ஒன்றுக்குள், சின்னதான நடைமேடையில்தான் இருந்தார் ஸ்ரீகணபதி. பிறகு, ராணுவத்தினரின் வசம் இந்தப் பகுதி வந்ததும், ஆலயம் விரிவுபடுத்தப்பட்டதாம்!
''இந்தப் பிள்ளையார், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக வளர்ந்து கொண்டே வருகிறார். இதை எங்கள் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்'' எனப் பரவசத்துடன் சொல்கின்றனர், நாக்பூரில் வசிக்கும் பெரியவர்கள்.
1965-ஆம் வருடம், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான சவான், ஆலயம் மற்றும் அதன் அமைவிடத்தை, ஒரு டிரஸ்ட்டிடம் ஒப்படைத்தார். அதை யடுத்து நன்கொடைகள் குவிந்தன; இன்னும் இன்னும் பிரமாண்ட மானது திருக்கோயில்.
தினமும் மூன்று முறை தீபாராதனை பூஜை சிறப் புற நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்று, ஸ்ரீகணபதியின் அருளைப் பெற, எண்ணற்ற பக்தர்கள் குவிகின்றனர். முக்கியமாக, இங்கே பிரசாதமாகத் தரப்படும் கொழுக்கட்டையைப் பெறுவதற்காக பக்தர்கள் அலைமோதுவர்.
விநாயக சதுர்த்தி நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமான் தங்கக் கிரீடம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் அழகே அழகு!
நாக்பூர் டேக்டி விநாயகர் சுயம்புத் திருமேனி; இவரின் திருவுருவம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது என்பவற்றைத் தவிர, இந்த ஆலயத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.
அதென்ன?
சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், பாலகங்காதர திலகர் போன்ற எண்ணற்ற இந்தியத் தலைவர்கள், டேக்டி விநாயகர் கோயிலுக்கு அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தைக் கூட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுழக்கமிட்டதாகச் சொல்கின்றனர் நாக்பூர் மக்கள்!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கணபதி தரிசனம்!
விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் 'கணபதி தரிசனம்’ என்ற பெயரில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில் சில... உங்கள் பார்வைக்காக!
(விலை குறிப்பிடப்படாத சிங்க கணபதி, ஹேரம்ப கணபதி, ஏகரட்சக கணபதி, மும்முக கணபதி, சிருஷ்டி கணபதி உள்ளிட்ட 32 கணபதி சிலைகள் அடங்கியது ஒரு செட். இதன் விலை 5,71,725)
விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் 'கணபதி தரிசனம்’ என்ற பெயரில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில் சில... உங்கள் பார்வைக்காக!
(விலை குறிப்பிடப்படாத சிங்க கணபதி, ஹேரம்ப கணபதி, ஏகரட்சக கணபதி, மும்முக கணபதி, சிருஷ்டி கணபதி உள்ளிட்ட 32 கணபதி சிலைகள் அடங்கியது ஒரு செட். இதன் விலை 5,71,725)
விநாயகர் பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி தமிழ்நேசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|