புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_voting_barவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:53 pm

கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P12a
கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!

யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி

ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:55 pm

மோதக பிரசாதம்...
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P60
பிள்ளையார் மோதகப் பிரியர் ஆயிற்றே! சரி, மோதகம் உணர்த்தும் தத்துவம் என்ன? இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல்களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான் என்பதை சொல்லாமல் சொல்வதே மோதகம்.

அதுசரி! முதன்முதலின் பிள்ளையாருக்கு மோதகம் படைத்து வழிபட்டது யார் தெரியுமா? வசிஷ்ட மகரிஷி யின் மனைவி அருந்ததி!

இனி மோதகம் செய்வது குறித்து சில டிப்ஸ்...

மோதகத்துக்குப் பூரணம் செய்யும்போது, பெரும்பாலும் கடலைப் பருப்பும் வெல்லப் பாகும் பயன்படுத்துவார்கள். தேங்காய்ப்பூ கலந்த பூர்ணம் எனில், மேல் மாவில் நெய்யைத் தொட்டுக்கொண்டு செய்யலாம். எள் கலந்து செய்யும்போது நல்லெண்ணெய் தொட்டுக் கொள்ளலாம். உளுத்தம் பருப்பு கொண்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்பு செய்வது எளிதாக இருக்கும்.

சதுர்த்திக்கு உளுந்துவடையும் படைக்கப் போகிறீர்களா... எனில், உளுத்தம் பருப்புடன் சிறிது வெள்ளைக் காராமணியை சேர்த்து ஊறவைத்து செய்தால், வடை மொரமொரப்பாக வரும்.



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:56 pm

உச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்!
கணபதியே சரணம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P65
நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.

ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.

* தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாராக அவர் கோயில் கொண்டுள்ளார்.

* கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.

* சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாயகரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.

* திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.

* சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்பவராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஆழத்துப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.

- பூசை. அருண வசந்தன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:57 pm

பிள்ளை வரம் தருவார் ராஜேந்திர பிள்ளையார்!
கணபதியே சரணம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P69
ராஜேந்திரசோழன், சிவனாருக்கும் அவரின் மைந்தன் முருகப்பெருமானுக்கும் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பணியில் அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. விநாயகப் பெருமானை துதிக்காமல், கோயில் வேலையில் இறங்கியது தவறு என வருந்திய மன்னன், வராக நதிக்கரையில் விநாயகருக்கு கோயில் கட்டி வழிபட்டான் என்கிறது ஸ்தல வரலாறு. இவருக்கு ராஜேந்திர விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது என்கின்றனர் பக்தர்கள். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ளது இந்த ஆலயம்.

அதுமட்டுமா? ராஜேந்திர சோழனுக்கு அத்தனை பேரும் புகழும் இருந்தும் குழந்தை பாக்கியம் மட்டும் இல்லாமல் இருந்தது. ஒருமுறை, 'நீ பிரதிஷ்டை செய்த விநாயகரை வழிபடு. பிள்ளை வரம் நிச்சயம்’ என அசரீரி கேட்க, மறுநாள், அதன்படியே வேண்டினார் மன்னர். பிள்ளை பாக்கியமும் கிடைக்கப் பெற்றார். எனவே இந்தப் பிள்ளையாருக்கு, குழந்தை வரம் தரும் விநாயகர் எனும் திருநாமமும் அமைந்ததாகச் சொல்வர்.

மாதந்தோறும் சதுர்த்தியில், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை அல்லது கரும்பு அல்லது பழங்கள் சமர்ப்பித்து வழிபட்டால், திருமணத் தடைகள் அகலும். பிள்ளைச் செல்வம் கிடைக்கும். இந்த வழியே பயணிப்பவர்கள், பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வழித்துணைக்கு பிள்ளையார் வருவார் என்பது ஐதீகம்!

கிழக்குப் பார்த்தபடி அருள்கிறார் ஸ்ரீராஜேந்திர விநாயகர். நாக கன்னியர், நவக்கிரகங்கள் சந்நிதியும் இங்கு உண்டு. சனி கிரகத்தின் பாதிப்புக்கு ஆளானோர், சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயக சதுர்த்தி வைபவத்தின் போதும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், சங்கடங்கள் யாவும் அகலும். சந்தோஷம் பிறக்கும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:59 pm

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

சர்க்கரை விநாயகர்!


ஆழித் தேரோடும் திருவாரூரின் கீழவீதியில் ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் இந்தப் பிள்ளையாருக்கு மிகப் பொருத்தமான பெயர்தான். இவரை வேண்டிக் கொண்டால், சகல கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை சர்க்கரையாய் இனிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மனுநீதிச் சோழன் இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, தனது நகர்வலத்தைத் துவங்குவாராம். பிற்காலச் சோழர்களில் ராஜ ராஜ பெருவுடையாரும் இவரை வழிபட்டதாக கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. இப்படி ராஜாக்கள் வழிபட்ட- மிகப் பழைமையான இந்த பிள்ளையாருக்கு, ராஜ அலங்காரமும் பொருத்தம்தான். மாணவர்கள் கல்வியில் சிறக்க ஏலக்காய் மாலை சார்த்தியும், திருமணத் தடை அகல 108 தேங்காய் உடைத்தும், நெய் தீபம் ஏற்றியும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டில் கட்டியும் இந்த ஆனைமுகத்தானை வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

- த.க.தமிழ்மதன்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் 50a
அகோர விநாயகர்

திருநெல்வேலியில் ஸ்ரீநெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் கோயில் கொண்டிருக்கிறாள் பிட்டாபுரத்தம்மன். இவளின் திருக்கோயிலில் சந்நிதி கொண்டிருக்கிறார் இந்த அகோர விநாயகர். நான்கு கரங்களும் துதிக்கையும் இல்லாமல் காட்சி தருவதால், இப்படியொரு திருப்பெயர் வந்தது என்கிறார்கள். அந்நிய படையெடுப்பின்போது பின்னப்படுத்தப்பட்டதாம் இந்த விநாயகர் விக்கிரகம். பின்னம் அடைந்த விக்கிரகத்தை வழிபாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதால், இவரை வழிபட்டு வந்த குடும்பத்தினர் விக்கிரகத்தை திருக்குளத்தில் சேர்ப்பித்தார்களாம். ஆனால் அவர்கள் கனவில் தோன்றிய விநாயகர் மீண்டும் தன்னை அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி வலியுறுத்த, அந்தக் குடும்பத்தினரும் அப்படியே செய்தார்களாம். அத்துடன் நான்கு திருக்கரங்கள் மற்றும் துதிக்கையுடன் பூரணத் திருவுருவில் வெண்கலக் கவசமும் செய்து அணிவித்துள்ளார்கள். நினைத்தது நிறைவேறவும், பிணிகள் நீங்கவும் இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், இவர் சந்நிதியில் தரப்படும் விபூதிப் பிரசாதத்தை பிணி தீர்க்கும் அருமருந்தாகவே கருதுகிறார்கள்!

- ஆ.நல்லசிவன் படம்: தி. ஹரிஹரன்

ஹேரம்ப விநாயகர்!

விநாயகரின் திருவடிவங்களில் ஸ்ரீஹேரம்ப கணபதி வடிவமும் ஒன்று. 'ஹேரம்ப’ என்றால் சிங்கம் என்றும், எளியவர்க்கு அருள்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். பிரார்த்தனைகள் விரைவில் பலிதமாக சிம்மத்தின் மீது அமர்ந்த கணபதியை வழிபடவேண்டும் என்கின்றன ஞானநூல்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் திகழ்கிறார் இந்த விநாயகர்.

நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய ஒருமுகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்வதால் பஞ்சமுக விநாயகர் என்றும் இவரை வழிபடுகிறார்கள். கிழக்கு முகம்- சூரிய அம்சம்; உடல் நலனுக்கும் விவசாய வளர்ச்சிக்கு வித்திடும். மேற்கு முகம்- விஷ்ணு அம்சம்; உயிர்களை காக்கும். வடக்கு முகம்- அம்பாளின் அம்சம்; ஜெயம் தரும். தெற்கு முகம்- பிரம்மனின் அம்சம்; திருமணம், குழந்தைப்பேறு மற்றும் வாக்குவன்மை அளிக்கும். மேல் நோக்கிய திருமுகம்- சிவ அம்சம்; சகல மேன்மைகளையும் தரும் என்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P50
இந்தப் பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே காஞ்சி மகா பெரியவா அருளிய ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, கூடுதல் விசேஷம் ஆகும். நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், நாமக்கல்லில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் பரமத்திவேலூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 9:01 pm

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''


இதோ விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. அதையொட்டி ஒய்யாரமாக ஊர்வலம் வர, அழகுப் பிள்ளையார் சிலைகளும் ஊருக்கு ஊர் விதவிதமாய் தயாராகிவருகின்றன. எனினும், மானாமதுரை பிள்ளையார் சிலைகளுக்கு மவுசு அதிகம். காரணம், அந்தப் பகுதியில் கிடைக்கும் களி மண்ணின் தன்மை அப்படி என்கிறார்கள். இங்கு தயாராகும் பிள்ளையார் சிலைகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மானாமதுரை பிள்ளையாரைப் போலவே, மானாமதுரையில் பிள்ளையார் சிலைகளைச் செய்வதையே தன் இறைப்பணியாகக் கொண்டிருக்கும் பாண்டிராஜனும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார்.

யார் இந்தப் பாண்டிராஜன்? அவர் அப்படி என்னதான் செய்கிறார்?

மானாமதுரையில் தலைமுறை தலைமுறையாக களிமண்ணால் சிலைகள் செய்து வரும் குடும்பத்தில் வந்தவர்தான் பாண்டிராஜன். அதனால் சிலைகள் செய்யும் திறமை அவருக்கு இயல்பிலேயே இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P16
ஆனால், பாண்டிராஜ் ஒரு மாற்றுத் திறனாளி! ஆம்... பிறவியிலேயே ஒரு கை மட்டும்தான் அவருக்கு! 'பிறகெப்படி கலைநுணுக்கத்துடன் அவரால் பிள்ளையார் சிலைகளைச் செய்யமுடிகிறது?’ என்று கேட்டால், ''எல்லாம் தும்பிக்கையான் தந்த நம்பிக்கைதான் காரணம்!'' என்று கூறிப் புன்னகைக்கிறார். இதோ... தமது 12 வயதில் துவங்கிய இந்தப் பணி குறித்து, அவரே விவரிக்கிறார்.

''எங்க குடும்பத்துல நான்தான் கடைசி பையன். எங்க அப்பா தட்சிணா மூர்த்தியும் என்னோட அண்ணன்களும் இதே தொழிலைத்தான் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, ஆரம்பத்துல என்னாலதான் சிலை செய்ய முடியலை. அவங்க சிலை செய்யறதை பார்த்துக்கிட்டே இருப்பேன். மற்ற நேரங்கள்ல மண் எடுக்கறது, காயவைக்கறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா நானும் சிலை செய்ய முயற்சி பண்ணினேன். சிலை செய்யறதைப் பார்க்கறதுக்கு சுலபமா தெரிஞ்சாலும், அதைச் செய்யும்போதுதான் அதுல இருக்கிற கஷ்டங்கள் எனக்குத் தெரிய வந்துச்சு. அதுலயும் ஒரு கையால சிலை செய்யறதுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன்.

ஒருகட்டத்துல, திகைச்சு நின்னுட்டேன். வாழ்க்கையை நெனச்சு ரொம்ப பயந்தேன். அப்ப, எங்க வீட்ல எல்லாரும் எனக்கு ஆதரவாவும் உதவியாவும் இருந்தாங்க. என்னை உற்சாகப்படுத்தினாங்க. நான் செய்யப்போறது விநாயகர் சிலைங்கறதால அவரை வணங்கிட்டு, அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு விநாயகர் சிலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். இதோ... 12 வருஷம் ஓடிப்போயிடிச்சு. எல்லாத்துக்கும் காரணம் பிள்ளையாரோட திருவருள்தான்!

இடது கை இல்லையேன்னு என்னிக்கும் வருத்தப்பட்டது இல்லை. ஆனா, சில நேரம் களி மண்ணை எடுத்துப் பிள்ளையார் செய்யும்போது எரிச்சல் ஏற்படும். காரணமே தெரியாது. அப்பெல்லாம் 'நாம் செய்யும் சிலையைப் பல பேர் பூஜை அறையில் வச்சு வணங்குவாங்களே! நல்லபடியா செய்து தரணுமே’ன்னு நெனைச்சுப்பேன் எரிச்சல், கஷ்டம் எல்லாம் மறைஞ்சுடும். ஆரம்பத்துல, பிள்ளையாரைப் பத்தி எனக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. ஆனா, பிள்ளையார் சிலையைச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, விநாயகரைப் பத்திப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்கிற பாண்டிராஜன் அந்த விஷயங்களை நம்மோடும் பகிர்ந்துகொண்டார்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P16a
''விநாயகர் சதுர்த்திக்குக் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வழிபடறதுதான் விசேஷம்! விநாயகர் பஞ்சபூதத்துக்கும் அதிபதிங்கறதால அவருடைய சிலையைக் களிமண்ணால செஞ்சு வணங்கி வழிபட்டுட்டு, குளத்துல, கிணத்துல, கடல்லன்னு நீர்நிலைகள்ல கரைச்சிடறதுதான் முறை.

மானாமதுரையில செய்யற விநாயகர் சிலைங்களுக்கு தனி விசேஷம் இருக்கு. காரணம், மானாமதுரையில் மண் வளம் நல்லா இருக்கறதோடு, இரும்புச் சத்தும் இருக்கிறதால மண்ணுக்குப் பிடிப்புத் தன்மை அதிகமா இருக்கும். அதனால சிலை செய்யறதுக்கும் சுலபமா இருக்கும். இங்க செய்யற சிலைங்க எல்லாம் 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ போன்ற கெமிக்கல் எதுவும் கலக்காம இயற்கையான முறையில்தான் செய்யறோம்'' என்றவர் தொடர்ந்து, தன்னுடைய சிலை தயாரிப்புப் பணி பற்றியும் விளக்கினார்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P16b
''ஒரு நல்ல நாளில், விநாயகருக்கு பூஜைகள் செய்த பின்னர்தான், சிலைகள் செய்ய ஆரம்பிப்பேன். ஆறு அடி உள்ள சிலையைச் செய்ய, குறைஞ்சது 15 நாள் ஆகும். முதல்ல சுத்தமான களி மண்ணை எடுத்துட்டு வருவோம்.அதை சிலை செய்யறதுக்கு வசதியா பல நிலைகள்ல பக்குவப்படுத்துவோம். அப்பத்தான் அந்த மண், சிலை செய்யறத்துக்கு ஏதுவா இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு 50 நாளுக்கு முன்னாடியே சிலை செய்ய ஆரம்பிச்சுடுவோம். சிலை செய்யறதுல பல நுணுக்கமான விஷயங்கள் உண்டு. அதை யெல்லாம் சரியா, கவனமா பார்த்துச் செய்யணும்னா ரெண்டு கைகளும் நல்லா இருந்தாத்தான் முடியும். அப்பெல்லாம் ஒரு கையையும், மற்றொரு முட்டியையும் வைத்துதான் செய்வேன். மத்தவங்க ஒரு நாள்ல முடிக்கிற வேலையை முடிக்க எனக்கு ரெண்டு நாள் ஆகும். அதனால காலைல நாலு மணிக்கே சிலை செய்ய வந்துடுவேன். வந்ததில் இருந்து சிலை தவிர வேற நெனைப்பே இருக்காது. முழுசா முடிச்சுட்டுத்தான் கிளம்பணும்கற நெனைப்பிலேயே இருப்பேன். எப்படியும் வீடு திரும்ப இரவு 10 மணி ஆயிடும். ஆனா, எப்பவும் சோர்ந்து போனதில்லை. சிலையைச் செஞ்சதும் காய வச்சு, மட்டிவெள்ளை சுண்ணாம்பு அடிப்போம். அப்புறமாத்தான் ஓலைச்சாயம் கொண்டு வண்ணம் பூசுவோம்'' என்று தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட பாண்டிராஜன் இதுவரை பல ஆயிரம் சிலைகளைச் செய்திருக்கிறாராம். எனினும், ஒரு டன் எடையில் 9 அடி உயரத்துக்கு ஒரு பிள்ளையார் சிலையை தனியொரு ஆளாகச் செய்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள் இருந்தாலும், பெரும்பாலும் பாண்டிராஜன் செய்வது அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகளைத்தான்.

விநாயகர் சிலைகள் மட்டுமின்றி, கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள், மண் சிலைகள், கோயில்களுக்குக் குதிரை சிலைகள் எனத் தன் பணிகளையே ஆன்மிகம் சார்ந்ததாக அமைத்துக் கொண்டிருக்கும் பாண்டிராஜனின் மனமெல்லாம் அந்த விநாயகப் பெருமானே வியாபித்து இருக்கிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், சிலை செய்கிறபோது தன்னையே மறந்து இறைவனுக்குத் தொண்டு செய்கிறோம் என்கிற ஒரே நினைப்போடு ஆத்மார்த்தமாகச் செய்யும் பாண்டிராஜனின் இறைப்பணி பாராட்டுதலுக்கு உரியது என்பதில் சந்தேகம் என்ன?!



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 9:02 pm

தங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்
கணபதியே சரணம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P15
மதுரையில் இருந்து ஸ்ரீவிநாயகரின் திருவுருவச் சிலையை எடுத்து வரும் வழியில், ஓரிடத்தில் அச்சு முறிந்து அங்கேயே நின்றது மாட்டுவண்டி. அப்போது, ''நான் இங்கேயே இருக்கிறேன்'' என அசரீரி கேட்க... விநாயகருக்கு அங்கே அற்புதமான கோயில் அமைந்தது என்கிறது ஸ்தல வரலாறு.

ஈச்சங்காடாக இருந்த இடத்தில் அமைந்த அந்த விநாயகர், ஈச்சங்காட்டு விநாயகர் என அழைக்கப்பட்டார். அதுவே பின்னாளில் ஈச்சனாரி விநாயகர் என அமைந்ததாகச் சொல்வர்.

கோவையில் இருந்து பொள்ளச்சி செல்லும் வழியில் அமைந்து உள்ளது இந்தத் திருத்தலம். நினைத்ததை ஈடேற்றித் தரும் ஈச்சனாரி விநாயகர் சந்நிதியில், புதிதாக வாகனம் வாங்கியவர்கள், சாவியை திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர். அதேபோல், அந்தச் சாலை வழியே செல்பவர்களுக்கு வழித்துணையாகவும் வருகிறார் விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள்!

இங்கு, 27 நட்சத்திரங்களுக்குமான நட்சத்திர பூஜை வெகு பிரசித்தம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு என்று தனியே தங்கத்தேர் இங்கு செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு தங்கத்தேரில் உலா வரும் வைபவம் நடைபெறுகிறது.

விநாயக சதுர்த்தி நாளில், ஈச்சனாரி பிள்ளையாரைத் தரிசிக்க, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி என பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். அன்றைய நாளில், சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் விநாயகப் பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 9:03 pm

வெற்றி தருவார் விஜய கணபதி!
கணபதியே சரணம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P6
சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ள உள்ளகரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீவிஜய கணபதி ஆலயம். காஞ்சி மகா பெரியவாளின் அறிவுரைப்படி, சிறு குடிசையில் இருந்த கிழக்குப் பார்த்த விநாயகர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெற்குப் பார்த்த ஸ்ரீவிஜய கணபதியாக அருள்பாலிக்கத் துவங்கினார் என்கிறார்கள், பக்தர்கள்.

94-ம் வருடம் சாந்தானந்த சுவாமிகள் சொன்னதற்கு இணங்க, அன்று முதல் இன்றளவும் தினமும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது, இங்கே! ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, திருமால், ஸ்ரீஅனுமன் என அனைத்து தெய்வங்களின் பெயர்களுக்கு முன்னதாக 'விஜய’ எனும் திருநாமம் சூட்டியுள்ளனர்.

ஸ்ரீகணபதிக்கு சதுர்த்தி, ஸ்ரீகந்தக் கடவுளுக்கு கிருத்திகை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உத்திரம், ஸ்ரீவிஜயராகவ ஸ்வாமிக்கு புனர்வசு, ஸ்ரீதுர்காதேவிக்கு பௌர்ணமி, ஸ்ரீஅனுமனுக்கு மூலம் ஆகிய நட்சத்திர நாளில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீராம நவமி முடிந்த முதல் ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீராதா கல்யாணமும் சஷ்டி முடிந்த முதல் ஞாயிறு, ஸ்ரீவள்ளி கல்யாணமும் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது என்கிறார் கோயில் மேலாளர் சுப்ரமணியன்.

பெருமாள் சந்நிதி கொண்டிருக்கிற இந்த ஆலயத்தில், வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீவிஜய கணபதி எனும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை, ஸ்ரீவிசா கணபதி என்றே அழைக்கின்றனர், பக்தர்கள். கோயில் அமைந்து உள்ள தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர், வெளிநாட்டில் வேலை செய்பவராக இருப்பார். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகத்தை வழங்கக் கூடியவர் என்பதால் பிள்ளையாருக்கு, விசா கணபதி எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.

மாதத்தின் 4-ம் ஞாயிற்றுக்கிழமையில் ஏகாதச ருத்ர ஜபம் நடைபெறுகிறது. அதேபோல். ஸ்ரீகுமார கணபதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ரத்தினகிரி ஸ்ரீ பால முருகனடிமை, மகாதேவ மலை மகானந்த சித்தர், கி.வா.ஜ ஆகியோர், ஸ்ரீவிஜய கணபதியின் பேரருளைச் சிலாகித்துள்ளனர்.

விஜய கணபதியை கண்ணாரத் தரிசியுங்கள். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என நிம்மதியாக வாழ்வீர்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 9:04 pm

ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!
கணபதியே சரணம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P34
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!

'முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!

வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.

'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.

'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.

விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 9:10 pm

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் P123
விநாயகர் தரிசனம்!
கோவை- புளியகுளத்தில் அருளும் ஸ்ரீமுந்தி விநாயகர், ஆசியாவிலேயே உயரமான பிள்ளையாராம். இவருடைய உயரம் சுமார் 19 அடி- 10 அங்குலம் (இதில் 3 அடி பீடமும் அடங்கும்); அகலம்- சுமார் 11 அடி. எடை சுமார் 190 டன். வலம்புரி விநாயகரான இவரைத் தரிசித்தால் திருமணத் தடைகள் நீங்குமாம்.

வேதாரண்யத்துக்கு மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் குரவப்புலம். இங்கே, லிங்க வடிவ ஆலயத்துக்குள் அருள்பாலிக்கும் ஸ்ரீசித்திஅரசு விநாயகர், நாம் சித்தத்தில் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றித் தரும் வள்ளலாம். இவரை பக்தர்களே பூஜிக்கலாம் என்பது சிறப்பு!

நாகப்பட்டினம்- ஸ்ரீகாக்கா பிள்ளையார் கோயில் (காக்கும் பிள்ளையார் என்பதே மருவி, காக்கா பிள்ளையார் என்றானதாம்!) சூரியன் வழிபட்டு புத்திரப் பேறு பெற்ற தலம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26-ஆம் தேதி, இங்கே ஸ்ரீவிநாயகருக்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.


மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஸ்ரீஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!

ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.

மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் ஸ்ரீபஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!

தாமரை மலரில் அமர்ந்த நிலையில்... வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் ஸ்ரீகற்பக விநாயகர்.

கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயி லில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, ஸ்ரீபச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

வெளிநாடுகளில் விநாயகர்...

ஜப்பானில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் தழுவிக் கொண்டிருப்பது போன்ற உருவில் உள்ள இரட்டை விநாயகர் சிலையை வணங்குகின்றனர். இந்த அபூர்வ சிலையை வழிபட்டால் நீண்ட காலம் வாழலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

கிரேக்க நாட்டுச் சாலைகளில் உள்ள கிலோமீட்டர் காட்டும் கற்கள், பிள்ளையார் வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டியாக இருந்து தங்களை விபத்தின்றிக் காப்பார் விநாயகர் என நம்புகிறார்கள் கிரேக்கர்கள்!

சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, 'ஸ்ரீவலஞ்சை விநாயகர்' என்கின்றனர்.

ஸ்ரீநவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.

விருத்தாசலம் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் கோயிலில், சுமார் 18 அடி ஆழத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்.

அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீவைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.

பாக்கு பிரசாதம்!

கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம்.

வழிபாடுகள் முடிந்ததும், பிரசாதமாக பாக்கு தரப்படுமாம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள், அடுத்த மூன்று வருடத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

விநாயகரின் தேவியர்!

சித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

விநாயகரும் வழிபாடும்

ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரிபூரண பலன் தருவார் விநாயகர்.

மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும்.

புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.

வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார்.

உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார்.

வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார்.

கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.

மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

தத்துவ கணபதி!

கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் பொருள்கொள்ளலாம்!

பிள்ளையாரை அர்ச்சிக்க 21 இலைகள்!

விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலை) பிள்ளையாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள் ளருகம்புல், துளசி, வன்னி, நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்திக் கீரை.

திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஸ்ரீஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்!

திருவையாறு தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.

தஞ்சை- திருவையாறு சாலையில் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ளது திருவேதிக்குடி. இங்குள்ள ஸ்ரீவேத விநாயகர், வேதங்களை காதுகொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக் கிறார். இறைவன் அருளும் வேதங்களை இவர் செவி சாய்த்துக் கேட்பதாக ஐதீகம். எனவே இவரை, செவிசாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீமுக்குருணி விநாயகரின் விக்கிரகத் திருமேனி, திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது ஸ்ரீஅபிராமியம்மை சமேத ஸ்ரீஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது!

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.

திருவாரூர் கோயிலில் அருளும் ஸ்ரீஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.

விநாயகப்பெருமான் அம்மை-அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆந்திர மாநிலம்- ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் ஸ்ரீசைலத்துக்கு சென்றுவந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை 'ஸ்ரீசாட்சி கணபதி' என்கின்றனர்



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக