புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பதவிப் பித்தர்கள்! Poll_c10 பதவிப் பித்தர்கள்! Poll_m10 பதவிப் பித்தர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவிப் பித்தர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:35 am


மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தன்னைக் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொலைபேசியில் அழைத்துப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்படி விலகாவிட்டால் பதவியிலிருந்து அகற்றப்படுவேன் என்று தெரிவித்ததாகவும் உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரோஷி குற்றம் சாட்டியதுடன் நிற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் தனது ஆளுநர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

முந்தைய மன்மோகன் அரசால் 2012 ஏப்ரல் 28-ஆம் தேதி உத்தரகண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜீஸ் குரேஷியின் மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹிஸ்டன் நாரிமன் அடங்கிய மூன்று பேர் அமர்வால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பிரச்னை, ஆளுநர், குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப்பிரிவு 156 உடன் தொடர்புடையது என்பதால், இந்த வழக்கை ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

உத்தரகண்டில் ஆளுநர் குரோஷியின் மனுவின் மீதான வாதத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சட்ட அமைச்சர்களாக இருந்த கபில் சிபலும், சல்மான் குர்ஷித்தும் உச்சநீதிமன்றத்தில் முன் வைத்தனர். குடியரசுத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும்வரை ஒருவர் ஆளுநராகப் பதவி வகிக்கலாம் என்று அரசியல் சட்டம் கூறுவதால், உள்துறைச் செயலர் இந்தப் பிரச்னையில் தலையிட்டதே தவறு என்பது அவர்கள் வாதம். உச்சநீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அரசை பதிலளிக்கக் கோரியிருக்கிறது.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆளுநர்களைப் பதவி விலகச் சொல்வது என்கிற நடைமுறையை ஏற்படுத்தியதே காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். 2004-இல் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் அதற்கு முன்பு பதவியில் இருந்த, வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நியமித்திருந்த எல்லா ஆளுநர்களையும் பதவி விலக உத்தரவிட்டுத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் முந்தைய ஆட்சியின் அரசியல் நியமனங்களை அகற்ற முற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முக்கியமான அரசியல் சட்ட நியமனங்களில் இருப்பவர்கள் தாங்களாகவே பதவி விலகி, புதிய ஆட்சியாளர்களுக்கு அவர்களது சொல்படியும், குறிப்பறிந்தும் செயல்படும் வகையிலுமான நபர்களின் நியமனங்களுக்கு வழிகோலுவது கண்ணியமான நடிவடிக்கையாகக் கருதப்படுகிறது. நரேந்திர மோடி அரசு, அடுத்த சில மாதங்களில் பதவிக் காலம் முடிவடைய இருப்பவர்களை ஆளுநர்களாகத் தொடர அனுமதித்துவிட்டு, ஏனைய ஆளுநர்களை மட்டும்தான் பதவி விலகக் கோரியது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், நாகாலாந்து, மேற்கு வங்கம் ஆகிய மாநில ஆளுநர்கள் ஏற்கெனவே பதவி விலகிவிட்டனர். கேரளம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில ஆளுநர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோடி அரசு அவர்களைப் பதவி விலகக் கோருகிறது என்பது உண்மை. அது நியாயமும்கூட. ஆளுநர்களாக இருப்பதால் தங்களுக்கு வழக்குகளிலிருந்து விதி விலக்கு கிடைக்கும் என்பதாலா அல்லது பதவி சுகத்தை விட மனமில்லாததால் பதவி விலக மறுக்கிறார்களா என்று அவர்களைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், ஆளுநர்கள் நியமனம் அப்படிப்பட்டதல்ல. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்கள்தான் ஆளுநர்கள். அரசியல் சட்டப் பிரிவு 74-ன்படி, குடியரசுத் தலைவர் பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையின் உதவியுடனும், ஆலோசானையின்படியும் நடக்கக் கடமைப்பட்டவர்.

அமைச்சரவையின் ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரலாமே தவிர, அவர்களது முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியவர். அதுமட்டுமல்ல, அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு என்ன ஆலோசனை கூறியது என்பதை விசாரிக்கும் உரிமை நீதிமன்றத்திற்குக் கிடையாது என்று அரசியல் சட்டப் பிரிவு 74 (2) திட்டவட்டமாகக் கூறுகிறது.

ஏற்கெனவே நீதித் துறை நீதிபதிகள் நியமன மசோதாவால் அதிருப்தி அடைந்திருக்கும் நேரம். அரசுக்கும், நீதித் துறைக்கும் இடையே மோதலை அதிகரித்து அதில் குளிர்காய நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. அதற்கு அம்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் உத்தரகண்டின் ஆளுநர் அஜீஸ் குரோஷி.

தினமணி



 பதவிப் பித்தர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக