Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
3 posters
Page 1 of 1
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி: 7 பேர் படுகாயம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தந்தையும், மகனும் பலியானார்கள். படை வீரர் ஒருவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பாகிஸ்தான் அத்துமீறல்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 2003–ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்துவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது.
சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும், தானியங்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 18 முறை பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் தனது வாலாட்டத்தை நிறுத்திக்கொண்ட மாதிரி தெரியவில்லை.
13 குக்கிராமங்கள் மீது தாக்குதல்
நேற்று முன்தினம் இரவு பூஞ்ச் மாவட்டம் ஹமீர்பூர் பகுதியில் உள்ள ஷியா, ஜோர்தா பார்ம், திரேவா, பித்தல், நிகோவால், பிண்டி, டோப்–2, காரி, காரானா, அப்துலியான் கொராட்டானா, கொராட்டானா குர்த், விதிபூர் ஜாத்தன், பிஜூ ஆகிய 13 குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் 82 மில்லி மீட்டர் மோர்ட்டார் ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி எந்திர துப்பாக்கிகள் மூலமும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
அதே நேரம் அப்பகுதியில் உள்ள 22 இந்திய ராணுவ நிலைகள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவு 12.30 மணி அளவில் தொடங்கிய இந்த தாக்குதல் நேற்று காலை 7 மணி வரை நீடித்தது.
ஒரே நாளில் இத்தனை இடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது, இந்த ஆண்டில் இதுவே முதல்முறையாகும்.
தந்தை–மகன் பலி
இதில் பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார் ரக பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதில் ஜோர்தா பார்ம் கிராமத்தில் ஒரு வீட்டின் மேற்கூரையை இரண்டாக கிழித்துக் கொண்டு குண்டுகள் விழுந்து வெடித்தன.
அப்போது அந்த வீட்டில் இருந்த அக்ரம் ஹூசைன் என்பவரும், அவரது மகன் அக்ரம் இருவரும் குண்டுவெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வீட்டில் இருந்த அதே குடும்பத்தைச் சேர்ந்த காலிபிபீ, பிபீ பேகம், முகமது யூனுஸ் என்னும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 வீடுகள் சேதம்
இதேபோல், கொரட்டானா குர்த் பகுதியில் அஜய் சவுதாரி என்பவரும், விதிபூர் ஜத்தன் கிராமத்தில் ராணி தேவி என்ற பெண்ணும், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இங்கு 5 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. 2 கால்நடைகளும் குண்டுவீச்சுக்கு பலியாயின. பிஜூ என்னும் கிராமத்தில் ஹர்னாம்சிங் என்பவர் படுகாயம் அடைந்தார்.
3 ஆயிரம் பேர் வெளியேற்றம்
மேலும் ஜம்மு மாவட்டத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள ஆர்னியா மற்றும் ஆர்.எஸ்.புரா ஆகிய துணை வட்டாரப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனையடுத்து, இப்பகுதியில் உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி மையங்கள், இதர அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், ஆர்.எஸ்.புராவில் மாவட்ட நிர்வாகத்தினரும், போலீஸ் அதிகாரிகளும் எல்லையோர பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள்.
ராணுவ மந்திரி பதில்
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய ராணுவவீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் பயன்படுத்தியது போன்ற ஆயுதங்களைக் கொண்டே நமது வீரர்களும் தாக்குதலை கையாண்டனர்.
இது குறித்து ராணுவ மந்திரி அருண்ஜெட்லி, விசாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியிலும், சர்வதேச எல்லை பகுதியிலும் காவலுக்கு இருக்கும் நமது வீரர்கள் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நானும், இந்த நாட்டு மக்களும் நமது எல்லையையும், தேச நலனையும் பாதுகாப்பார்கள் என்ற மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்’’என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
இன்னும் இந்தியா வாயில் விரலை வைத்துக் கொண்டே தான் இருக்கப் போகுது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
எல்லையில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்: 35 இடங்களில் தாக்குதல்; 3 பேர் படுகாயம்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.
எல்லையில், சாம்பா மாவட்டத்தை ஒட்டிய 40 அவுட்போஸ்ட்களையும், 24 எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது. நேற்றிரவு 11.30 மணி முதல் இந்த சண்டை இன்று காலை 7 மணி வரை நீடித்துள்ளது.
3 பேர் காயம்:
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஆர்.எஸ்.புரா பகுதியைச் சேர்ந்த ப்ளோரா, கோத்தார் கிராமங்களைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். கால்நடைகளும் காயமடைந்தன.
23 முறை தாக்குதல்:
ஆகஸ்ட் மாதம் துவங்கியது முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 21 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.
எல்லையில், சாம்பா மாவட்டத்தை ஒட்டிய 40 அவுட்போஸ்ட்களையும், 24 எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது. நேற்றிரவு 11.30 மணி முதல் இந்த சண்டை இன்று காலை 7 மணி வரை நீடித்துள்ளது.
3 பேர் காயம்:
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஆர்.எஸ்.புரா பகுதியைச் சேர்ந்த ப்ளோரா, கோத்தார் கிராமங்களைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். கால்நடைகளும் காயமடைந்தன.
23 முறை தாக்குதல்:
ஆகஸ்ட் மாதம் துவங்கியது முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 21 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
சமாதானத்தை விரும்பாத பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியே தீர வேண்டும்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» பாகிஸ்தான் நடத்திய ராணுவ தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி
» பக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
» பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தாக்குதல்: 10 பேர் பலி
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» பாகிஸ்தான் நடத்திய ராணுவ தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி
» பக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
» பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தாக்குதல்: 10 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|