புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
18 Posts - 20%
mohamed nizamudeen
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
57 Posts - 66%
heezulia
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
15 Posts - 17%
mohamed nizamudeen
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அழுது வாழ வேண்டும் I_vote_lcapஅழுது வாழ வேண்டும் I_voting_barஅழுது வாழ வேண்டும் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுது வாழ வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:32 am


கண்ணிலே நீரெதற்கு? இந்தக் கேள்விக்குக் "காலமெல்லாம் அழுவதற்கு!' என்று ஒரு கவிஞர் சொன்னார். "அண்ணன் அடிச்சான், அண்ணி அழுதாள், அவள் கண்ணிலேயிருந்த அழுக்கெல்லாம் போச்சு!' என்று நாத்தனார் ஒருத்தி கேலி பண்ணினாளாம். உண்மையிலேயே கண்ணீர் உடலின் கழிவுகளை நீக்க உடல் கையாளுகிற ஓர் உபாயம் என்று விஞ்ஞானம் கூறுகிறது.

வெங்காயத்தை உரிக்கிறபோது வருகிற கண்ணீருக்கும், அழுகை அல்லது ஆனந்தம் காரணமாக வருகிற கண்ணீருக்கும் பெரும் வேதியியல் வேறுபாடு உண்டு. உணர்ச்சிகளாலேற்படும் மன இறுக்கத்தின்போது, உடலில் உருவாகும் கழிவுப் பொருள்கள் அழுகை அல்லது ஆனந்தக் கண்ணீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதாபாத்திரத்தின் வாயிலாக "அழுகை நுரையீரல்களைத் திறந்து விடுகிறது; முகத்தை அலம்பி விடுகிறது; கண்களுக்குப் பயிற்சியளிக்கிறது; மன இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. அதனால், போதுமென்கிற அளவுக்கு அழுது தீர்த்து விடு!' என்கிறார்.

உணர்ச்சிக் குமுறல்களின் வெளிப்பாடாகக் கண்ணீர் விட்டு அழுவதில் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால், அதற்கென்று "நீலிக்கு நெற்றியில் கண்ணீர்' என்று சொல்ல வைக்கிற மாதிரி எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது.

கண்ணீர் விட்டு அழுதால் மனம் லேசாகி அதன் இறுக்கம் தணியும். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுகிறவர்களுக்கு மன அழுத்தத்தினால் வருகிற வயிற்றுப் புண், மலக்குடல் வீக்கம், மூலம் போன்ற கோளாறுகள் வருவதில்லை.

ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகவும் அடிக்கடியும் அழுகிறார்கள். அதற்கு அவர்களது உடல் வேதித்தன்மை காரணமாயிருக்கலாம்.

கண்ணின் பாதுகாப்புக்கு மூன்று அடுக்குகள் அமைந்துள்ளன. விழிவெளிப் பரப்பின் மேல் சளி போன்ற ஒரு படலம் பரவி அதை ஒரு சீரான ஈரப் பதத்தில் வைக்கிறது. நடுவிலுள்ள நீர்ப் படலம் அதற்குத் தேவையான கண்ணீரை வழங்கி ஈரத்தையும் வழவழப்பையும் வழங்குகிறது. வெளிப்புறமாக உள்ள ஒரு நெய்ப்படலம், கண்ணீர் ஆவியாகாமலும் விழி வறண்டு விடாமலும் தடுக்கிறது.

சளிப்படலம் கண்ணின் வெளிப்பரப்பிலுள்ள ùஸல்களிலிருந்து உருவாகிறது. வெளிப்புறமுள்ள நெய்ப்படலம், இமைகளின் விளிம்புகளிலுள்ள நுண் சுரப்பிகளிலிருந்து வெளிப்படுகிறது. நடுவிலுள்ள நீர்ப்படலம், கண் குழியின் மேற்பகுதியிலுள்ள கண்ணீர்ச் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது. அது உபரியாக உற்பத்தியாகிறபோது கண்ணீராக வெளியே வழிகிறது.

சராசரியாக நாம் நிமிஷத்துக்குப் பதினாறு முறை கண்ணைச் சிமிட்டுகிறோம். அப்போது இமைகள் கண்ணின் மேற்பரப்பில் படியும் தூசுகளை மூக்குப் பக்கமுள்ள விழியோரத்துக்குத் தள்ளுகின்றன. அங்குள்ள சிறு வடிகால் பள்ளங்கள் வழியாக கண்ணீர் அந்த அழுக்குகளைக் கழுவி வெளியே தள்ளிவிடும்.

கண் உறுத்தல், அழுகை, ஆனந்தம் போன்ற காரணங்களால் பெருகும் கண்ணீர் விழியின் உட்புற முனைகளிலிருந்து மூக்கிற்குள் புகுந்து வெளிப்படுவதுண்டு. அதை "அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்' என்ற சொற்றொடர் குறிப்பிடும்.

சினிமா நடிகர்கள் "கிளிசரின்' உபயத்தில் விடுகிற கண்ணீர், விழியின் வெளிமுனைகளிலிருந்து வழியும். அதிக அளவிலான கண்ணீர் இமைகளில் தளும்பி நடுக்கண் பகுதியிலிருந்து கன்னங்களில் இறங்கும்.

கண்ணீரில் உள்ள லைசோசைம் என்ற நொதி, சிறந்த கிருமிக் கொல்லியாகும். வியர்த்தல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றைப் போன்று கண்ணீர் விடுதலும் ஒரு கழிவு நீக்கச் செயல்பாடு என வில்லியம் ஃப்ரே என்ற அமெரிக்க விஞ்ஞானி கண்டு பிடித்தார்.

சில ஐரோப்பிய ஆய்வர்கள் கண்ணீரில் மாங்கனீஸ் என்ற உலோகம் இருப்பதைக் கண்டனர். அது உணவு மூலமாக உடலுக்குள் புகும் தனிமம். ரத்த சீரத்திலுள்ளதை விட, கண்ணீரில் மாங்கனீஸ் செறிவு அதிகமிருக்குமானால் கண்ணீர்ச் சுரப்பிகள் ரத்தத்திலிருந்து உபரியான கனிமங்களைத் திரட்டிக் கண்ணீர் மூலம் வெளியேற்ற வல்லவை எனப் பொருளாகிறது.

"உடலில் மாங்கனீசின் செறிவு அதிகமானால் மனச்சோர்வும் எரிச்சலும் அதிகமாகும்' என ஃப்ரே கண்டு பிடித்தார். சீரத்திலுள்ளதை விட முப்பது மடங்கு அதிகமான மாங்கனீஸ், உணர்ச்சிக் கண்ணீர், உறுத்தல் கண்ணீர் ஆகிய இரண்டு வகையிலும் இருப்பதாக அவர் கண்டார்.

உணர்ச்சிக் கண்ணீரில், உறுத்தல் கண்ணீரை விட அதிகமான அளவில் புரதங்கள் உள்ளன. கண்களில் வலி மரப்புப் பொருள்களைத் தடவினால், உறுத்தல் கண்ணீர் வெளிப்படுவது கணிசமாகக் குறையும். ஆனால், உணர்ச்சிக் கண்ணீர் வழக்கமான அளவிலேயே வெளிப்படும்.

எனவே, உறுத்தல் கண்ணீரும், உணர்ச்சிக் கண்ணீரும், வெவ்வேறு நரம்பமைப்புகளின் மூலம் தூண்டப்படுவதாக ஃப்ரே கூறினார்.

கண்ணீர் விட்டழுதால் மனச்சுமை குறைகிறது. அழத்தூண்டும் சோகத்திற்கும், அழுகைக்குமிடையில் ஒரு ரசாயனத் தொடர்பு உள்ளது. ஃப்ரே 18 முதல் 75 வயது வரையுள்ள ஆய்வுத் தொண்டர்களிடம், கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்ணீர் விட்டழுத சம்பவங்களின் எண்ணிக்கை, அவற்றின் பின்னணிகள், அழுத பின் அவர்களது மன நிலையிலேற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த முப்பது நாள்களில் பெண்கள், ஆண்களைவிட அதிகமாக உணர்ச்சி மேலிட்டுக் கண்ணீர் விட்டிருந்தனர். பெண்களில் 85 சதவீதத்தினரும், ஆண்களில் 73 சதவீதத்தினரும் அழுத பின் மனச்சுமை குறைந்ததாக உணர்ந்தனர். அந்த முப்பது நாள்களில் 6 சதவீதப் பெண்களும், 45 சதவீத ஆண்களும் ஒருமுறைகூட அழவில்லை.

ஓர் இளம் தாய் முப்பது நாள்களில் 16 முறை அழுதிருந்தாள். தனது குழந்தைகள் நீந்தப் பயிற்சி பெற்றுத் திறமையுடன் நீந்துவதைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், பிறந்தகத்திற்குப் போகுமுன் கணவனிடம் விடை பெற்றபோது ஏற்பட்ட வேதனை, சமையல் சரியாக அமையாத போது ஏற்பட்ட நிராசை எனப் பல காரணங்களால் அவள் அழுதிருந்த போதிலும், அவளது குடும்ப வாழ்க்கையில் பூரணமான மனநிறைவும், எதிர்காலத்தைப் பற்றித் தளராத நம்பிக்கையும் கொண்டிருந்தாள்.

ஓர் இளைஞன் தனது பாசத்துக்குரிய அத்தை மரணமடைந்த செய்தி கேட்டபோது ஒரு முறையும், போரின் கொடுமைகளைச் சித்தரித்த ஒரு திரைப்படத்தைப் பார்த்தபோது ஒரு முறையும் அழுதிருந்தான்.

பெண்கள் அழுவதற்கு, உறவினர் தொடர்பான சம்பவங்களே பெரிதும் காரணமாகின்றன. பிரிவு முதன்மையான காரணம். பிரிந்தவர் கூடினால் பேச்சைவிடக் கண்ணீர்தான் அதிகமாக வருகிறது. அழுகை மூட்டிய சம்பவங்களில் 49 சதவீதம் சோகமும், 21 சதவீதம் ஆனந்தமும், 10 சதவீதம் கோபமும் காரணமாயிருந்தன. எல்லாப் பெண்களுக்கும் கோபப்படும்போது கண்ணீர் வந்தது. ஆண்கள் சினம் கொள்கிற போது கண்ணீர் விடுவதில்லை.

மார்கரட் க்ரீப்பூ என்ற ஆய்வர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வில், 137 நபர்களிடம் கேள்விகேட்டு ஆரோக்கியமானவர்களையும், மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களையும் ஒப்பீடு செய்தார்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளைவிட அதிகமான முறை அழுதிருந்தார்கள். அவர்கள் அழுவதற்கு வெட்கப்படவில்லை. அழுத பின் அவர்களுடைய மனதில் நிம்மதி நிரம்பியது.

சமூகக் கட்டுப்பாடுகள், பெற்றோரின் வளர்ப்பு முறை போன்றவை, அழுகையை பலவீனம், ஒழுங்கின்மை போன்றவற்றின் அறிகுறிகளாகச் சித்திரிக்கின்றன. அவற்றின் காரணமாக அழுகையை மென்று விழுங்குகிறவர்கள் உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றால் பீடிக்கப்படுகிறார்கள்.

ஆரோக்கியமானவர்கள் விடும் கண்ணீர், கோபதாபங்களையும், சோகங்களையும், மனச் சோர்வுகளையும் கழுவி வெளியேற்றி ஆன்மாவைச் சுத்தம் செய்து விடுகிறது.

மகாத்மா காந்தி இறந்தபின் பல இரவுகளில் பண்டித நேரு தனிமையிலிருக்கும்போது மேஜையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுவார் என அவருடைய தனிச் செயலராயிருந்த மத்தாய் ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். போர்முனையிலிருந்து வரும் அறிக்கைகளைப் படிக்கும்போது சர்ச்சில் கண்கலங்குவாராம்.

"ஆண் பிள்ளை அழலாமா' என்ற கேள்வியே பல ஆண்களை அழவிடாமல் வயிற்றுப் புண்களை வரவழைக்கின்றது. கண்களில் நீர் வரவழைக்கும் சூழ்நிலைகளை விட்டு விலகிப் போய்விடவே ஆண்கள் முனைகிறார்கள். அழுகிற பெண்களை யாரும் விரும்புவதில்லை.

அண்மை ஆய்வுகள்படி, சிறு குழந்தைகள் அழுகிற பாணியில் ஆண், பெண் என்ற வேறுபாடு எதுவுமில்லை. பருவமெய்தும் வரை இரு பாலரும் ஒரே மாதிரிதான் அழுகிறார்கள்.

12 முதல் 18 வயது வரையான காலத்தில் பெண்களின் உடலில் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோனின் சுரப்பு ஆண்களைவிட 60 சதவீதம் அதிகமாயிருக்கிறது. அந்தக் காலகட்டங்களில் பெண்கள், ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாக அழுகிறார்கள்!

தினமணி



அழுது வாழ வேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 24, 2014 10:11 am

அழுகிற ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.........ஆதலால் நான் அழுவதில்லை...  ஜாலி 


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 24, 2014 10:16 am

கண்ணாலம் கட்டினப்புரம் அழ வெப்பாங்களே புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:36 pm

யினியவன் wrote:கண்ணாலம் கட்டினப்புரம் அழ வெப்பாங்களே புன்னகை

அதனால் தான் ஏற்கனவே அழும் ......அழுதுகொண்டிருக்கும் ஆண்களை அவங்களுக்கு பிடிக்கலையோ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:37 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக