Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
4 posters
Page 1 of 1
போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி தமிழகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் விருது.
சென்னை, ஆக. 22 - தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். போலியோஇல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார்
உலக சுகாதார நிறுவனம் சார்பில் போலியோ நோய் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தென் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், மருத்துவர்கள், யூனிசெப் – நோட்டரி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைச் செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதாரத் திட்டங்கள் மூலம் மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, தாய்-சேய் நலன் காக்கப்படுகிறது. தமிழகத்தின் திட்டங்களை பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதல்வர் அம்மா செயல்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் கூறுவதில் பெருமைப்படுகிறேன்.
சீமாங்க் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு சேவை மையத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பிரசவத்தின்பொழுது இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினால் ஏழை, எளியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருவாயில் மருத்துவமனைகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு சுய சார்பு ஏற்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ.12,000 நிதியுதவி 3 தவணை களாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.720 கோடி இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ளவர்களுக்கு பேறுகாலத்திற்கு முன்பு, பேறுகாலத்திற்குப் பின்பு, பேறுகாலத்தில் மற்றும் தடுப்பூசி ஆகிய காலகட்டங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழக மக்களாகிய நாங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த ஆற்றல் மிக்க முதலமைச்சரைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை- 2023 கொள்கையை முதலமைச்சர் அம்மாவின் அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக திட்டங்களை செயல்படுத்திடவும், தமிழகம் இந்தியாவில் சமூகம் மற்றும் சுகாதாரத்தில் முதல் மாநிலமாகத் திகழவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைந்தது மாநில நிதிநிலை அறிக்கையில் மொத்த நிதியில் 5 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 888.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இன்று ரூ.7004 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாய்-சேய் நல மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
1980ல் பிரசவத்தின்பொழுது இறப்பு விழுக்காடு 1 லட்சத்திற்கு 450 என்பது இப்பொழுது 68 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு சவிகிதம் 1000க்கு 93 என்ற நிலை தற்பொழுது 1000க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. சீமாங்க் மையங்களின் சிறப்பான சேவையே இந்த வெற்றிக்குக் காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், 11 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. புதன்கிழமைகள் தோறும் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட இடம் என்ற முறை கையாளப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது. 2011 டிசம்பர் முதல் ஐந்து நோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு போடப்படுகிறது.
யூனிசெப் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 95 விழுக்காடு தடுப்பூசி போடப்படுகிறது. 2006ம் ஆண்டு தமிழ்நாடு போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1995-–96ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோய்க்கெதிராக போராடி வருகிறோம். எந்த குழந்தையும் விடுபடக்கூடாது என்ற இலக்கை தமிழகத்தில் நிர்ணயித்து இத்திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் பணியாற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட முழு பங்களிப்பை வழங்கியுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.எப்.பி. நெட்வொர்க் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கிட ஆலோசித்து வருவது பாராட்டிற்குரியது. ஆறு மருத்துவ அதிகாரிகள் 5 பகுதிகளில் போலியோவை ஒழிக்க பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த தொழில்நுட்ப உதவியை, வழிகாட்டுதல்களை பாராட்டுகிறேன். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சரின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. போலியோ நோயற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இறுதியில் சிறப்பாக செயல்பட்டு போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டார்...!
[note]பிறகு எதற்கு இன்னும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கிறார்கள்![/note]
சென்னை, ஆக. 22 - தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். போலியோஇல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார்
உலக சுகாதார நிறுவனம் சார்பில் போலியோ நோய் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தென் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், மருத்துவர்கள், யூனிசெப் – நோட்டரி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைச் செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதாரத் திட்டங்கள் மூலம் மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, தாய்-சேய் நலன் காக்கப்படுகிறது. தமிழகத்தின் திட்டங்களை பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதல்வர் அம்மா செயல்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் கூறுவதில் பெருமைப்படுகிறேன்.
சீமாங்க் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு சேவை மையத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பிரசவத்தின்பொழுது இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினால் ஏழை, எளியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருவாயில் மருத்துவமனைகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு சுய சார்பு ஏற்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ.12,000 நிதியுதவி 3 தவணை களாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.720 கோடி இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ளவர்களுக்கு பேறுகாலத்திற்கு முன்பு, பேறுகாலத்திற்குப் பின்பு, பேறுகாலத்தில் மற்றும் தடுப்பூசி ஆகிய காலகட்டங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழக மக்களாகிய நாங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த ஆற்றல் மிக்க முதலமைச்சரைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை- 2023 கொள்கையை முதலமைச்சர் அம்மாவின் அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக திட்டங்களை செயல்படுத்திடவும், தமிழகம் இந்தியாவில் சமூகம் மற்றும் சுகாதாரத்தில் முதல் மாநிலமாகத் திகழவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைந்தது மாநில நிதிநிலை அறிக்கையில் மொத்த நிதியில் 5 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 888.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இன்று ரூ.7004 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாய்-சேய் நல மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
1980ல் பிரசவத்தின்பொழுது இறப்பு விழுக்காடு 1 லட்சத்திற்கு 450 என்பது இப்பொழுது 68 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு சவிகிதம் 1000க்கு 93 என்ற நிலை தற்பொழுது 1000க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. சீமாங்க் மையங்களின் சிறப்பான சேவையே இந்த வெற்றிக்குக் காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், 11 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. புதன்கிழமைகள் தோறும் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட இடம் என்ற முறை கையாளப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது. 2011 டிசம்பர் முதல் ஐந்து நோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு போடப்படுகிறது.
யூனிசெப் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 95 விழுக்காடு தடுப்பூசி போடப்படுகிறது. 2006ம் ஆண்டு தமிழ்நாடு போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1995-–96ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோய்க்கெதிராக போராடி வருகிறோம். எந்த குழந்தையும் விடுபடக்கூடாது என்ற இலக்கை தமிழகத்தில் நிர்ணயித்து இத்திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் பணியாற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட முழு பங்களிப்பை வழங்கியுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.எப்.பி. நெட்வொர்க் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கிட ஆலோசித்து வருவது பாராட்டிற்குரியது. ஆறு மருத்துவ அதிகாரிகள் 5 பகுதிகளில் போலியோவை ஒழிக்க பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த தொழில்நுட்ப உதவியை, வழிகாட்டுதல்களை பாராட்டுகிறேன். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சரின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. போலியோ நோயற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இறுதியில் சிறப்பாக செயல்பட்டு போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டார்...!
[note]பிறகு எதற்கு இன்னும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கிறார்கள்![/note]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
மும்முரமாக , முன் பாதுகாப்பாக ,குழந்தைகளுக்கு தருவதினால்தான் ,
போலியோ இல்லை என எண்ணுகிறேன்
WHO கொடுத்த விருது எனில் , பெருமை பட வேண்டிய ஒன்று தான் .
ரமணியன்
போலியோ இல்லை என எண்ணுகிறேன்
WHO கொடுத்த விருது எனில் , பெருமை பட வேண்டிய ஒன்று தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
T.N.Balasubramanian wrote:மும்முரமாக , முன் பாதுகாப்பாக ,குழந்தைகளுக்கு தருவதினால்தான் ,
போலியோ இல்லை என எண்ணுகிறேன்
WHO கொடுத்த விருது எனில் , பெருமை பட வேண்டிய ஒன்று தான் .
ரமணியன்
ஆம் ,கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் போலியோ பாதிப்பு இல்லை என்கிறார்கள்! இது பெருமைக்குரிய தகவல்!
http://www.thehindu.com/news/national/tamil-nadu/no-polio-cases-reported-in-last-nine-years-tamil-nadu/article4446334.ece
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» இந்தியா போலியோ இல்லாத நாடு! உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
» நிலைமை மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்
» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
» நிலைமை மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|