புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_m10தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 30, 2009 6:51 am

தமிழரின் மொழி, கலை, சமயம், பண்பாடு, கிறித்தவ, சகாப்தத்திற்கு முன்னரே
உலகளாவிய முறையில் பரவி இருந்தன என்பதற்குச் சான்றுகள் பல இருக்கின்றன.

குறிப்பாகத் தென்திசை நாடுகளில் புராதனத் தமிழரின் கலையும் பண்பாடும் இன்றும் பரவலாக இருப்பதைக் காணலாம்.

திரைகடலோடியும்
திரவியம் தேடு என்ற பழமொழி இருந்தாலும், தமிழ் நாட்டின் நாகப்பட்டினம்,
பூம்புகார், மாமல்லபுரம், சென்னை ஆகிய துறைகளிலிருந்து தமிழர்கள் சென்ற
நாடுகளிலிருந்து கொண்டு வந்த திரவியத்தைவிட, தமிழ்நாட்டின் கலைச்
செல்வங்களுடன் தங்கள் உழைப்பையுமே விட்டு வந்திருக்கின்றனர்.

பாய்மரக்
கலங்களில் பருவக்காற்று வீசிய திசையில் சென்ற தமிழர் கடலோடிகள் விட்டுச்
சென்ற அடிச்சுவடுகள் அந்த நாடுகளில் தமிழின் பெருமையை இன்றும் பறைசாற்றிக்
கொண்டிருக்கின்றன.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்திசை நாடுகள்
தமிழ்வழி மன்னன் கவுண்டியாவின் ஆளுகையில் இருந்தது என்று வடமொழி நூல்களால்
அறிகிறோம். இந்தோசீனாவில் (இன்றைய வியட்நாம்), பூனான் என்ற ஊரில் கி. பி.
3 ஆம் நூற்றாண்டுவரை கவுடின்யாவின் ஆட்சி இருந்தது. அப்போது அம் மன்னன்
கட்டிய ஆலயங்கள், அரண்களின் இடிபாடுகள் அகழ்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.

வியட்நாம்,
கம்போடியா, பர்மா (இன்றைய மியன்மார்), தாய்லாந்து ஆகிய நாடுகள்
கவுடின்யாவின் ஆளுகையில் இருந்தன. கி. பி. 6 ஆம் நூற்றாண்டுவரை தமிழ்வழி
மன்னர்கள் சிறீராமா, அமராவதி, பாண்டுரங்கா, சிறீவிசயா, கவுதாரா ஆகியோரின்
ஆட்சியில் அந்த நாடுகள் இருந்தன

கம்போயம் என்ற பெயரில் விளங்கிய
கம்போடியாவில் கி. பி. 1181 முதல் 1219 வரை முதலாம் ஜெயவர்மனின் ஆட்சியில்
கட்டப்பட்ட ஆலயங்கள் தமிழரின் கட்டட, சிற்பக்கலைச் சிறப்பை இன்றும் அந்த
நாட்டில் எடுத்துக் காட்டி வருகின்றன.

உலகால் போற்றப்படும்
அங்கோர்வாட் (Angkor Wat) கோயில்கள், பல நூறு கிலோமீட்டர் பரப்பளவில்
உலகோரை வியக்க வைக்கும் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.

ஜெயவர்மனின்
ஏழு சந்ததிகள் தொடர்ந்து நடத்திய ஆட்சியின்போது இந்த அங்கோர்வாட் ஆலயங்கள்
விரிவுபடுத்தப்பட்டுக் கட்டப்பட்டு வந்தன. ஜெயவர்மனின் ஆட்சியில்
வெளியிடப்பட்ட நாணங்களில் இந்தக் கோயிலின் கோபுரம் ஒரு பக்கமும், சிவன்,
திருமால் உருவங்கள் மறுபுறமும் இடம்பெற்றிருந்தன. இந்த நாணயங்களைக்
கம்போடியாவின் அரும் பொருளகத்தில் இன்றும் காணலாம்.

ஏழாவது
ஜெயவர்மனின் பெயர் சிறீஇந்திர ஜெயவர்மன். மேற்கிலிருந்து சயாமியரின்
நெருக்குதலும், சீன, மங்கோலியப் படையெடுப்புகளும் ஜெயவர்மன் வழியினரின்
ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.

தமிழ்நாட்டின் சிற்பத்
திறனைக் காட்டும் பிரமாண்டமான ஆலயங்களை 12 ஆம் நூற்றாண்டிலேயே கடல் கடந்து
இந்தோசீன நாட்டில் அமைத்து விட்டாலும், 19 ஆம் நூற்றாண்டில்தான் அவை வெளி
உலகிற்குத் தெரியவந்தன. காடு மண்டிக் கிடந்த பகுதியில் இருந்த இந்த
ஆலயங்களை 19 ஆம் நூற்றாண்டில் கம்போடியாவைக் கைப்பற்றிய
பிரெஞ்சுக்காரர்கள் கண்டுபிடித்தனர்.

இவ்வளவு பெரிய கலைக்கோயிலை
மீட்பித்துப் புதுப்பிக்கும் பணியை ஐக்கிய நாட்டுக் கல்வி கலாசாராப்
பிரவினா யுனெச்கோ மேற்கொண்டது. 1971 இல் தொடங்கிய உள்நாட்டுப் போரில்
இந்தப் பெரும் புதுப்பிரிவுப் பணி தடைப்பட்டது. கெமர்ரூஜ் பயங்கரவாதப்
படைகள் இந்தக் கோயிலை அரணாகக் கொண்டு, அரசாங்க எதிர்ப்புப் போரை நடத்தியன.
கம்போடியாவின் பெருமைக்குரிய இந்த ஆலயத்திற்கு அழிவு நேர்வதைத் தவிர்க்க
அந்த எதிர்ப்பாளர்களை எதிர்க்க முடியாமல் அரசு படை திணறியது.

15
ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சீர்குலைந்த 'அங்கோர்வாட்' ஆலயத்தைப்
புதுப்பிக்கும் பணியை ஐ. நா. மீண்டும் மேற்கொண்டிருக்கிறது.

15
கிலோமீட்டர் சுற்றளவிற்கு அமைந்திருக்கும் இந்த வளாகத்தில் மொத்தம் 200
கோவில்கள் இருக்கின்றன. இதில் மிக உயர்ந்த கோபுரத்துடன் அமைந்திருப்பது
ஒரு சிவன் கோயில். இதன் உயரம் 120 அடி.

இந்தக் கோயிலைப்
புனரமைக்க ஐ.நா. 10 மில்லியன் வெள்ளி(டாலரை) ஒதுக்கியிருக்கிறது. இந்திய
வல்லுநர் வெண்டர்மெர்ஸ்சுக் மேற்பார்வையில் பிரெஞ்சுக் கலாசாரத் துறை,
இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஆலயத்திற்குப் புதிய வடிவம் தருவதில் முனைப்பாக
ஈடுபட்டிருக்கிறது.

பர்மா, லாவோஸ், வியட்நாம் கம்போடியா
நாடுகுளில் 12 ஆம் நூற்றாண்டில் பரவிய தமிழர் பண்பாடும் இந்து சமயமும்
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா நாடுகளையும்
தழுவிக்கொண்டது. பின்னர் வந்த பவுத்த சமயச் செல்வாக்கையும் இந்த வட்டார
நாடுகள் ஏற்றுக் கொண்டன.

வியட்நாமின் மிகப்பெரிய நகரமான
கோசிமின்னில் (பழைய பெயர் சைக்கோன்) மகாமாரியம்மன் கோயில், சுப்பிரமணியர்
கோயில், தண்டாயுதபாணி கோயில் ஆகிய 3 கோயில்கள் இருக்கின்றன. சுப்பிரமணியர்
கோயில் 1871 இல் கட்டப்பட்டது. 1971 இல் தென் வியட்நாம் கம்யூனிஸ்டுகளிடம்
வீழ்ச்சி கண்டதும், சைகோன் நகரில் இருந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப்
போய்விட்டனர். இதன்பிறகு வியட்நாமியர்களே இந்தக் கோயிலைப் பேணி வந்தனர்.

வியட்நாம்
ஒன்றிணைந்த பின்னர் கோசிமின் குடியரசைத் தோற்றுவித்த கோசிமின் நினைவாகச்
சைகோன் நகரின் பெயர் கோசிமின் நகர் என்னும் பெயர் பெற்றது.

நகரத்தார்களின்
நிர்வாகத்திலிருந்த மாரியம்மன் ஆலயம், சுப்பிரமணிர் ஆலயம், தண்டாயுதபாணி
ஆலயம் ஆகியவற்றின் சொத்துகள் விலையுயர்ந்த ஆபரணங்கள், வெள்ளித்தேர்
ஆகியவற்றை வியட்நாம் தேசிய வங்கி திரும்ப ஆலய நிருவாகிகளிடம்
ஒப்படைத்துவிட்டது.

இந்த மூன்று ஆலயங்களையும் சீரமைக்கவும்,
அன்றாடப் பூசைகள் தடைபடமால் நடத்துவதற்கும், அர்ச்சகர்களை வரவழைப்பதற்கும்
வியட்நாம் அரசாங்கம் உதவ முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இராம.
இலட்சுமணன் செட்டியார் மாரியம்மன் ஆலய நிர்வாகத்தை இப்போது கவனித்து
வருகிறார்.

கம்போடியா போன்று வியட்நாம் சம்பா சாம்ராஜ்யம் என்ற
பெயரில் தமிழர்களின் பண்பாட்டுடன் இரண்டாம் நூற்றாண்டு முதல் 14 ஆம்
நூற்றாண்டுவரை நீடித்திருந்ததாக வரலாறு கூறுகிறது.

சம்பா
சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர் பரமசிவன் இந்திரபுரத்தைத் தலைநகராகக்
கொண்டிருந்தான். அப்போது கட்டப்பட்ட ஆலயங்களின் இடிபாடுகள் இப்போதும்
டானாங் நகரில் இருக்கின்றன. கி.பி. 605 இல் சீனாவின் சூய் பரம்பரைக்கும்
சம்பா இனத்தவருக்கும் ஏற்பட்ட கடும் போருக்குப் பிறகு இந்த
ஆலயங்களிலிருந்து சிவன், இலட்சுமி, துர்க்கை சிலைகளைச் சீனாவுக்கு
எடுத்துச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிகிறோம். வியட்நாமின்
மேற்குக் கரையோரத்தில் பாண்டுரங்கா, பொன்நகர், காயத்ரி, விஜயா ஆகிய
பெயர்கள் கொண்ட ஊர்கள் இருக்கின்றன.

டானாங் நகர்த்
தொல்பொருட்காட்சி அகத்தில் ஏழாம் நூற்றாண்டடைச் சேர்ந்த முருகன்,
விநாயகர், சிவன், நந்தி, உமாமகேசுவரர், துர்க்கை, திருமால், கருடன்
சிலைகள் இருப்பதைக் காணலாம். காட்சியகத்தின் வெளியே திறந்தவெளியில் 10 அடி
நீளம் கொண்ட கருங்கல் நந்திச் சிலை கம்பீரமுடன் காட்சி அளிக்கிறது. அதன்
பக்கத்தில் அகழ்ந்து எடுத்துக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான
சிலைகள் - காலத்தை வென்று நிற்கும் கலைப் பொக்கிசமாகக் காட்சி
அளிக்கின்றன. இவற்றின் பல சிலைகள் மேற்கு நாடுகளுக்குப் போய்விட்டன.

டானாங் நகரில் வாழ்ந்த சம்பா இன மக்களின் மரபினர் இன்றும் இங்கே வாழ்கின்றனர். இந்தச் சம்பா இன மக்கள் சிவனை வழிபடுகின்றனர்.

வியட்நாம், கம்போடியா, லாவோஸ் அடுத்துத் தாய்லாந்திலும் தமிழர்கள் விட்டுச் சென்ற அடிச்சுவடுகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.

கி.பி.
846 - 849 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் சயாமில் தாக்குவபா என்ற
ஊரில் தமிழர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கு மணிக்கிராமம் என்ற பெயர்
வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தக் குடியிருப்பு அருகே
அவனிநாரணம் என்ற ஏரியும் திருமால் ஆலயமும் இருந்ததாகவும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற
வரலாற்று ஆசிரியர் கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதிய
'தென்கிழக்காசிய வரலாறு' என்ற நூலில் இந்த ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார்.

தெ.
பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய 'சயாமில் திருவெம்பாவை' என்ற
நூலில் தாய்லாந்து அரசர்களின் முடிசூட்டு விழாவில் வேத பாராயணத்துடன்
திருப்பாவை திருவெம்பாவை பாடல்களைப் பாடுவது தொன்றுதொட்டு இருந்துவரும்
மரபு என்ற விவரத்தைத் தந்திருக்கிறார்.

தாய்லாந்தின் முன்னைய
தலைநகராக அயோத்யா இருந்து வந்தது. தயாய்லாந்து நாட்டை ஆளும் அரசர்களை
ராமா1, ராமா2 என்று வரிசைப்படுத்திக் கூறுவது வழக்கம். இப்போது ஆட்சி
நடத்தும் மன்னர் பூமிபால் 9 ஆம் ராமர் ஆவார்.

பழம்பெரும்
அரண்மனைகளும் ஆலயங்களும் அயோத்தியாவில் இன்று சுற்றுப் பயணிகளைக் கவர்ந்து
வருகின்றன. தாய்லாந்து நாடு பவுத்த சமயத்தைப் பின்பற்றினாலும் அதில்
தமிழர் சமயமும் பண்பாடும் பரவலாக இழையோடுவதைக் காணலாம். பல ஊர்களிலும்
பிரம்மன் கோயில் கொண்டிருப்பது இந்த நாட்டில்தான். புத்தர் கோயில்
கொண்டிருக்கும் ஆலயங்களில் விநாயகர் திருமால் அனுமான் வழிபாடும்
இருப்பதைக் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:46 pm

தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் 1571444738 



தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 11:16 pm

சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக