ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "

Page 2 of 2 Previous  1, 2

Go down

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " - Page 2 Empty " முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "

Post by M.M.SENTHIL Wed Aug 20, 2014 12:48 pm

First topic message reminder :

" இன்று அமர்க்களமான நாள்!" என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள்.

எம். எஸ். உதயமூர்த்தி எழுதி வடித்த தன்னம்பிக்கை ஊட்டும், சுயசிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பல. சமூகத்தில் அவரின் கட்டுரைகளை வாசித்து சுயசிந்தனையோடு... முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அத்தகைய வெற்றிகளுக்கும், இளைய தலைமுறையின் வழிகாட்டுதலுக்கு தீ பந்தமாகவும் விளங்கும் டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் எண்ண கடலிலிருந்து ஒரு கட்டுரைத் துளி உங்கள் பார்வைக்கு...

" உன்னால் முடியும் "

ஒரு காலத்தில் ரோம் சாம்ராஜ்யம் புகழ்பெற்ற நாடாக, ஆட்சியாக இருந்தது. ஆனால், அதன் புகழ் நிலைபெற்று நிற்கவில்லை. வெகுவேகமாக ரோம் சாம்ராஜ்யம் கவிழ்ந்தது. அதன் சரிவுக்கு காரணம், காமப்பாதையிலும், கள் போன்ற போதைப் பொருட்களிலும் அந்த நாட்டு அரசர்கள் பெரிதும் மூழ்கி திளைத்தது தான்.

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எப்போதுமே ஒரு லட்சியம் இருக்கும். எப்போது மனதில் லட்சியம் இடம் பெற்று விட்டதோ அதன்பின் அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனை எப்போதும் அவன் உள்ளத்தில் அலை மோதும். அதற்கான ஆய்வு வேலைகளைத் துவக்குவான். அதுபற்றிய அறிவும், அனுபவமும் பெற்றவர்களின் ஆலோசனையை பெறுவான். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தான் அவன் கவனம் இருக்கும்.

ஒரு உதாரண சம்பவம் பல பத்திரிகைகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. யாஹ்யகான் என்பவர் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தார். அந்த நாட்டின் பிரபல பாடகியான கீதா என்ற பெண்மணியை தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு அனுப்பினார் ஜனாதிபதி. ஜனாதிபதி மாளிகைக்கு பாடகி கீதா வந்தபோது அவரை உள்ளே விட மறுத்து விட்டனர் அரண்மனைக் காவலர்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நடக்காதபோது, உள்ளிருந்து நேராக ஜனாதிபதி ஆளை அனுப்பினார் அழைத்து வர உள்ளே போனார் கீதா.

முடிவில் மாளிகையிலிருந்து கீதா வெளியே வந்தபோது, மிகுந்த அன்புடன், மிக்க மரியாதையுடன் அவரை வழியனுப்பினர் பாதுகாவலர்கள். இதைக் கண்ட கீதா, " நான் உள்ளே போனபோது இவ்வளவு கெடுபிடி செய்தீர்களே? " என்று கேட்டார். அதற்கு காவலர்கள் தந்த பதில் " அம்மா! நீங்கள் போகும்போது வெறும் கீதாவாக போனீர்கள். திரும்பி வரும்போதோ தேசியகீதமாய் வெளிவந்தீர்கள்!" என்றனர்!

இப்படிப்பட்ட தலைவர்களின் ஆட்சி எப்படி இருக்கும்? தன்னம்பிக்கையும், லட்சியமும் உள்ள மனிதன் தன் காரியத்தில் குறியாக இருப்பான். ஆனால், குடியிலும், முறைகெட்ட காரியங்களிலும் தன்னை மறப்பவர்கள், எதையும் சாதிப்பதில்லை. தலைவனின் பலவீனங்கள் நாட்டையே பலவீனப்படுத்துகின்றன. அடுத்தமுறை அந்த தலைவனை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதே சமயம் தன்னம்பிக்கையும், லட்சியமும் கொண்ட தனிமனிதர்கள் நிறைய இருக்கும் ஒரு சமுதாயத்தில் யாரும் தலைவனை லட்சியம் செய்வதில்லை; தலைவனையும் மீறி நாடு முன்னேறுகிறது.

தன்னம்பிக்கைக்கு உதாரணமாக, அமெரிக்க நாட்டில் ஒரு மாமனிதர் அந்நாட்டின் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் மிகுந்த சந்தேகப் பிராணி. எனவே, அவரது பதவிக்கு எதிராக, போட்டியாக நிற்கும் கட்சியின் தலைமையகத்தில் அவர் தன் ஆட்களை அனுப்பி, அங்கே உள்ள தகவல்களை திருடி வரச் சொன்னார். அவர் பெயர் நிக்சன். இதன் விளைவு என்ன? வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அவர் பதவியிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று. நினைவில் கொள்ளுங்கள் தன்னம்பிக்கை என்பது ஒரு மாபெரும் சக்தி. மனிதர்களிடத்தில் இது இயல்பாக உள்ள ஒரு சக்தி. தன்னம்பிக்கையும், லட்சியமும், நேர்மையும் இல்லாதவர்களை மக்கள் எளிதில் நிராகரிக்கின்றனர். முன்னுக்கு வர விரும்பும் எந்த இளைஞருக்கும், பெண்ணுக்கும் தன்னம்பிக்கையும், லட்சியமும், நேர்மையும் அவசியம் தேவை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " - Page 2 Empty Re: " முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "

Post by M.M.SENTHIL Wed Aug 20, 2014 1:23 pm

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ரசாயனப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு திக்குவாய் இருந்தது. ஆனால், அவரது திக்கு வாய்ப் பேச்சு எந்த விதத்திலும் அவரது புத்திசாலித்தனத்தையும், தெளிவையும் தடுத்ததில்லை. பல தோல்வியாளர்களது வாழ்க்கையைப் பார்த்தோமானால் எங்கோ அவர்கள் வாழ்க்கை என்ற நூலை தவற விட்டிருப்பது புரியும் அல்லது எங்கோ வாழ்க்கை எனும் நூலை சிக்கலாக்கிக் கொண்டு உதவி செய்ய வந்த மனைவியுடன் கூட வாழ முடியாமல் வாழ்க்கையை ஓட்டுவர்.

மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்... " வாழ்வில் சிக்கல்கள் சகஜம், நாம் தான் சிக்கல்களைப் பொறுமையாக உட்கார்ந்து அலசி சிக்கலைப் போக்க முயல வேண்டும்! "

அண்ணாதுரை எழுதுவார்: " நான் மேஜையில் போய் இடித்துக் கொண்டேன்! " என்று சொல்ல மாட்டோம்; " மேஜை இடித்து விட்டது " என்போம்! மேஜைகளுக்கு என்ன கையா, காலா இருக்கிறது நகர்ந்து நம்மை வந்து இடிக்க... என்பார். எல்லாம் நமது மனோபாவக் கோளாறு தான். நாம் பார்க்கும் விதம், காரணம். பயம், பயத்தைத் தான் கொண்டு வரும். இன்றைய அரசியலில் நல்லதைப் பாராட்டுகின்றனரா, இல்லை கெட்டதைத் தோண்டிப் பார்த்து திட்டுகின்றனரா? என்பதை கவனித்தீர்களா? பிறரைத் தாழ்த்துவதன் மூலம் தான் பெரிய மனிதாக ஆகலாம் என நம்பி எதிரியைத் தாழ்த்த முயல்கின்றனர். இது வெற்றி பெறுவதில்லை. நம்மால் முடியும் என்று தன் வேலையை நன்றாக செய்தால், கவனித்தால் இவர்கள் வெற்றி பெறுவர்.

ஏன் இப்படி செய்கின்றனர் என்று கேட்கிறீர்களா? அறிஞர்கள் கூறுகின்றனர்... " எல்லாம் மனோபாவக் கோளாறு தான்! இயற்கையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது தான்! " என்கின்றனர்.
வாழ்வில் தோல்வி ஏற்படுவது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற, அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும். தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம் தான்! தோல்வியை வெற்றிக் கண்டது எது? விடாமுயற்சி தான்!
" தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்! " என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும், மீண்டும் முயற்சிப்பவர்கள் விதியைக்கூட வெற்றி கொள்ள முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

" தோல்வி தானே! எனக்குத் தெரியும் அதை எப்படி சமாளிப்பது என்று..." எனச் சொல்லி, தைரியத்துடன் அதை எதிர் கொள்ளலாம். சில காலகட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதில்லை. என் நண்பர் டாம், குடும்பத்துடன் இரவு விருந்துண்ணப் போனார். கடைகள் எல்லாம் மூடிவிட்டனர். சாமான் வாங்க கடைத்தெருப் பக்கம் போனார். சிலை திறப்பு விழாவில் பாதைகள் எல்லாம் திசை திருப்பி விடப்பட்டன. ரயிலேறினார்; இவர் ஏறிய ரயிலுக்கு முன் சென்ற ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால், ரயில், பாதி வழியில் நின்று போயிற்று! சில நேரம் தொடர்ந்து இப்படி நடக்கிறது. பட்ட காலிலேயே படும் அல்லவா?

ஏன் இப்படி? உலகமே நமக்கெதிராக, ஆண்டவனே நமக்கெதிராக இருக்கிறார்களா? அதெல்லாமில்லை!

மனவியல் அறிஞர் யங் சொல்கிறார்: இவையெல்லாம் அடையாளங்கள்! இவை எல்லாம் முன்னோடிகள் - வரும் நிகழ்ச்சிகளின் போக்கை தெரிவிக்கும் சூட்சுமங்கள், " மேலே செல்லுங்கள் அல்லது போகாதீர்கள்! " என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள்... இதை நாம் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! என்கிறார்.

நாம் கண்ணால் பார்க்கிற உலகம் ஒன்று. மலை, ஆறு, கடல், வீடு வாசல், மாடு, மனை என்று; மற்றொன்று, நாம் புரிந்து கொள்ள முடியாத புலனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இயங்கும் உலகம்.

இந்தப் புலனுக்கு அப்பாற்பட்ட உலகம், சில நேரம் நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது; சில காலகட்டம் ஏற்றது; சில காலகட்டம் ஏற்றதில்லை என்று. இன்று மனவியல் அறிஞர் யங் அப்படிச் சொல்வதைத் தான் அன்றே வள்ளுவர் காலமறிதல், காலமறிந்து செயல்படுதல் என்று எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " - Page 2 Empty Re: " முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "

Post by M.M.SENTHIL Wed Aug 20, 2014 1:24 pm

ஒரு பாடல் இருக்கிறது நம்பிக்கை ஊட்ட...

‘ எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எங்கு நோக்கினும் வெற்றி மற்றுஆங்கே

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி

வேண்டினேன் எனக்கு அருளினன் காளி... ’

இந்தப் பாடலில் கூறும் முக்கியமான விஷயம். ‘ எதையும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புங்கள்! ’ என்பது தான்.

‘ எதை எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம்! ’ எனும் ஜேம்ஸ் ஆலன் என்ற பெரும் ஆன்மிகவாதி கூறும் பொன்மொழி உண்டு. எதை அடிக்கடி மனதில் நினைத்து அதே நினைவாக,அதை அடைய வேண்டும் என்ற உணர்வு ரீதியாகவும் செயல் பட்டோமானால், அது நிச்சயம் நடக்கும் என்பது தான், உண்மையும் கூட.

இதுவல்லாமல் ஒரு தொழில் துவங்க இருப்பவர்களோ... ஒரு பெரிய சாதனையை செய்ய விரும்புபவர்களோ பலரும் வெற்றி பெற விரும்பினால் சிறந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக, அவர்களின் சாதனைத் திறனையும் அறிந்து கொள்வது நல்லது.

அடுத்து முன்பு அந்தத் தொழிலைச் செய்தவர் எந்தக் காரணத்தினால் தொழிலை மூட நேர்ந்தது என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் தோல்வியைத் தவிர்க்கலாம்.

பல சமயம் தொழிலிலோ, வாழ்விலோ நாம் எதிர்பாராத தோல்விகள் ஏற்படுகின்றன. ஆனால், கொஞ்சம் பொறுமையாக இருந்தால், எதை நாம் தோல்வி என்று நினைத்தோமோ, அதுவே வெற்றியாக மாற்று உருவம் எடுக்கிறது என்பதை உணர்ந்தால் வியப்போம்.

இதற்கு ஒரு காரணம் கூறுகின்றனர் மனஇயல் துறை அறிஞர்கள். நாம் எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படுகிறது. உடன் நாம் என்ன செய்வோம்? நம்முள் துக்கமும், சோர்வும், செயலற்ற தன்மையும் தான் ஏற்படும். அதாவது, ஏமாற்றத்தின் காரணமாய் செயலற்ற தன்மை தான் முதலில் ஏற்படும். மனமும் எந்தவிதமான எண்ணங்களாலும் ஆட்கொள்ளப்படாத நிலையில் வெட்ட வெளியாய் வெற்றிடமாய் உலகமே தெரியும் ஒரு நிலை.

அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம் எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம், கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான் உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர். அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துவங்குவீர்.

எடிசன் என்ற விஞ்ஞானி மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எல்லாருக்கும் தெரியும்; ஆனால், அந்த மின் விளக்கை உருவாக்க எடிசன் எத்தனை முறை முயன்று தோற்றுப் போனார் என்பது தெரியாது! நூற்றுக்கணக்கான முறை பரிசோதனை செய்து, செய்து அவர் தோற்றுப் போனார்! எப்படி வெற்றி பெற்றார்? பொறுமையால் தான்! தோல்வி அவரை அசைத்து விட வில்லை.

‘ மீண்டும் முயல்வோம். இங்கே, உள்ளே ஒரு பெரிய மதிப்பு மிக்க வைரமும், வைடூரியமும் இருக்கிறது! ’ என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். தன் லட்சியத்தை அடையும் வரை விடா முயற்சியுடன் அதை முயன்று கொண்டிருந்தார். விடா முயற்சி தான் வெற்றிக்கு வழி கோல்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்வது நல்லது.

வாழ்வில் பல முறை இப்படிப்பட்ட தோல்வியுறும் சம்பவங்கள் வருகின்றன. எனினும், நாம் அடைய வேண்டிய வெற்றி பற்றி தெளிவான, தீர்மானமான நம்பிக்கையுடன் இருப்பது நல்லது. துன்பங்களுக்குப் பின்னால் மறைமுகமாக, வெற்றியின் பாதைகள் திறக்கத் துவங்குகின்றன. ஞானிகள் இதை மிக அழகாக சொல்கின்றனர்.

‘ நல்லதை எப்படி செய்ய வேண்டும் என்பது நம்மை விட கடவுளுக்கு நன்றாகத் தெரியும்! ’ என்கின்றனர். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் உணவு அருந்தும்போது கூட இறைவன் உங்கள் மூலம் உணவு அருந்துகிறான் என்பதை நினையுங்கள்; ஏனெனில், அவன் உங்களுடன் நடக்கிறான், உங்களுடன் பேசுகிறான் என்று நினையுங்கள் என்று கூறுகின்றனர் ஞானிகள். இதைத் தொடர்ந்து முயன்றீர்களானால் ஒரு புதிய நல் உலகத்திற்கே நீங்கள் போய் விடுவீர்கள்.

எல்லாம் எண்ணங்களை சீர் செய்வதிலிருந்தும், சிந்திப்பதிலிருந்தும், நமது ஆழ்மன உணர்விலிருந்தும் துவங்குகிறது. மனவியல் பேரறிஞர் கார்லஸ் கஸ்டவ் யங் என்பவர் கூறுகிறார்: ‘ பல அடையாளங்கள் மூலம் எதிர்பாராத சம்பவங்கள் மூலம், ஒரு மாபெரும் சக்தி நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம்மை வழி நடத்திச் செல்கிறது! ’என்கிறார்.

‘ வானம் தொட்டு விடும் தூரம் தான்! ’ என்கின்றனர் நம் கவிஞர்கள். விஞ்ஞானிகளோ வான மண்டலத்தில் வசித்துவிட்டு பெருமையுடன் திரும்புவதைப் பார்க்கிறோம். ஏனெனில், வானம் தொட்டு விடும் தூரம்தான்!

- Dr.M.S.UDAYAMURTHY


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " - Page 2 Empty Re: " முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum