புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஜெயலலிதா குட்... கருணாநிதி பேட்..!” - மார்கண்டேய கட்ஜு
Page 1 of 1 •
சமீபத்திய தலைப்புச் செய்திகளின் தல... மார்க்கண்டேய கட்ஜு. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த கட்ஜு, இப்போது இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க அழுத்தம் கொடுத்ததாக இவர் கிளப்பிய புயலின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. அதற்குள் 'சம்ஸ்கிருதம்தான் இந்தியாவை இணைக்கும்’, 'திராவிடர்களும் புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான்’ என்று அதிரடிக் கருத்துகளை தினம்தோறும் கூறிவருகிறார். சென்னை வந்திருந்தவருடன் நடத்திய நீண்ட உரையாடலில் இருந்து...
''தமிழ்நாடு உங்களுடைய நான்காவது சொந்த ஊர் என்கிறீர்களே..! எப்படி?''
''நான் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் காஷ்மீர் எனது முதல் சொந்த ஊர். என் மூதாதையர்கள், மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜாவ்ராவில் அரசர் குடும்பத்தில் பணிபுரிந்தனர். அதனால் மத்தியப்பிரதேசம் எனது இரண்டாவது ஊர். நான் படித்தது முழுக்க அலகாபாத்தில். அது எனது மூன்றாவது சொந்த ஊர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டு, ஒரு வருட டிப்ளமோ படிப்பாக தமிழ் மொழியைப் படித்தேன். வட இந்தியா குறித்து ஓரளவு பரிச்சயம் இருந்ததால், தென் இந்தியா குறித்த புரிதலுக்காக தமிழ்ப் படித்தேன். பிறகு, சிதம்பரம் வந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி 'ஸ்போக்கன் தமிழ்’ படித்தேன். எழுத்துத் தமிழுக்கும், பேச்சுத் தமிழுக்கும் அதிக வித்தியாசம் இருப்பது அப்போதுதான் புரிந்தது. அந்தத் தொடர்புகளால்தான் தமிழ்நாட்டை நான்காவது சொந்த ஊர் என்றேன்!''
''சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தி.மு.க மீது நீங்கள் தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறீர்கள். என்னதான் நடந்தது?''
''நான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க முக்கியக் கூட்டணிக் கட்சியாக இருந்தது. தி.மு.க அமைச்சர்கள் என் வீட்டுக்கு நீண்ட பட்டியலுடன் வந்து பார்ப்பார்கள். அந்தப் பட்டியலில் இருப்பவர்களை நீதிபதிகளாக நியமிக்கச் சொல்வார்கள். விசாரித்தால் அந்தப் பட்டியலில் இருக்கும் பலர் நீதிமன்றத்துக்கே வராதவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு பார் கவுன்சிலில் பதிவுசெய்திருப்பதுதான் அவர்களின் தகுதி. அவர்களை நான் நீதிபதியாக நியமித்திருந்தால், சென்னை உயர் நீதிமன்றமே தி.மு.க மன்றமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், ஜெயலலிதா இதுபோல ஒருபோதும் செயல்பட்டது இல்லை!''
''நீதிபதி அசோக்குமார் பணி நியமனத்தில் தி.மு.க தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது என்பது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்ற நீதித் துறையின் புகழ்பெற்ற கூற்றுடன் இதை ஒப்பிட்டால், தாமதமாக நீங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் அத்தகையதுதானே? ஏன் இவ்வளவு தாமதம்?''
''2004 நவம்பர் முதல் 2005 அக்டோபர் வரை நான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தேன். பிறகு, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டேன். நீதிபதியாக இருக்கும்போது வெளிப்படையாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்க முடியாது. ஆகவே, அலுவல்ரீதியாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் மூலமும், நேரில் சென்றும் ஊழல் நீதிபதி குறித்து சொன்னேன். அவரும் தன்னுடைய விசாரணையில் 'இது உண்மை’ என்று சொன்னார். 'அசோக்குமார் நீதிபதியாக இருந்துகொண்டே கருணாநிதியின் காலில் விழுந்தெல்லாம் வணங்குகிறார்’ என்று எனக்குத் தகவல் வரும். இத்தனைக்கும் அசோக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. அப்படிப்பட்ட ஒருவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும், பணி நீட்டிப்பு வழங்கவும் கருணாநிதி அவ்வளவு தூரம் மெனக்கெடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.
சரி.. இதை ஏன் இப்போது சொல்கிறேன்? உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அது தொடர்பான என் அனுபவங்களையும், கருத்துகளையும் என் வலைப்பக்கத்திலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறேன். அங்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர், நான் சென்னையில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களை எழுதுமாறு கேட்டிருந்தார். அதனால் எழுதினேன்!''
''ஆனால், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் சூழலில் இதை எழுதியிருக்கிறீர்கள். 'கருணாநிதி நீதித் துறையில் செல்வாக்குச் செலுத்தினார். ஜெயலலிதா நீதித் துறையின் மாண்புகளை மதித்தார்’ என்று சொல்வதன் மூலம் மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு நற்சான்றிதழ் தந்து...''
கேள்வியை முடிக்கும் முன்பே... ''அந்த வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது!''
''சரி, தனிப்பட்ட வகையில் ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''நான் நேர்மையானவன். எந்தக் கட்சியுடனும் எனக்குத் தொடர்பு கிடையாது. நேற்று என் நண்பர் ஒரு தகவல் சொன்னார்... போலீஸ் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் எல்லோரிடமும் ஜெயலலிதா, 'அ.தி.மு.க பிரமுகர்கள் யாராவது தலையிட்டு பஞ்சாயத்து செய்ய வந்தால், உடனடியாக தனக்கு தகவல் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். இதுபோன்று சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளில் ஜெயலலிதா காட்டும் தீவிரம் எனக்குப் பிடிக்கும். ஐ ரெஸ்பெக்ட் ஜெயலலிதா. ஆனால், தவறான ஒரு நபருக்கு சிபாரிசு செய்து, 'மத்திய அரசின் ஆட்சியையே கவிழ்த்துவிடுவேன்’ என்று மிரட்டியவரைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?''
''சம்ஸ்கிருதம்தான் இந்தியாவை இணைக்கும் என்கிறீர்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் அனைத்து மொழிகளும் அந்த மாநிலத்தின் அனைத்து சாதியினராலும் பேசப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிராமணர்களால் மட்டுமே பேசப்படும் மொழியாக உள்ளது. அப்படி இருக்கும்போது சம்ஸ்கிருதம் இந்தியாவை இணைக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?''
''நடைமுறையில் சம்ஸ்கிருதம் பிராமணர்களால் பேசப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அது அவர்களுக்கு மட்டும் சொந்தமான மொழி அல்ல. சம்ஸ்கிருதம், அறிவியல்பூர்வமான ஒரு மொழி. கோயிலில் பூஜை செய்வது, மந்திரங்கள் சொல்வது இவை மட்டும்தான் சம்ஸ்கிருதம் என்று பலரும் நினைக்கின்றனர். அது வெறும் ஐந்து சதவிகிதம்தான். மீதமுள்ள 95 சதவிகித சம்ஸ்கிருதம் அறிவியல்பூர்வமானது. வானவியல், கணிதம், அறிவியல்... என்று அறிவுபூர்வமான பல அம்சங்கள் அதில் அடங்கி உள்ளன. இந்தியாவின் பல மொழிகளில் சம்ஸ்கிருதமும் கலந்துள்ளது.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற முதல் திருக்குறளில் 'அகர, ஆதி, பகவன், உலகு’ நான்கு வார்த்தைகளும் சம்ஸ்கிருதம் தான். அதற்காக மற்ற மொழிகளைக் குறைத்து மதிப்பிடுவதாக இதற்குப் பொருள் அல்ல. ஒவ்வொரு மொழிக்கும் தனித்த பாரம்பர்யமும் பண்பாடும் உள்ளன. அதை நான் மதிக்கிறேன்!''
''சமீபத்தில் மத்திய அரசு சி.பி.எஸ்.இ பள்ளிகளை சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியது குறித்து உங்கள் கருத்து என்ன?''
''அது ஒன்றும் கட்டாயம் இல்லையே... விரும்பினால் கொண்டாடலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். உங்கள் மீது ஒரு விஷயத்தைத் திணிக்காதவரை எப்படி அதைத் தவறு எனச் சொல்ல முடியும்?''
''நீங்கள் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருக்கிறீர்கள் என்ற அடிப்படையில் இந்தக் கேள்வி. ஜெயலலிதா தமிழக ஊடகங்களுக்கு எதிராக வழக்குகள் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்மீதுகூட வழக்குப் போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருட ஜெ. ஆட்சியில் ஊடகங்கள் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''இதற்கு நான் என்ன செய்ய முடியும்? அவர் என்ன பிரஸ் கவுன்சில் மீதா வழக்குப் போட்டுள்ளார்? இதுகுறித்து நீங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?''
''நரேந்திர மோடி பிரதமராக எப்படிச் செயல்படுகிறார்?''
''மோடி சர்க்கார் அதிகாரத்துக்கு வந்து வெறும் இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. குறைந்தது ஒரு வருடமாவது அவர்களுக்கு நேரம் தர வேண்டும். பிறகுதான் கருத்துக் கூற முடியும்!''
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முழுங்குராறு அம்மா பற்றி
முழங்குராறு அய்யா பற்றி
முழங்குராறு அய்யா பற்றி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ம்.. உங்களுக்கும் எங்க அம்மா பயம் இருக்கா?????????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
» வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
» முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!
» குட் நியூஸ்….பேட் நியூஸ்…!!
» வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
» முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!
» குட் நியூஸ்….பேட் நியூஸ்…!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|