புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உற்சாகம் என்னும் ஊக்கி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உற்சாகம் என்னும் ஊக்கி
வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய விஷயம் புலப்படும். அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ஊக்கியாக இருக்கும்.
அந்த ஊக்கிதான் உற்சாகம். உற்சாகமே அவர்களது உயிர்.
கடவுள் மயம்
உற்சாகம் என்பதை ஆங்கிலத்தில் ENTHUSIASM என்கிறோம்.
ENTHUSIASM என்ற ஆங்கில வார்த்தை ENTHEOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடவுள் உன்னுடன் இருக்கிறார் அல்லது 'கடவுள் மயம்' என்பதாகும்.
ஆகவே 'உற்சாகத்துடன் இயங்குகிறார்கள் வெற்றியாளர்கள்' என்று சொல்லும்போது கடவுளே அவர்களுக்கு தைரியம், செயல்படும் உத்தி, ஞானம் இன்னும் அனைத்தையும் தருகிறார் என்று ஆகிறது.
சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.
'உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள்.
வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.
நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து, பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும் அமைத்துக் கொள்ளலாம்
நார்மன் வின்சென்ட் பீல் டிக்கன்ஸின் வெற்றி
பிரபல ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதையில் வரும் நாயக, நாயகியர் இதர கதாபாத்திரங்கள் அனைவரும் தம்மைப் பிடித்து ஆட்டுவதாகவும் விரட்டுவதாகவும் கூறுவார். அவர்களைப் பேப்பரில் உரிய முறையில் ‘இறக்கி வைக்கும் வரை’ அந்தப் பாத்திரங்கள் அவரை விட மாட்டார்களாம். ஒருமுறை, ஒரு மாதம் வரை தன் அறையிலே அடைப்படுக் கிடந்து பிறகு வெளியே வந்தபோது கொலையாளி போலத் தெரிந்தாராம். அவரது பாத்திரங்கள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருந்தன!
உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.
வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய விஷயம் புலப்படும். அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ஊக்கியாக இருக்கும்.
அந்த ஊக்கிதான் உற்சாகம். உற்சாகமே அவர்களது உயிர்.
கடவுள் மயம்
உற்சாகம் என்பதை ஆங்கிலத்தில் ENTHUSIASM என்கிறோம்.
ENTHUSIASM என்ற ஆங்கில வார்த்தை ENTHEOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடவுள் உன்னுடன் இருக்கிறார் அல்லது 'கடவுள் மயம்' என்பதாகும்.
ஆகவே 'உற்சாகத்துடன் இயங்குகிறார்கள் வெற்றியாளர்கள்' என்று சொல்லும்போது கடவுளே அவர்களுக்கு தைரியம், செயல்படும் உத்தி, ஞானம் இன்னும் அனைத்தையும் தருகிறார் என்று ஆகிறது.
சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.
'உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள்.
வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.
நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து, பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும் அமைத்துக் கொள்ளலாம்
நார்மன் வின்சென்ட் பீல் டிக்கன்ஸின் வெற்றி
பிரபல ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதையில் வரும் நாயக, நாயகியர் இதர கதாபாத்திரங்கள் அனைவரும் தம்மைப் பிடித்து ஆட்டுவதாகவும் விரட்டுவதாகவும் கூறுவார். அவர்களைப் பேப்பரில் உரிய முறையில் ‘இறக்கி வைக்கும் வரை’ அந்தப் பாத்திரங்கள் அவரை விட மாட்டார்களாம். ஒருமுறை, ஒரு மாதம் வரை தன் அறையிலே அடைப்படுக் கிடந்து பிறகு வெளியே வந்தபோது கொலையாளி போலத் தெரிந்தாராம். அவரது பாத்திரங்கள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருந்தன!
உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நெப்போலியன் உற்சாகம்
ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!
"பிரெஞ்சு வீரர்கள் ஆண்மையாளர்கள் அல்ல; அவர்கள் பறந்தோடிவிடுவர்" என்றனர் ஆஸ்திரியர்கள்.
இத்தாலிப் படையெடுப்பில் முதல் பதினைந்தே நாட்களில் ஆறு பெரும் வெற்றிகளை அடைந்து 1500 பேரை சிறைக் கைதிகளாக்கி மாபெரும் வெற்றி பெற்றான் அவன்.
நெப்போலியனைப் பார்த்த ஆஸ்திரிய ஜெனரல் வியந்து கூவினான். "இந்த இளம் தலைவனுக்குப் போர்க்கலை என்றால் என்னவென்றே தெரியாது" என்று.
ஆனாலும் அந்தக் குள்ளமான தலைவனைப் பின்பற்றி உற்சாகத்துடன் நடைபோட்ட வீரருக்குத் தோல்வியும் தெரியவில்லை; இருளடைந்த எதிர்காலமும் இல்லை!
மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்
மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் வரைவதற்கு முன்னால் 12 வருட காலம் உடலியலைப் (ANATOMY) படித்தார். இதுவே அவரது ஓவியப் படைப்பை உயிருள்ளதாக்கியது. உடல் எலும்பு அமைப்பு, உடல் தசை, சதை, தோல் எனப் படிப்படியாக தனது படைப்புகளை உருவாக்க அவரது அடிப்படை உற்சாகமே காரணம். தனது வண்ணங்களைத் தாமே கலப்பது அவர் வழக்கம். வேலையாட்களையோ, தமது மாணாக்கர்களையோ வண்ணங்களைத் தொடக்கூட அவர் அனுமதிக்கவில்லை.
மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி
இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி, "ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.
"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.
"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப்போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்கவில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.
ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!
"பிரெஞ்சு வீரர்கள் ஆண்மையாளர்கள் அல்ல; அவர்கள் பறந்தோடிவிடுவர்" என்றனர் ஆஸ்திரியர்கள்.
இத்தாலிப் படையெடுப்பில் முதல் பதினைந்தே நாட்களில் ஆறு பெரும் வெற்றிகளை அடைந்து 1500 பேரை சிறைக் கைதிகளாக்கி மாபெரும் வெற்றி பெற்றான் அவன்.
நெப்போலியனைப் பார்த்த ஆஸ்திரிய ஜெனரல் வியந்து கூவினான். "இந்த இளம் தலைவனுக்குப் போர்க்கலை என்றால் என்னவென்றே தெரியாது" என்று.
ஆனாலும் அந்தக் குள்ளமான தலைவனைப் பின்பற்றி உற்சாகத்துடன் நடைபோட்ட வீரருக்குத் தோல்வியும் தெரியவில்லை; இருளடைந்த எதிர்காலமும் இல்லை!
மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்
மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் வரைவதற்கு முன்னால் 12 வருட காலம் உடலியலைப் (ANATOMY) படித்தார். இதுவே அவரது ஓவியப் படைப்பை உயிருள்ளதாக்கியது. உடல் எலும்பு அமைப்பு, உடல் தசை, சதை, தோல் எனப் படிப்படியாக தனது படைப்புகளை உருவாக்க அவரது அடிப்படை உற்சாகமே காரணம். தனது வண்ணங்களைத் தாமே கலப்பது அவர் வழக்கம். வேலையாட்களையோ, தமது மாணாக்கர்களையோ வண்ணங்களைத் தொடக்கூட அவர் அனுமதிக்கவில்லை.
மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி
இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி, "ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.
"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.
"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப்போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்கவில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இளமை உற்சாகம்
இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.
முதுமையிலும் உற்சாகம்
இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.
'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.
ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.
ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.
பிராங்க் பெட்கரின் வெற்றி
பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.
அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.
"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.
"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.
அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.
உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.
"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.
இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.
முதுமையிலும் உற்சாகம்
இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.
'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.
ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.
ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.
பிராங்க் பெட்கரின் வெற்றி
பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.
அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.
"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.
"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.
அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.
உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.
"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இருப்பது போல
"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.
உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.
ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.
உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.
தோரோ காட்டும் வழி
அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள் இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.
கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்
உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.
சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.
அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.
அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.
இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.
உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.
சிரி: உலகம் உன்னுடன் சிரிக்கும்!
உற்சாகமே உயிர் மூச்சாக இருக்கும்போது, இயல்பாகவே மகிழ்ச்சியும், மலர்ந்த முகமும் கூடவே இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உள்ள மலர்ந்த முகத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அழுமூஞ்சியாக, உலத்தின் இறுதியை அறிவிக்கும் சாகுருவியாக இருப்பவனை யார்தான் விரும்புவார்கள்?
"அழு நீ தனியாக அழுவாய்! சிரி உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும்" என்பது முதுமொழி
"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.
உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.
ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.
உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.
தோரோ காட்டும் வழி
அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள் இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.
கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்
உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.
சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.
அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.
அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.
இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.
உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.
சிரி: உலகம் உன்னுடன் சிரிக்கும்!
உற்சாகமே உயிர் மூச்சாக இருக்கும்போது, இயல்பாகவே மகிழ்ச்சியும், மலர்ந்த முகமும் கூடவே இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உள்ள மலர்ந்த முகத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அழுமூஞ்சியாக, உலத்தின் இறுதியை அறிவிக்கும் சாகுருவியாக இருப்பவனை யார்தான் விரும்புவார்கள்?
"அழு நீ தனியாக அழுவாய்! சிரி உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும்" என்பது முதுமொழி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
லிங்கனின் வழி!
"சிரிக்க மட்டும் தெரியாதிருந்தால் எப்பொழுதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி.
அவருக்கு முன்னதாகவே இதே வார்த்தைகளை "IF IT WERE NOT FOR THIS, I SHOULD DIE" என்று சிரிப்பைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சொன்னார்.
சொன்னதோடு நிற்கவில்லை, தம் வாழ்க்கை நெடுக தேசத்தைக் கஷ்டமான பாதையிலிருந்து விடுவிக்க நடத்திய பெரும் போராட்டமான நாட்களில் சிரிக்க வைக்கும் துணுக்குகளைப் பேசினார். இருள் சூழ்ந்த நேரங்களில் நகைச்சுவை மூலம் ஒளி ஏற்றினார். தனது மேஜையின் ஒரு மூலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஜோக் புத்தகம் ஒன்றை எப்போதும் அவர் வைத்திருந்தார். கோபம் வந்தாலோ, வருத்தம், துயரம் ஏற்பட்டாலோ மனச்சோர்வு ஏற்பட்டாலோ அதை எடுத்துப் படித்து வாய்விட்டுச் சிரிப்பார். பிறகு எப்போதும் போல சிரித்த முகத்துடன் வேலையை ஆரம்பிப்பார்.
கவலை அற்ற மனம்!
உலகப் பெரும் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறினான் "LIGHT HEART LIVES LONG" என்று! நமது அரச சபைகளில் அரசனின் மனோபாவத்தை சமநிலைபடுத்தவென்றே விகடகவிகள் இருந்துள்ளார்கள். அரசனின் கோபத்தை மாற்றி அவனது மனச்சோர்வை போக்கி சரியான அணுகுமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் பாங்கினில் அவனது மூளையைக் கூர்மையாக வைக்க இவர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். கோபம் நம்மைச் சிதறடிக்கிறது. மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஒரு முனைப்படுத்துகிறது. கவலை நமது மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது என விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது.
வேலையில் பாட்டு! வேலையில் பாடிக் கொண்டே இருப்பவனை தாமஸ் கார்லைல் பாராட்டுகிறார்.
"கொடுக்கப்பட்ட நேரத்தில் அவன் அதிகமாக வேலையைச் செய்வான், நேர்த்தியாகச் செய்வான், நீடித்து நிலைக்கும்படி செய்வான் என்கிறார் அவர்.
"கவலைப்படுதலே கரு நரகம்மா" என்கிறார் பாரதியார்.
ஒரு நிறுவனத்தில் நல்ல அதிகாரி எப்படி இருப்பார்?
தனது மலர்ந்த மகிழ்ச்சியான முகத்துடன் எங்கு சென்றாலும் கவலையை விரட்டி மலர்ச்சி ஊட்டுவார். மன இறுக்கத்தை, சோர்வை, கவலையைப் போக்கும் டானிக்காக இருக்கும் அவரது வருகை. அவருடன் பேசுவதே கவலை போக்கும் மருந்தாக தனி ஒரு அனுபவமாக இருக்கும்.
"சிரிக்க மட்டும் தெரியாதிருந்தால் எப்பொழுதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி.
அவருக்கு முன்னதாகவே இதே வார்த்தைகளை "IF IT WERE NOT FOR THIS, I SHOULD DIE" என்று சிரிப்பைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சொன்னார்.
சொன்னதோடு நிற்கவில்லை, தம் வாழ்க்கை நெடுக தேசத்தைக் கஷ்டமான பாதையிலிருந்து விடுவிக்க நடத்திய பெரும் போராட்டமான நாட்களில் சிரிக்க வைக்கும் துணுக்குகளைப் பேசினார். இருள் சூழ்ந்த நேரங்களில் நகைச்சுவை மூலம் ஒளி ஏற்றினார். தனது மேஜையின் ஒரு மூலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஜோக் புத்தகம் ஒன்றை எப்போதும் அவர் வைத்திருந்தார். கோபம் வந்தாலோ, வருத்தம், துயரம் ஏற்பட்டாலோ மனச்சோர்வு ஏற்பட்டாலோ அதை எடுத்துப் படித்து வாய்விட்டுச் சிரிப்பார். பிறகு எப்போதும் போல சிரித்த முகத்துடன் வேலையை ஆரம்பிப்பார்.
கவலை அற்ற மனம்!
உலகப் பெரும் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறினான் "LIGHT HEART LIVES LONG" என்று! நமது அரச சபைகளில் அரசனின் மனோபாவத்தை சமநிலைபடுத்தவென்றே விகடகவிகள் இருந்துள்ளார்கள். அரசனின் கோபத்தை மாற்றி அவனது மனச்சோர்வை போக்கி சரியான அணுகுமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் பாங்கினில் அவனது மூளையைக் கூர்மையாக வைக்க இவர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். கோபம் நம்மைச் சிதறடிக்கிறது. மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஒரு முனைப்படுத்துகிறது. கவலை நமது மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது என விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது.
வேலையில் பாட்டு! வேலையில் பாடிக் கொண்டே இருப்பவனை தாமஸ் கார்லைல் பாராட்டுகிறார்.
"கொடுக்கப்பட்ட நேரத்தில் அவன் அதிகமாக வேலையைச் செய்வான், நேர்த்தியாகச் செய்வான், நீடித்து நிலைக்கும்படி செய்வான் என்கிறார் அவர்.
"கவலைப்படுதலே கரு நரகம்மா" என்கிறார் பாரதியார்.
ஒரு நிறுவனத்தில் நல்ல அதிகாரி எப்படி இருப்பார்?
தனது மலர்ந்த மகிழ்ச்சியான முகத்துடன் எங்கு சென்றாலும் கவலையை விரட்டி மலர்ச்சி ஊட்டுவார். மன இறுக்கத்தை, சோர்வை, கவலையைப் போக்கும் டானிக்காக இருக்கும் அவரது வருகை. அவருடன் பேசுவதே கவலை போக்கும் மருந்தாக தனி ஒரு அனுபவமாக இருக்கும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சிட்னி ஸ்மித்தின் யோசனை!
சிட்னி ஸ்மித் ஒரு சிறிய யோசனையைக் கூறுகிறார். "ஒரு நாளைக்கு ஒரு மனிதரையாவது மகிழ்ச்சி அடையச் செய்வது என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்" என்பதே அது.
"பத்து வருடங்களில் 3650 பேரை நீங்கள் மகிழ்ச்சியுறச் செய்திருப்பீர்கள். அதாவது ஒரு சிறிய டவுனையே உங்கள் மகிழ்ச்சி-நிதி மூலம் ஒளியுறச் செய்திருப்பீர்கள்" என்கிறார் அவர்.
உலகின் சிறந்த சிந்தனை!
உலகின் மிகச் சிறந்த சிந்தனைக்கு 500 டாலர்கள் பரிசு அளிப்பதாக ட்வைட் எல்.மூடி என்பவர் அறிவித்தார். பரிசு பெற்ற சிந்தனை வாக்கியம் எது தெரியுமா?
"முட்களை ரோஜாக்களுடன் படைத்ததற்காகக் கடவுள் மீது மனிதன் பொருமுகிறான். ரோஜாக்களை முள்ளுடன் படைத்திருக்கிறான் என்பதால் அவனுக்கு நன்றி செலுத்துவதே சரியாக இருக்கும், இல்லையா?" என்பதே அது!
மகிழ்ச்சி என்னும் மொசைக்!
மகிழ்ச்சி பல வண்ணச் சிறு துண்டுக்கற்களால் மொசைக் போல ஆன ஒன்றாகும்.சின்னச் சின்ன அன்பான வார்த்தைகள், சிறுசிறு நல்ல செயல்கள், ஆதரவு தரும் வார்த்தை, இரக்கமூட்டும் செயல், உதவும் மனப்பான்மை, மற்றவர் மனதைப் புண்படுத்தாமை, சுயநலமின்மை, மற்றவரின் அந்தரங்கமான வாழ்க்கைப் பகுதிகளைக் குத்திக் காட்டாதிருப்பது, மற்றவரின் பலவீனங்கள் மீது இரக்கம், பரிவான பார்வை இவையே இரவைத் தொடர்ந்து வரும் பகல் போல் வாழ்க்கைத் துயரத்தை ஓட்டி மகிழ்ச்சியைத் தரும் சிறுசிறு செயல்களாகும்.
கவலையை வளர்க்காதே!
குழந்தையை வளர்ப்பதுபோலக் கவலையை வளர்க்கக் கூடாது. தொந்தரவுகளை மனதில் பத்திரமாகப் பாதுகாத்து வருவதன் மூலம் அவை பெரிதாக வளர்ந்து விடுகின்றன. (TROUBLES GROW LARGER BY NURSING) மகிழ்ச்சியான மனோபாவம் மூலம் அதை அகற்றிவிட்டால் வாழ்க்கை மூலம் இன்பம் தான்!
சிட்னி ஸ்மித் ஒரு சிறிய யோசனையைக் கூறுகிறார். "ஒரு நாளைக்கு ஒரு மனிதரையாவது மகிழ்ச்சி அடையச் செய்வது என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்" என்பதே அது.
"பத்து வருடங்களில் 3650 பேரை நீங்கள் மகிழ்ச்சியுறச் செய்திருப்பீர்கள். அதாவது ஒரு சிறிய டவுனையே உங்கள் மகிழ்ச்சி-நிதி மூலம் ஒளியுறச் செய்திருப்பீர்கள்" என்கிறார் அவர்.
உலகின் சிறந்த சிந்தனை!
உலகின் மிகச் சிறந்த சிந்தனைக்கு 500 டாலர்கள் பரிசு அளிப்பதாக ட்வைட் எல்.மூடி என்பவர் அறிவித்தார். பரிசு பெற்ற சிந்தனை வாக்கியம் எது தெரியுமா?
"முட்களை ரோஜாக்களுடன் படைத்ததற்காகக் கடவுள் மீது மனிதன் பொருமுகிறான். ரோஜாக்களை முள்ளுடன் படைத்திருக்கிறான் என்பதால் அவனுக்கு நன்றி செலுத்துவதே சரியாக இருக்கும், இல்லையா?" என்பதே அது!
மகிழ்ச்சி என்னும் மொசைக்!
மகிழ்ச்சி பல வண்ணச் சிறு துண்டுக்கற்களால் மொசைக் போல ஆன ஒன்றாகும்.சின்னச் சின்ன அன்பான வார்த்தைகள், சிறுசிறு நல்ல செயல்கள், ஆதரவு தரும் வார்த்தை, இரக்கமூட்டும் செயல், உதவும் மனப்பான்மை, மற்றவர் மனதைப் புண்படுத்தாமை, சுயநலமின்மை, மற்றவரின் அந்தரங்கமான வாழ்க்கைப் பகுதிகளைக் குத்திக் காட்டாதிருப்பது, மற்றவரின் பலவீனங்கள் மீது இரக்கம், பரிவான பார்வை இவையே இரவைத் தொடர்ந்து வரும் பகல் போல் வாழ்க்கைத் துயரத்தை ஓட்டி மகிழ்ச்சியைத் தரும் சிறுசிறு செயல்களாகும்.
கவலையை வளர்க்காதே!
குழந்தையை வளர்ப்பதுபோலக் கவலையை வளர்க்கக் கூடாது. தொந்தரவுகளை மனதில் பத்திரமாகப் பாதுகாத்து வருவதன் மூலம் அவை பெரிதாக வளர்ந்து விடுகின்றன. (TROUBLES GROW LARGER BY NURSING) மகிழ்ச்சியான மனோபாவம் மூலம் அதை அகற்றிவிட்டால் வாழ்க்கை மூலம் இன்பம் தான்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
புன்னகைக்கு ஈடேது?
நல்ல ஒரு சிரிப்பை எனக்குத் தாருங்கள் என்கிறார் சர் வால்டர் ஸ்காட். மலர்ந்த முகத்தில் தோன்றும் புன்னகைக்கு ஈடு இணை இல்லை. இதை அடிஸன் (ADDISON) என்னும் பெருமானார் அழகாகக் கூறுகிறார்: "பூக்களுக்குச் சூரிய ஒளி எப்படியோ, அப்படியே மனித குலத்திற்குப் புன்சிரிப்பாகும். புன்னகைப் பூக்கள் நிச்சயமாக சிறியவைதாம். ஆனால், வாழ்க்கைப் பாதை நெடுக அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தவாறே அவை பரப்பும் நறுமணத்திற்கு ஈடு இணை இல்லை".
அனைவரது அந்தரங்கத்தையும் தொடும் உன்னதம் புன்னகைக்கு மட்டுமே உண்டு. மலர்ச்சிப் புன்னகை உங்கள் இடரை விரட்டும், யாரோ சொல்லவில்லை இதை, உலகின் தலை சிறந்த சிந்தனைப் பெட்டகம்-வான் புகழ் வள்ளுவரே கூறி இருக்கிறார். "இடுக்கண் வருங்கால் நகுக" என்று "இடரை வெல்ல அதை ஒப்புவது வேறொன்றுமில்லை" என்பது அவர் வாக்கு. இந்த மகிழ்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதே வெற்றி பெற விரும்புவோர் செய்ய வேண்டிய அவசியக் கடமைகளில் ஒன்று.
கதேயின் கீதை!
இந்த மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?
வழி சொல்கிறான் உலகப்பெரும் கவிஞன் கதே. "ஒரு மனிதன் நிச்சயம் ஒரு நாளில் செய்ய வேண்டியது இதுதான்!
குறைந்தபட்சம் ஒரு சின்னப் பாடலையாவது கேளுங்கள். ஒரு நல்ல கவிதையையாவது படியுங்கள். அழகிய ஒரு ஓவியத்தையாவது பாருங்கள். முடியுமானால், அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு சில வார்த்தைகளைப் பேசுங்கள்" உற்சாகம், மகிழ்ச்சி, மலர்ச்சி இவையே வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய மூன்றாவது குணாதிசயமாகும்.
மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் ஒரு சிறிய இடத்தையாவது மற்றவர்கள் வாழ்வதற்காக சுமையை நீக்கி, பிரகாசமாக்கி, இதமாக்குகிறான். காலையில் அவனைப் பார்ப்பதே விஷயங்களை லேசாக்கி அன்றைய போராட்டங்களை எளிதில் எதிர்கொள்ள உத்வேக மூட்டுவதாகும்.
வேறுபடுவதைக் குறை :
நம் வாழ்நாளில் வாழ்க்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் காரியத்தைச் சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் நினைவிலிறுத்த வேண்டிய ஒன்று :
"எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றை ஆக்க ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".
நல்ல ஒரு சிரிப்பை எனக்குத் தாருங்கள் என்கிறார் சர் வால்டர் ஸ்காட். மலர்ந்த முகத்தில் தோன்றும் புன்னகைக்கு ஈடு இணை இல்லை. இதை அடிஸன் (ADDISON) என்னும் பெருமானார் அழகாகக் கூறுகிறார்: "பூக்களுக்குச் சூரிய ஒளி எப்படியோ, அப்படியே மனித குலத்திற்குப் புன்சிரிப்பாகும். புன்னகைப் பூக்கள் நிச்சயமாக சிறியவைதாம். ஆனால், வாழ்க்கைப் பாதை நெடுக அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தவாறே அவை பரப்பும் நறுமணத்திற்கு ஈடு இணை இல்லை".
அனைவரது அந்தரங்கத்தையும் தொடும் உன்னதம் புன்னகைக்கு மட்டுமே உண்டு. மலர்ச்சிப் புன்னகை உங்கள் இடரை விரட்டும், யாரோ சொல்லவில்லை இதை, உலகின் தலை சிறந்த சிந்தனைப் பெட்டகம்-வான் புகழ் வள்ளுவரே கூறி இருக்கிறார். "இடுக்கண் வருங்கால் நகுக" என்று "இடரை வெல்ல அதை ஒப்புவது வேறொன்றுமில்லை" என்பது அவர் வாக்கு. இந்த மகிழ்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதே வெற்றி பெற விரும்புவோர் செய்ய வேண்டிய அவசியக் கடமைகளில் ஒன்று.
கதேயின் கீதை!
இந்த மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?
வழி சொல்கிறான் உலகப்பெரும் கவிஞன் கதே. "ஒரு மனிதன் நிச்சயம் ஒரு நாளில் செய்ய வேண்டியது இதுதான்!
குறைந்தபட்சம் ஒரு சின்னப் பாடலையாவது கேளுங்கள். ஒரு நல்ல கவிதையையாவது படியுங்கள். அழகிய ஒரு ஓவியத்தையாவது பாருங்கள். முடியுமானால், அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு சில வார்த்தைகளைப் பேசுங்கள்" உற்சாகம், மகிழ்ச்சி, மலர்ச்சி இவையே வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய மூன்றாவது குணாதிசயமாகும்.
மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் ஒரு சிறிய இடத்தையாவது மற்றவர்கள் வாழ்வதற்காக சுமையை நீக்கி, பிரகாசமாக்கி, இதமாக்குகிறான். காலையில் அவனைப் பார்ப்பதே விஷயங்களை லேசாக்கி அன்றைய போராட்டங்களை எளிதில் எதிர்கொள்ள உத்வேக மூட்டுவதாகும்.
வேறுபடுவதைக் குறை :
நம் வாழ்நாளில் வாழ்க்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் காரியத்தைச் சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் நினைவிலிறுத்த வேண்டிய ஒன்று :
"எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றை ஆக்க ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எஃகு மன்னரின் அறிவுரை :
எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.
மின்சாரம் போன்ற சக்தி ஆளுமை :
இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.
சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.
பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, ஃபோர்க், உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.
நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.
புற அழகு அழகல்ல :
இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.
புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?
எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.
மின்சாரம் போன்ற சக்தி ஆளுமை :
இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.
சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.
பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, ஃபோர்க், உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.
நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.
புற அழகு அழகல்ல :
இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.
புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆளுமையின் அடிப்படை :
ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.
1. வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.
2. மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.
3. திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.
4. நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.
5. உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.
6. குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.
7. கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
8. மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.
9. நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.
10. நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.
11. சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.
12. முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.
13. ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.
14. உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?
15. நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.
16. கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.
17. தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.
18. பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.
19. கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.
20. பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.
21. தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.
புற அழகு இல்லாது அக அழகு வளர வளர ஆளுமையின் இனிமையும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.
ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.
1. வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.
2. மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.
3. திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.
4. நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.
5. உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.
6. குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.
7. கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
8. மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.
9. நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.
10. நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.
11. சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.
12. முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.
13. ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.
14. உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?
15. நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.
16. கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.
17. தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.
18. பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.
19. கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.
20. பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.
21. தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.
புற அழகு இல்லாது அக அழகு வளர வளர ஆளுமையின் இனிமையும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அபெல்லஸ் படைத்த ஓவியம் :
கிரேக்க நாட்டைச் சேர்ந்த அபெல்லஸ், எழில் தேவதையை ஓவியமாகத் தீட்டுமுன்னர் கிரீஸ் முழுவது பல வருடங்கள் சுற்றி அலைந்து அழகிய பெண்களை உற்றுக் கவனித்தானாம். அவர்களது எழில், நடை, உடை, பாவனை, சாயல், நளினம் இவற்றைக் கவனித்து, தான் கண்ட சிறப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து வீனஸ் தேவதைக்கு உருக்கொடுத்தானாம்!
நாகரீகமுள்ள கிரேக்கப் பெண்களின் பண்பாட்டின் வெளிப்பாடே அவன் படைத்த வீனஸ்ஓவியம் ஆயிற்று அழகுடன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை விட்டு விட்டு அகஒளியை வளர்க்கும் வழியைப் பார்த்தாலே போதும். அதற்காக ஆடை அணிகலன்கள் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. "ஆடைபாதி ஆள்பாதி" என்பது முதுமொழி. குண்டா, ஒல்லியா, உயரமா, குட்டையா, கறுப்பா, சிவப்பா, தன்னிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று இவற்றை எல்லாம் கவனித்து, உடையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அணியத்தக்க ஆடை எது என்பதை நல்ல டெய்லரோ, அழகு நிலையப் பணியாளரோ சுலபமாகக் கூறிவிடுவர்.
நாசம் விளைவிக்கும் நச்சு குணங்கள் :
நல்ல குணங்களைக் கூட்டுவதோடு, தன்னிடமுள்ள எதிர்மறைக் குணங்களைப் பட்டியலிட்டு அவற்றைக் களையவும் வேண்டும். நாசம் விளைவிக்கும் நச்சுக்களாக விளங்கும் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?
பொய் புரட்டு செய்தல், நாணயமின்மை, பேராசை, வெறுப்பு, பொறாமை, கோபம், பயம், பழிவாங்கும் மனப்பான்மை, அடுத்தவரைக் குறை கூறுதல், கிசுகிசுக்களைப் பரப்புவது, தேவையற்ற அதிக உற்சாகம், நழுவும் மனப்பான்மை, எதையும் அளவுக்கு மீறி கூட்டி உரைத்தல், தன் தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தல், நான் என்ற அகம்பாவம், வறட்டுப் பிடிவாதம், சுயநலம்.உங்களின் நல்ல பண்புகளை உங்கள் நடத்தை மூலம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், தெருவில் அண்டை அயலார், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், இவர்கள் அனைவரும் இடைவிடாது உங்களை எடைபோட்டுக் கொண்டே இருப்பதை மறக்க வேண்டாம்.
ஒவ்வொரு செய்கையும் ஒரு மனிதனின் நிழலின் நீட்டிப்பே.-எமர்ஸன்
ராணிக்கு மூடப்பட்ட கதவு :
விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. "யார் அது?" வினவினார் ஆல்பர்ட். "நாந்தான் மகாராணி வந்திருக்கிறேன்" கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. "நாந்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்" உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.
"நான்" என்ற அகம்பாவமும், பெண்மைக்கு ஒவ்வாத சொற்களும் இனிய ஆளுமைக்கு எதிரானவை.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த அபெல்லஸ், எழில் தேவதையை ஓவியமாகத் தீட்டுமுன்னர் கிரீஸ் முழுவது பல வருடங்கள் சுற்றி அலைந்து அழகிய பெண்களை உற்றுக் கவனித்தானாம். அவர்களது எழில், நடை, உடை, பாவனை, சாயல், நளினம் இவற்றைக் கவனித்து, தான் கண்ட சிறப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து வீனஸ் தேவதைக்கு உருக்கொடுத்தானாம்!
நாகரீகமுள்ள கிரேக்கப் பெண்களின் பண்பாட்டின் வெளிப்பாடே அவன் படைத்த வீனஸ்ஓவியம் ஆயிற்று அழகுடன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை விட்டு விட்டு அகஒளியை வளர்க்கும் வழியைப் பார்த்தாலே போதும். அதற்காக ஆடை அணிகலன்கள் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. "ஆடைபாதி ஆள்பாதி" என்பது முதுமொழி. குண்டா, ஒல்லியா, உயரமா, குட்டையா, கறுப்பா, சிவப்பா, தன்னிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று இவற்றை எல்லாம் கவனித்து, உடையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அணியத்தக்க ஆடை எது என்பதை நல்ல டெய்லரோ, அழகு நிலையப் பணியாளரோ சுலபமாகக் கூறிவிடுவர்.
நாசம் விளைவிக்கும் நச்சு குணங்கள் :
நல்ல குணங்களைக் கூட்டுவதோடு, தன்னிடமுள்ள எதிர்மறைக் குணங்களைப் பட்டியலிட்டு அவற்றைக் களையவும் வேண்டும். நாசம் விளைவிக்கும் நச்சுக்களாக விளங்கும் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?
பொய் புரட்டு செய்தல், நாணயமின்மை, பேராசை, வெறுப்பு, பொறாமை, கோபம், பயம், பழிவாங்கும் மனப்பான்மை, அடுத்தவரைக் குறை கூறுதல், கிசுகிசுக்களைப் பரப்புவது, தேவையற்ற அதிக உற்சாகம், நழுவும் மனப்பான்மை, எதையும் அளவுக்கு மீறி கூட்டி உரைத்தல், தன் தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தல், நான் என்ற அகம்பாவம், வறட்டுப் பிடிவாதம், சுயநலம்.உங்களின் நல்ல பண்புகளை உங்கள் நடத்தை மூலம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், தெருவில் அண்டை அயலார், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், இவர்கள் அனைவரும் இடைவிடாது உங்களை எடைபோட்டுக் கொண்டே இருப்பதை மறக்க வேண்டாம்.
ஒவ்வொரு செய்கையும் ஒரு மனிதனின் நிழலின் நீட்டிப்பே.-எமர்ஸன்
ராணிக்கு மூடப்பட்ட கதவு :
விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. "யார் அது?" வினவினார் ஆல்பர்ட். "நாந்தான் மகாராணி வந்திருக்கிறேன்" கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. "நாந்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்" உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.
"நான்" என்ற அகம்பாவமும், பெண்மைக்கு ஒவ்வாத சொற்களும் இனிய ஆளுமைக்கு எதிரானவை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|