புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_m10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_m10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_m10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_m10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_m10பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 18 Aug 2014 - 19:07

பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! 201408172001419127_Prime-MinisterIt-is-notPrimeWORKER_SECVPF 1947–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் ஆகும். மக்களால், மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி இந்தியாவில் நடைபெறுகிறது. ஜனநாயகத்துக்கு இந்தியாதான் உலகுக்கே வழிகாட்டுகிறது. அந்த வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தை நடத்தும் பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். இது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சம்பிரதாயம் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத்தினத்தன்று பிரதமர் என்ன உரையாற்றுகிறார்?, அவர் தனது உரையில் கோடிட்டுக்காட்டும் கோட்பாடுகள் என்ன? என்பதை நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலகமே உன்னிப்பாக கவனிக்கும். அந்த வகையில், கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி இந்த ஆண்டு சுதந்திரத்தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

இவர் இதுவரையில் உரையாற்றிய பிரதமரிலேயே வித்தியாசமான பின்னணியை கொண்டவர். இதுவரையுள்ள பிரதமர்கள் எல்லாம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிறந்தவர்கள். இவர்தான் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர். டெல்லிக்கு புதியவர். இவர் என்னப்பேசப்போகிறாரோ? என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. நரேந்திரமோடியும் உரையாற்றவரும் போதே மிக வித்தியாசமான முறையில் தான்வந்தார். அவரது வழக்கமான உடையிலேயே வந்த அவர், தலையில் விவேகானந்தர்போல தலைப்பாகையோடே வந்தார். இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் வந்திருந்த இந்த சுதந்திரதினவிழா கொண்டாட்டத்தில், அவரது தோற்றமே ஆச்சரியத்தை அளித்தது. பொதுவாக பிரதமர்கள் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்துதான் மக்கள் முன் உரையாற்றுவார்கள். ஆனால், எல்லோரையும்விட அதிக அச்சுறுத்தல் உள்ள நரேந்திரமோடி, குண்டு துளைக்காத மேடையே வேண்டாம் என்று சொல்லி, சாதாரணமாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசினார். வழக்கமாக பிரதமர்கள் சுதந்திரதின உரையாற்றும்போது, ஏற்கனவே தயாரித்து கொண்டுவந்த உரையைத்தான் ஆற்றுவார்கள். ஆனால், நரேந்திரமோடி எந்தவித தயாரிப்பும் இல்லாமல், சர்வசாதாரணமாக 65 நிமிடம் பேசினார். பொதுவாக பிரதமர்கள் சுதந்திரதின உரையாற்றும்போது, அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், நரேந்திரமோடியின் உரையோ மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. பொதுமக்கள் மாற்றிக்கொள்ளவேண்டிய மனப்பான்மைகளையும், அவர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் விளக்கிக்கூறி, நாட்டையே உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.

சுதந்திர தினவிழா என்பது தேசிய திருவிழா. தேசத்தின் செயல்பாட்டை மாற்றி அமைப்பதற்காகவும், சுத்திகரிப்பதற்காகவும் நாட்டு மக்கள் அனைவரும் நம்மை அர்ப்பணிக்கவும், நம் ஒவ்வொரு செயலும், நாட்டின் நலனுக்காக மட்டுமே இருக்கவேண்டும் என்றும் இந்த தேசிய திருவிழாவில் உறுதிஎடுப்போம் என்று கூறி, தனது உரையை தொடங்கியது, மிகவும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருந்தது. இந்த சுதந்திரதின விழாவுக்காக, ‘பிரதான் மந்திரி ஜன–தான யோஜனா’ என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு மொபைல் போன் இருக்கிறது. ஆனால், வங்கிக் கணக்கு இல்லை என்று கூறிய அவர், அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். எதிர்காலத்தில் செல்போன் மூலமே அனைத்து அரசு சேவைகள், வங்கிச்சேவைகளை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி, ‘டிஜிட்டல்’ இந்தியாவை உருவாக்கப்போகும் தொலைநோக்கு பார்வையை காட்டிவிட்டார். எல்லாவற்றுக்கும்மேலாக, உழைப்பின் மேன்மையையே இறுதியாகக்கூறி முடித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் 12 மணி நேரம் உழைத்தால், நான் 13 மணி நேரம் உழைப்பேன். அவர்கள் 13 மணி நேரம் உழைத்தால், நான் 14 மணி நேரம் உழைப்பேன். ஏனெனில், நான் பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர் என்று கூறி, இந்த சுதந்திரதின உரையை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் உரையாக, மக்களும், அரசும் கைகோர்த்து பணியாற்றவேண்டிய அவசியத்தை தெரிவிக்கும் உரையாக மாற்றிவிட்டார்.

தினத்தந்தி



பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Aug 2014 - 21:37

ம்....நானும் படித்தேன், இவராவது மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர் பார்க்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Aug 2014 - 21:56

மக்களை சோம்பேறியாக்கும் விலையில்லா
இலவசங்களை ஒழித்துக்கட்ட ஏதேனும்
செய்ய வேண்டும்...!
-
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விலை
கொடுத்து வாங்கும் சக்தியை ஏற்படுத்த வேண்டும்..
-
நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 18 Aug 2014 - 23:58

ayyasamy ram wrote:மக்களை சோம்பேறியாக்கும் விலையில்லா
இலவசங்களை ஒழித்துக்கட்ட ஏதேனும்
செய்ய வேண்டும்...!
-
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விலை
கொடுத்து வாங்கும் சக்தியை ஏற்படுத்த வேண்டும்..
-
நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது...


சரியாகக் கூறியுள்ளீர்கள்!  சூப்பருங்க 



பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 19 Aug 2014 - 0:02

நல்லது நடப்பின் இந்தியா மிளிரும், அப்போது இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 19 Aug 2014 - 0:25

செயலிலும் தொடர வேண்டும் இந்த உத்வேகம்!

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சுதந்திர தின உரை வெற்று ஆர்ப்பாட்டம், வார்த்தை ஜாலங்கள் ஏதும் இல்லாமல் மனம் திறந்த பேச்சாகத்தான் இருந்தது.

பெரிய நம்பிக்கைப் பட்டியலையும், அதிரடி மாற்றங்களையும் முன்வைத்திருக்கிறார் மோடி. மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் அறிவித்திருப்பது யாரும் எதிர்பாராதது. மேலும், மின்னணுவியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இறக்குமதியை நம்பியிருக்காமல், உள்நாட்டிலேயே தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஏழைகள், வங்கியில் கணக்கு தொடங்க ஊக்குவிப்பாகக் கடன் அட்டையும், ஒரு லட்ச ரூபாய்க்கு இலவசக் காப்பீடும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை நிச்சயம் பாராட்டலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு, இளைஞர்கள் திறன்மேம்பாட்டுத் திட்டங்கள் என்று மோடியின் பட்டியல் நீள்கிறது.

பெண் சிசுக் கொலைக்கு எதிராகப் பேசியது, இன்னும் ஓராண்டுக்குள் எல்லாப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கென்று தனிக் கழிப்பறை ஏற்படுத்தப்படும் என்றும், எல்லாக் கிராமங்களிலும் கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்றும் உறுதியளித்தது பிரதமர் உரையின் மிக முக்கியமான அம்சங்கள்! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்கள் மீதே குற்றச்சாட்டுகளைத் திருப்பிவிடுவதை விட்டுவிட்டு, அப்படிப்பட்ட குற்றங்களை இழைக்காத வகையில், உங்கள் வீட்டுப் பிள்ளைகளை வளருங்கள் என்று மோடி பேசியதை நிச்சயம் வரவேற்க வேண்டும்.

‘இந்தியாவிலேயே தயாரித்தது’ என்று பெருமையோடு சொல்லும் வகையில் நல்ல தரத்தில் பொருள்களைத் தயாரிக்க உற்பத்தியாளர்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது என்றும் மோடி வலியுறுத்தியிருக்கிறார். மக்களவையிலும் மாநிலங் களவையிலும் ஒத்துழைப்பு தந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், பெரும்பான்மை வலுவால் அல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு நாட்டை முன்னெடுத்துச் செல்லவே விரும்புவதாகக் கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஆக்கபூர்வமான எதிர்த்தரப்பு ஒன்று மக்களவையில் உருவாவதையும் மோடி அரசு ஆதரித்தால் நன்றாக இருக்கும்.

மத்திய அரசில் கோலோச்சிக்கொண்டிருந்த ஏராளமான குழுக் களையும் உயர் அதிகார அமைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மோடி கலைத்துவருகிறார். அதிகார மட்டத்தின் தேவையற்ற கெடு பிடிகள், ஊழல் போன்றவற்றையே கண்டு சலித்திருந்த மக்களுக்கு இது நல்ல செய்திதான். ஆனால், அதிகாரங்கள் வேறு எங்கும் மொத்தமாகக் குவிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் சுதந்திர தின உரைக்கும் இடையே சில மாற்றங்களைக் காண முடிகிறது. சாதி மோதல்களும் மதக் கலவரங்களும் வளர்ச்சிக்குப் பெரும் தடைக்கற்கள் என்று மோடி பேசியிருக்கிறார். எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவையும் அவர் முன்மொழிந்திருக்கிறார்.

ஆக்கபூர்வமான உணர்வலைகளோடு மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது. வெறும் உரையோடு நின்றுவிடாமல், இந்த உத்வேகத்தைச் செயலிலும் தொடர்ந்து காட்ட வேண்டும். இந்தியா உங்களிடமிருந்து அதைத்தான் எதிர்பார்க்கிறது பிரதமர் மோடி அவர்களே!

தி இந்து தலையங்கம்



பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக