ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by சிவா Mon Aug 18, 2014 11:19 pm

பாகிஸ்தானுடனான வெளியுறவுச் செயலர் மட்ட பேச்சு வார்த்தைகள் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாத சக்திகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து பேச்சு வார்த்தைகளினால் எந்த வித பயனும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறுகையில், "வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், பாகிஸ்தான் இந்தியாவா, பிரிவினைவாதிகளா என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிய பிறகும், பாகிஸ்தான் தூதர் பிரிவினை வாதிகளைச் சந்தித்துப் பேசியது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே இத்தகைய சூழ்நிலைகளில் இஸ்லாமாபாத்திற்கு அடுத்த வாரத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் செல்வது எந்த வித நோக்கத்தையும் நிறைவேற்றப் போவதில்லை.

பாகிஸ்தான் தூதரிடன் வெளியுறவுச் செயலர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் பாகிஸ்தான் தலையிடுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் தூதர் ஹுரியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது, பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுடனான நல்லுறவுகளுக்கு எடுக்கும் முயற்சிகளை விரயம் செய்வதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.


Last edited by சிவா on Mon Aug 18, 2014 11:22 pm; edited 1 time in total


பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty Re: பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by சிவா Mon Aug 18, 2014 11:21 pm

இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பின்னடைவை ஏற்படுத்தும்: பாகிஸ்தான்

பாகிஸ்தானுடன் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பின்னடைவை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஷ்மீர் பிரச்சினை, எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளருடன் வரும் 25-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாலும், பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்ததாலும் தான் இந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அந்நாட்டு பிரதமரான நவாஸ் ஷெரிப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியாவின் இம்முடிவு அம்முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

[note]தினமும் எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திக் கொண்டிருக்கும் இவர்களுடன் எந்த உறவை வைத்துக் கொள்வது![/note]


பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty Re: பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by சிவா Mon Aug 18, 2014 11:23 pm

தெளிவற்ற வெளியுறவுக் கொள்கை: மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தெளிவற்ற மற்றும் வெளிப்படையற்ற வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய மத்திய அரசு, பாகிஸ்தான் அரசுடனான வெளியுறவுத் துறை செயலர் அளவிலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை அரசு ரத்து செய்தது நாடகம் என்று கூற மாட்டேன். எனினும் தீவிரவாதத்தற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தரப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாதபோது, பேச்சுவார்த்தை ஏன் தொடங்கப்பட்டது? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

தொடர்ந்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குவது, மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சயீத்தை ஆதரிப்பது போன்ற ஆத்திரமூட்டும் செயல் தொடரும் சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மோடியை தூண்டியது எது?

பாகிஸ்தான் விஷயத்தில் மத்திய அரசு தெளிவற்ற மற்றும் வெளிப்படையற்ற வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. நாட்டு மக்களுக்கு குழப்பமான தகவல்களை அனுப்பியிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty Re: பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by சிவா Mon Aug 18, 2014 11:24 pm

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் - ஜெட்லி

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லையில் உள்ள இந்திய ராணுவம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று மட்டும் 20 இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று மத்திய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரஸ் எல்லைக்கோடு அருகே சென்று பார்வையிட்டார். தேரா பாபா நானக் அருகே ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்பின், இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் எந்தவித தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் மட்டும் 11 தடவை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty Re: பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by சிவா Tue Aug 19, 2014 9:02 pm

பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது சிறுபிள்ளைத்தனம்: கிலானி

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்தது சிறுபிள்ளைத்தனமானது என்று ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் கிலானி கூறினார்.

பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது போன்ற காரணங்களால் கடும் அதிருப்தியடைந்த மத்திய அரசு, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி, இன்று டெல்லியில் பாகிஸ்தான் தூதர் பாசித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் கடும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த சந்திப்பு சிறிது நேரம் நடந்தது.

முன்னதாக நிருபர்களை சந்தித்த கிலானி, இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், குழந்தைத் தனமாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார். இந்தியாவும் பாகிஸ்தானும் சமரசமாக பேசி தீர்க்காவிட்டால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்பாது என்றும் அவர் தெரிவித்தார்.


பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty Re: பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by சிவா Thu Aug 21, 2014 1:31 am

இந்தியாவுடன் உறவை பலப்படுத்த பாகிஸ்தான் உறுதியாக உள்ளது: பாகிஸ்தான் தூதர்

புதுடெல்லி: இந்தியாவுடனான உறவை பலப்படுத்த பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளதாகவும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதே பாகிஸ்தானின் கொள்கை என்றும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இம்மாதம் 25 ஆம் தேதியன்று நடைபெற இருந்த வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில்,
காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் தலைவர்களை நேரில் அழைத்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் பேச்சு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது," அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. தீவிரவாதத்தை துடைத்தெறியும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதத்தால் இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. தீவிரவாதத்துக்கு இதுவரை 15 ஆயிரம் பேரை பாகிஸ்தான் பலி கொடுத்துள்ளது.

அமைதியை நிலைப்படுத்துவதில் பாகிஸ்தானில் கருத்தொற்றுமை நிலவுகிறது. மோதல் போக்கை விட்டுவிட்டு இரு நாடுகள் இணைந்து செயல்படவேண்டும். இந்தியாவுடனான பிரச்னைகள் ஆக்கப்பூர்வமான பிரச்னைகள் மூலம் தீர்க்கப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்பட்டால் வானமே எல்லையாக இருக்கும். சமாதானத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் பிரதமர் உறுதி பூண்டுள்ளார். பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. சமாதானத்தை ஏற்படுத்த எந்த உறவையும் தவற விட மாட்டோம். ஜம்மு காஷ்மீர் பிரச்னை இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னை. இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் சிக்கலான உறவுகளை கொண்டுள்ளது. காஷ்மீரின் ஹூரியத் தலைவர்களை பல ஆண்டுகளாக சந்தித்து வருகிறோம். இரு நாட்டு செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதால், அனைத்து விவகாரங்கள் மீதான பேச்சுவார்த்தையும் தடைபட்டதாக ஆகாது.

பல்வேறு விவகாரங்களை சுமூகமாகத் தீர்க்க பாகிஸ்தானுடன் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் வானமே எல்லையாக இருக்கும்.

தெற்கு ஆசிய நாடுகளில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. சிக்கலான இந்தியாவுடனான உறவை பலப்படுத்தவே பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது" என்றார்.


பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Empty Re: பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேச்சு வார்த்தை தோல்வி! புதுவை ரங்கசாமி ராஜினாமா
» அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
» மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும்: கருணாநிதி பேச்சு
» கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!
» இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum