Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
+2
ராஜா
சிவா
6 posters
Page 1 of 1
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருக்கிறது. கதையைத் தேடுவதையே ஒரு படமாக எடுத்து, கலைடாஸ்கோப்பை உருட்டி விளையாடியிருக்கிறார் பார்த்திபன். அதில் நறுக், சுருக், நக்கல், நையாண்டி என எல்லாவற்றையும் கலந்து கட்டி, பிலிம் ரோல்களாலேயே ஒரு தோரணம் கட்டியிருக்கிறார்.
உலகப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டுச் சலித்துவிட்டதாலோ என்னவோ, சினிமா எடுப்பவர்கள் தங்களின் சிக்கல்களையே படமாக எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியான ஜிகர்தண்டா, சினேகாவின் காதலர்கள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய மூன்று படங்களிலுமே திரையுலகம் முக்கிய களமாய் இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் புதுமுக இயக்குநர், ஒரு ரவுடியின் கதையைப் படமாக எடுப்பது கதை என்றால், முத்துராமலிங்கனின் சினேகாவின் காதலர்களில் கதாநாயகியின் மூன்று காதலர்களில் ஒருவராக வருபவர், பட வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர். இப்போது பார்த்திபனின் க.தி.வ.இ. படத்திலும் முதல் வாய்ப்பினைத் தேடும் இயக்குநர் ஒருவரே கதாநாயகன்.
இந்த இயக்குநர் சந்தோஷ், தன் உதவி இயக்குநர்களுடன் கதை விவாதம் நிகழ்த்துவதும் கதையை உருவாக்குவதும் தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்வதும் அதைத் தயாரிப்பாளர் ஏற்றாரா என்பதும்தான் இப்படத்தின் முக்கிய கதை. ஆனால், இயக்குநரின் காதல் மனைவி, உதவி இயக்குநர்கள் சொல்லும் காட்சிகள், எதிர்வீட்டுப் பெண்ணின் காதல் தூது, மர்மமாய் நிகழும் ஒரு கொலை, திரைப்படத்துக்குள் எடுக்கப்படும் இன்னொரு திரைப்படம்.... எனப் பல துணைக் கதைகள், இந்தப் படத்தில் உண்டு.
திரையுலகை உள்ளது உள்ளபடி காட்ட முயல்வது, அதன் மீது பல்வேறு விமர்சனங்களைப் பலர் வாயிலாக முன்வைப்பது, அதன் நம்பிக்கைகள் பலவற்றை உடைப்பது எனப் பல கோணங்களில் பார்த்திபன் பயணிக்கிறார்.
முதல் பாதியில் திரைப்படத்தில் பல முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே போய், அடுத்த பாதியில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக்கொண்டே வருவதை, திரைப்படத்தின் இலக்கணங்களில் ஒன்றாக இப்படத்தில் முன்வைக்கிறார்கள். அடுத்த காட்சி என்னவென்று தெரியாத வகையில் டுவிஸ்ட் (Twist), திடீர் திருப்பம், முடிச்சு ஆகியவை அமைய வேண்டும். அவை முன்கூட்டியே தெரிந்துவிட்டால், படம் ஓடாது, ரசிகர்களைக் கவராது என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை. ஆனால், அதைப் பார்த்திபன் நம்பவில்லை.
இந்தப் பாத்திரம், அடுத்து இப்படித்தான் ஆகப் போகிறது என முன்கூட்டியே காட்டிவிட்டுக் கதையை நகர்த்துகிறார். சில பாத்திரங்களின் உள்ளுணர்வை (Intuition) இதற்கு அவர் பயன்படுத்துகிறார். ஆனால், எல்லா உள்ளுணர்வுகளும் அப்படியே பலிக்காது. அதற்கான வாய்ப்பு 50 - 50 என்றும் சொல்கிறார். ஆக, அந்த உள்ளுணர்வு பலிக்குமா, பலிக்காதா என்பதே இயக்குநர் வைக்கும் மர்ம முடிச்சு. இது, ஒரு பலவீனமான புள்ளி என்றாலும் வசனங்களின் மூலம் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்திருக்கும் பெண், "இது கொய்த பழம் தான்; கொய்யாப் பழம், மரத்தில் தானே இருக்கும்" என்கிறார். எதிர்வீட்டில் இருந்தபடி ஒருதலையாய்க் காதலிக்கும் பெண், நாயகனிடம் வந்து, "நீ அழிப்பாய் என்று எதிர்பார்த்து இன்று லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வந்திருக்கேன்" என்கிறார். அவரது காதல் கடிதத்தில் 'இறுமாப்பு' என்ற வார்த்தையை 'இரு மாராப்பு' எனத் தவறாகப் படிக்கிறார் நாயகன். இப்படியாக, படம் முழுதும் வசனங்களில் பார்த்திபன் ஒரு வாண வேடிக்கையே நடத்தியிருக்கிறார்.
பார்த்திபனுக்கு அடுத்தபடியாக, தம்பி ராமையா இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். இரண்டு மனைவிகளைக் கொண்ட உதவி இயக்குநராய், 58 வயதிலும் திரைத் துறையை நம்பிக் காத்திருக்கும் அவர், குணச்சித்திரத்திலும் நகைச்சுவையிலும் அசத்தியிருக்கிறார்.
தாலி என்பது என்னவென்றே ஒருவருக்குத் தெரியாது என்று சின்னத்தம்பியில் பி.வாசு காட்டியதும் ஒரு ஈ பழி வாங்கும் என ராஜமவுலி நான் ஈ படத்தில் காட்டியிருப்பதும் உலகில் இல்லாத மிருகத்தை இருப்பதாக நம்ப வைத்து ஸ்பீல்பர்க் ஜூராசிக் பார்க் படத்தை வெற்றிப் படமாக எடுத்ததும் என இயக்குநர்களின் திறமைக்கு உதாரணங்களாக அவர் எடுத்து வைக்கும் உதாரணங்கள் ரசிக்கும்படி உள்ளன.
அது போலவே, தேவர் பிலிம்ஸ் உள்பட, பழைய கிளாஸிக் படங்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டும் ஒவ்வொன்றும் மிக அருமை. இன்றைய தலைமுறையினருக்கு அவற்றுள் பலவும் புதுமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
படம் எப்படி இருக்க வேண்டும் என இந்தப் படத்தில் பலரிடமும் கருத்துக் கேட்டுள்ளது, நல்ல முயற்சி. மக்களின் பல வகையான எதிர்பார்ப்புகளை இதன் மூலம் வெளிப்படுத்திய இயக்குநர், வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் திரைத் துறையை விமர்சிக்கிறார். "படத்தைப் பார்க்காமலேயே வெளியிட்டுருவீங்களா? அப்புறம் ஏன் இவ்வளவு மோசமா இருக்குது?" என்ற விமர்சனம் அதில் ஒன்று.
படத்தில் வாய்ப்பு தேடும் இயக்குநரின் மனைவியாக நடித்திருக்கும் அகிலா கிஷோரும் அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் சுசித்ராவும் மனத்தில் பதிகிறார்கள். அகிலா தான் வேலைக்குச் சென்று, கணவரின் கனவு நிறைவேற உதவுகிறார். ஆனால், தன் பிரைவஸி போய்விட்டதாகப் பின்னர் சண்டை போடுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவர் பளிச்சென்று கவர்கிறார். அவரது பாதத்தைக் கணவரான இயக்குநர் பிடித்துவிடும்போது, "இதுதான் டைரக்டர் டச்சா?" எனக் கேட்பது 'டைமிங்' வசனம்.
இயக்குநராக நடித்திருக்கும் சந்தோஷூக்கு மலையாள முகவெட்டு. கதாநாயகனாக அளவோடு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு, பளிச். கலை, வளமாக உள்ளது. பின்னணி இசை நன்று. படத்தில் ஆர்யா, அமலாபால் தொடங்கி, மிகப் பெரிய எண்ணிக்கையில் நட்சத்திரப் பட்டாளமே கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறது.
படத்தின் இறுதியில், 'அடுத்த சீன் என்னவென்று தெரிந்துவிட்டால் வாழ்க்கையே போருடா' என ஒரு பாடல் வரி வருகிறது. ஆனால், இந்தப் படத்தில் இடையிடையே உள்ளுணர்வு மூலமாகப் பல காட்சிகளை இயக்குநர் முன்கூட்டியே காட்டுகிறார். இது ஒரு சிறிய முரண் என்றாலும், இதற்குக் காரணங்கள் வெவ்வேறு.
பார்த்திபன், ஒரு புதுமைப் பித்தன். படம் பார்த்த பிறகு நீங்கள் உணரப் போவது புதுமையா? பித்து நிலையா? என்று கேட்டால், அதற்கும் பதில் 50 - 50 தான்.
[thanks]வெப்துனியா[/thanks]
Last edited by சிவா on Mon Aug 18, 2014 5:29 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் இந்த படத்தின் வசனங்கள் நன்றாக இருக்கிறது
Re: கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
திரையரங்கில் தேம்பி அழுத தருணம்: இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகரக்ள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தனது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை திரையரங்கு சென்று பார்த்த இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், "சத்தியமாக இவ்வவு பெரிய வெற்றி காண.. காத்திருந்த காலத்தின் எடை, கண்களை அழுத்த சுமை தாளாமல் கீழிமை கிழிந்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் முதல் காட்சி போல் என்னை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டது. கைதட்டல் விசிலில் அரங்கம் அதிரும் போது சின்னப் பிள்ளையாய் தேம்பியது, யாருக்கும் தெரிந்துவிடாதிருக்க ஏற்கனவே நனைந்த கைகுட்டையும் கைவிரித்தது. அந்நேரமும் என் மானம் காக்க கீர்த்தனா தான் வந்தார். கட்டிப் பிடித்து அவர் கன்னம் நிறைத்து நனைத்தேன்.
நினைக்கலாம் நீங்கள்.. அப்படியென்னா? பொல்லாத பொடலங்கா படம் என்று. கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு new wave பிலிம். முற்றிலும் புது முயற்சி. ரசிகர்களின் ரசனை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பி, முதன்முறையாக ரசிகனுக்கும் திரைக்குமான இடைவெளியை வெகுவாக விலக்கி எடுக்கப்பட்ட படம். இவ்வெற்றி எனதல்ல நமது!
தயவு செய்து (திருட்டு VDC போன்ற) களவு முறைகளை கையாளமால் திரையில் பார்த்து என்னை இன்னும் உயரம் அழைத்து சொல்லுங்கள்.. நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
இயக்குநர் பார்த்திபனின் இந்த நிலைத்தகவல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பங்களைக் குவித்தது கவனிக்கத்தக்கது.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகரக்ள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தனது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை திரையரங்கு சென்று பார்த்த இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், "சத்தியமாக இவ்வவு பெரிய வெற்றி காண.. காத்திருந்த காலத்தின் எடை, கண்களை அழுத்த சுமை தாளாமல் கீழிமை கிழிந்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் முதல் காட்சி போல் என்னை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டது. கைதட்டல் விசிலில் அரங்கம் அதிரும் போது சின்னப் பிள்ளையாய் தேம்பியது, யாருக்கும் தெரிந்துவிடாதிருக்க ஏற்கனவே நனைந்த கைகுட்டையும் கைவிரித்தது. அந்நேரமும் என் மானம் காக்க கீர்த்தனா தான் வந்தார். கட்டிப் பிடித்து அவர் கன்னம் நிறைத்து நனைத்தேன்.
நினைக்கலாம் நீங்கள்.. அப்படியென்னா? பொல்லாத பொடலங்கா படம் என்று. கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு new wave பிலிம். முற்றிலும் புது முயற்சி. ரசிகர்களின் ரசனை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பி, முதன்முறையாக ரசிகனுக்கும் திரைக்குமான இடைவெளியை வெகுவாக விலக்கி எடுக்கப்பட்ட படம். இவ்வெற்றி எனதல்ல நமது!
தயவு செய்து (திருட்டு VDC போன்ற) களவு முறைகளை கையாளமால் திரையில் பார்த்து என்னை இன்னும் உயரம் அழைத்து சொல்லுங்கள்.. நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
இயக்குநர் பார்த்திபனின் இந்த நிலைத்தகவல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பங்களைக் குவித்தது கவனிக்கத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
வித்தியாச முயற்சி வெற்றி பெற வேண்டும்.. அதுவும், பார்த்திபன் போன்ற புதுமைவாதிகள் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். வாழ்த்துக்கள்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள்.
படம் பார்க்கவேண்டும்.
படம் பார்க்கவேண்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
பார்திபன் -
புதுமை உங்களுக்கு புதியது அல்லவே .
அமைத்த புதிய பாதை , உங்களுக்கு புதிய பாதை அல்லவே .
ரமணியன்
புதுமை உங்களுக்கு புதியது அல்லவே .
அமைத்த புதிய பாதை , உங்களுக்கு புதிய பாதை அல்லவே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
» அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» திரை விமர்சனம்: ஜோ
» அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» திரை விமர்சனம்: ஜோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|