ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் கருணை!

Go down

கண்ணன் கருணை! Empty கண்ணன் கருணை!

Post by krishnaamma Sun Aug 17, 2014 8:40 pm

கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், 'நான்' எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், 'கடவுளுக்கு கண்ணில்லை...' என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் திருவருளை மறக்காத பக்தர் ஒருவருக்கு, கண்ணன் அருளிய கதை இது.

கண்ணன் கருணை! Msp21ZItQbagl87lVIp4+image-1371733830_lord_krishna_wallpaper_hd

'நாராயணீயம்' பாடிய மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, 'ஞானப்பானை' என்ற நூலை எழுதிய பூந்தானம், 'கிருஷ்ண கர்ணாம்ருதம்' பாடிய வில்வமங்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், அத்யாச்ரமி என்ற மகான் வாழ்ந்து வந்தார்.இவர் பலகாலமாக குருவாயூரப்பன் சன்னிதியில், ஸ்ரீமத் பாகவத பாராயணம் மற்றும் நாராயண நாம சங்கீர்த்தனம் செய்து, தொண்டுகள் செய்து வந்தார். ஆனாலும், காலகிரமத்தில், அவரைக் குஷ்டநோய் பாதித்தது.ஊரார் அதையும் குத்தலாக, 'நாம ஜபம் செய்யறேன்னு இந்தப் பாவி என்னவெல்லாம் செய்தானோ... அது தான் இப்படி நோய் வந்து அவதிப்படுறான்...' என்று ஏசினர்.

ஆனால், அத்யாச்ரமியோ, 'குருவாயூரப்பன் ஏதோ அனுக்கிரகத்திற்காகவே நமக்கு இந்த நோயைத் தந்திருக்கிறார்...' என்று நினைத்தார். ஆனாலும், 'இந்நோயுடன் இங்கு இருப்பது சரியல்ல...' எனத் தீர்மானித்து, குருவாயூரில் இருந்து புறப்பட்டு, நாம சங்கீர்த்தனம் பாடியபடி, திருச்சம்பரம் எனும் திருத்தலத்தை அடைந்தார்.
அப்போது, அவருக்கு நோய் முற்றி, உடம்பெங்கும் புண்ணாகி, புழு உருவாகி, துர்நாற்றம் அடித்தது. இதனால், அசையக் கூட முடியாத அவர், அங்கிருந்த இலஞ்சி மரத்தடியில் படுத்து விட்டார்.

மறுநாள், அந்த வழியாக, வில்வமங்கள் சுவாமிகள், தன் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது சில வழிப்போக்கர்கள் அவரிடம், 'சுவாமிகளே... அந்தப் பக்கமாகப் போய் விடாதீர்; அங்கே ஒரு மகாபாவி குஷ்ட நோயால் புழுத்து கிடக்கிறான்...' என்று சொல்லிச் சென்றனர்.
அந்த திசைப் பக்கமாக திரும்பிப் பார்த்தார் வில்வமங்களம். அப்போது, 'வில்வமங்கள்... வில்வமங்கள்...' என, இனிமையான குரல் ஒன்று அழைப்பது கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே...

அத்யாச்ரமியை, தன் மடியில் படுக்க வைத்து, மருத்துவம் செய்து கொண்டிருந்தார் பகவான். உலகையே காக்கும் தன் திருக்கரங்களால், அத்யாச்ரமியின் புண்களில் இருந்த புழுக்களை எடுத்தவர், உடலெங்கும் மென்மையாகத் தடவிக் கொடுத்தார்; விசிறியால் வீசினார். அநாதரட்சகனாகிய குருவாயூரப்பனின் செயலைக் கண்டு, வில்வமங்கள் சுவாமிகள் கண்ணீர் விட்டு வணங்கி, 'கண்ணா... தீனபந்து; எல்லையில்லாத உன் கருணையை என்னவென்று சொல்வேன்...' என்று பலவாறாக துதித்தார்.
அப்போது, குருவாயூரப்பன், 'வில்வமங்கள்... என் பக்தன் ஒருவன், அவனுடைய கர்ம வினையின் பொருட்டு எத்தகைய துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், என் கிருபை அவனுக்கு அனுபவமாகும்; நாம சங்கீர்த்தனம் செய்யும் பக்தன் ஒருக்காலும் நாசமடைவதில்லை; சத்தியம்...' என்றார்.
எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள் கிருபையாகக் கருதி, இன்பமடைய முடியும் என்பதை, வில்வமங்கள சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum