ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை

Go down

அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை Empty அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை

Post by சிவா Sat 16 Aug 2014 - 1:05

பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்றதுமே, அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்செல்லும் அதிகாரிகள் செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் என்பதுபற்றி சொல்லி வருகிறார். அதிகாரிகளுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்துள்ள நரேந்திரமோடி, தொடக்கத்தில் இருந்தே பழையகால சட்டங்கள், விதிகள் எவை–எவை? எந்தெந்த சட்டங்கள், விதிகளையெல்லாம் மாற்றி அமைக்கலாம்? என்றும், எந்தெந்த திட்டங்கள் தேவையில்லை? என்றும் அதிகாரிகளிடம் கருத்து கேட்டு இருந்தார். இதுமட்டுமல்லாமல், அதிகாரிகள் எப்போதும் தம்மை எளிதாக தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். தன்னை, அதிகாரிகள் எளிதாக நேரிலும், இணையதளம் மூலமும் தொடர்புகொள்ள முடிவதைப்போல, அதிகாரிகளும், பொதுமக்களோடு எளிதான தொடர்பில் இருக்கவேண்டும் என்றும் கூறிவருகிறார். அதுபோல, அரசு அதிகாரிகள் மக்களுக்கு அனைத்து சேவைகளும் எளிதாக கிடைப்பதில் முழுகவனமும் செலுத்தவேண்டும் என்றும் சொல்லி வருகிறார். அதில், ஒரு நல்ல முயற்சியாக காலம்காலமாக அனைத்து விண்ணப்பங்கள், கோரிக்கைகளோடு இணைக்கப்பட்டு இருக்கும் சான்றிதழ்களுக்கு ‘அட்டஸ்டேஷன்’ என்று கூறப்படும் சான்றொப்பம் வாங்கும் முறைக்கு ஒரு மூடு விழா நடத்திவிட்டார்.

பழைய காலங்களில் மட்டுமல்லாமல், இப்போதும் ஏதாவது வேலைக்கு விண்ணப்பம் செய்தாலும் சரி, உயர்கல்வியில் சேர வேண்டுமானாலும் சரி, அரசின் எந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தாலும் சரி, அவரவர்களுடைய கல்விச்சான்றிதழ் மற்றும் தஸ்தாவேஜூகளின் நகல்களை இணைக்க வேண்டியதிருக்கும். அப்போது எல்லாம் ‘ஒரிஜினல்’ சான்றிதழ்களை பார்த்து, அப்படியே தட்டச்சு எந்திரம் என்று கூறப்படும் ‘டைப்ரைட்டரில் டைப்’ அடிப்பார்கள். அந்த நகல்களை தாக்கல் செய்யும்போது ஒரிஜினலில் உள்ள தகவல்கள்தான், ‘டைப்’ அடிக்கப்பட்ட நகல்களிலும் இருக்கிறது என்பதை ‘கெஜட்டட் ஆபிசர்களிடம்’ சான்றொப்பம் வாங்கவேண்டும். ஒவ்வொரு நகல் சான்றிதழ்களிலும், சான்றொப்பம் வழங்கிய அதிகாரியின் கையெழுத்தோடு, அவருடைய பதவியை குறிக்கும் முத்திரை கண்டிப்பாக இருக்கவேண்டும். அந்தநேரங்களில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ‘கெஜட்டட்’ அதிகாரிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு வரவேண்டிய கஷ்டம் இருந்தது. சில அதிகாரிகள் வேலைப்பளு நிமித்தம், இப்போது சரிபார்த்துக் கொண்டிருக்க முடியாது, பிறகு வா என்று அலைக்கழிப்பார்கள். அதில் சில அதிகாரிகள், ‘அட்டஸ்டேஷனுக்கு’ பணம் வாங்குவதும் உண்டு. சில நேரங்களில், அதிகாரிகளின் கவனக்குறைவாலும், தட்டச்சு செய்யும்போது ஏற்படும் தவறுகள் கண்ணில்படாமல் போவதும் உண்டு. இப்படி சான்றொப்பம் வாங்குவது ஒரு மிகப்பெரிய வேலையாக நிலவி வந்தது.

இப்போது, ‘போட்டோ காப்பி’ (ஜெராக்ஸ்) மூலம் நகல் எடுக்கும் தொழில்நுட்பம் வந்தபிறகு, ஒரிஜினலில் என்ன இருக்கிறதோ, அதையே அப்படியே படம் எடுத்துவிடுகிறது. ஆனாலும், பழைய முறைப்படி, இப்போதும் ஜெராக்ஸ் நகலில்கூட ‘அட்டஸ்டேஷன்’ வாங்கவேண்டிய நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது, மத்திய அரசாங்கம், ‘கெஜட்டட் அதிகாரிகளிடம்’ சான்றொப்பம் வழங்கவேண்டிய தேவையில்லை. அவரவர்களே சுயமாக சான்றொப்பம் வழங்கினால்போதும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. நிச்சயமாக இது வரவேற்கத்தகுந்த ஒரு முறையாகும். எப்படியும் விண்ணப்பம் அனுப்பி, பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு என்று வரும்போது, கண்டிப்பாக அதிகாரிகள் ‘ஒரிஜினலோடு’ சரிபார்ப்பார்கள். யாராவது இதில் தவறு ஏதும் செய்திருந்தால், அது கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அந்த நேரத்தில், அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

பிரதமர் பிறப்பித்த இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாக, சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி செந்தில் பாண்டியன், பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் யாரும் இனி கல்விச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ் போன்ற சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை இணைக்கும்போது, ‘கெஜட்டட்’ அதிகாரியின் சான்றொப்பம் வாங்கவேண்டிய தேவையில்லை. அவரவரே சுய சான்றொப்பம் செய்தால் போதுமானது என்று அறிவித்து, நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டார். இது ‘பாஸ்போர்ட்டுக்கு’ விண்ணப்பம் செய்பவர்களுக்கு பெரிதும் பலன் அளிக்கிறது. மத்திய அரசாங்கத்தின் இந்த உத்தரவை ‘பாஸ்போர்ட்‘ அலுவலகம்போல, அனைத்து மத்திய–மாநில அரசு அலுவலகங்களும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றினால், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேலை எளிது. ‘கெஜட்டட்’ அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறைவு.

தினத்தந்தி


அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை
» ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!
» IAS அதிகாரிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு!
» விசாரணைக்கு அணுகக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
» தமிழ்நாடு விவசாய துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum