Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல் வளை
![110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Jayalalitha](https://2img.net/h/tn.loksatta.org/wp-content/uploads/jayalalitha.jpg)
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் 100 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளதாக மே 12ம் தேதி சட்டப்பேரவை தலைவர் ப. தனபால் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
இது சாதனையா வேதனையா? ஜனநாயகம் படும்பாடு எனப் பல்வேறு தலைப்புகளில் எதிர்க்கட்சியினர் தமிழகமெங்கும் இதை எதிர்த்து கண்டனக் கூட்டங்களை நடத்தினர். “விதியை மாற்றிய விதி” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு அதிமுகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இதைப் பார்த்து தமிழக மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமலேயே விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அப்படி 110 விதிதான் என்ன சொல்கிறது? அரசமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகள்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஒன்றுதான் விதி-110. இது என்ன சொல்கிறது?
நாம் அடிக்கடி ஊடகங்களில் படிக்கும், கேட்கும் விதி-110 இதுதான். இந்த விதி எந்த காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என்றால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அப்பொருளைப்பற்றி உறுப்பினர்கள் விவாதித்தால் காலவிரயம் கூடும் அல்லது அப்பொருள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது இந்த விதிப்படி அரசு பயன்படுத்த ஏதுவாக கொண்டுவரப்பட்டதுதான் விதி-110.
ஆனால் 14-வது சட்டப்பேரவைக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தினமும் சட்டப்பேரவை விதி-110ன் கீழ் திட்டங்களை அறிவிப்பதையே வழக்கமாக மாற்றியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும். விதி என்று ஒன்று எதிலும் உருவாக்கினால் விதிவிலக்கு என்று உருவாவது இயல்பே. ஆனால் விதிவிலக்கையே நிரந்தர விதியாக மாற்றுவது நோக்கத்தையே சிதைத்துவிடும். இந்த வேலையைத்தான் ஜெயலலிதா கனகச்சிதமாக தற்போது செய்து வருகிறார்.
இந்திய ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன் (மக்கள் பிரதிநிதியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்) கலந்து ஆலோசித்து – விவாதித்து முடிவெடுக்க மறுத்தால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? மக்களுக்கான அரசாங்கம் எங்கே இருக்கிறது? 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் உண்மையிலேயே மக்களுக்கு பயனுள்ள திட்டங்களாக இருந்தாலும் கூட அரசு சட்டப்பேரவையில் விவாதிக்கும் போதுதான் அத்திட்டம் மேன்மையுறும், மெருகேறும். முக்கியமாக ஜனநாயகம் காக்கப்படும்.
ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, “110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்து திட்டங்களையும் அறிவிப்பேன்; அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டேன், அதுபற்றி யாரும் கேள்வி கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதி விலக்கை விதியாக மாற்றி ஜனநாயகவாதி என்ற போர்வையில் சர்வாதிகாரியாக செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கி விடும். இப்படி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டால் தமிழகத்தின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.
[thanks]லோக்சத்தா கட்சி[/thanks]
![110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Jayalalitha](https://2img.net/h/tn.loksatta.org/wp-content/uploads/jayalalitha.jpg)
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் 100 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளதாக மே 12ம் தேதி சட்டப்பேரவை தலைவர் ப. தனபால் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
இது சாதனையா வேதனையா? ஜனநாயகம் படும்பாடு எனப் பல்வேறு தலைப்புகளில் எதிர்க்கட்சியினர் தமிழகமெங்கும் இதை எதிர்த்து கண்டனக் கூட்டங்களை நடத்தினர். “விதியை மாற்றிய விதி” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு அதிமுகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இதைப் பார்த்து தமிழக மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமலேயே விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அப்படி 110 விதிதான் என்ன சொல்கிறது? அரசமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகள்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஒன்றுதான் விதி-110. இது என்ன சொல்கிறது?
(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.
(2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.
(3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
(2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.
(3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
நாம் அடிக்கடி ஊடகங்களில் படிக்கும், கேட்கும் விதி-110 இதுதான். இந்த விதி எந்த காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என்றால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அப்பொருளைப்பற்றி உறுப்பினர்கள் விவாதித்தால் காலவிரயம் கூடும் அல்லது அப்பொருள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது இந்த விதிப்படி அரசு பயன்படுத்த ஏதுவாக கொண்டுவரப்பட்டதுதான் விதி-110.
ஆனால் 14-வது சட்டப்பேரவைக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தினமும் சட்டப்பேரவை விதி-110ன் கீழ் திட்டங்களை அறிவிப்பதையே வழக்கமாக மாற்றியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும். விதி என்று ஒன்று எதிலும் உருவாக்கினால் விதிவிலக்கு என்று உருவாவது இயல்பே. ஆனால் விதிவிலக்கையே நிரந்தர விதியாக மாற்றுவது நோக்கத்தையே சிதைத்துவிடும். இந்த வேலையைத்தான் ஜெயலலிதா கனகச்சிதமாக தற்போது செய்து வருகிறார்.
இந்திய ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன் (மக்கள் பிரதிநிதியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்) கலந்து ஆலோசித்து – விவாதித்து முடிவெடுக்க மறுத்தால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? மக்களுக்கான அரசாங்கம் எங்கே இருக்கிறது? 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் உண்மையிலேயே மக்களுக்கு பயனுள்ள திட்டங்களாக இருந்தாலும் கூட அரசு சட்டப்பேரவையில் விவாதிக்கும் போதுதான் அத்திட்டம் மேன்மையுறும், மெருகேறும். முக்கியமாக ஜனநாயகம் காக்கப்படும்.
ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, “110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்து திட்டங்களையும் அறிவிப்பேன்; அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டேன், அதுபற்றி யாரும் கேள்வி கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதி விலக்கை விதியாக மாற்றி ஜனநாயகவாதி என்ற போர்வையில் சர்வாதிகாரியாக செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கி விடும். இப்படி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டால் தமிழகத்தின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.
1- “110 விதியின் கீழ் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுமா? துறைக்கான அமைச்சர்களை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த போது இந்த அறிவிப்புகளையெல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை?” என கருணாநிதி கேள்வி எழுப்பியதற்கு, “புதிய திட்டத்தை செயல்படுத்த எதிர்பாராத செலவு நிதியில் இருந்து வழங்கப்பட்டு செலவு செய்யப்படும். பின்னர் இதற்கான நிதி முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படும்” என ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். 2 - விதியில் 110-ல் மாற்றம் தேவை: 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் பற்றி பேரவை உறுப்பினர்கள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது என தற்போது விதி உள்ளது. இந்த விதியில் சில மாறுதல்களை கொண்டு வரவேண்டும். அதாவது விதி 110ன் கீழ் அறிவிப்பு-திட்டங்கள் அறிவித்தால் அன்றைய தினம் அதுபற்றி கேள்வி எழுப்பவோ விவாதிக்கவோ முடியாது எனவும் மறுநாள் இதை முதலாவதாக பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்கு வைக்க வேண்டும் எனவும் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு கூட்டத்தொடரின் கடைசி நாளன்று 110-விதியின் கீழ் அறிவிப்பு செய்தால் அதுபற்றி அன்றே விவாதம் நடத்தவும் விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும். |
[thanks]லோக்சத்தா கட்சி[/thanks]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
மேற்கோள் செய்த பதிவு: 1079700பாலாஜி wrote:110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்
தல நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, உங்களுக்கும் குண்டர் சட்டம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
விதியேன்னு கதியத்து வீதியில திரியற நமக்கு இவ்விதி எம்மாத்திரம் - அம்மா ஆத்திரம் வேண்டாம் - தொடருங்கள் தங்கள் பணியை விதி 110 ன் படியே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
மேற்கோள் செய்த பதிவு: 1079706யினியவன் wrote:விதியேன்னு கதியத்து வீதியில திரியற நமக்கு இவ்விதி எம்மாத்திரம் - அம்மா ஆத்திரம் வேண்டாம் - தொடருங்கள் தங்கள் பணியை விதி 110 ன் படியே...
விதியத்து வீதியில சுத்தினாலும், நம்மள நம்பி ஊட்டுல பொண்டு, புள்ளைங்க இருக்கே தல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
M.M.SENTHIL wrote:நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..
இல்லை பாஸ், நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் உள்ளேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
பாலாஜி wrote:110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
மேற்கோள் செய்த பதிவு: 1079712சிவா wrote:M.M.SENTHIL wrote:நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..
இல்லை பாஸ், நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் உள்ளேன்!
நீங்கள் ஒல்லிதான் ஆனால் சட்டம் குண்டாச்சே அண்ணா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|