புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 15, 2014 2:06 pm

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள
மருத்துவ குறிப்புகள் !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. விலை : ரூ.100.

ஹைக்கூ கவிதைகள் வடிப்பதிலும், ஹைக்கூ தொடர்பாக ஆய்வு நூல் எழுதுவதிலும் முன்னோடியாகத் திகழும் பேராசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளியும் தான். வாசிப்பை சுவாசிப்பு போல மேற்கொள்வதால் தான் படித்த புதுக்கவிதையில் கண்ட பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை மேற்கோள் காட்டி ஆய்வு நூல் எழுதி உள்ளார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் பேராசிரியர்.

ஒரு நூலை வாசகராக படிப்பதற்கும் ஆய்வு நோக்குடன் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. புதுக்கவிதையில் என்ன ? உள்ளது என்று சொல்பவர்களுக்கு புதுக்கவிதையில் எல்லாம் உள்ளது என்று பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் கவிதையும் படிக்கலாம், மருத்துவக் குறிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

கரு என்ற தலைப்பில் தொடங்கி நூலாக்கத்திற்கு உதவிய நூல்கள் பட்டியல் வரை 42 கட்டுரைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாசிரியராகச் சேர்ந்து, விரிவுரையாளராகி, இணைப் பேராசிரியர், பேராசிரியர் என் வளர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 6 ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

குடும்பக்கட்டுப்பாடு பற்றி நின்று மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் தந்தை பெரியார் அன்றே குடும்பக் கட்டுப்பாடு பற்றி உரைத்தவர். அதனை நன்கு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கச் சொன்னவர் தந்தை பெரியார் ஆவார். பல மருத்த்துவர்களையும், நீதிபதிகளையும், பெரியவர்களையும், பெண்மணிகளையும் கலந்து அவர்களது கருத்துக்களைத் தொகுத்துக் கர்ப்ப ஆட்சி என்னும் நூலை தந்தவராவார். அவரைத் தமிழக மால்தூஸ் என்று கூறலாம்.

அதனை,
பெரியார்
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக்கச்
சொன்ன தமிழக
மால்தூஸ் !

என்கிறார் இளங்கலைமணி.

பலர் கவிதைகளை மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதும் போதும், பேசும் போதும் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை குறிப்பிடுவது இல்லை. ஆனால் நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் ,தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக ஒவ்வொரு கவிதையிலும் எழுதிய கவிஞர்கள் பெயரை குறிப்பிட்டது சிறப்பு. ஒரு படைப்பாளிக்கு மற்றொரு படைப்பாளி தரும் அங்கீகாரம் நன்று. இந்த நூல் படித்த போது புதுக்கவிதை எழுதி இருக்கிறோம். ஆனால் மருத்துவக்குறிப்புகளுடன் எழுதி இருந்தால் என் பெயரும் இடம் பெற்றிருக்குமே என்று வருந்தினேன்.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் நூலில் உள்ளன. பற்களை நன்கு பாதுகாத்தால், பராமரித்தால் பல்வலி வராமல் தவிர்க்கலாம். பல பயனுள்ள மருத்துவத் தகவல்கள் நூலில் உள்ளன.

ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் பல கவிதைகள் நூலில் உள்ளன. கவிதைகளுக்கான நூலாசிரியர் விளக்கம் மிக நன்று.
வெறிநாய் என்பது மிகவும் மோசமான ஒன்று. அது கடித்து இறந்தவர்களும் உண்டு. அது குறித்த புதுக்கவிதை ஒன்று.

வெறிநாய் கடித்தவன்
துப்பியதெல்லாம் விஷம்

என்கிறார் ஜனநேஷன்.

மலைப்பாம்புகள் உயிரினங்களை விழுங்கும் தன் இரைக்காக. ஆனால் மனிதர்களைத் தீண்டினால், விஷத்தின் வீரியத்தால் கடித்தவர் உடலில் நீலம் பாரித்து விடும். கடிபட்டவர்கள் வியர்த்து நடுங்குவர். இறுதியில் நுரை கக்கித் துடிதுடிப்பர்.

இதனை நன்கறிந்த தமிழன்பன்.

மலைப்பாம்புகள்
தீண்ட
நீலம் பாரித்து
நுரைகக்கித்
துடிக்கும் நோயாளி.

ஹைக்கூ கவிதையின் முன்னோடியான கவிப்பேரரசு ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய புதுக்கவிதையிலிருத்து மேற்கோள் காட்டியது சிறப்பு.

இசையால் மனம் பண்படும். பண் ரசிக்க கவலைகள் காணாமல் போகும். இசையும் நோய் தீர்க்கும் மருந்தாகும். அதனால் தான் தமிழர்கள் தமிழிசையை அன்று முதல் பாடி வந்துள்ளனர். அதனை உணர்த்தும் புதுக்கவிதை நன்று.

யாழ் நரம்பில்
மென்விரல் வருட
எழும் இன்னிசை நாதம்
இசை வெள்ளமாகப் பொங்கி
ஒலியலைகளாக உருண்டு
நாற்புறமும் வியாபிப்பது போல.

என்கின்றார் மு.கு. ஜகந்நாதராஜா.

இசை, மனங்களை இசைய வைக்கிறது. மயக்குகிறது. நல்ல இனிய இசை மனதையும் காதுகளையும் நனையச் செய்கிறது. இதயத்தை ஆக்கிரமித்துக் காற்றால் இசை உருவாகிறது. இசையால் வசமாகாத இதயம் ஏதுமில்லை என்பது உண்மை.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன. காய்ச்சல் பற்றி, மூளைக் காய்ச்சல் பற்றி, இரத்த தானம் பற்றி, நீரழிவு நோய் பற்றி, காமம், மரணம் இப்படி எதையும் விட்டு வைக்காமல் புதுக்கவிஞர்கள் புதுக்கவிதையில் உணர்த்தி உள்ளதை சரியான விளக்கங்களுடன் கட்டுரைகளாக வடித்து உள்ளார்கள்.

ஹைக்கூ கவிதை மட்டுமல்ல புதுக்கவிதை, மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர் கவிஞர் சி. விநாயகமூர்த்தி. அவர் உணவு பற்றி எழுதியுள்ள கவிதை இன்றைக்கு அனைவரும் உணர வேண்டிய நல்ல கவிதை. அதனை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த நூலாசிரியர் கவிஞர் பேராசிரியர் மித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உண்டு நீ கொழுப்பா யானால்
உண்டு நோய் உணர்தல் வேண்டும்
கண்டதை அதிகம் உண்டால்
கொடிய நோய் உன்னை உண்ணும்
ஊன் சுவை நாட்டம் கொண்டால்
உள்ளமோ விலங்காய் மாறும்.

இப்படி பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன. இந்த நூல் படித்தால் இரண்டு நன்மைகள். புதுக்கவிதை எப்படி? எழுத வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். நலமான வாழ்விற்கு வழி என்ன என்ற புரிதலும் ஏற்படும். வித்தியாசமாக சிந்தித்து மக்களுக்கு பயன் தரும் நூல் படைத்த நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

232 பக்க நூலை ரூ. 100க்கு அச்சிட்ட மணிமேகலை பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக