Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு முழுவதும் சிகரெட், பீடி விற்பனைக்கு தடை?
3 posters
Page 1 of 1
நாடு முழுவதும் சிகரெட், பீடி விற்பனைக்கு தடை?
புதுடில்லி:நாடு முழுவதும் சிகரெட், பீடி மற்றும் அனைத்து விதமான புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட, பொதுநலன் கோரும் மனுவை, விசாரணைக்கு நேற்று ஏற்ற சுப்ரீம் கோர்ட், தடை விதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியது.
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுகிறது என்பது, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது.புகைபிடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், முழுவதுமாக இவற்றின் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் கோரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதலில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க தயங்கிய தலைமை நீதிபதி, லோடா தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்', இந்த விவகாரத்தில், பார்லிமென்டும், எம்.பி.,க்களும் தான் முடிவெடுக்க வேண்டும்; கோர்ட் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியது. பின், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சினிமா தயாரிப்பாளர், சுனில் ராஜ்பால் என்பவர் சார்பில், அவரின் வழக்கறிஞர், ஆதித்ய அகர்வால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தெரிவித்துஉள்ளதாவது:
புகையிலை பொருட்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை நன்கு அறிந்த பிறகும், அந்தப் பொருட்கள் எளிதாக கிடைப்பதால், பலரும் அவற்றை பயன்படுத்தி, உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர். இதனால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் சுகாதாரச் செலவு அதிகரிக்கிறது.
புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில், மத்திய அரசுக்கு, ஆண்டுதோறும், 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இதைத் தவிர்க்க, சிகரெட், பீடி மற்றும் அனைத்து புகையிலை பொருட்களையும் விற்க, தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி லோடா, இது குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.
புகைபிடிப்பதை தடுக்கும் விதமாக, பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை, மத்திய அரசு விதித்துள்ளது. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு, புகையிலை பொருட்களை விற்கக் கூடாது; பள்ளி, கல்லுாரிகள் அருகில் இந்த பொருட்களை விற்பனை செய்யக் கூடாது; பொது இடங்களில் இந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது என, கட்டுப்பாடுகள் உள்ள நிலையிலும், புகைபிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
புகைக்கும் 12 கோடி பேர்:
நாட்டின் மொத்த மக்கள் தொகையான, 120 கோடியில், 12 கோடி பேர் புகைபிடிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் படி, உலகம் முழுவதும் புகை பிடிப்பவர்களில், இந்தியாவில் மட்டும், 12 சதவீதம் பேர் உள்ளனர்.
2009ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில், ஆண்டுதோறும், ஒன்பது லட்சம் பேர், புகைபிடிப்பதால் இறக்கின்றனர்.
இளைஞர்களில், 30 சதவீதம் பேர் புகைபிடிக்கின்றனர். பெண்களில், ௨ - 5 சதவீதம் பேர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் தான், அதிகமானோர், சிகரெட் புகைக்கின்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் தான் அதிகமானோர் பீடி புகைக்கின்றனர்.
பொது இடங்களில் புகைபிடிக்க முதலில் தடை விதிக்கப்பட்ட நகரம், பஞ்சாபின் சண்டிகர். இங்கு, 2007லேயே தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, சிம்லா நகரில், பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கப்பட்டது.
புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக, உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின் படி, 2003ல், 'கோட்பா' என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பர தடை, வர்த்தக ஒழுங்குமுறை, வினியோக கட்டுப்பாடு என்பது இதன் பொருள்.
ரூ.200 அபராதம்:பொது இடங்களில் புகைபிடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, 2008ம் ஆண்டு. மத்திய அரசு பிறப்பித்த சட்டப்படி, கீழ்க்கண்ட இடங்களில் புகைபிடிப்பது குற்றமாக கருதப்படும்.
கலையரங்கம், சினிமா தியேட்டர், மருத்துவமனைகள், விமானம், பஸ், ரயில் போன்ற பொது பயன்பாட்டு அமைப்புகள். விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம். ஓட்டல்கள், ஓய்விடங்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள், நுாலகங்கள், தபால் அலுவலகம், மார்க்கெட், ஷாப்பிங் மால், கேன்டீன், கல்வி நிலையங்கள், பூங்காக்கள். கல்வி நிறுவனங்களுக்கு அருகில், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
விளம்பரங்களுக்கும் தடை:சிகரெட், பீடி மற்றும் மதுபானங்களுக்கு, ஊடகங்களில் விளம்பரம் செய்யக் கூடாது என, 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது. புகைபிடிப்பதன் தீங்கு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 2012 முதல், சினிமா தியேட்டர்களில், விளம்பர படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
இதற்காக, 'ஸ்பாஞ்ச்' மற்றும், 'முகேஷ்' என்ற பெயரில் படங்கள் தயாரித்து திரையிடப்படுகின்றன. கடந்த ஆண்டில், 'சைல்ட்'மற்றும், 'துவான்' என்ற பெயர்களில் விளம்பர படங்கள் தியேட்டர்களில் காண்பிக்கப்படுகின்றன.கடந்த 2005 முதல், சினிமா படங்கள், 'டிவி' நிகழ்ச்சிகளில், புகைபிடிக்கும் காட்சிகள் தடை செய்யப்பட்டன.
சிகரெட், பீடிக்கு தடை விதிப்பது சாத்தியமா என ஆராய்ந்து கொண்டு இருந்தால், 40 வினாடிக்கு ஒருவர் இறப்பதை தடுக்க முடியாது. உயிரைக் காப்பாற்ற, தடையைத் தவிர, வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாடு முழுவதும் சிகரெட், பீடி விற்பனைக்கு தடை?
ரொம்ப நல்லது..................புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் அல்ல எதிரில் இருபவர்களுக்கும் அதன் தாக்கம் மிக அதிகம். ஒரு பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள், அங்கு நாம் புகை பிடிக்க வேண்டாம், நம் அருகில் மாறி மாறி உட்காருபவர்கள் ஒரு 10 பேர் புகை பிடித்தால், அவா அவா 1 தான் பிடிப்பா, ஆனால் நாம் ??????????????????? ஒரு பாவமும் செய்யாத நாம் 10 பிடித்தர்போல ஆகுமே ???????? இதுக்கு என்ன செய்வது?????????????????
இந்த கருமங்களை எவ்வளவு சீக்கிரம் ஒழிக்கிறாங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லது மக்களுக்கு நல்லது...........அப்படியே அந்த மது விலக்கையும் கொஞ்சம் கவனித்தால் தேவலாம்
இந்த கருமங்களை எவ்வளவு சீக்கிரம் ஒழிக்கிறாங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லது மக்களுக்கு நல்லது...........அப்படியே அந்த மது விலக்கையும் கொஞ்சம் கவனித்தால் தேவலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாடு முழுவதும் சிகரெட், பீடி விற்பனைக்கு தடை?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி
» வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை
» திருப்பதியில் 1 1/4 லட்சம் லிட்டர் மது கொட்டி அழிக்கப்பட்டது பீடி, சிகரெட், பாக்கு பொட்டலங்கள் மலை போல குவித்து தீ வைத்து எரிப்பு
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி
» வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை
» திருப்பதியில் 1 1/4 லட்சம் லிட்டர் மது கொட்டி அழிக்கப்பட்டது பீடி, சிகரெட், பாக்கு பொட்டலங்கள் மலை போல குவித்து தீ வைத்து எரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|