ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Aug 15, 2014 2:06 pm

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள
மருத்துவ குறிப்புகள் !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. விலை : ரூ.100.

ஹைக்கூ கவிதைகள் வடிப்பதிலும், ஹைக்கூ தொடர்பாக ஆய்வு நூல் எழுதுவதிலும் முன்னோடியாகத் திகழும் பேராசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளியும் தான். வாசிப்பை சுவாசிப்பு போல மேற்கொள்வதால் தான் படித்த புதுக்கவிதையில் கண்ட பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை மேற்கோள் காட்டி ஆய்வு நூல் எழுதி உள்ளார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் பேராசிரியர்.

ஒரு நூலை வாசகராக படிப்பதற்கும் ஆய்வு நோக்குடன் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. புதுக்கவிதையில் என்ன ? உள்ளது என்று சொல்பவர்களுக்கு புதுக்கவிதையில் எல்லாம் உள்ளது என்று பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் கவிதையும் படிக்கலாம், மருத்துவக் குறிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

கரு என்ற தலைப்பில் தொடங்கி நூலாக்கத்திற்கு உதவிய நூல்கள் பட்டியல் வரை 42 கட்டுரைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாசிரியராகச் சேர்ந்து, விரிவுரையாளராகி, இணைப் பேராசிரியர், பேராசிரியர் என் வளர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 6 ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

குடும்பக்கட்டுப்பாடு பற்றி நின்று மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் தந்தை பெரியார் அன்றே குடும்பக் கட்டுப்பாடு பற்றி உரைத்தவர். அதனை நன்கு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கச் சொன்னவர் தந்தை பெரியார் ஆவார். பல மருத்த்துவர்களையும், நீதிபதிகளையும், பெரியவர்களையும், பெண்மணிகளையும் கலந்து அவர்களது கருத்துக்களைத் தொகுத்துக் கர்ப்ப ஆட்சி என்னும் நூலை தந்தவராவார். அவரைத் தமிழக மால்தூஸ் என்று கூறலாம்.

அதனை,
பெரியார்
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக்கச்
சொன்ன தமிழக
மால்தூஸ் !

என்கிறார் இளங்கலைமணி.

பலர் கவிதைகளை மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதும் போதும், பேசும் போதும் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை குறிப்பிடுவது இல்லை. ஆனால் நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் ,தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக ஒவ்வொரு கவிதையிலும் எழுதிய கவிஞர்கள் பெயரை குறிப்பிட்டது சிறப்பு. ஒரு படைப்பாளிக்கு மற்றொரு படைப்பாளி தரும் அங்கீகாரம் நன்று. இந்த நூல் படித்த போது புதுக்கவிதை எழுதி இருக்கிறோம். ஆனால் மருத்துவக்குறிப்புகளுடன் எழுதி இருந்தால் என் பெயரும் இடம் பெற்றிருக்குமே என்று வருந்தினேன்.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் நூலில் உள்ளன. பற்களை நன்கு பாதுகாத்தால், பராமரித்தால் பல்வலி வராமல் தவிர்க்கலாம். பல பயனுள்ள மருத்துவத் தகவல்கள் நூலில் உள்ளன.

ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் பல கவிதைகள் நூலில் உள்ளன. கவிதைகளுக்கான நூலாசிரியர் விளக்கம் மிக நன்று.
வெறிநாய் என்பது மிகவும் மோசமான ஒன்று. அது கடித்து இறந்தவர்களும் உண்டு. அது குறித்த புதுக்கவிதை ஒன்று.

வெறிநாய் கடித்தவன்
துப்பியதெல்லாம் விஷம்

என்கிறார் ஜனநேஷன்.

மலைப்பாம்புகள் உயிரினங்களை விழுங்கும் தன் இரைக்காக. ஆனால் மனிதர்களைத் தீண்டினால், விஷத்தின் வீரியத்தால் கடித்தவர் உடலில் நீலம் பாரித்து விடும். கடிபட்டவர்கள் வியர்த்து நடுங்குவர். இறுதியில் நுரை கக்கித் துடிதுடிப்பர்.

இதனை நன்கறிந்த தமிழன்பன்.

மலைப்பாம்புகள்
தீண்ட
நீலம் பாரித்து
நுரைகக்கித்
துடிக்கும் நோயாளி.

ஹைக்கூ கவிதையின் முன்னோடியான கவிப்பேரரசு ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய புதுக்கவிதையிலிருத்து மேற்கோள் காட்டியது சிறப்பு.

இசையால் மனம் பண்படும். பண் ரசிக்க கவலைகள் காணாமல் போகும். இசையும் நோய் தீர்க்கும் மருந்தாகும். அதனால் தான் தமிழர்கள் தமிழிசையை அன்று முதல் பாடி வந்துள்ளனர். அதனை உணர்த்தும் புதுக்கவிதை நன்று.

யாழ் நரம்பில்
மென்விரல் வருட
எழும் இன்னிசை நாதம்
இசை வெள்ளமாகப் பொங்கி
ஒலியலைகளாக உருண்டு
நாற்புறமும் வியாபிப்பது போல.

என்கின்றார் மு.கு. ஜகந்நாதராஜா.

இசை, மனங்களை இசைய வைக்கிறது. மயக்குகிறது. நல்ல இனிய இசை மனதையும் காதுகளையும் நனையச் செய்கிறது. இதயத்தை ஆக்கிரமித்துக் காற்றால் இசை உருவாகிறது. இசையால் வசமாகாத இதயம் ஏதுமில்லை என்பது உண்மை.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன. காய்ச்சல் பற்றி, மூளைக் காய்ச்சல் பற்றி, இரத்த தானம் பற்றி, நீரழிவு நோய் பற்றி, காமம், மரணம் இப்படி எதையும் விட்டு வைக்காமல் புதுக்கவிஞர்கள் புதுக்கவிதையில் உணர்த்தி உள்ளதை சரியான விளக்கங்களுடன் கட்டுரைகளாக வடித்து உள்ளார்கள்.

ஹைக்கூ கவிதை மட்டுமல்ல புதுக்கவிதை, மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர் கவிஞர் சி. விநாயகமூர்த்தி. அவர் உணவு பற்றி எழுதியுள்ள கவிதை இன்றைக்கு அனைவரும் உணர வேண்டிய நல்ல கவிதை. அதனை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த நூலாசிரியர் கவிஞர் பேராசிரியர் மித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உண்டு நீ கொழுப்பா யானால்
உண்டு நோய் உணர்தல் வேண்டும்
கண்டதை அதிகம் உண்டால்
கொடிய நோய் உன்னை உண்ணும்
ஊன் சுவை நாட்டம் கொண்டால்
உள்ளமோ விலங்காய் மாறும்.

இப்படி பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன. இந்த நூல் படித்தால் இரண்டு நன்மைகள். புதுக்கவிதை எப்படி? எழுத வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். நலமான வாழ்விற்கு வழி என்ன என்ற புரிதலும் ஏற்படும். வித்தியாசமாக சிந்தித்து மக்களுக்கு பயன் தரும் நூல் படைத்த நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

232 பக்க நூலை ரூ. 100க்கு அச்சிட்ட மணிமேகலை பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum