புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
62 Posts - 42%
heezulia
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
9 Posts - 6%
prajai
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
பயம்! Poll_c10பயம்! Poll_m10பயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 01, 2014 8:03 pm

ஒரு காட்டில் ஆண்சிங்கமும், பெண் சிங்கமும் குடும்பமாக வாழ்ந்தன. ஒருநாள் பெண்சிங்கம் இரண்டு குட்டிகள் ஈன்றது. தினமும் ஆண் சிங்கம் காட்டிலே வேட்டையாடி பெண் சிங்கத்துக்கு உணவு கொண்டு வந்தது.

ஒருநாள் உணவு எதுவும் கிடைக்காமல், ஆண் சிங்கம் குகைக்குத் திரும்பியது. வழியில் ஒரு நரிக்குட்டி அகப்பட்டது. குட்டியாக இருந்ததால் அதன்மீது இரக்கப் பட்டு அதைக் கொல்லாமல் கவ்விக் கொண்டு வந்தது. அதைப் பெண் சிங்கத்திடம் கொடுத்தது.
""இது குட்டி என்பதால் இதைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. இன்று காடு முழுவதும் மாலை வரை அலைந்து திரிந்தும் எந்த உணவும் கிடைக்கவில்லை. நீ பசியோடு இருப்பாய். உனக்கு எந்த உணவும் என்னால் கொண்டு வர முடியவில்லை.

""குழந்தை, பெண், துறவி, அந்தணன் ஆகியோரை கொல்லக்கூடாது என்பது தர்மம். இருந்தாலும் நீ பசி தாங்க மாட்டாய். இந்தக் குட்டியைக் கொன்று உன் பசியைத் தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,'' என்று கூறியது ஆண் சிங்கம்.
ஆண் சிங்கம் கூறியதைக் கேட்ட பெண்சிங்கம், ""அன்பானவரே... இதைக் குட்டி என்று நீங்கள் இரக்கம் கொள்ளும் போது, நான் மட்டும் இரக்கம் கொள்ளாமல் என் வயிற்றுப் பசிக்காக கொன்று தின்ன முடியுமா?

""உயிர் போகும் துன்பநிலை ஏற்பட்டாலும், அறத்திற்குப் புறம்பானவற்றைச் செய்யக்கூடாது. நன்மையான வற்றையும் செய்யாமல் விட்டு விடக்கூடாது. நான் இந்த நரிக்குட்டியின் மீது அன்பு செலுத்துகிறேன். அதை என் குட்டி போல் நினைக்கிறேன். நமது இரண்டு சிங்கக் குட்டிகளோடு இந்த நரிக்குட்டியையும் சேர்த்து வளர்க்கப் போகிறேன்,'' என்றது பெண்சிங்கம்.சிங்கக் குட்டிகளும், நரிக்குட்டியும் சேர்ந்து வளர்ந்தன. தன் குட்டி என்றும், நரிக்குட்டி என்றும் பேதம் பார்க்காமல் மூன்று குட்டிகளிடமும் சம அன்பு கொண்டு பாலூட்டி சீராட்டி வளர்த்தது பெண் சிங்கம்.

ஒருநாள் சிங்கக் குட்டிகளும், நரிக்குட்டியும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு காட்டு யானை வந்தது. யானையைப் பார்த்ததும் சிங்கக் குட்டிகளுக்குக் கோபம் வந்தது. அந்த யானையைத் தாக்கிக் கொல்ல எண்ணின. யானையை நோக்கிப் பாய்ந்து சென்றன.சிங்கக் குட்டிகள் பாய்ந்து செல்வதைப் பார்த்த நரிக்குட்டி பயந்து நடுங்கியது.

""சகோதரர்களே ஏன் ஆத்திரம் கொள்கிறீர்கள்? ஆத்திரம் ஆபத்தில் சேர்த்துவிடும். யானையுடன் போரிட்டு வெற்றி பெறமுடியாது. அது பெரிய மிருகம். நீங்கள் சிறிய உருவம் கொண்ட சிங்கக் குட்டிகள். யானைக்கும், சிங்கத் துக்கும் பிறவியிலேயே பகை உள்ளது. அதனால் பகைவனிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்று சிங்கக்குட்டி களைத் தடுத்து நிறுத்தியது.
பிறகு சிங்கக்குட்டிகளை அழைக் காமல் யானைக்கு அஞ்சி அவை வசிக்கும் குகை நோக்கி ஓடி வந்தது நரி.
சிங்கக்குட்டிகளை விட மூத்தது நரிக்குட்டி. நரி அண்ணன் ஓடுகிறானே என்று சிங்கக்குட்டிகளும் பயந்து அதன் பின்னே ஓடி குகைக்கு வந்து சேர்ந்தன.

தனது பெற்றோரிடம் உண்மையைக் கூறின சிங்கக் குட்டிகள்.""நரி அண்ணன் மிகவும் கோழையாக இருக்கிறான். நாங்கள் யானையைத் தாக்கச் செல்வதைத் தடுத்து விட்டான். ஆவேசமாக அந்த யானையைத் தாக்கச் சென்ற எங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி, அச்ச உணர்வை ஊட்டிவிட்டான். அதனால் அந்த யானையைத் தாக்காமல் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்!'' என்று கூறின.

சிங்கக் குட்டிகள் கூறியதைக் கேட்டதும் நரிக்குட்டிக்குக் கோபம் வந்து கண்கள் சிவந்தன. ""நான் ஒன்றும் கோழை அல்ல. உங்களை விட அறிவில் நான் குறைந்த வனல்ல...'' என்று கோபப்பட்டு சிங்கக் குட்டிகளைத் தாக்க முற்பட்டது.அதைப் பார்த்த பெண்சிங்கம் நரிக்குட்டியைத் தடுத்து நிறுத்தியது.

""மகனே நீ கோபம் கொள்வதில் அர்த்தமில்லை. உன்னிடம் ஆற்றல், அழகு, அறிவு எல்லாம் இருக்கிறது. ஆனால், வீரத்திற்குத் தடை போட்டால் ஊக்கம் இழந்து விடுவார்கள். ஊக்கம் இழந்தால் உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்படாது. மனம் தளர்ந்து சோர்ந்து விடுவார்கள்.

""சிங்கக்குட்டிகளின் வேகத்தை நீ கட்டுப்படுத்தி விட்டதால், அவை பயந்து உன்னுடன் வந்துவிட்டன. இப்படிப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டால் காட்டில் வாழ்கிற மற்ற மிருகங்கள் நம்மை ஏளனம் செய்து எள்ளி நகையாடும். அவை நம்மை எளிதில் தாக்கி வெற்றி பெற்றுவிடும். பிறகு சிங்க இனம் வீர இனம் என்று சொல்லும் சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
""நீ நரி இனத்தில் பிறந்தவன். உன் மீது இரக்கம் கொண்டு உன்னையும் என் மகன் போல் எடுத்து அன்பு செலுத்தி வளர்த்தேன். இப்போது நீ பெரியவனாகி விட்டாய். உன் போக்கும் சிங்கக்குட்டிகளின் போக்கும் வேறுபடுகின்றன. இதனால் உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் நிலை நேரும். இதனால் நீ உன் உயிரை இழந்தால் என்னால் தாங்க முடியாது. போர்ப்படையின் தலைவன் வீரர்களை முன்னே செலுத்த வேண்டும். அவனே பயந்து பின் தங்கினால் தோல்விதான் வரும்.

""நீ உன் சகோதரர்களுக்கு மூத்தவன். நீ முன்னணியில் நின்று செயல்பட்டால் தான் இளையவர்கள் உன் வழியில் வருவார்கள். உனக்கு அச்ச உணர்வு உள்ளது. அதனால் உன்னால் முன்னணியில் நின்று செயல்பட முடியாமல் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்துவிடுவாய். உனக்கும், சிங்கக் குட்டிகளுக்கும் ஒத்து வராது. உன் பெற்றோரிடம் உள்ள இன அச்ச உணர்வு உன்னிடம் குடிகொண்டிருக்கிறது. இது உன் குற்றம் அல்ல. உன் பிறவித்தன்மை தான்.

""இனி நீ இங்கு இருந்தால் சரிவராது. உனக்கு அடிக்கடி கோபமும், ரோஷமும் ஏற்படுகிறது. இதனால் ஒற்றுமைக் குலைவு தான் ஏற்படும். சண்டை போட்டுப் பிரிந்து போவதை விட அல்லது உயிரிழப்பதை விட நீ இப்போதே பிரிந்து செல்வது நல்லது,'' என்றது பெண் சிங்கம்.

நரிக்குட்டி பெண் சிங்கத்தின் பேச்சைக் கேட்டுப் பிரிந்து சென்று, தன் இனத்துடன் சேர்ந்து கொண்டது.
இதற்குத்தான் இனம் இனத்துடன் சேர வேண்டும் என்று சொல்வர். புரிந்ததா? நீங்கள் யாருடன் நட்பு கொள்கிறீர்களோ அவர்களது குணம்தான் உங்களுக்கு வரும். அதுக்குத்தான் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 01, 2014 9:37 pm

பன்றியோட சேர்ந்த கன்றும் கெடும்
-
 சூப்பருங்க 
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 01, 2014 9:44 pm

ayyasamy ram wrote:பன்றியோட சேர்ந்த கன்றும் கெடும்
-
 சூப்பருங்க 
-
மேற்கோள் செய்த பதிவு: 1076931

ஆமாம் , ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக