ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னதானம் திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவாக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Go down

 அன்னதானம் திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவாக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty அன்னதானம் திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவாக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by சிவா Tue Aug 12, 2014 4:26 pm


சென்னை: நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி-110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் உள்ள தொன்மையான ஓவியங்களை பழமை மாறாது புதுப்பிக்கும் வகையில், தொல்லியல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த மதிப்பீட்டின்படி, திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்தில் உள்ள பழமையான சுவரோவியங்களை 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்துப் பராமரிக்கப்படும்.

2002 ஆம் ஆண்டு என்னால் துவக்கி வைக்கப்பட்ட திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 518 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், ஆன்றோர்கள், சான்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 13.9.2012 அன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு பெரும் பயனளிக்கும் இத்திட்டம், நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

எஸ்.சி.-எஸ்.டி. மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 1,006 கோயில்களில் திருப்பணி

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் சரியான பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து இருப்பதை அறிந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளில், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள 1,630 திருக்கோயில்களை சீரமைக்க, ஒரு திருக்கோயிலுக்கு 50,000 ரூபாய் வீதம் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி, அதன் மூலம் அத்திருக்கோயில்கள் பயனடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும்.

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறிய திருக்கோயில்கள் நிதி வசதியின்மையால் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாது சிதிலம் அடைந்துள்ளதை அறிந்த அரசு, திருப்பணிக்கான உதவியை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியதோடு, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 1,262 திருக்கோயில்களுக்கு 6 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

16 கோயில்களில் அன்னதானக் கூடங்கள்

அன்னதானம் அருந்தும் பக்தர்கள் வசதிக்கென அன்னதானக் கூடம் இல்லாத திருக்கோயில்களில் சமையல் அறையுடன் கூடிய அன்னதானக் கூடம் அமைத்தல், அங்கு பக்தர்கள் வசதியுடன் அமர்ந்து உணவருந்த தேவையான மேஜை நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 23 அன்னதானக் கூடங்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 29 அன்னதானக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 16 திருக்கோயில்களில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

10,000 சிறு கோயில்களுக்கு பூஜை பொருட்கள்

திருக்கோயில்களில் ஒரு கால பூஜையேனும் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு கால பூஜைத் திட்டத்தை சீரமைத்து இன்று 11,931 கிராமப்புறத் திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள சிறு சிறு திருக்கோயில்கள் உட்பட சிறு சிறு கிராமப்புறத் திருக்கோயில்களிலும், நாள்தோறும் முறையாக பூஜை நடைபெறுவதற்கு தேவையான பூஜை உபகரணங்கள் இல்லை என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட 10,000 சிறு சிறுத் திருக்கோயில்களுக்கு முறையான பூஜை செய்திட ஏதுவாக, பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியவை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும்.

68 தொன்மையான கோயில்கள் புனரமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புனரமைத்து புதுப்பிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளில் 186 திருக்கோயில்களுக்கு 67 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வாண்டு மேலும் 68 தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புனரமைத்து புதுப்பிக்க 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.25 கோடியில் அருணாசலேஸ்வரர் கோயிலில் தங்கும் விடுதி

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் பக்தர்கள் தங்கும் விடுதி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பழம் பெருமை வாய்ந்ததும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குவதுமான ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கி வழிபடுவதற்கும், சுற்றுலாப் பயணிகள் தங்கி செல்லவும் போதுமான தங்கும் வசதி இத்தலத்தில் இல்லை என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு
» ரூ. 6,654 கோடியில் பிரமாண்ட நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» மேலும் 60 ஸ்டோர்கள் திறக்க பியூச்சர் வேல்யூ ரீடெய்ல் திட்டம்
» கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum