ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

2 posters

Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by சிவா Tue Aug 12, 2014 4:17 pm


உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், 'எபோலா' வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய், கடந்த ஆண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் வசித்த, 2 வயது சிறுவனிடம் இருந்து தான், மற்றவர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1976ல், மேற்கு ஆப்ரிக்க நாடான, காங்கோவில், எபோலா நதிக்கரையில் தோன்றி யதால், இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வைக்கப்பட்டது.இதன்பின், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த நோயின் தாக்கம் தெரியும். இதில், ஏராளமானோர் செத்து மடிவர். இந்த நோயை குணமாக்குவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முன் எப்போதையும் விட, தற்போது, மிக தீவிரமாக இந்த நோய் தாக்கத் துவங்கியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எல்லையை கடந்துள்ளதாக கூறப்படும், இந்த வைரஸ் எமன், மற்ற நாடுகளின் பக்கமும், தன் கொலை வெறியை திருப்பக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கான விஷ வித்து, கடந்தாண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான, கினியாவில் உள்ள, குயிக்கேடோய் என்ற சிறிய நகரத்தில் ஊன்றப்பட்டது.இரண்டு லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரம், மற்ற ஆப்ரிக்க நாடுகளான, சியாரா லியோன், லைபீரியா ஆகியவற்றின் எல்லையில்அமைந்து உள்ளது. இங்கு கூடும் வாரச்சந்தை, மிகவும் பிரபலம். இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக, அண்டை நாடுகளில் இருந்து, ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில், குயிக் கேடோய் நகரில் வசித்த, 2 வயது ஆண் குழந்தைக்கு, 'எபோலா வைரஸ்' பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில், அந்த குழந்தைக்கு, கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்பட்டன. டிசம்பர், 6ம் தேதி, நோய் பாதிப்பு அதிகமாகி அந்த குழந்தை இறந்தது. ஒரு வாரத்துக்கு பின், அந்த குழந்தை யின் தாயும், அதன்பின், குழந்தையின் பாட்டி யும், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.ஆனாலும், அந்த நகரத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், எபோலா வைரஸ் தாக்கப்பட்டதால் தான், இவர்கள் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.குழந்தையின் பாட்டியின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த, மேலும் இரண்டு பேருக்கு, சில வாரங்களுக்கு பின், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு, அடுத்த சில நாட்களில் இறந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியரும், டாக்டரும், அடுத்தடுத்து, இந்த வைரஸ் தாக்கப்பட்டு இறந்தனர்.

இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள நகரங்களில் வசித்த, இவர்களின் உறவினர்களுக்கும் இந்த நோய் பரவியது. மார்ச் மாத மத்தியில், ஒட்டு மொத்த கினியாவிலும், நோய் பாதிப்பு தெரிந்தபின் தான், 'எபோலா' வைரஸ் வேகமாக பரவி வருவதை சுகாதார அதிகாரிகள் உணர்ந்தனர். அதற்குள், அருகில் உள்ள, சியாரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகளில் வசித்த பலருக்கு இந்த நோய் பரவி விட்டது. இந்த மூன்று நாடுகளுமே, மிகவும் ஏழ்மையான நாடுகள் என்பதாலும், மூன்று நாடுகளுக்கும் இடையே அதிகப் படியான மக்கள் போக்குவரத்து உள்ளதாலும், நோய் வேகமாக பரவியது.லைபீரியாவில், மார்ச், ஏப்ரல் மாதத்துக்கு பின், இந்த நோய் குறித்த அறிகுறி தெரியவில்லை. இதனால், 'எபோலா வைரஸ், இனி பரவ வாய்ப்பில்லை' என, பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், சில மாத இடைவெளிக்கு பின், முன்பை விட, மிக வேகமாக இந்த நோய், தற்போது பரவத் துவங்கியுள்ளது. லைபீரியாவில் மட்டும், இதுவரை, 156 பேரின் உயிரை, இந்த நோய் காவு வாங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாடுகளான, கானா, நைஜீரியா, கேமரூன், காங்கோ ஆகியவற்றிலும், இந்த நோயின் தாக்கம் தென்படத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,779 பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில், 961 பேர் இறந்துள்ளனர்.நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நோயின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த நோயின் மையமாக, சியாரா லியோன் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த நோய், வேகமாக பரவி வருவது, சர்வதேச நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், கினியாவிலிருந்து சென்னைக்கு வந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, இந்த நோயின் தாக்கம் இருப்பதாக வெளியான செய்தியாலும், டில்லி, மும்பை ஆகிய நகரங்களில், இந்த நோய் தாக்கத்துடன் சிலர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தியாலும், இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ளது.இதன்மூலம், மேற்கு ஆப்ரிக்க நாடுகளை தாண்டி, மற்ற நாடுகளிலும், இந்த வைரஸ் எமன் கால் பதித்துள்ளது தெரியவந்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty Re: 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by சிவா Tue Aug 12, 2014 4:19 pm



தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்?

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி, தர்மாபுரி, வெங்கடாசலபுரம், கோவிந்த நகரம், கடமலைக்குண்டு, கண்டமனூர் மற்றும் ஆண்டி பட்டி பகுதிகளை சேர்ந்த, 2,000க்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்ரிக்க நாடுகளில் பணிபுரிகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில்எந்தெந்த நாட்டில் 'எபோலா' வைரஸ் தொற்று உருவாகி உள்ளது என்ற விவரம் இங்குள்ள கிராம மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் வெளிநாட்டில் உள்ள தங்கள் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என, கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் தங்களது மகன்களை, 'உடனடியாக விடுப்பு எடுத்து ஊர் திரும்பி வா,' எனக்கூறி வருகின்றனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும், எத்தனை பேர் உள்ளனர் என்ற துல்லியமான தகவல், அரசிடம் இல்லை.

தனிமைப்படுத்துதல்...:

'எபோலா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானவர்களை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த நோய், மேலும் பலருக்கு பரவாமல் கட்டுப்படுத்த முடியும்' என, சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரும்பாலான, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை.

பிணங்களை தொடுவதால்...:

'எபோலா' வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் மூலமாகவே, இந்த நோய் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்கள், இறந்தவர்களின் உடல்களை தொடுவது தான், இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. எனவே, 'மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும்' என, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

[thanks]தினமலர்[/thanks]

#எபோலா #வைரஸ் #கானா #நைஜீரியா #கேமரூன் #காங்கோ #ஆப்பிரிக்கா


'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty Re: 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by ஈகரையன் Tue Aug 12, 2014 4:33 pm

வேகமாகப் பரவும் இந்த உயிர்கொல்லி பற்றி எச்சரிக்கைக்கு நன்றி சிவாண்ணே.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty Re: 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» மீண்டும் காங்கோவை மிரட்டுது புதிய 'எபோலா' வைரஸ்
» எபோலா வைரஸ் குறித்த புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
» காடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum