புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_m10காசிக்குச் செல்லக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசிக்குச் செல்லக் காரணம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 4:24 pm


முதல் முதலாக சென்ற வருடம் 500 பேருடன் காசிக்கு சென்று வந்த சத்குரு, தன் காசி பயணம் குறித்து விளக்கிய கட்டுரை இது. காசி, சத்குருவை ஈர்த்தது எப்படி? அவர் வார்தைகளிலேயே கேளுங்கள்...


என்னை வெகு நாட்களாக அறிந்துள்ள சில பேர் "சத்குரு எதற்கு காசி யாத்திரை செல்கிறார்? ஓ! வயதானதால் அவருக்கு மனது மென்மையாகி விட்டதோ," என்று யோசிக்கத் துவங்கிவிட்டனர். அது இருக்கட்டும், நான் காசிக்குச் செல்லக் காரணம் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தை இரண்டு விதங்களில் அணுக முடியும். கடவுள் எங்கோ உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் அவருக்கு வேலை இல்லாதபோது இயற்கையை உருவாக்குகிறார் என்று நம்புபவர்கள் ஒரு ரகம். கடவுள் நம் அனுபவத்தால் புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளவர். அவருக்கும் இந்த படைத்தலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வீசியெறியும் பொருட்கள்தான் இந்த பிரபஞ்சமாக உருபெற்றுள்ளது என நம்புபவர்களும் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை இரண்டாவது வகை.

எதுவும் தற்செயல் அல்ல:

படைத்தலை பார்ப்பதில் மற்றொரு வகையினரும் இருக்கிறார்கள். இவர்கள் படைப்பை 'காஸ்மோஜெனிக்' என்கிறார்கள். காஸமோஜெனிக் என்னும் வார்த்தை,, “Cosmos + Genics.” என்னும் இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவாகியுள்ளது. கிரேக்கத்தில் காஸ்மாஸ் என்றால் ஆணையிடப் பிறந்தது என்று அர்த்தம். இதனை வேறொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், நடக்கும் சம்பவங்கள் ஏனோ தானோவென்று நிகழவில்லை, அவை திட்டமிட்டபடிதான் நிகழ்கின்றது என்று சொல்லலாம். யாருடைய கைகளில் இருந்தோ தவறி விழுந்துவிடவில்லை, முறைப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். எதையும் ஆழமாய் பார்க்க தெரிந்த ஒரு மனிதர் சற்றே கவனித்தார் என்றால், இந்த படைத்தலில் எதுவுமே தற்செயலாக நிகழவில்லை என்பது தெரியும். அதுபோல், படைத்தல் ஒவ்வொன்றுமே பரிணாம வளர்ச்சி அடைவதைக் காண முடியும்.

இயற்கை தன்னுள் இருந்து, இடையூறே இல்லாமல் பரிணாம வளர்ச்சி அடைவதைக் கண்ட யோகிகள் தங்களுக்கும் அவ்வாறு நிகழ வேண்டும் என்று விருப்பப்பட்டனர். தங்களுக்கும் அவ்வாறு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். இதனால் பல அற்புதமான முயற்சிகள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது. இன்னும் சொல்லப் போனால், உலகின் வேறு சில பகுதிகளில் கூட இதற்கான முயற்சிகளில் யோகியர் இறங்கியுள்ளது தெரிகிறது.

கிரேக்க நாட்டில் உள்ள டெல்ஃபி நகரம் காசியின் சிறு பிரதிபிம்பமாய் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மிகப் பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு பிரதிபலிப்பே இயற்கை என்பதை அறிந்திருந்தனர். மனித உடலுக்கும் இது பொருந்தும் என்று புரிந்து வைத்திருந்தனர். ஆம், இயற்கையிலுள்ள சிறு துறும்பிற்கும் இந்த சாத்தியம் உண்டு. இதன் அடிப்படையில் பல விஷயங்களைச் செய்தனர்.

அண்டமும் உயிரும் சந்திக்கும் இடம்:

காசியில், ஒரு நகரத்திற்குரிய அமைப்பில், ஒருவர் வளர்வதற்கான கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி, இந்த சிறு உடலிற்கும் அகண்ட அந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பை உருவாக்குகிறது. தூசி போன்ற இந்த மனிதன் அகண்டு விரிந்த அந்த பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் மகத்தான சாத்தியத்தை, பிரபஞ்சத்துடன் இணையும் பேரானந்தத்தை, அழகை உணர வகை செய்தனர்.

இயற்கையின் வடிவியல் அமைப்புப்படி, பரந்து விரிந்த அந்த அண்டமும், மிக மிகச் சிறிய உயிரும் சந்திக்க சரியான ஒரு அமைப்பாய் உருவாகியுள்ளது காசி. பாரதத்தில், இதுபோல் பல கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தியானலிங்கமும் அப்படியொரு கருவிதான். ஆனால் நமக்கு ஏற்பட்ட சில தடைகளால், காசியைப் போல் விஸ்தாரமாக அல்லாமல், சிறிய அமைப்பாய் தியானலிங்கத்தை உருவாக்கி உள்ளோம். சிறிய அமைப்பாய் இருந்தாலும், ஒருவர் திறந்த மனதுடன் இருந்தால், எல்லையில்லா சாத்தியத்தை தியானலிங்கம் ஒருவருக்கு வாரி வழங்கும். ஏனெனில், தியானலிங்கம் என்பது ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய, உச்சபட்ச சாத்தியத்தை உணர வகை செய்யும் ஓரு கருவி.

பிரபஞ்சத்துடன் தொடர்பு:

காசி நகரத்தை இதுபோல் உருவாக்க வேண்டும் என்று நினைப்பதே ஒருவரை மூர்ச்சையடையச் செய்யும் ஒரு திட்டம்தான். பைத்தியக்காரத்தனமான கனவு அது. ஒரு காலத்தில் காசியில் 72,000 கோவில்கள் இருந்தன. நம் உடலிலும் 72,000 நாடிகள் உள்ளன. மனித உடல் மிகப் பெரிய உருவம் பெற்றால் எப்படி இருக்குமோ அதுபோல் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால்தான், "காசிக்கு போனால், உங்கள் கதை முடிந்தது," என்று பாரம்பரியமாகவே சொல்லப்பட்டு வருகிறது. உங்களுக்கு பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு ஏற்படும்போது, அந்த இடத்தைவிட்டு உங்களால் போக முடியுமா என்ன?

காசியின் வரலாறு, சிவன் இங்கு வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகச் சொல்கிறது. இதன் அடிப்படையிலேயே காசியின் புராணம் விரிகிறது. இது சிவனின் குளிர் வாசஸ்தலம். இமயத்தின் உயர்ந்த பகுதிகளில் கடுந்துறவியாக வாழ்ந்த அவர், ஒரு இளவரசியை மணம் முடித்தவுடன், அவளுக்காக சமவெளிக்கு குடிபுகுந்தார். அந்தக் காலத்தில் மிக அருமையாக, விவரிக்க முடியாத அழகுடன் காசி உருவாக்கப்பட்டு இருந்ததால், அங்கு புலம் பெயர்ந்தார்.

காசியைப் பற்றி மிக அழகான கதை ஒன்று இப்படி விரிகிறது...

வெளியேறிய சிவன் திரும்பிய கதை:

சில அரசியல் சூழ்நிலைகளால் சிவன் காசியை விட்டு போகும் சூழ்நிலை உருவானது. சிவன் இல்லாத காசி எங்கே தன் அதிர்வுகளை இழந்துவிடுமோ என்று பயந்த கடவுள்கள், அதனை சரியாக பராமரிக்க திவோதாசனை அரசனாக்கினர். ஆனால் மகுடம் சூடிய திவோதாசன் சில கட்டுப்பாடுகளை விதித்தான். "நான் அரசனாக வேண்டுமென்றால், சிவன் இந்த இடத்தைவிட்டு போக வேண்டும், அவர் இங்கு இருந்தால் என்னை ஒருவரும் அரசனாக மதிக்க மாட்டார்கள். அவரைச் சுற்றியே கூட்டம் கூடும்," என்றான்.

சிவனும், பார்வதியும் மந்தார மலைக்கு சென்றனர். ஆனால் சிவனுக்கு அங்கு வாழப் பிடிக்கவில்லை. காசிக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசையில் முதலில் தன் தூதுவர்களை அனுப்பினார். தூது வந்தவர்கள், அந்த இடத்தின் வசீகரத்தில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டனர்.

அடுத்ததாக 64 தேவலோக பெண்களை அனுப்பினார் சிவன். "எப்படியாவது அந்த அரசனை காமுகன் ஆக்கி விடுங்கள். அவனிடம் நாம் சில குற்றங்களை கண்டுபிடித்தவுடன், அவனை மூட்டை கட்டி அனுப்பிவிட்டு, நான் மீண்டும் அவ்விடத்திற்கு வருகிறேன்," என்று தன் திட்டத்தை விளக்கி அனுப்பினார். அரசனை வசியம் செய்ய வந்தவர்கள், காசியில் வாசம் செய்த தாக்கத்தால் அவ்விடத்தின் மேல் காதல் கொண்டு, தன் நோக்கத்தையே மறந்து அங்கு தங்கிவிட்டனர்.

சூரியனும் பிரம்மரும்

அதன்பின் காசிக்கு பிரவேசமானார் சூரிய தேவர். காசி மிகவும் பிடித்துப் போகவே அவரும் அங்கேயே தங்கிவிட்டார். சிவனின் திட்டத்தைவிட காசி மேல் அவருக்கு ஏற்பட்ட காதல் அதிகமாகிப் போக, தென் திசை நோக்கி சாய்வாய் அமர்ந்து அங்கேயே தங்கிப் போனார். இன்று கூட காசியில் பல ஆதித்ய கோவில்கள், சூரிய தேவருக்காகவே எழுப்பட்டுள்ளதைக் காணலாம்.

இம்முறை சிவனின் தூதராய் பிரம்மர் காசிக்குச் சென்றார். பிரம்மனுக்கும் அந்த இடம் பிடித்து போய்விட்டது. திரும்பவேயில்லை பிரம்மர். "நான் யாரையும் நம்ப இயலாது," என்ற சிவன், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான இரண்டு தேவ கணங்களை அனுப்பி வைத்தார். காசிக்கு வந்த கணங்கள் சிவனை மறந்தனர், தன் மக்களை மறந்தனர். தங்கள் எண்ணத்திலும் உணர்விலும் காசியே நிலைத்திருப்பதை உணர்ந்தனர். "சிவன் வாழ வேண்டியது காசியில்தான், மந்தார மலையில் அல்ல," என்று முடிவு செய்தனர். காசிக்கு துவார பாலகர்கள் ஆயினர்.

தன் இடைவிடாத முயற்சியில், இம்முறை கணேசருடன் இன்னொருவரை அனுப்பி வைத்தார் சிவன். காசிக்கு வந்த அவர்கள் அந்நகரத்திற்கு பெறுப்பேற்றுக் கொண்டனர். "நாம் திரும்பிச் செல்வதில் அர்த்தம் இல்லை, சிவன் இங்கு வந்தே ஆக வேண்டும்," என்று காசியிலேயே தங்கிவிட்டனர்.

முக்தி ஆசை:

எந்த சூழ்ச்சிக்கும் அடிபணியாத அரசன் திவோதாசன், எதற்கும் ஆசைப்படாத திவோதாசன், முக்தி என்னும் வலையில் விழுநதான். அவன் முக்திக்கு ஆசைப்பட்டான். முக்தி அடைந்தான். மீண்டும் சிவன் காசிககு வந்தார்.

காசியில் வாழ, மக்கள் எப்படியெல்லாம் ஏங்கினர் என்பதை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட கதைகள் இவை. காசியில் இருந்து சுகம் அனுபவிக்க அல்ல, காசி நகரம் அவர்கள் வளர்வதற்கு வழங்கிய சாத்தியத்தால்தான் அவர்கள் அங்கு வாழ ஏக்கம் கொண்டனர். காசி நகரம் மக்கள் வாழும் பகுதியாக, வாழ விரும்பும் பிரதேசமாக இருந்தது. ஒரு மனிதன் தன் எல்லைகளை உடைத்து வாழ, ஒர் உயர்ந்த தொழில்நுட்பமாய் இருந்தது. படைப்பின் சிறு துளிக் கூட படைப்பின் பிரம்மாண்டத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கருவியாய் செயல்பட்டது காசி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக