புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
429 Posts - 48%
heezulia
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
29 Posts - 3%
prajai
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_m10சிறுகதைகளும், தொடர்கதைகளும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைகளும், தொடர்கதைகளும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 11, 2014 9:34 pm

சுரேஷுக்கு வெறுப்பாகவும், எரிச்சலாகவுமிருந்தது. அவனுடைய வேலையில் பயணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், பிரம்மசாரியாக இருந்தவரை வேலை நிமித்தம் ஏற்பட்ட பயணங்கள் உற்சாகத்தையே தந்தன.

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்து விட்டது; மனைவி ஐ.டி.ஐ.,யில் வேலை செய்கிறாள். உடன் அப்பா, அம்மா இருந்தாலும், அவ்வப்போது வந்து போகும் மாமியார், மாமனார், சொந்தங்கள், மறுக்காமல் போக வேண்டிய திருமணங்கள், வரவேற்புகள் இத்யாதி என, திடீர் பயணங்களால், இந்த விசேஷங்களில் பங்கு பெறுவது தடைபடுவதால், பயணங்கள் சுரேஷுக்கு கசந்து போனது.
தொழிற்சாலை பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து, அவர்களின் பாதுகாப்பு முறைகளை சொல்லும் ஆலோசகர் வேலை. இவன் வேலை செய்த நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் மத்தியில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது; இவர்கள் தரும் ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்து வருவதால், வேலைகள் வந்து குவிந்தன.வாரம் ஒருமுறை, ஏதாவது ஒரு தொழிற்சாலையைப் பார்க்கவோ, அந்த ஊழியர்களுடன் பேசி நிலைமையை அறிந்து கொள்ளவோ பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

போன வாரம்தான் மும்பையிலுள்ள ஒரு தொழிற்சாலையை பார்வையிட்டு திரும்பி இருந்தான். இந்த வாரம் கடலூருக்குச் செல்ல வேண்டும்; அதுவும் காரில்! ஐந்து மணி நேரப்பயணம்தான் என்றாலும், நினைக்கவே ஆயாசமாக இருந்தது.
மனைவி, குழந்தை குடும்பத்துடன் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.
அங்குள்ள தொழிற்பேட்டையிலுள்ள இரண்டு, மூன்று நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், தொழிற்சாலை விருந்தினர் விடுதியில் ஒரு இரவு தங்க வேண்டிய நிலை.

ஒவ்வொரு நிறுவனத்திலும் நிறைய விஷயங்களையும், சிக்கலான தொழில்முறைகள் பற்றிய விவரங்களையும் சேகரிக்க வேண்டி இருக்கும். இத்தகைய தொடர் வேலை பளுவினால், தன் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது சுரேஷுக்குப் புரிந்தது. முப்பத்தைந்து வயதில் லேசாக ரத்த அழுத்தம் தோன்றியிருப்பதை, அவனை பரிசோதித்துப் பார்த்த டாக்டர் உறுதி செய்து, 'ஊறுகாய், அப்பளம், எண்ணெய் பலகாரங்களை சாப்பிடாதீர்கள்; சாப்பிட்டாலும் கொஞ்சம் உப்பு குறைவாகவே இருக்கட்டும்...' என்று கூறி, மாத்திரைகளை எழுதித் தந்தார்.

இதனால், பயணத்தின் போது கையில் மருந்து, மாத்திரைகளை மறக்காமல் கொண்டு போக வேண்டிய கட்டாயம்.
மனைவி அலுவலக மீட்டிங் என்று ஓடிக் கொண்டிருப்பதால், அவள் வீட்டிலிருக்கும் நேரம் குறைவு; குழந்தையை அப்பா, அம்மா பார்த்துக் கொள்வதால், அந்தக் கவலை இல்லை.
கடன் வாங்கி வீடு வாங்கியுள்ளதால், மனைவியை வேலையை விடச் சொல்ல முடியவில்லை.
என்ன வாழ்க்கை இது! எதற்காக இந்த ஓட்டம் என, ஆயாசமாக இருந்தது சுரேஷிற்கு!
அன்று மாலை, 3:00 மணிக்கு ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பு விவரங்களை சேகரிக்க, தொழிற்சாலைக்குள் நுழைந்த போது, காரணம் தெரியாத எரிச்சல் வந்தது.
அவன் சந்திக்க வேண்டிய நபர், வயதில் பெரியவராக இருந்தார். மேனேஜிங் டைரக்டர் சுரேஷை, பரமேஸ்வரனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

''இவர் மிஸ்டர் பரமேஸ்வரன்; இந்த தொழிற்சாலை இன்று வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறதென்றால், இதற்கு இவர்தான் காரணம்; ஆரம்ப காலத்திலிருந்து பணிபுரிந்து வருகிறார். பரமேஸ்வரன் சார்... இவர் சுரேஷ்; தொழிற்சாலை பாதுகாப்பு ஆலோசகர். நம்முடைய தொழிற்சாலையின் பாதுகாப்பு பற்றி ஆராய வந்திருக்கிறார்; உதவி செய்யுங்கள்,'' என்று சொல்லி சென்றார்.
பரமேஸ்வரன் உயரமாக, பருமனுடன் இருந்தார். அவரைப் பார்த்தால் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் தறுவாயில் உள்ளவர் போல் தெரிந்தது. சுத்தமாக உடையணிந்திருந்த அவர் முக மலர்ச்சியுடன் காணப்பட்டார்.

ஆனால், சுரேஷுக்கு அவரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. அவன் அனுபவத்தில், இளவயதினருடன் தான் சரியான முறையில் பேசி விஷயங்களை வாங்க முடியும்; வயதானவர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு, மூன்று கால் என, சில விஷயங்களில் பிடிவாதம் செய்வர் என, நினைத்தான்.
'ஐயோ... இந்த பெரியவரிடம் பேசி விஷயத்த வாங்கணுமா செத்தேன்...' என்று, உள்ளூற அலுத்துக் கொண்டே அவர் எதிரில் அமர்ந்தான் சுரேஷ்.
''பேக்டரியைச் சுத்திப் பாத்துட்டீங்களா?'' என்று கேட்டார் பரமேஸ்வரன்.
''இல்ல சார்,'' என்றான்.
''வாங்க, பேக்டரிய சுற்றிக் காட்டுறேன்; அப்பத்தான் உங்களுக்கு பல விஷயம் புரியும்,'' என்றார்.

அது சரிதான் என்றாலும், வெயிலில் வேர்க்க விறுவிறுக்க தொழில் கூடங்களைச் சுற்றி முடித்து வரும் போது, உடம்பு பல சமயங்களில் ஓய்ந்து விடும்.பரமேஸ்வரன், 'விருட்'டென எழுந்து, ஒரு ஹெல்மெட்டையும், மாஸ்க்கையும் எடுத்து சுரேஷிடம் கொடுத்து, ''வாங்க போகலாம்,'' என்றார் சுறுசுறுப்பாக.வேறு வழியில்லை; வேலையையும், விதியையும் நொந்தபடி கிளம்பினான் சுரேஷ். மனதிற்குள், 'எந்தக் காலத்திலோ இன்ஜினியரிங் படித்து, வேலைக்கு வந்திருக்கும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது...' என்று, மனதில் நினைத்துக் கொண்டே உடன் சென்றான்.

அவன் கேட்க கேட்க, பரமேஸ்வரன் விளக்கங்களைக் கூறிக் கொண்டே வந்தார். தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் பரமேஸ்வரனைப் பார்த்ததும், மலர்ந்த முகத்துடன் வணக்கம் தெரிவித்தனர். அவர் ஒவ்வொருவரிடமும் அன்புடன் உரையாடுவது சுரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'பெரிசு' என்று பல சிறுசுகள் பெரியவர்களை மதிக்காமல் இருப்பதைப் பார்த்துத்தான் அவனுக்கு வழக்கம்.

அவனுடைய, 'பாஸ்' கூட வயதானவர் தான்; அவ்வளவாக விஷயமில்லாத அலட்டல் ஆசாமி. பரமேஸ்வரன் அவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவராகத் தோன்றினார். முக்கால் மணி நேரம் தொழிற்சாலையையும், ரசாயனப் பொருட்கள் உள்ள கிடங்குகளையும் பார்த்துவிட்டு, பரமேஸ்வரனின் அறைக்கு வந்தபோது சுரேஷுக்கு அயர்ச்சியாக இருந்தது.''என்ன மிஸ்டர் சுரேஷ்... எங்கள் தொழிற்சாலை எப்படி இருக்கு? பாதுகாப்பு பற்றிய உங்க அபிப்ராயம் என்ன? எந்த இடத்தில் மாற்றம் தேவையோ அதை தயங்காம சொல்லுங்க,'' என்றார் பரமேஸ்வரன்.சுரேஷ் லேசாக புன்னகை செய்தவன், ''முதல்ல குடிக்றதுக்கு கொஞ்சம் குளிர்ந்த தண்ணீ கொடுங்க; அப்பத்தான் என்னால பேச முடியும்,'' என்றான்.

''ஓ... சாரி...'' என்று கூறி, அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த பியூனிடம், ''ஒரு பாட்டில தண்ணீர்... அப்பறம் என்ன கூல்ட்ரிங் இருக்கோ அதை கொண்டு வா,'' என்றார் பரமேஸ்வரன்.

தண்ணீரைக் குடித்து, குளிர்ந்த பானத்தையும் பருகும் வரையில் சுரேஷ் பேசவில்லை.
பரமேஸ்வரனும் அவனை மேற்கொண்டு எதுவும் கேட்காமல், தன் மேஜை மேல் இருந்த பேப்பர்களைப் படித்து, அவற்றில் எதையோ எழுதி, 'ட்ரே'யில் போட்டுக் கொண்டிருந்தார்.
சுரேஷ் தொண்டையைக் கணைத்து, ''சார், எனக்கு சில விவரங்கள் தேவை,'' என்றான்.
பரமேஸ்வரன் தன் வேலையை நிறுத்தி, ''சொல்லுங்க,'' என்றார்.

அவன், சில விவரங்களை கேட்டதும் அதற்கான விளக்கங்களைக் கொடுத்தார்.
சுரேஷ் மேலோட்டமாகத் தொழிற்சாலையைப் பார்த்ததில் கண்ட சில சமாசாரங்களை சொல்ல, அவைகளை குறித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு போன் வந்தது. எடுத்து பேசியவர், ''ஓ... அப்படியா சரி... நான் பாத்துக்கிறேன்,'' என்று சொல்லி போனை வைத்தார்.
''உங்களுக்கு எங்க, 'கெஸ்ட் ஹவுசி'ல் தங்குறதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டுக்கு போகும்போது, உங்கள அங்கே இறக்கிவிட்டுப் போகச் சொன்னாங்க,'' என்றார் புன்னகையுடன்.

'அட இம்சையே... இந்தப் பெரியவருடன் இன்னும் ஒரு மணி நேரத்த கழிக்கணுமா...' என்று நினைத்துக் கொண்டான் சுரேஷ்.
''உங்களுக்கு தொழிற்சாலை பற்றிய விவரங்கள் இன்னும் ஏதாவது தேவையா?'' என்று கேட்டார் பரமேஸ்வரன்.
''வேண்டாம் சார்... தேவையா இருந்தா பின்னால் கேட்கிறேன்,'' என்று சுற்று முற்றும் பார்த்தவன் கண்களில், அவருக்கு பின்னால், ஓர் அழகான இயற்கைக் காட்சி ஓவியம் தொங்குவதைப் பார்த்தான். சூரியன் உதயமாகும் காட்சி; கடலின் பரப்பிலிருந்து அது கிளம்புவதை தத்ரூபமாகக் காட்டியது.

'இதை எப்படி இவ்வளவு நேரம் கவனிக்காமல் இருந்தேன்...' என்று நினைத்தவனாக அந்தப் படத்தைக் ஆர்வமாகப் பார்த்தான் சுரேஷ். அதைக் கவனித்த பரமேஸ்வரன், அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
''சார், இது, 'ஆர்ட்-வொர்க்'கா... போட்டோ மாதிரி ரொம்ப அழகா இருக்குகே'' என்றான்.
''ஆர்ட் - வொர்க் தான்.''

''எங்க வாங்குனீங்க சார்?''
''நான் வரைஞ்சது,'' என்றார், புன்னகையுடன் பரமேஸ்வரன்.
சுரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது; இத்தனை வயதான ஒருவர், அதுவும் ஒரு இன்ஜினியர், ஓவியம் வரைபவராக இருப்பது வியப்பாக இருந்தது.

''ஓ... நீங்க ஆர்டிஸ்ட்டா?'' என்று கேட்டான்.
''அப்படி நினைச்சுக்கிட்டுத்தான் வரையுறேன்,'' என்று சொல்லி பெரிதாக சிரித்தவர், பின், தணிந்த குரலில், ''இது எனக்கு பிடிச்ச பொழுதுபோக்குகளில் ஒன்று,''என்றார்.
''இன்னொன்று?''
''புத்தகம் படிக்கிறது!''

''எனக்கும் படிக்கிறதில ஆர்வமுண்டு சார். ஆனா, நேரம் தான் கிடைக்க மாட்டேன்ங்கிறது,'' என்றான் சுரேஷ்.
''நேரம் கிடைக்காது; நாம தான் உருவாக்கணும்,'' என்று சொல்லி சிரித்தவர், ''படிப்பதும், படம் வரைவதும் என்னோட சின்ன வயசுலருந்து தொடரும் பழக்கங்கள்; என் தொழிலோ, வாழ்க்கையோ அதை மாற்றல,'' என்றார்.

''உங்கள் வயசுல இந்தத் தொழில்ல நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பாத்ததேயில்ல,'' என்றான், ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக.
''வாழ்க்கை ஒரு தொடர்கதை; அதில் பார்க்க வேண்டியதும், தெரிஞ்சுக்க வேண்டியதும் நிறைய இருக்கு,'' என்றார் பரமேஸ்வரன்.
''என்ன சார் வாழ்க்கை இது! ஒரே ஓட்டமா ஓட வேண்டி இருக்கு; குடும்பத்தோட உட்கார்ந்து சந்தோஷமா பேசி சிரிக்க முடியல,'' என்றான் எரிச்சலுடன்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 11, 2014 9:34 pm

''ஏன்... நீங்க, உங்க வேலைய விரும்பலயா?'' என்று கேட்டார் பரமேஸ்வரன்.''அப்படியில்ல...'' என்று, இழுத்தான் சுரேஷ். அவனுக்கு இதற்கு என்ன விளக்கம் தருவது என்று தெரியவில்லை. 'என்னுடைய பிரச்னை இவருக்கு என்ன தெரியும்... இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்று அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இருக்கும் பிள்ள யோடயோ, பெண்ணோடயோ போய் வாழப் போறார்...' என்று, உள்ளூர நினைத்துக் கொண்டான்.

''உங்கள் வேலையையும், வாழ்க்கையையும் ரசிக்கக் கத்துக்கங்க,'' என்றார்.
அவருடைய பேச்சு சுரேஷுக்கு அலுப்பு தட்டியது. பேச்சை மாற்றலாம் என நினைத்து, ''உங்க பையன்களும் இன்ஜினியராக தான் இருப்பாங்க இல்லயா சார்?'' என்று கேட்டான்.

''இல்ல.''
''பின்னே டாக்டரா?'' என்றான் சுரேஷ்; அவன் குரலில் லேசாக ஏளனம் தொணித்தது.
''இல்ல... எனக்கு ஒரே மகன் தான்; அவனுக்கு அறிவியல் பாடத்தில் தான் ஆர்வமிருந்தது. எம்எஸ்.சி., கெமிஸ்ட்ரி முடித்து, 'டாக்டரேட்' படிக்க கலிபோர்னியா யுனிவர்சிட்டியில இடம் கிடைச்சது...'' என்று நிறுத்தினார்.

''ஓ... யு.எஸ்.சில்., இருக்கிறாரா?''
''இல்ல; அவன் போகல,'' என்றார் பரமேஸ்வரன்.
''ஏன்?'' என்றான் வியப்புடன் சுரேஷ்.
''அவன் யு.எஸ்., கிளம்ப ஒரு வாரம் இருக்கும் போது, சாலை விபத்தில இறந்துட்டான்,'' என்றார் சலனமற்ற குரலில்.

அதிர்ந்த சுரேஷ், ''ஓ...ஐ ம் சாரி,'' என்றான் மெதுவாக.
''இது நடந்து பதினைஞ்சு ஆண்டுகளாகியிருச்சு; பெருமைக்காக சொல்லல மிஸ்டர் சுரேஷ்... என் மகன், மிகவும் புத்திசாலி. பாக்கவும் ரொம்ப அழகா இருப்பான்; நல்ல ஸ்போட்ஸ்மேன். 'புட்பால்' விளையாடுவான்; ரொம்ப நல்லா சினிமா பாட்டு பாடுவான்; கிட்டத்தட்ட ஒரு ஹீரோ மாதிரி இருந்தான். மரணம், அவனை, ஒரு நொடியில ஒண்ணுமில்லாம ஆக்கிருச்சு.''
இதைக் கேட்டதும், சுரேஷுக்கு அதிர்ச்சியாகி விட்டது.
''இத, உங்க மனைவி எப்படி தாங்கிக்கிட்டாங்க?'' என்று கேட்டான்.
''அவளால தாங்க முடியல; அதனாலதான், அவனைத் தேடி, அவன் போன ரெண்டு வருஷத்துலயே அவளும் போய் சேர்ந்துட்டா,'' என்றார்.
''சில சமயங்களில், கடவுளின் செயல்களுக்கு விளக்கமே தர முடியறதில்ல,'' என்றான் நிஜமான வருத்தத்துடன் சுரேஷ்.

''அவங்க கூட வாழ்ந்த ஒவ்வொரு நாளும், அதுதரும் நினைவுகளும் தான் எனக்கு துணையா இருக்கு; இதுக்காக நான் கடவுள பழிக்கிறதோ, அவரது செயல்களை விமர்சிக்கிறதோ இல்ல. எத்தனையோ கதைகள படிக்கிறோம்... ஒவ்வொரு கதையிலும் ஒரு சுவையும், சுகமும் இருக்கிறது இல்லயா... அது மாதிரி என் மகனுடன் வாழ்ந்த நாட்கள், சுவாரசியமான ஒரு சிறுகதை; மனைவியுடன் இருந்த அந்த மகிழ்ச்சியான காலம், ஒரு குறுநாவல்; என் வாழ்க்க மட்டும் ஒரு தொடர்கதை. அதை எழுதுற விதியோட கைகள் மாற்றியா எழுதப் போகுது?'' என்றார் தெளிவாக.

இப்போது சுரேஷ் அவரைப் பார்த்த பார்வையில், வித்தியாசம் இருந்தது. 'இவ்வளவு சோகத்தையும், சுமையையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு, ஒருத்தர் மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறார்ன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்...'என்று நினைத்தவனுக்கு தன்னுடைய குறைகளும், ஆயாசமும் அற்பமாக தோன்றியது.
பரமேஸ்வரன் அவனை கனிவுடன் பார்த்தார்.

''உங்க வாழ்க்கையையும், உங்களுடன் இருப்பவர்களையும் ரசிக்கவும், நேசிக்கவும் கத்துக்கங்க மிஸ்டர் சுரேஷ். உங்க தொழில் மூலம், எவ்வளவு நிறுவனங்களோட பாதுகாப்பை உணர்த்தி, விபத்துகளை தவிர்த்து, எத்தனையோ மனித உயிர்களை காப்பாத்துறீங்க... அத்தகைய இந்த உயர்ந்த தொழில ஆசையோடு செய்யுங்க; அப்பத்தான் அது குறித்த அலுப்போ, சலிப்போ ஏற்படாது,''என்றார்.ஏனென்று தெரியாமல், சுரேஷின் கண்களில் கண்ணீர் நிரம்பி, பார்வையை மறைத்தது.

தேவவிரதன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக