Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
+4
ayyasamy ram
ARUVI
சிவனாசான்
சிவா
8 posters
Page 1 of 1
2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மதுவால் மிகப்பெரிய சீரழிவை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. மது அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் சராசரியாக 16 ஆயிரம் பேரும், தற்கொலைகளில் சராசரியாக 17 ஆயிரம் பேரும் உயிரிழக்கிறார்கள்.
இந்த இரு அவலங்களிலும் தமிழகம் பல ஆண்டுகளாக முதலிடம் வகிப்பதற்கு முதன்மைக் காரணம் மது தான். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதைக் கடந்தவர்கள் தான் மது அருந்தினார்கள் என்ற நிலை மாறி இப்போது 12 வயது இளைஞர்கள் கூட போதைக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதும், மது அருந்துவதற்கு பணம் கிடைக்காத சூழலில், அதைத் திரட்ட மோசமான குற்றத்தை செய்யக்கூட தயங்குவதில்லை என்பதும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன.
உலக சுகாதார இயக்கம் 2 மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், மது அருந்துவோருக்கு புற்று நோய், காசநோய், நிமோனியா, கல்லீரல் இழைநார் அழற்சி உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தக் கோரிக்கையை தட்டிக் கழித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏன் கொண்டுவர முடியாது? என்பதற்காக அமைச்சர் விஸ்வநாதன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணானவையாக உள்ளன. மதுவிற்பனை மூலம் வருவாய் வர வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் அல்ல என்று கூறிய அமைச்சர், அடுத்த சில நொடிகளில் மது விற்பனை மூலம் தமிழகத்திற்கு வருவாய் வந்தே தீர வேண்டும் என்கிறார். மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரித்துவிடும் என்பதால், மதுவிலக்கு சாத்தியமல்ல என்று ஒரு கட்டத்தில் கூறிய அமைச்சர், மதுவால் கிடைக்கும் வருமானத்தை மத்திய அரசு கொடுத்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
மது விற்பனை செய்வது தீமை என்றாலும் அதன் மூலம் வருமானம் எனும் நன்மை கிடைப்பதாக அமைச்சர் கூறியுள்ள ஒற்றை வாக்கியமே, பணத்திற்காக எதையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கும் என்பதை உணர்த்திவிடும். அரசுக்கு வருமானம் எனும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் மீது மது நஞ்சு எனும் பெரும் தீமையை திணிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. மதுவிலக்குத் தொடர்பான விவாதத்தின் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி ஆலோசனை வழங்குமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் கோரியிருந்தால் அவரது சமூக அக்கறையை நம்மால் பாராட்ட முடியும். ஆனால், அவரோ,‘‘மது மூலம் வருவாயும் வர வேண்டும்; சமூகமும் விழிப்புணர்வும் பெற வேண்டும். அதற்கேற்ப ஆலோசனை வழங்குங்கள்’’ என்று கூறியதன் மூலம் தமது மன ஓட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். இப்படிப்பட்டவரிடம் மது விலக்கை எதிர்பார்ப்பது கம்சனிடம் கருணையை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானதாகும்.
ஒருவேளை வருமானம் தான் முக்கியமென்றால் அதை ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் பா.ம.க. தெரிவித்திருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கையை பா.ம.க. வெளியிட்டிருக்கிறது. அதை செயல்படுத்தினாலே தமிழகத்தில் மது ஒழிந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராய விற்பனை பெருகிவிடும் என்பதும் சொத்தையான வாதம் தான். அரசு நினைத்தால் கள்ளச்சாராய விற்பனையை அடியோடு ஒழித்துவிடலாம். 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மலிவுவிலை மதுவை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தார்.
அதே போன்ற உத்தரவை இப்போதும் பிறப்பித்து, கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்துவிட முடியும். அவ்வாறு செய்யாமல் கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி மதுவிலக்கிற்கு தடை போட முயல்வதன் மூலம், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த இயலாது என்று கூறி முதல்வரையும், காவல்துறையையும் இழிவு படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் மதுவிலக்கு குறித்து சரியான புரிதல் அமைச்சருக்கு இல்லை. மின்துறை அமைச்சராகவும் இருக்கும் விஸ்வநாதன், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பதிலாக மின்வெட்டை நடைமுறைப்படுத்துகிறார்; மதுவிலக்குக்கு அமைச்சராக இருக்கும் இவர் மதுவை ஒழிப்பதற்கு பதில் ஊக்குவிக்கிறார். இவரை மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் என்று அழைப்பதைவிட மின்வெட்டு மற்றும் மதுவிற்பனை அமைச்சர் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
மதுவின் தீமைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மற்ற அனைவரையும் விட நன்றாக தெரியும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். மதுவின் தீமைகளை நன்றாக அறிந்திருந்தும் மதுவை விற்பதைவிட பெரிய பாவச்செயல் எதுவும் இருக்க முடியாது. எனவே, மதுவிலக்கு தொடர்பாக தமிழக மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் உடனடியாக மதுவிலக்கை அரசு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், பா.ம.க. தற்போது நடத்தும் வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Re: 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
2016 ஆம் ஆண்டு ஓர் சிறந்த ஆண்டாக அமையும்.. போற்றலாம்...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ARUVI- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013
Re: 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
ஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை.
முதலில் ஆசைப்பட வேண்டும்.
-
அப்படின்னு சத்குரு சொல்லியிருக்காரு...
-
2016 ல் பா ஜ க தான் தமிழ்நாட்டில் ஆட்சி
அமைக்கும்னு ஒருத்தர் ஆசைப்படுகிறார்...
-
மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு
இருக்கணும்னு நமக்கும்தான் ஆசை..
பொறுத்திருந்து பார்ப்போம்..
Re: 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
போகாத ஊருக்கு வழி தேடி போனா மாதிரிதான் இந்த கதையும்
12 வருடமா தமிழகம் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் பட்டியலில் முதலிடம்.
என்ன கேவலம் இது.
இதுல மது விற்ப்பனையில் வரும் வருமானத்தை மத்திய அரசு தர முன் வந்தால் 100% மது ஒழிப்பாம்
நல்ல பேசுறாங்க.
தமிழகம் தண்ணீருக்காக இன்றும் தன்னிறைவு பெறவில்லை ஆனால் அந்த தண்ணீருக்கு???
12 வருடமா தமிழகம் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் பட்டியலில் முதலிடம்.
என்ன கேவலம் இது.
இதுல மது விற்ப்பனையில் வரும் வருமானத்தை மத்திய அரசு தர முன் வந்தால் 100% மது ஒழிப்பாம்
நல்ல பேசுறாங்க.
தமிழகம் தண்ணீருக்காக இன்றும் தன்னிறைவு பெறவில்லை ஆனால் அந்த தண்ணீருக்கு???
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
தமிழக இளைஞர்களை 24 மணிநேரமும் மதுவின் தாக்கத்திலேயே வைத்திருந்தால் தான் முட்டாளாகவே இருப்பார்கள் , தங்களால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியும் என்று நினைக்கும் அரசியல் வியாதிகள் யார் மாறினாலும் இந்நிலை மாறாது
Re: 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
தீயவழியில் ஈட்டும் எப்பொருளும் நன்மையைதராது பார்ப்போம்......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
அறிக்கை நாயகர் no.2 , எந்த அடிப்படையில் இதை சொல்லுகிறார் ? தெரிய வில்லை !!
2016இக்கு அதிக தூரம் இல்லை .
ரமணியன்
2016இக்கு அதிக தூரம் இல்லை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|