புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
91 Posts - 61%
heezulia
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
1 Post - 1%
viyasan
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
19 Posts - 3%
prajai
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொது அறிவு வரலாறு  Poll_c10பொது அறிவு வரலாறு  Poll_m10பொது அறிவு வரலாறு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு வரலாறு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:01 pm

பொது அறிவு வரலாறு  Empty பொது அறிவு பொது அறிவு வரலாறு  Empty வரலாறு



சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3250 முதல் 2750 வரை.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்.

மொஹஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு ‘இறந்தவர் மேடு’ என்று பொருள்.

சிந்து சமவெளி எழுத்துமுறை, ‘சித்திர எழுத்து முறை’.

சிந்து சமவெளி மக்கள் ‘பசுபதி’ என்ற ஆண் தெய்வத்தையும் ‘அன்னை’ என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர்.

சிந்து சமவெளி மக்கள், உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அறிந்திருக்கவில்லை.

சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவில் தோன்றியது ஆரிய நாகரிகம்.

ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுவது: வேதங்கள், உபநிடதங்கள்.

வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண என 4 வகை.

வேதங்களில் பழைமையானது ரிக் வேதம்.

ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.

யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்திய இசைக் கலைக்கான தொடக்கம், சாம வேதத்தில் காணப்படுகிறது.

அதர்வண வேதம் பில்லி, சூனியம் பற்றிக் குறிப்பிடுகிறது.

உபநிடதங்கள் மொத்தம் 108.

ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சப்த சிந்து பகுதியில் குடியேறினார்கள்.

ஆரியர்கள், தங்கள் தலைவரை ‘ராஜன்’ என்று அழைத்தனர்.

ராஜனுக்கு அறிவுரை கூற, ‘சபா’ என்ற மூத்தோர் சபையும், ‘சமிதி’ என்ற பொது சபையும் இருந்தன.

முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.

ரிக் வேத காலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.

பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது.

ஆரியர்கள், இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.

மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கி.மு. 326ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர் போரஸ் என்ற புருஷோத்தமன்.

மௌரிய வம்சத்தைத் துவக்கியவர் சந்திரகுப்த மௌரியர்.

சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு சாணக்கியர்.

அலெக்ஸாண்டரின் படைத் தலைவரான செலுக்கஸ் நிகேடரை சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார்.

மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா.

சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்.

பிந்துசாரரின் மகன், சக்கரவர்த்தி அசோகர்.

கி.மு. 216ல் நடந்த கலிங்கப்போரில் அசோகர் கலிங்கத்தை வென்றார்.

கலிங்கப் போர் நிகழ்வுகளால் மனம் மாறிய அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்.

அசோகரைப் புத்த மதத்துக்கு மாற்றிய புத்த பிட்சு: உபகுப்தா.

மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள்: சாரநாத் சிம்மதூண், சாஞ்சி ஸ்தூபி.

சாணக்கியர் எழுதிய நூலான ‘அர்த்த சாஸ்திரம்’ அரசு நிர்வாகம் பற்றியது.

அசோகர் தனது கல்வெட்டுகளில் ‘தேவனாம்பிரிய பிரியதர்ஷி’ என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.

‘மாஸ்கி’ என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் மட்டுமே அசோகர் என்ற பெயர் காணப்படுகிறது.

கி.பி. 78ல் அரசேற்ற குஷான அரசரான கனிஷ்கர், சக ஆண்டைத் தொடங்கினார்.

கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.

சுஷ்ருதர், ‘பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

கனிஷ்கரின் தலைநகர் புருஷபுரம், இப்போது பெஷாவர்.

கனிஷ்கர், 4வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.

கனிஷ்கர் கால புத்தமதம் மஹாயானம்.

கனிஷ்கர் காலத்தில் அஷ்வகோஷர் ‘புத்த சரிதம்’ நூலை எழுதினார்.

கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைத்தனர்.

குப்த வம்சத்தின் முதல் அரசர், ஸ்ரீகுப்தர்.

முதலாம் சந்திரகுப்தர் ‘மஹாராஜாதிராஜா’ என சிறப்புப் பெயர் பெற்றார்.

‘இந்திய நெப்போலியன்’, ‘கவிராஜா’, ‘சாஹாரி’ என்ற பட்டப் பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.

இரண்டாம் சந்திரகுப்தர் ‘விக்கிரமாதித்யர்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

‘நவரத்தினங்கள்’ என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்தனர்.

குப்தர் காலம் ‘இந்தியாவின் பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது.

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் குமார குப்தர்.

குப்தர்கால ஓவியங்கள் மஹராஷ்டிராவில் ஒளரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘தியோகார்’ என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதாரக் கோயில், குப்தர் காலத்தைச் சேர்ந்தது.

‘மெஹருலி’ என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச்சின்னங்களில் ஒன்று.

குப்தர்காலம் இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சி காலமாகும்.

வர்த்தமான அரசர்களில் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.

ஹர்ஷரின் தலைநகரம் தானேஷ்வர்.

'ரத்னாவளி', 'பிரியதர்ஷிகா', 'நாகநந்தம்' ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.

ஹர்ஷரின் அவைப்புலவரான பாணபட்டா, 'ஹர்ஷசரிதம்', 'காதம்பரி' ஆகிய நூல்களை எழுதினார்.

சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷரின் அவைக்கு வந்தார்.

ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.

யுவான் சுவாங் எழுதிய பயண நூல் ‘சியூக்கி’.

ஹர்ஷரை ‘சகோலதாரபதநாதா’ என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.




பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:05 pm




தென்னிந்திய மன்னர்கள்

பண்டைய தமிழகத்தை ஆண்ட அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள்.

சோழர்களின் தலைநகர்: உறையூர்; துறைமுகம்: காவிரிப்பூம்பட்டினம்.

சோழர்களின் சின்னம்: புலி; அடையாளப்பூ: அத்தி.

சேரர்களின் தலைநகரம்: வஞ்சி; துறைமுகங்கள்: தொண்டி, முசிறி.

சேரர்களின் சின்னம்: வில், அம்பு; அடையாளப்பூ: பனம்பூ

சேர அரசர்களில் தலைசிறந்தவன்: சேரன் செங்குட்டுவன்.

பாண்டியர்களின் தலைநகரம்: மதுரை; துறைமுகம்: கொற்கை.

பாண்டியர்களின் சின்னம்: மீன்; அடையாளப்பூ: வேம்பு.

பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்.

பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள்: சாதவாகனர்கள்.

சாதவாகனர்கள், ‘ஆந்திர புத்திரர்கள்’ என்றழைக்கப் படுகின்றனர்.

சேரர்கள் ‘கேரள புத்திரர்கள்’ எனப்படுவர்.

சாதவாகனர்களின் தலைநகரம்: பிரதிஸ்தான்.

சாளுக்கியர் நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது ‘வராகன்’ எனப்பட்டது.

சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, புள்ளளூர் போரில் மகேந்திரவர்ம பல்லவரைத் தோற்கடித்தார்.

சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்ம பல்லவருக்கு ‘வாதாபி கொண்டான்’ என்ற பெயர் வந்தது.

நரசிம்மவர்மர், மற்போரில் சிறந்து விளங்கியதால் ‘மாமல்லன்’ என்றழைக்கப்படுகிறார்.

பல்லவர்களின் தலைநகரம்: காஞ்சிபுரம்; சின்னம்: நந்தி.

மகேந்திரவர்மர் கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.

மகேந்திரவர்மரை சைவ சமயத்துக்கு மாற்றியவர்: அப்பர்.

மகேந்திரவர்மர் கட்டியதுதான் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில்.

மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயர்கள்: சித்திரகாரப்புலி, விசித்திர சித்தர்.

பல்லவர்கால ஓவியங்கள் காணப்படும் ‘சித்தன்னவாசல்’ புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர்: நரசிம்மவர்ம பல்லவர்.

மகேந்திரவர்மர் எழுதிய நூல்: 'மத்த விலாச பிரகடனம்'.

பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் ‘காவ்யதரிசனம்’ என்ற நூலை எழுதினார்.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:07 pm

டெல்லி சுல்தான்கள் ஆட்சி


இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர், முகமது பின் காசிம்.

முகமது பின் காசிம் கி.பி. 712ல் சிந்து மீது படையெடுத்தார்.

முகமது கஜினி இந்தியாவின் மீது கி.பி. 1000 1025வரை பதினேழு முறை படையெடுத்தார்.

முகமது கஜினி கடைசியாகக் கொள்ளையிட்டது, குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில்.

முகமது கஜினியோடு இந்தியா வந்த பெர்சிய அறிஞர் அல்பெரூனி.

1191ல் இந்தியாமீது படையெடுத்த கோரி முகமதுவை, ராஜபுத்திர அரசர் பிரிதிவிராஜன் தோற்கடித்தார்.

1192ல் முகமது கோரி, பிரிதிவிராஜனைத் தோற்கடித்து முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவினார்.

முகமது கோரி, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை, தன் அடிமையான குத்புதீன் ஐபெக்கிடம் தந்தார்.

குத்புதீன் ஐபெக்கின் வம்சம், அடிமை வம்சம் என்று அழைக்கப்படுகிறது.

அடிமை வம்சத்தின் முதல் அரசரான குத்புதீன் ஐபெக், டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கினார்.

குத்புதீன் ஐபெக், ஏழைகளுக்கு லட்ச லட்சமாக வாரி வழங்கியதால் ‘லக்பக்ஷ்’ என அழைக்கப்பட்டார்.

குத்புதீன் ஐபெக், ‘போலோ’ விளையாடும்போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்.

குத்புதீன் ஐபெக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்த இல்டுமிஷ் குதுப்மினாரைக் கட்டி முடித்தார்.

துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தான், இல்டுமிஷ்.

இல்டுமிஷ் ஆட்சியின்போது மங்கோலியர் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

இல்டுமிஷ§க்குப்பின் அவரது மகள் சுல்தானா ரஸியா ஆட்சிக்கு வந்தார்.

டெல்லியை ஆண்ட முதல் பெண், சுல்தானா ரஸியா.

சுல்தானா ரஸியாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் கியாசுதீன் பால்பன்.

அடிமை வம்சத்து அரசர்கள் மாமலுக்குகள் என அழைக்கப்பட்டனர்.

அடிமை வம்சத்துக்குப் பின் கில்ஜி வம்ச ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்தார்.

ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார்.

அலாவுதீன் கில்ஜி, அங்காடிச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

சிரி நகரை நிர்மாணித்தவர் அலாவுதீன் கில்ஜி. « அலாவுதீன் கில்ஜியின் அவையில் இருந்த பாரசீகக் கவிஞர், அமீர் குஸ்ரு.

அமீர் குஸ்ரு ‘இந்தியாவின் கிளி’ என்றழைக்கப்பட்டார்.

சிதார் இசைக்கருவி, அமீர் குஸ்ருவால் கண்டுபிடிக்கப்பட்டது.

அமீர் குஸ்ரு ‘லைலா மஜ்னு’ கதையைப் பாரசீக மொழியில் எழுதினார்.

கில்ஜி வம்சத்துக்குப் பின் துக்ளக் வம்சம் ஆட்சிக்கு வந்தது.

முகமது பின் துக்ளக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் பெரோஸ் ஷா துக்ளக்.

துக்ளக் வம்ச நஸ்ருதீன் முகமது ஆட்சிக்காலத்தில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

துக்ளக் வம்சத்துக்குப் பின் தைமூரின் பிரதிநிதியால் தோற்றுவிக்கப்பட்ட சையது வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.

சையது வம்ச அரசர்கள், நபிகள் நாயகத்தின் நேரடி சந்ததியினர் என்று சொல்லப்படுகிறது.

சையது வம்சத்திற்குப் பின் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லோடி வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.

லோடி வம்சத்து முதல் அரசரான பகலுல் லோடி, டெல்லியை ஆண்ட முதல் ஆப்கான்.

பகலுல் லோடிக்குப் பின் சிக்கந்தர் லோடி, ஆக்ராவை நிர்மாணித்தார்.

லோடி வம்சத்துக் கடைசி அரசர் இப்ராஹிம் லோடி.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:07 pm

விஜயநகர, பாமினி அரசுகள்


தென்னிந்தியாவில் ஹாசன் கங்கு பாமினியால் பாமினி அரசு உருவானது.

தலைசிறந்த விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள் ‘அஷ்டதிக்கஜங்கள்’.

பிஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷாவின் கல்லறை, கோல்கும்பாஸ்.

கோல்கும்பாஸ் கூரை, உலகின் பெரிய கூரைகளில் ஒன்று.

ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைக் கட்டியவர்கள் குதுப் ஷாஹி அரசர்கள்.

அகமத் நகரை ஆண்ட பெண்ணரசி சாந்த் பீவி, அக்பரை எதிர்த்துப் போரிட்டவர்.

ஹைதராபாத் நகரம் 1549ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:10 pm

மொகலாயர் ஆட்சி


மொகலாய வம்சத்தை ஸ்தாபித்த பாபர், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்.

செங்கிஸ்கான், தைமூர் ஆகிய இருவருக்கும் உறவினர் பாபர்.

பஞ்சாபைச் சேர்ந்த தௌலத்கான் லோடி, போரிடுவதற்காக பாபரை அழைத்தவர்.

பாபரின் சுயசரிதை பாபர் நாமா.

பாபருக்குப் பின் ஹூமாயூன் ஆட்சிக்கு வந்தார்.

ஹூமாயூன், நாட்டை இழந்து தவித்தபோது அமரக்கோட்டையில் அக்பர் பிறந்தார்.

ஹூமாயூன், இரான் அரசரின் உதவியால் ஆட்சியை மீட்டார்.

ஹூமாயூன் தனது நூலகத்தின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

ஹூமாயூன் நாமா என்ற நூலை அவரது சகோதரியான குல்பதன் பேகம் எழுதினார்.

தாய்மாமா பைராம்கான் உதவியுடன் அக்பர் தனது 13வது வயதில் ஆட்சிக்கு வந்தார்.

2ம் பானிபட் போரில் (1556) அக்பர், ஹெமுவைத் தோற்கடித்தார்.

அக்பரின் அவையை அலங்கரித்த அறிஞர்கள் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

அக்பரின் அவையிலிருந்த அபுல் பாசல், 'அக்பர் நாமா', 'அயனி அக்பரி' என்ற நூல்களை எழுதினார்.

அக்பரின் அவையிலிருந்த துளசிதாஸர், இந்தியில் எழுதிய ராமாயணத்தின் பெயர் 'ராமசரித மானஸ்'.

அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர், தான்சேன்.

அக்பரின் ராணுவ அமைச்சர் ராஜா மான்சிங்.

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜா தோடர்மால்.

அக்பரின் புத்திசாலி அமைச்சர் பீர்பால்.

அக்பர் தோற்றுவித்த மதம் 'தீன் இலாஹி'.

இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட ‘ஜசியா’ வரியை அக்பர் நீக்கினார்.

அக்பருடைய ராணுவ நிர்வாக முறைக்கு பெயர் மன்சப்தாரி முறை.

அக்பர் தக்காண வெற்றியைக் கொண்டாட பதேபூர் சிக்ரி நகரை நிர்மாணித்து அங்கு புலந்த் தர்வாஸா எனும் வாசலை அமைத்தார்.

அக்பருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீரின் இயற்பெயர் சலீம்.

ஜஹாங்கீரை மணந்த நூர்ஜஹானின் இயற்பெயர் மெஹருன்னிஸா.

ஓவியக்கலை ஜஹாங்கீர் காலத்தில் உச்சநிலையில் இருந்தது.

ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன்சிங், ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவிலேயே பெரிய மசூதி ஷாஜஹான் கட்டிய ஜும்மா மசூதி.

தாஜ்மஹாலை வடிவமைத்தவர் உஸ்தாத் இசா என்ற கட்டடக்கலை வல்லுநர்.

ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் இயற்பெயர் அர்ஜுமான் பானுபேகம்.

ஒளரங்கசீபின் இயற்பெயர் ஆலம்கீர்.

ஒளரங்கசீப் ‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்டார்.

ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ்பகதூர், ஒளரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்.

ஜசியா வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தவர், ஒளரங்கசீப்.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 24, 2010 8:11 pm

இதெல்லாம் எனக்கு தெரியும் தல ,,, சிரிப்பு ,,,,

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:12 pm

ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன்.

ராஜராஜ சோழனின் மூத்த சகோதரர் ஆதித்ய கரிகாலன்.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டியது ராஜராஜ சோழன்.

கங்கைகொண்ட சோழபுரத்தையும், அங்கு ஒரு கோயிலையும் நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலும் 'UNESCO HERITAGE’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மராட்டிய மன்னன் சிவாஜியின் தந்தை, சாஜி போன்ஸ்லே; தாயார், ஜீஜா பாய்.

சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ்.

சிவாஜியின் மந்திரிசபைக்கு 'அஷ்டப்ரதான்' என்று பெயர்.

'மோடி (Modi)’ என்பது மராட்டியர்களின் எழுத்து முறை.

மராட்டியர் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட வரிகள்: சௌத், சர்தேஷ்முகி.

சிவாஜியைப் பிடிக்க ஒளரங்கசீப்பால் அனுப்பப்பட்டவர் செயிஸ்டகான்.

சிவாஜியை பிடிக்க பிஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்டவர் அப்சல்கான்

முகலாயர்களின் நகரமான சூரத்தை, சிவாஜி இருமுறை கொள்ளையடித்தார்.

சிவாஜியை ஒளரங்கசீப் சிறை வைத்த இடம் ஆக்ரா.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 24, 2010 8:13 pm

ரபீக் wrote:இதெல்லாம் எனக்கு தெரியும் தல ,,, சிரிப்பு ,,,,

தகவலுக்கு நன்றி

மாமா அடுத்த வருஷம் மார்ச்ல கிராம நிர்வாக அலுவலர் பரீட்சைக்கு உதவியா இருக்கும் மாமா இந்த தகவல் எல்லாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:15 pm


இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட பத்திரிக்கைகளும் அவற்றைத் தொடங்கியவர்களும்
!


யங் இந்தியா (Young India) - காந்திஜி.

நியூ இந்தியா (New India) - அன்னிபெசன்ட்.

இந்தியா பாரதியார்.

கேசரி, மராட்டா பாலகங்காதரதிலகர்.

நேஷனல் ஹெரால்ட் (National Herald) ஜவஹர்லால் நேரு.

இண்டிபென்டன்ட் (Independent) மோதிலால் நேரு.

பெங்காலி (Bengalee) - சுரேந்திரநாத்பானர்ஜி.

தி ஹிண்டு (The Hindu) சுப்பிரமணிய ஐயர்.

அல்ஹிலால் (Al Hilal) அபுல்கலாம் ஆஸாத்.

நவசக்தி, தேசபக்தன் திரு.வி.க.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 8:17 pm

சுதந்திரப் போராட்டத்துக்கு முற்பட்ட காலத்தில் சமூக, சமய விழிப்புணர்வைத் தோற்றுவித்த இயக்கங்களும் அவற்றை தொடங்கியவர்களும்!


பிரம்ம சமாஜம் ராஜா ராம்மோகன் ராய்.

ஆரிய சமாஜம் சுவாமி தயானந்த சரஸ்வதி.

பிரார்த்தன சமாஜம் ஆத்மாராம் பாண்டுரங்.

சத்யசோதக் சமாஜம் ஜோதிபாய் பூலே.

ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விவேகானந்தர்.

தியாசபிகல் சொஸைட்டி ஜெனரல் ஆல்காட், மேடம் பிளாவெட்ஸ்கி.

தியாசபிகல் சொஸைட்டியின் இந்தியக் கிளை (அடையாறு) அன்னிபெசன்ட்.

இந்தியா சேவா சங்கம் (Servents of India Society) - கோபாலகிருஷ்ண கோகலே.

சாரதாசதன், கிருபாசதன் பண்டித ரமாபாய்.

ஒளவை இல்லம் சகோதரி சுப்புலட்சுமி.

சுதந்திர போராட்ட காலத்திலும் அதற்கு பின்னரும் தோன்றிய சிறந்த கல்வி மற்றும் கலாசார மையங்கள்

காசி இந்து பல்கலைக்கழகம் மதன்மோகன் மாளவியா.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சர். சையது அகமதுகான்.

விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ரவீந்திரநாத் தாகூர்.

தக்கான் கல்விக் கழகம் பாலகங்காதர திலகர்.

DAV பள்ளிகள் லாலா லஜபதி ராய்.

கலா ஷேத்ரா ருக்மணி தேவி அருண்டேல்.

பாரதிய வித்யாபவன் கே.எம்.முன்ஷி.

கலாமண்டலம் வள்ளத்தோள் நாராயண மேனன்.

ஜமியா மிலியா இஸ்லாமியா ஜாகீர்ஹூசைன், ஹக்கீம் அஜ்மல்கான்.

ஆசியாட்டிக் சொஸைட்டி வில்லியம் ஜோன்ஸ்.



பொது அறிவு வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக