Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
4 posters
Page 1 of 1
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
இந்தியாவிலேயே கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் தமிழர்கள் என்பதே இன்றைய இளைய சந்ததியினருக்கு உரைக்கப்படாத செய்தி.
தமிழ் படிப்பவர்கள் குறைந்தும், வரலாறு படிப்பவர்கள் அதை விடக் குறைந்தும் வருவதால், இந்த செய்தியை இந்தியாவில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் ஒரு வணிகப்புத்தகமாக வெளியிட்ட பெங்குவின் பதிப்பகத்திற்கும், இந்திய வணிகக் கதை என்ற தலைப்பில் இதை அனுமதித்து முன்னுரை எழுதிய குருசரண் தாஸிற்கும், நூல் ஆசிரியர் கனகலதா முகுந்திற்கும் நன்றிகள் முதலில்.
2000 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் கிழக்குக்கரையில் துறைமுகங்கள் அமைத்து ரோமாபுரி, சீனா மற்றும் சகல கிழக்காசிய நாடுகளிலும் வணிகம் செய்திருக்கிறான் தமிழன். காஞ்சி, மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, கரூர், தொண்டி என நம் எல்லா ஊர்களும் சொல்ல முடியாத அளவு சீரும் சிறப்புமாக இருந்திருக்கின்றன. மணிமேகலையில் காஞ்சி நகரில் தங்க சங்கிலிகள் போட்ட குதிரைகள் நின்றதாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.
பொன்னும் பொருளும் பண்டமாற்று செய்த காலத்தில் ஐரோப்பிய நாட்டு தங்கம் இந்தியாவிற்கு வர ஆரம்பித்திருக்கின்றது. வேறெதுவும் வேண்டா வண்ணம் வாழ்ந்த தமிழன் அதிகம் பரிவர்த்தனை செய்தவை தங்கம், வைரம், நவரத்தினக்கற்கள் இவைகளைத்தான். மற்றதெல்லாம் இங்கு தட்டுப்பாடின்றி கிடைத்ததால், ஆபரணத்திற்கு தேவையான உலோகங்கள் மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டன.
இன்றைய மதிப்பீட்டில் உலகில் உள்ள தங்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளதாகச் சொல்கிறார்கள். நம்ப சிரமமான இந்த தகவலை குருசரண் தாஸின் முன்னுரையில் பத்மனாபசுவாமி கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ஆகும் என்று படித்தவுடன் நம்பத் தோன்றுகிறது.
கோயிலைச் சுற்றிய வாழ்க்கை முறையை நம் முன்னோர்கள் நிறுவி, அதைச் சுற்றியே அனைத்து சமூக-பொருளாதாரக்கூறுகளையும் கட்டமைத்திருக்கிறார்கள். கோயில் நிலம், கோயில் நகை, கோயில் மாடு, கோயில் தெப்பம், கோயில் நிர்வாகம் இப்படித்தான் கட்டிக் காத்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றி வணிகம் செய்திருக்கிறார்கள். நகரம் என்ற கட்டமைப்பு தமிழர்களின் பங்கீடு.
எல்லா நகரங்களிலும் பெரிய கடை வீதி என்று ஒன்று இருந்தது. இன்றும் இருக்கிறது. துறை சார்ந்த தெருக்களும் அங்காடிகளும் கடைகளும் இருந்தன. விவசாயம் செய்தவர்கள் அனைவரும் வேளாளர்கள். வணிகர்கள் எல்லாம் செட்டிகள். இது சாதி அடையாளம் அல்ல. தொழில் அடையாளம். பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகு தான் சாதி அடையாளங்களும் உப பிரிவுகளும் உறுதியடைகின்றன.
எல்லா கலைகளும் செழித்திருக்கின்றன. சென்னிமலையில் உருக்கு செய்து ரோமாபுரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆலங்குளத்து மண் வேலைப்பாடுகளில் ரோமானிய தாக்கம் தெரிகிறது. தமிழ் வரலாறு நம் தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் வந்தவர்கள் எழுதிய பயண நூல்கள் வழியாகவும் தான் தெரிகின்றது. வெள்ளம் கொண்டுபோன மிச்சம் தான் நமக்கு கிடைத்துள்ளது என்பது எவ்வளவு பெரிய சோகம்?
அசோகர் கால கல்வெட்டுகளிலேயே தமிழர் பற்றிய குறிப்புகள் இருந்தன. பின் சங்க இலக்கியங்கள் அதைத் தெரிவித்தன. ஜைன- புத்த மரபுகள் தலை தூக்கிய காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் இவை ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. பின்னர் பல்லவர்கள் ஆண்டார்கள். இலங்கையை பிடித்தான் பல்லவன்.
ஆனால் அதிக ஆண்டு காலம் நல்லாட்சி செய்தது சோழ வம்சமே. பத்தாம் நூற்றாண்டில் இலங்கையை பலமுறை வென்று, அதை சோழ மாநிலமாகவும் அறிவித்த காலமும் உண்டு. கடாரம் கொண்டான். வங்கம் வழி சென்று கங்கை கொண்டான். கம்புஜாவில் (இன்றைய கம்போடியா) அங்கோர் வாட் கோயில் கட்டினான். அனைத்திற்கும் மேலாக நல்லாட்சி புரிந்தார்கள். குறிப்பாக மக்கள் தங்கள் தொழிலை கவலையின்றி மேற்கொள்ளும் நிலையை அளித்தார்கள். எல்லா வணிகமும் தழைத்தன. உலகளாவிய வணிகம் செய்த முதல் குடி தமிழ்க் குடி என்ற பெருமை கிடைத்தது.
உணர்ச்சி வசப்படாமல் படிக்க இயலவில்லை. 2,000 ஆண்டுகளுக்கு முன் உலகிற்கு வழி காட்டியவர்கள் இந்த ஆயிரம் ஆண்டுகளில் நிலை தவறி தாழ்ந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. முதலில் மொகலாய சாம்ராஜ்யம், பின்னர் கிழக்கிந்தியக் கம்ெபனி என எதுவும் தமிழர் வணிகத்தை வேரூன்ற விடவில்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர். சாதி வேரூன்றியது. அந்நியர் ஆட்சிகளுக்கும், தாக்கத்திற்கும் முழுவதும் இரையானோம்.
இந்தப் புத்தகம் தமிழகத்தின் பண்டை காலத்து வணிக சூழலை நியாயமாக பதிவு செய்துள்ளது. எல்லா சான்றுகளும் முறையாகக் காட்டப்பட்டு தமிழர் அல்லாதவர்கள் படித்தாலும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. ஒரு பொருளாதாரப் பேராசிரியர் எழுதியதால் வணிகத் தகவல்களை முறையாக எழுதியிருக்கிறார்.
மார்வாடிகள் பற்றிய புத்தகத்தில் இன்றைய மார்வாடிகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. ஆனால் இது வெறும் வரலாற்று ஆவணமாக உள்ளது. இன்றைய வணிகத்தில் ஜெயித்த தமிழர்களைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியிருக்கலாம். நம் முருகப்பா குழுமமும், டி.வி.எஸ் குழுமமும் சாதாரண சாதனைகளையா செய்திருக்கின்றன? வியாபாரத்தில் ஜெயித்த முதல் தலைமுறை தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
அதேபோல நகரத்தார் சமூகம் பற்றியும் இன்னமும் விரிவான குறிப்புகள் கொடுத்திருக்கலாம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை பற்றியெல்லாம் பிரமாதமாகச் சொல்லியிருக்கலாம். இவையெல்லாம் என் எதிர்பார்ப்புகள்தாம். குறைகள் என்று சொல்ல முடியாது. தங்கள் வேர்கள் தெரியாமல் எம்.பி.ஏ படிப்பவர்கள் இதைப் படித்தால் நிச்சயம் தன்னம்பிக்கையுடன் புதிதாக யோசிப்பார்கள்.
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் போலி அறிவு ஜீவிகளுக்கு நிச்சயம் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம். (தி இந்து)
Re: தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
தமிழர்கள் உலகை ஆண்ட வரலாறு இப்பொழுது தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. கடாரம் கொண்ட ராஜராஜ சோழனின் வரலாற்றுச் சின்னம் கூட மலேசியாவில் அழிக்கப்பட்டுவிட்டது.
காரணம் ஒரு இந்து அரசன் நம் நாட்டை ஆண்டான் என்ற வரலாறு இருக்கக்கூடாது என்ற வெறித்தனம் என்றே கூறலாம்.
காரணம் ஒரு இந்து அரசன் நம் நாட்டை ஆண்டான் என்ற வரலாறு இருக்கக்கூடாது என்ற வெறித்தனம் என்றே கூறலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
[quote="சிவா"]கடாரம் கொண்ட ராஜராஜ சோழனின் வரலாற்றுச் சின்னம் கூட மலேசியாவில் அழிக்கப்பட்டுவிட்டது. மேற்கோள் செய்த பதிவு: 1078255[/url]
மலேசியா வரை ஏன் போகவேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் சோழ மன்னன் இலங்கையில் முடி சூட்டிக்கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்த்தது. வைகோ அவர்கள் இலங்கை பிரச்சனை பற்றி பேசும் போது இந்த ஓவியத்தை சுட்டிகாட்டி பேசினாராம். மறுநாளே அந்த ஓவியம் அழிக்கப்பட்டு விட்டதாம். இத்தகவலை வைகோ அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் பகிர்ந்து கொண்டார்.
மலேசியா வரை ஏன் போகவேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் சோழ மன்னன் இலங்கையில் முடி சூட்டிக்கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்த்தது. வைகோ அவர்கள் இலங்கை பிரச்சனை பற்றி பேசும் போது இந்த ஓவியத்தை சுட்டிகாட்டி பேசினாராம். மறுநாளே அந்த ஓவியம் அழிக்கப்பட்டு விட்டதாம். இத்தகவலை வைகோ அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் பகிர்ந்து கொண்டார்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
ayyamperumal wrote:
மலேசியா வரை ஏன் போகவேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் சோழ மன்னன் இலங்கையில் முடி சூட்டிக்கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்த்தது. வைகோ அவர்கள் இலங்கை பிரச்சனை பற்றி பேசும் போது இந்த ஓவியத்தை சுட்டிகாட்டி பேசினாராம். மறுநாளே அந்த ஓவியம் அழிக்கப்பட்டு விட்டதாம். இத்தகவலை வைகோ அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா ஏன் இலங்கைக்கு இவ்வளவு கேவலமாக அடிபணிந்து செல்கிறது என்பதன் காரணம் தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது
» ஸ்டாலின் அரசியலில் இருந்து ஓய்வு ????
» தமிழ் நாடு வாழ்த்து.
» தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
» சீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.
» ஸ்டாலின் அரசியலில் இருந்து ஓய்வு ????
» தமிழ் நாடு வாழ்த்து.
» தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
» சீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|