ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

4 posters

Go down

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Empty பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

Post by ஹர்ஷித் Thu Aug 07, 2014 1:44 pm

மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, சியர்ரா லியோன், கினியா மற்றும் நைஜீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 932 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் வேற்று நாட்டவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பினால் எபோலா பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் மக்களை பீதியடையச் செய்யும் எபோலா வைரஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

எபோலா நோய்
எபோலா வைரஸ் நோய் முன்னதாக எபோலா காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. இந்த நோய் வந்தால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். இந்த நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவக்கூடியது.


யாருக்கு எல்லாம்?
எபோலா வைரஸ் தாக்கியவர்களின் குடும்பத்தார், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எபோலா தாக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

கண்டுபிடிப்பு
கடந்த 1976ம் ஆண்டு தான் எபோலா வைரஸ் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. காங்கோவில் உள்ள எபோலா ஆறு அருகிலும், சூடானிலும் இந்த வைரஸ் தாக்கி 280 பேர் அப்போது பலியாகினர்.


அறிகுறிகள்
எபோலா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை எற்படும். இது தான் எபோலா நோயின் அறிகுறிகள்.

பின்னர்
காய்ச்சல், வலியோடு நின்றுவிடாமல் அடுத்ததாக வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.

மனிதர்களுக்கு எப்படி?
எபோலா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய விலங்குளின் ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் இருந்து பரவுகிறது.
எபோலா வைரஸால் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மல, ஜலத்தில் இருந்து பிற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.
எபோலா வைரஸ் தாக்கி அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை கூட ஆகலாம்.


சிகிச்சை
எபோலா நோய்க்கு இது தான் சிகிச்சை என்ற ஒன்று இல்லை. இருப்பினும் தீவிர சிகிச்சை மூலம் சிலர் குணமடையலாம்.


தடுப்பு மருந்து
எபோலா நோயை தடுக்க மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவை சந்தையில் தற்போது இல்லை.

tamil.oneindia
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Empty Re: பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

Post by பாலாஜி Thu Aug 07, 2014 2:51 pm

எபோலா நோயை தடுக்க மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவை சந்தையில் தற்போது இல்லை. wrote:

 அதிர்ச்சி அதிர்ச்சி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Empty Re: பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

Post by சிவா Thu Aug 07, 2014 3:39 pm

எபோலோ வைரஸால் தாக்கபட்டவரிடம் மருத்துவர்களும், குடும்பத்தினரும் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பிறகே அருகே செல்ல வேண்டும்.

இறந்தவரின் உடலை மருத்துவரின் அறிவுரைப்படி கவனமாகக் கையாண்டு அடக்கம் செய்ய வேண்டும்!

இல்லையேல் அங்குள்ளவர்கள் அனைவரும் இந்நோய்க்கு பலியாக நேரிடும்!

எபோலோ குறித்த பயனுள்ள தகவலுக்கு நன்றி ஹர்ஷித்!


பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Empty Re: பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

Post by சிவா Thu Aug 07, 2014 3:54 pm

எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட இடத்தில் 45000 இந்தியர்கள் வசிக்கின்றனர்; அவர்கள் மூலம் இந்தியாவிற்கு வரலாம் என அச்சம்

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் தற்பொழுது எபோலா என்ற வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட இடத்தில் 45000 இந்தியர்கள் வசிக்கின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியுள்ள எபோலா வைரஸ் பாதிப்பினால் பலியானவர்கள் எண்ணிக்கை 932 ஆக அதிகரித்துள்ளது. 1,700 பேர் இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறைமந்திரி ஹர்ஷ்வர்தன்; ஐ.நா. அமைதி குழுவில் 300 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பணியாற்றி வருகின்றனர். வைரஸ் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட கினியாவில் 500 இந்தியர்களும், லைபிரியாவில் 1,200 இந்தியர்களும், சியர்ரா லியோனில் 1200 இந்தியர்களும் வசித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

கினியா நாட்டின் கிராமத்தில் இருந்து சியர்ரா லியோன் நாட்டிற்கும் பின்பு, லைபீரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. நைஜிரியாவில் சுமார் 40 ஆயிரம் இந்தியார்கள் வசிக்கின்றனர் என்று ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். "நிலைமை மிகவும் விபரீதமாகும் என்றால், இந்தியர்கள் வீட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது". இந்தியாவிற்கு வைரஸ் நுழைந்தால். அதனை சமாளிக்க ஆயத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்று ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கடந்த 1, 2ம் தேதிகளில் சுகாதாரத்துறை டி.ஜி. ஜெகதீஷ் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார். என்று சுகாதாரத் துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவிற்குள் வைரஸ் நுழையலாம் என்ற அச்சுறுத்தலை கண்டறிய மத்திய குடியேற்ற துறை, வெளியுறவுத் துறை, விமான போக்குவரத்து துறை, ஆயுதப்படை மற்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளுடன் கடந்த செவ்வாய் அன்று ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆயுதப்படையினர் சம்பந்தப்பட்ட மையத்தை நாடி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிவார்டுகளை அமைக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வைரஸ் பாதுகாப்பில் இருந்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரசுரங்கள் மற்றும் ரேடியோ மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் ஆட்கொல்லி. ஆப்பிரிக்காவில் சிம்பன்சி, கொரில்லா குரங்குகள், காட்டுமான் போன்ற விலங்குகளிடம் இருந்து தொற்றுநோய் வைரஸ் வெளவால்கள் மூலம் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்து அல்லது பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து இந்த தொற்றுநோய் வைரஸ் மற்றவர்களை தாக்கும். பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி இருக்கும் போது எச்சில் மூலம் பரவுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாயிலாகவே அதிகமாக இந்த வைரஸ் பரவுகிறது. 2 முதல் 21 வரையில் உடலில் வைரஸ் பெருக்கம் அடையும். அப்போது மனிதனிடம் இருந்து தொற்றுபரவாது. என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.


பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Empty Re: பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Aug 07, 2014 4:38 pm

பயனுள்ள தகவல் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன? Empty Re: பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum