புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
60 Posts - 40%
heezulia
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
311 Posts - 50%
heezulia
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
21 Posts - 3%
prajai
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
3 Posts - 0%
Barushree
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 11:58 pm

‘பொறாமை என்பது கோழைகளின் கோபம்’ என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் – தம்பிக்கி டையே… அக்கா – தங்கைக்கிடையே… நண்பர்களுக்கிடையே… மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே… இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற இருவருக்கிடையே அது இருக்காதா என்ன? ‘பொறாமை’ என்று சொன்னால் கொஞ்சம் கடுமையாகத் தெரியலாம். ‘பொசசிவ்னஸ்’ என்கிற போது, அதன் கடுமை மாறிப் போ கும். காதலிக்கிற போதும், கல்யாணத்துக்குப் பிறகும் ஆணும் பெண்ணும் பல வழிகளில் பொசசிவ்னஸை வெளிப்படுத்துகிறார்கள். அது பொறாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அதாவது, தன் துணையின் மீது அதீத ஆர்வம் காட்டுகிற துணைக்கு நிச்ச யம் அங்கே பொறாமை இருக்கும். நம்முடைய சமுதாயத்தில் பொறாமை கொள்ளக் காரணங்களுக்கா பஞ்சம்? மனைவி தன்னைவிட நல்லவேலையில் இருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, அழகாக இருந்தாலோ கணவருக்குத் தன்னையும் அறியாமல் பொறாமை தலைதூக்கும். அதன் வெளிப்பாடாக, மனைவி வேலைக்குப் போவதைத் தடுப்பார்கள். மனைவியுடன் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படி இல்லாமல், சில நேரங்களில் பொறாமை தெளிவாகத் தெரியாமல், வெறும் கோபமாகவும் வெளிப்படலாம். தம்பதிக்கிடையே காரணங்களே இல்லாமல் பிரச்னைகள் வெடிக்கும். பொறாமைப்படுவோருக்கு மட் டுமே அது புரியும். அதை எதிர்கொள்வோருக்குக் காரணம் தெரியாது. இருவருக்கும் இடையில் அன்பு குறைந்து, வெறுப்பு அதிகரித்து, ஒருகட்டத்தில் உறவே ஆட்டம் காணவும் அந்தப் பொறாமை காரணமாகும். அரிதாக சில சந்தர்ப் பங்களில் அந்தப் பொறாமையின் விளைவாக, ஆத்திரம் உச்சத்துக்குப் போய், அடி, உதை என வன்முறையில் இறங்கவும்,அதையும் தாண்டி கொலை, தற்கொலை என அத்துமீறவும் கூடும். பொறாமை என்பது பல நேரங்களில் உண்மையாக இல்லாமல், அப்படி நினைப்பவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 11:59 pm

நம்மு டைய துணை, நம்மைத் தவிர வேறு யாராலும் ஈர்க்கப்படக் கூடாது என்கிற ஆழ்மன பயம் பதிந்து போயிருக்கும். யதார்த்தமோ அப்படி இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஆண்-பெண் இருவரின் நட்புகளும் உறவுகளும் தொடரத்தான் செய்யும். அதன் விளை வாக, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் துணையின் மீது திணிக்கப்படும். அதாவது, துணையை அப்படிக் கட்டுப்படுத்தி, கைக்குள் வைத்திருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வு ஏற்படும். ஆணோ, பெண்ணோ – யாருக்கும் நட்பென ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயல்பு. திருமணத்துக்குப் பிறகும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அதைத் தவிர்த்து, ‘எனக்குப் பிடிக்கலை… நீ உன் நட்பை விட்டு விலகி னாதான் என் மனசு நிம்மதியாகும்’ எனக் கட்டுப்படுத்த நினைப்பது முழுக்க முழுக்க பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே. பொறாமை யின் காரணமாக துணையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வதுதான் இதிலி ருந்து மீள முதல் வழி. பொறாமை என்கிற உணர்வு உண்டாக, நமது எண்ணமும் நம்பிக்கையும்தான் அடிப்படை. அதை மாற்றிக் கொண்டாலே பொறாமை காணாமல் போய் விடும். உதாரணத்துக்கு, ‘என் மனைவி வேலைக்குப் போறா… நிறைய சம்பாதிக்கிறா… அதனால அவளுக்குத் திமிரு’ என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களது மனைவிகளுக்கு உண்மையிலேயே அப்படி எந்தத் திமிரும் இருக்காது. கணவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்! சில பெண்களுக்கு தனது அழகிலும் ஆளுமையிலும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அது காலம் காலமாக சிந்தனையில் உறைந்து போனதன் விளைவாக, திருமணத்துக்குப் பிறகு, தனது கணவர், இன்னொரு பெண்ணிடம் லேசாக சிரித்துப் பேசினாலே, பொறாமை எட்டிப் பார்க்கும். ‘நான் அவளை மாதிரி அழகில்லை. எனக்கு அவளைப் போல பர்சனாலிட்டி இல்லை…’ என வார்த்தைகளில் விஷம் கக்கி, பைசா பெறாத விஷயத்தைப் பெரிதாக்கி, பிரச்னையை உண்டு பண்ணுவார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சந்தேகமாக உருவெ டுத்து, ஒரு கட்டத்தில் பிரிவுக்குப் பாதை காட்டலாம். அதற்காக எல்லா பொறாமைகளையும் சந்தேகங்களையும் அர்த்தமற்றவை என ஒதுக்கவும் முடியாது. உங்கள் துணை, உங்கள் மீது பொறாமை கொள்கிறாரா? அதன் பின்னணி என்ன என ஆராயுங்கள். துணையின் பொறாமையில் நியாயம் இருப்பது தெரிந்தால், உங்களை சரி செய்து கொள்ளப் பாருங்கள்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:00 am

அர்த்தமற்ற காரணங்களால் உண்டாகும் பொறாமையை எப்படிக் கையாளலாம்? ஒரு உதாரணத்துடன் பார்ப்போமா? உலக அழகி ஐஸ்வர்யா ராயை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? திருமணத்துக்கு முன், ஐஸ்வர்யாவை அவரது அழகுக் காகவும் ஆளுமைக்காகவும் ரசித்த மக்கள், திருமணத்துக்குப் பிறகும் அப்படியேதான் ரசிக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங் கள்… திருமணத்துக்குப் பிறகு என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என ஐஸ்வர்யாவை, அபிஷேக் வெளியே விடாமல் வீட்டுக்குள் சிறை வைத்திருந்தால், அந்த இருவருக்கும் இடையிலான காதல் காணாமல் போயிருக்காதா? அவர்களது உறவு அர்த்தமற் றதாகி இருக்காதா? அபிஷேக் அப்படிச் செய்யாமல், ஐஸ்வர்யா தனது மனைவியாக அமைந்ததைப் பாராட்டுதலோடும் பெருமையோ டும் ஏற்றுக்கொண்டதுதான் அவர்களது அன்யோன்யத்தின் அடிப்படை. உலகமே கொண்டாடும் ஒரு உன்னத மனுஷி, தனது மனைவி என்பதில் அவருக்கு அளவுகடந்த கர்வம் கூட இருக்கக்கூடும். அதே அணுகுமுறைதான் நமக்கெல்லாமும் அவசியப்படுகிறது. காதலிக்கிற போது எந்த அழகுக்காக ஒரு பெண்ணிடம் நீங்கள் மயங்கினீர் களோ, எதற்காக போராடி அவரைக் கல்யாணம் செய்தீர்களோ, அந்த அழகை, கல்யாணத்துக்குப் பிறகும் கொண்டாடப் பழகுங்கள். கல்யாணத்துக்கு முன் உங்கள் மனைவியை நீங்கள் ரசித்தது போல, கல்யாணத்துக்குப் பிறகு மற்றவர்களின் பார்வையும் அவரை அப் படித்தான் ரசிக்கும். அதற்காக உங்கள் மனைவியை சந்தேகப்படுவதோ, அவர் மீது பொறாமை கொள்வதோ எந்த வகையில் நியாயம்? பெண்களுக்கும் இதே அட்வைஸ்தான். காதலிக்கிற போதோ, திருமணத்துக்கு முன்போ உங்கள் துணையின் நகைச்சுவை உணர்வையும் எல்லோரிட மும் கலகலப்பாகப் பேசிப் பழகும் குணத்தையும் ரசித்திருப்பீர்கள். திருமணத்துக்குப் பிறகு அவர் அப்படி இருப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது ஏன்? தன் துணை தன்னைவிட்டு விலகி விட்டால்? இந்தப் பயம்தான் இருவரின் பொறாமை உணர்விலும் மறைந்திருக்கிற காரணம். பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.பொறாமையை பாராட்டாக மாற்றப் பழகுங்கள்.பொறாமையைத் தவிர்த்து விருப்பமாக பார்க்கப் பழகுங்கள். உங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையை நன்றியுடன் நோக்க முயற்சி செய்யுங்கள்! நம் ஒவ்வொருவருக்கும் நமது பெற்றோர், சுற்றம், உறவுகள் என நாம் வளர்கிற சூழல் சில பயிற்றுவிப்புகளைத் தருகிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:00 am

உதாரணத் துக்கு அமெரிக்காவில் பிறந்து வளர்கிற குழந்தைக்கு விவாகரத்து என்பது சர்வசாதாரணமான நிகழ்வாகத் தோன்றலாம். நம்முடைய சூழலில் அதைப் பற்றிய பார்வையே வேறு. இந்தப் பயிற்றுவிப்புகள் நமக்கு சில நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. சிறியதாகவோ, பெரியதாகவே பல நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படாதவையாகவும் இருக்கலாம். அந்த நம்பிக்கைகள் நமக்கொரு மனப்போக்கை ஏற்படுத்தும். பெண்கள் என்றால் அடக்க, ஒடுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என சில ஆண்கள் நினைப்பதுகூட அத்தகைய மனப்போக்கின் அடிப்படை யில்தான். அந்த மனப்போக்கானது உணர்வுகளை உருவாக்கும். உணர்வுகள் நமது நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். நட வடிக்கைகள்தான் நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் விளைவுகளுக்குக் காரணம். பயிற்றுவிப்பில் தொடங்கி, நடவடிக்கைகள் வரை எல்லாமே பாசிட்டிவாக இருந்துவிட்டால், உறவுகளுக்கிடையில் பிரச்னைகள் முளைக்கவே வாய்ப்பில்லை. பயிற்றுவிப்பை மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆனாலும், அதன் மூலம் உருவாகக்கூடிய நம் பிக்கைகளை நாம் மனது வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். பாசிட்டிவான நம்பிக்கை, பாசிட்டிவான மனப்போக்கைத் தரும். பாசிட்டிவான மனப்போக்கு, நல்ல உணர்வுகளை உண்டாக்கும். உணர்வுகள் அழகானால், நடவடிக்கைகளில் நாகரீகம் வரும். அது நல்ல விளைவுகளுக்கும் வழி காட்டும். பொறாமைக்குக் காரண மாக கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பேசிய அத்தனையிலிருந்தும் விடுபடவும் இதுவே தீர்வு! ( வாழ்வோம்!)

நன்றி குங்குமம்தோழி




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக