Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
'தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு : தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது.
ஆனால், இந்தியாவில், இந்தி ஒரு தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது என்பதே உண்மை. இந்தி தெரியாது என்பதால், தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் தமிழர்கள், அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இது போன்ற நடைமுறை காரணங்கள் இருப்பதால் தான், தமிழர்கள், இந்தி கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஒரு முறை, அண்ணா பல்கலையில் என்னை பேச அழைத்திருந்த போது, அங்கு நான் இதை தெரிவித்தேன்.அங்கு நான் பேசி முடித்த போது, வயதான நபர் ஒருவர் (ஒருவேளை பேராசிரியராக இருக்கலாம்) எழுந்து, 'ஏற்கனவே, இந்தியாவில், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது, தமிழர்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?' என, கேட்டார்.அதற்கு, இந்தியாவில், 10 சதவீதம் பேர் அல்லது உயர் பிரிவினரில் குறிப்பிட்ட அளவினருக்கே, ஆங்கிலம் தெரியும். ஒரு வேளை, தமிழர் ஒருவர் டில்லிக்கு செல்வார் என்றால், அங்கு அவருக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.
அதிக சிக்கல்கள் : அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்.அதே நேரம், இந்தி தாய் மொழியாக இல்லாத, மேற்கு வங்கம், காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் தாய் மொழி தவிர, பயன்பாட்டு இந்தி மொழியையும் அறிந்து வைத்துள்ளனர்.
உண்மையில், தமிழர்கள், 1960 முதல், இந்தி திரைப்படங்கள், இந்தி பிரசார சபா உள்ளிட்டவை மூலம், இந்தியை கற்று வந்தனர். ஆனால், அதற்குப் பின், குறுகிய கண்ணோட்டம் கொண்ட, சில வடமாநில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்றதால், எதிர்ப்பு கிளம்பியது. இது துரதிருஷ்டவசமானது.ஆனால், அது முடிந்து போன விஷயம்; இனி நாம் முன்னேறி செல்ல வேண்டும். தமிழ் மொழி, இந்தியாவின் தொடர்பு மொழி என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில், தமிழை அறிந்தவர்களை விட, இந்தியை அறிந்தவர்கள் எண்ணிக்கை, 15 மடங்கு அதிகம் என்பதே உண்மை.
நான், தமிழை விட, இந்தி உயர்ந்த மொழி என, கூறவில்லை. தமிழ் சிறந்த மொழி என்பதுடன், சிறந்த இலக்கிய வளம் கொண்டது. நான், அனைத்து மொழிகளும் இணையானவை என கருதுபவன். ஆனால், நம் நாட்டில், ஏற்கனவே, தொடர்பு மொழியாக வளர்ந்து விட்டதால், தமிழை விட, இந்தி மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது தான் உண்மை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ் படித்த கட்ஜு: மார்கண்டேய கட்ஜு, உத்தர பிரதேச மாநில தலைநகர், லக்னோவில் பிறந்தவர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழ் படித்தவர் என்பதும், அவரது, 'பேஸ்புக்' கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 1963 முதல் 1967 வரை, அலகாபாத் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தேன், அந்த காலகட்டத்தில், என், 'ரெகுலர்' படிப்புடன், நம் நாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து எடுத்திருந்தேன்.அதன் பின், 1967 ஜூலை மாதம், அண்ணாமலை பல்கலைக்கு வந்து, ஓராண்டு பேச்சுத் தமிழ் தொடர்பான டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
அந்த படிப்பு அப்போதே, நிறுத்தப்பட்டு விட்டது என நம்புகிறேன். ஆனால், அந்த படிப்பு, தமிழை அறியாதவர்களுக்காக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அங்கு எனக்கு ஆசிரியர்களாக ராஜா மற்றும் பிள்ளை ஆகியோர் இருந்தனர். நான், அங்குள்ள கம்பர் விடுதியில், சில தமிழ் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது, பல்கலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, சிதம்பரம் கோவிலுக்கு சென்றேன். அந்த பல்கலை தொடர்பான, நினைவலைகளை எண்ணிப் பார்க்கிறேன்.கடந்த, 2004ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக, தமிழ் அறிவுடன் தான் நுழைந்தேன். தமிழை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தா விட்டாலும், தமிழகத்தின் நிலைமைக்கு நான் பழகிக் கொள்ள உதவியாக இருந்தது.
நான், தலைமை நீதிபதியாக இருந்தபோது, என் உடன் அண்ணாமலை பல்கலை விடுதியில் தங்கியிருந்த, ரெட்டி என்ற நண்பர் என்னை, சென்னையில் இருந்த என் இல்லத்தில் வந்து சந்தித்தார்.நான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, அண்ணாமலை பல்கலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும், சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு நான் தங்கியிருந்த கம்பர் விடுதிக்கு சென்ற போது, மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.என்னை கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதில், அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர், என்னை அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் என, அறிவித்தார்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு : தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது.
ஆனால், இந்தியாவில், இந்தி ஒரு தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது என்பதே உண்மை. இந்தி தெரியாது என்பதால், தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் தமிழர்கள், அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இது போன்ற நடைமுறை காரணங்கள் இருப்பதால் தான், தமிழர்கள், இந்தி கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஒரு முறை, அண்ணா பல்கலையில் என்னை பேச அழைத்திருந்த போது, அங்கு நான் இதை தெரிவித்தேன்.அங்கு நான் பேசி முடித்த போது, வயதான நபர் ஒருவர் (ஒருவேளை பேராசிரியராக இருக்கலாம்) எழுந்து, 'ஏற்கனவே, இந்தியாவில், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது, தமிழர்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?' என, கேட்டார்.அதற்கு, இந்தியாவில், 10 சதவீதம் பேர் அல்லது உயர் பிரிவினரில் குறிப்பிட்ட அளவினருக்கே, ஆங்கிலம் தெரியும். ஒரு வேளை, தமிழர் ஒருவர் டில்லிக்கு செல்வார் என்றால், அங்கு அவருக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.
அதிக சிக்கல்கள் : அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்.அதே நேரம், இந்தி தாய் மொழியாக இல்லாத, மேற்கு வங்கம், காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் தாய் மொழி தவிர, பயன்பாட்டு இந்தி மொழியையும் அறிந்து வைத்துள்ளனர்.
உண்மையில், தமிழர்கள், 1960 முதல், இந்தி திரைப்படங்கள், இந்தி பிரசார சபா உள்ளிட்டவை மூலம், இந்தியை கற்று வந்தனர். ஆனால், அதற்குப் பின், குறுகிய கண்ணோட்டம் கொண்ட, சில வடமாநில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்றதால், எதிர்ப்பு கிளம்பியது. இது துரதிருஷ்டவசமானது.ஆனால், அது முடிந்து போன விஷயம்; இனி நாம் முன்னேறி செல்ல வேண்டும். தமிழ் மொழி, இந்தியாவின் தொடர்பு மொழி என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில், தமிழை அறிந்தவர்களை விட, இந்தியை அறிந்தவர்கள் எண்ணிக்கை, 15 மடங்கு அதிகம் என்பதே உண்மை.
நான், தமிழை விட, இந்தி உயர்ந்த மொழி என, கூறவில்லை. தமிழ் சிறந்த மொழி என்பதுடன், சிறந்த இலக்கிய வளம் கொண்டது. நான், அனைத்து மொழிகளும் இணையானவை என கருதுபவன். ஆனால், நம் நாட்டில், ஏற்கனவே, தொடர்பு மொழியாக வளர்ந்து விட்டதால், தமிழை விட, இந்தி மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது தான் உண்மை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ் படித்த கட்ஜு: மார்கண்டேய கட்ஜு, உத்தர பிரதேச மாநில தலைநகர், லக்னோவில் பிறந்தவர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழ் படித்தவர் என்பதும், அவரது, 'பேஸ்புக்' கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 1963 முதல் 1967 வரை, அலகாபாத் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தேன், அந்த காலகட்டத்தில், என், 'ரெகுலர்' படிப்புடன், நம் நாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து எடுத்திருந்தேன்.அதன் பின், 1967 ஜூலை மாதம், அண்ணாமலை பல்கலைக்கு வந்து, ஓராண்டு பேச்சுத் தமிழ் தொடர்பான டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
அந்த படிப்பு அப்போதே, நிறுத்தப்பட்டு விட்டது என நம்புகிறேன். ஆனால், அந்த படிப்பு, தமிழை அறியாதவர்களுக்காக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அங்கு எனக்கு ஆசிரியர்களாக ராஜா மற்றும் பிள்ளை ஆகியோர் இருந்தனர். நான், அங்குள்ள கம்பர் விடுதியில், சில தமிழ் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது, பல்கலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, சிதம்பரம் கோவிலுக்கு சென்றேன். அந்த பல்கலை தொடர்பான, நினைவலைகளை எண்ணிப் பார்க்கிறேன்.கடந்த, 2004ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக, தமிழ் அறிவுடன் தான் நுழைந்தேன். தமிழை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தா விட்டாலும், தமிழகத்தின் நிலைமைக்கு நான் பழகிக் கொள்ள உதவியாக இருந்தது.
நான், தலைமை நீதிபதியாக இருந்தபோது, என் உடன் அண்ணாமலை பல்கலை விடுதியில் தங்கியிருந்த, ரெட்டி என்ற நண்பர் என்னை, சென்னையில் இருந்த என் இல்லத்தில் வந்து சந்தித்தார்.நான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, அண்ணாமலை பல்கலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும், சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு நான் தங்கியிருந்த கம்பர் விடுதிக்கு சென்ற போது, மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.என்னை கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதில், அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர், என்னை அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் என, அறிவித்தார்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர்
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
மேற்கோள் செய்த பதிவு: 1077877சிவா wrote:ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
ஏன் அவருக்கு சொல்லனும்? நம்ம இஷ்டம் தானே பல மொழியும் கத்துக்கிறது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077877சிவா wrote:ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
ஏன் அவருக்கு சொல்லனும்? நம்ம இஷ்டம் தானே பல மொழியும் கத்துக்கிறது.
அவர் பிள்ளைகள் மட்டும் தான் இந்தி படிக்க வேண்டும், நாம் படித்தால் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
மேற்கோள் செய்த பதிவு: 1077887சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077877சிவா wrote:ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
ஏன் அவருக்கு சொல்லனும்? நம்ம இஷ்டம் தானே பல மொழியும் கத்துக்கிறது.
அவர் பிள்ளைகள் மட்டும் தான் இந்தி படிக்க வேண்டும், நாம் படித்தால் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார்!
அப்படியா படுத்தவரை யாரு எழுப்பினது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
சிவா wrote: நாம் படித்தால் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார்!
அட தலகனியில படுக்கவே அவருக்கு முடியலயாம் இதுல தண்டவாளம் கேக்குதாம்மா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
உங்கள் வீட்டில் எத்தனை சன்னல்கள் இருக்கிறதோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை .
ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்
--கமல்ஹாசன்
ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்
--கமல்ஹாசன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
ஆமாம் ஹிந்தி அரைகுறையாக இல்லாமல் முழுதுமாக கற்றுக்கொள்ளவேண்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
விமந்தனி wrote:ஆமாம் ஹிந்தி அரைகுறையாக இல்லாமல் முழுதுமாக கற்றுக்கொள்ளவேண்டும்.
அனுபவம் பேசுது - ஒரு துண்டு பேப்பர் படுத்தின பாடு எங்களுக்கு தான தெரியும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|