ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

+7
krishnaamma
அசுரன்
விஸ்வாஜீ
jesifer
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by சிவா Wed Aug 06, 2014 5:00 pm

“சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம்.

“வீட்லதான் சார்”

“நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.”

“இதோ வர்றேன் சார்.”

‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

“ஏங்க பையன் யாரு? என்னாச்சு?”

“தெரியல. லாரிக்காரன் இடிச்சுட்டு போயிட்டான்”

“108-க்கு போன் பண்ணியாச்சா?”

“அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல”

‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?, அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்'

இப்படி பல யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா. ஒரு ஆட்டோவை நிறுத்தியவன் யார் உதவிக்கும் காத்திராமல் அந்த பையனை தூக்கி ஆட்டோவில் கிடத்தி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் அலறியது. மாணிக்கம்தான் அழைத்தார்.

“ஹலோ சிவா. இன்னும் வரலையா?”

“சாரி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டு கிடந்தான். அவனை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்.”

“முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம். கேன்சல் பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன்”

“சார் ஒரு நிமிஷம்” என்று பரிதாபமாக சொன்னவனை கண்டுக்காமல் எதிர்முனை பட்டென்று கட் ஆனது.

மருத்துவமனையில் பார்மாலிட்டியை முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினான். வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்பவும் மருத்துவமனைக்கு போனான். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த வார்டு பாய் மாணிக்கத்திடம் சிவாவை கைகாட்டி, “சார். காலைல உங்க பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்.” என்றார்.

மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையை பிடித்தார். “ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறுதான். என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க அம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க. இந்த பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனை காப்பாத்தினதுக்கு.”

“மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியை செய்தேன். பணத்தை எதிர்பார்த்து அல்ல.”

“அப்படின்னா வேலைக்கு அட்வான்ஸா வச்சுக்கங்க.”

“இல்லே சார். உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க...ஆனால் நான் உங்க பையனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னை பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க பையனை காப்பாத்தியதால்தானே தவிர, என் மனிதாபிமானத்துக்காக இல்ல... அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை. என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது” சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா.

ரஹீம் கஸாலி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by ஜாஹீதாபானு Wed Aug 06, 2014 5:18 pm

என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது” சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா. wrote:

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by ஹர்ஷித் Wed Aug 06, 2014 5:36 pm

தலைப்புக்கேற்ற கதை... மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை 3838410834 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by jesifer Wed Aug 06, 2014 6:18 pm

ஒரு சின்ன கிளைமேக்ஸ் பார்த்த பீலிங்.............
ரொம்ப அருமையா சொன்னாரு.. ”என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது” சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா.”

 மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை 3838410834 மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை 103459460 மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை 1571444738 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by விஸ்வாஜீ Wed Aug 06, 2014 6:21 pm

நல்ல கதை.
கதையில் படித்து திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான் மனிதாபிமானத்தை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by அசுரன் Wed Aug 06, 2014 7:14 pm

சில வேளைகளில் கடவுள், மனிதர்கள் திருந்துவதற்காக இப்படி நடந்துக்கொள்வதுண்டு. சிறந்த கதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by krishnaamma Wed Aug 06, 2014 7:29 pm

அருமையான கதை..................அந்த ஆளுக்கு நல்லா 'ஜோட்டால அடிச்ச' மாதிரி..........புத்தியில் உரைக்கும்படி.............சொல்லி இருக்கிறார் நம் கதாநாயகன் சிவா புன்னகை  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
.
.
தனக்கு ஒரு 'ரூல்' மற்றவர்களுக்கு ஒரு 'ரூல்' என்று இருக்கும் வரை இது தொடரும் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by ayyasamy ram Wed Aug 06, 2014 9:34 pm

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by விமந்தனி Wed Aug 06, 2014 9:57 pm

அருமையான கதை. சூப்பருங்க சூப்பருங்க 


மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by சே.சையது அலி Wed Aug 06, 2014 10:12 pm

மிகவும் அருமை
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Back to top Go down

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை Empty Re: மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum