புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - விமந்தனி


   
   

Page 2 of 2 Previous  1, 2

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:50 am

First topic message reminder :

காதலி...!

‘ர்ர்ரர்ர்ர்ர்........’ பாக்கெட்டில் செல் போன் அதிர்ந்தது. எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளே மங்கலாக பூரணியை காட்டியது.

“ஹல்லோ!” – நான்.

“என்னங்க.. வர லேட்டாகுமா?” – பூரணி.

“ஏன்... என்னாச்சு..?”

“கொழந்தை உங்களை கேட்டு ஒரே அழுகை... அதான்.... கிளம்பிட்டீங்களா?”

“கிளம்பிட்டேன்! இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்.” கைபேசியை அனைத்து மறுபடியும் பாக்கெட்டில் வைத்து விட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்த போது,

“சரவ….ணா...?” – என்றழைக்கும் குரல் கேட்டு உடலெங்கும் மின்வேட்டு பாய்ந்தது போன்று அதிர்ந்து நின்றேன். நாடி நரம்பெங்கும் ஊடுருவி வியாபித்திருக்கும் என்னுள் உறைந்த குரல் அல்லவா....
சட்டென்று திரும்பி பார்த்தேன்.

அவள் தான்... அவளே தான்... என் உயிரில் கலந்து விட்டிருந்த என் தீபா.

என் அனுமதி இல்லாமலே, என் உடலெங்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது. பார்த்து பத்து வருடங்கள் ஆகியிருக்குமா? முன்னைக்கும் இப்போது உடம்பு பூசினாற் போல் இன்னும் அழகாய் தெரிந்தாள்.

ஆர்வமாய் அவளை எதிர்கொள்ள எத்தனித்த போது தான் கவனித்தேன், அவளருகே அவள் கணவனும் வருவதை. கூடவே அவள் கையை பிடித்தபடி ஒரு குட்டி பையன். நடந்து வரும் போதே சேட்டை..

எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்த என்னருகில் அவள் வந்து விட்டாள்.

“என்ன சரவணா... ஞாபகம் இல்லையா...?” – தீபாவின் குரல் தான் என்னை மறுபடி மீண்டு வரச்செய்தது.

“ம்... இல்ல.. இல்ல..” – ஆனாலும் இயல்பாக இருக்க முடியவில்லை.

“என்ன மிஸ்டர். சரவணன்...? எப்படியிருக்கீங்க...?” – அவள் கணவன் என் கையை குலுக்கியதும் என்னுள் இருந்த பதட்டம் கொஞ்சமாய் நீங்கியது.

“ஹோ.. ஃபைன்...! நீங்க நல்லா இருக்கீங்களா அருண்..?” – இயல்பாய் கேட்டேன். அப்படித்தான் நினைக்கிறேன்.

சம்பிராதாய பேச்சுக்களுக்கு இடையே, “வாங்க சரவணன் அப்படி உட்கார்ந்து பேசுவோம்.” – என்றழைத்தான் அவள் கணவன்.




சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 2:52 pm

M.M.SENTHIL wrote:அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1077494

நிஜம் செந்தில் ஆனால் இந்த வரிகளையும் கொஞ்சம் 'கன்சிடர் ' பண்ணலாமே புன்னகை

//“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.//

கரெக்ட் ஆ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 05, 2014 3:48 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1077494

நிஜம் செந்தில் ஆனால் இந்த வரிகளையும் கொஞ்சம் 'கன்சிடர் ' பண்ணலாமே புன்னகை

//“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.//

கரெக்ட் ஆ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077521

நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் போதே, மறக்கவில்லை என்றுதானே அம்மா பொருள். மறக்காமல் இருந்தாலும் நினைப்பில் இருப்பதாகவே பொருள் தானே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 14, 2014 12:11 am

எவ்வளவு தான் காலங்கள் கழிந்தாலும் நம் உள்ளத்தை உரசிச்சென்ற உன்னத விஷயங்களை உயிருள்ள வரை  மறக்கத்தான் முடியாது. கிணற்றில் இருக்கும் பொக்கிஷத்தை போல!

ஆனால், மறக்காமல் இருப்பதற்கும் – நினைத்து கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எனக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவி சொல்கிறாள், “வரும் போது குழந்தைக்கு 2 பிஸ்கட் பாக்கெட் வாங்கி வாங்க...”

“நான் வர லேட்டாகுமே...!” என்கிறான் கணவன்.

“பரவாயில்ல... வரும்போதே வாங்கி வாங்க...” என்கிறாள் மனைவி. கூடவே, “மறந்துடாதீங்க...” என்றும் சொல்கிறாள்.

கணவனும் ‘ஞாபகமா வாங்கி வரணுமே...’ என்று நினைத்தபடியே வெளியேறுகிறான்.

ஒரு மணி நேரத்தில் அவன் வேலை முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியில் உள்ள கடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்குகிறான்.

“ஒரு பாக்கெட் எவ்வளவு...?”

“10 ரூபா ஸார்...” – கடைகாரர்.

உடனே இரண்டு பாக்கெட்டுகளுக்கு உண்டான 20 ரூபாயை கடைகாரரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்புகிறான் கணவன்.

இதில், அத்தனை வேலைகளுக்கு இடையிலும் மனைவி சொன்னதை நினைவில் இருத்திக்கொண்டு இருந்ததால் தான் அவனால் பிஸ்கட் பாக்கெட்டை வாங்க முடிந்தது,

கடைகாரர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலையை தான் சொன்னார். ஆனால், இவன் 2 பிஸ்கட் பாக்கெட்டிற்கு 20 ரூபாய் என்று எப்படி சரியாக கொடுத்தான்?

இங்கே பிஸ்கட் பாக்கெட் வாங்கியது மனைவி சொன்னதை மறக்காமல் நினைத்து கொண்டே இருந்ததால் –

20 ரூபாய் கொடுத்தது, சின்ன வயதில் அவன் படித்த கணக்கு மறக்காமல் இருந்ததால் –

எந்த நேரமும் அவன் வாய்பாடு படித்து கொண்டிருக்கவில்லையே. ஆனாலும், இரண்டு பத்துக்கள் – இருபது என்பது எப்படி தெரிந்தது? இது தான் மறக்காமல் இருப்பது.

சொல்லப்போனால், மறப்பதும், மறக்காமல் இருப்பதும் மூளை சம்மந்தப்பட்ட விஷயம். நினைப்பதும், நினைக்காமல் இருப்பதும் மனம் சம்மத்தப்பட்ட விஷயம்.

மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.

காயங்கள் வேண்டுமானால் ஆறலாம்... அது ஏற்படுத்திய வடுக்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.

உண்மை தான்! தழும்புகள் தானே அனுபவங்கள்...? அதுவும் இல்லையென்றால் கடந்து வந்த பாதையை மறந்து விடுவோமே....?

ஆனால், வடுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வடுக்கள் கூட வலி கொடுக்க ஆரம்பித்து விடும்.

நினைவுகள் பொக்கிஷமாக கிணற்றுக்குள்ளேயே கிடக்கட்டும். அதை யாராலும் திருட முடியாது. கிணற்றுக்குள் இருக்கும் பொக்கிஷத்தையே நினைத்து கொண்டிருந்தோமானால் மீதமுள்ள வாழ்க்கையில் நிறைவை காணமுடியாது.

எனக்கு சில வரிகள் தோன்றுகிறது, ‘மனைவியின் இடத்தை பழைய காதலியாலும் கூட நிரப்ப முடியாது.... என்பது காதலில் தோற்ற ஒவ்வொரு கணவனுக்கும் தெரியும்.’ – அதற்கு உதாரணப்படமாக “சில்லென்று ஒரு காதல்...” எடுத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது.

அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது.

ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம்.




சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 14, 2014 4:10 pm

வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது. அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது. ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம். wrote:

மிக மிக அருமையான வார்த்தைகள் விமந்தினி...

நல்லது நடந்தாலும் நல்லதுக்கே கெட்டது நடந்தாலும் நல்லதுக்கே .


உங்க கதையும் மிக அருமை

உங்களின்கதைக்கு 1,2 என எண் வரிசை குடுங்களேன். எனக்கு இத்தனையாவது கதை படித்தோம் என்று நினைவு வைத்துக் கொள்ள சுலபமா இருக்கும். அதற்காகச் சொன்னேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 12:08 am

ஜாஹீதாபானு wrote:மிக மிக அருமையான வார்த்தைகள் விமந்தினி...
நல்லது நடந்தாலும் நல்லதுக்கே கெட்டது நடந்தாலும் நல்லதுக்கே .

உங்க கதையும் மிக அருமை

உங்களின்கதைக்கு 1,2 என எண் வரிசை குடுங்களேன். எனக்கு இத்தனையாவது கதை படித்தோம் என்று நினைவு வைத்துக் கொள்ள சுலபமா இருக்கும். அதற்காகச் சொன்னேன்.


நன்றி பானு.

நீங்கள் சொல்வது போலவே இனி, எண் வரிசை கொடுக்கிறேன். சிறுகதை - விமந்தனி - Page 2 1571444738



சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 1:04 am

நல்ல கருத்து - வாழ்த்துகள்

(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க) புன்னகைபுன்னகைபுன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 8:14 pm

யினியவன் wrote:நல்ல கருத்து - வாழ்த்துகள்

(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க) புன்னகைபுன்னகைபுன்னகை

 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 



சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 8:31 pm

செந்திலுக்கு உங்கள் விளக்கம் - அத சொன்னேன் புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 8:42 pm

ஓ...! நன்றி... உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றியும் கூட.



சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 15, 2014 9:10 pm

சிறப்பான கதை ....பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக