புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஏப்ரல் 17, 2007 அன்று இந்தியாவின் டில்லிக்கு எதிராக இஞ்சியோன் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையை வென்றுள்ளது. சியோல் (1986), புசான் (2002) நகரங்களை அடுத்து ஆசிய விளையாட்டுக்களை நடத்தும் தென் கொரியாவின் மூன்றாவது நகரமாகும்.
இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இரண்டு நகரங்கள் ஏலத்தில் பங்கேற்றன; இந்தியாவின் டில்லியும் தென் கொரியாவின் இங்கியோனும் தங்கள் முறையான ஏல மனுக்களை டிசம்பர் 2, 2006இல் கத்தாரின் தோகாவில் அளித்தன.
இந்த மனுக்கள் மீதான வாக்கெடுப்பு ஆசிய ஒலிம்பிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏப்ரல் 17, 2007 அன்று குவைத்தின் மரியோட் தங்கும் விடுதியில் நடந்தது. வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக தென் கொரியா, இந்த விளையாட்டுக்களில் இதுவரை பதக்கம் எதுவும் வெல்லாத நாடுகளுக்கு விளையாட்டு வசதிகளையும் பயிற்சிகளையும் கூட்டும் வகையில் $20 மில்லியன் நிதி தருவதாகவும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் கட்டணமின்றி பயணச்செலவையும் தங்கும் வசதிகளையும் செய்து தருவதாகவும் சமர்பித்தது. யாருமறியா வண்ணம் அனைத்து 45 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் இங்கியோன் வென்றது. வாக்கு எண்ணிக்கைகள் அலுவல்முறையாக அறிவிக்கப்படாவிடினும் இங்கியோன் 32–13 வாக்குகளில் வென்றதாக தகவல் வெளியானது.
அப்போதைய இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், டில்லி இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்களே டில்லி ஏலத்தில் தோற்றதற்கான முதன்மைக் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கூறினார்.
டில்லியின் மாசுநிலையும் போக்குவரத்து நெரிசலும் பிற காரணங்களாக அமைந்தன. இங்கியோனின் கடைசிநேர நிதி உதவியும் இத்தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நகரம்: இஞ்சியோன், தென் கொரியா
குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது
நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள்
துவக்க விழா : செப்டம்பர் 19
நிறைவு விழா : அக்டோபர் 4
முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்
குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது
நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள்
துவக்க விழா : செப்டம்பர் 19
நிறைவு விழா : அக்டோபர் 4
முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஏப்ரல் 17, 2007 அன்று இந்தியாவின் டில்லிக்கு எதிராக இஞ்சியோன் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையை வென்றுள்ளது. சியோல் (1986), புசான் (2002) நகரங்களை அடுத்து ஆசிய விளையாட்டுக்களை நடத்தும் தென் கொரியாவின் மூன்றாவது நகரமாகும்.
இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இரண்டு நகரங்கள் ஏலத்தில் பங்கேற்றன; இந்தியாவின் டில்லியும் தென் கொரியாவின் இங்கியோனும் தங்கள் முறையான ஏல மனுக்களை டிசம்பர் 2, 2006இல் கத்தாரின் தோகாவில் அளித்தன.
இந்த மனுக்கள் மீதான வாக்கெடுப்பு ஆசிய ஒலிம்பிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏப்ரல் 17, 2007 அன்று குவைத்தின் மரியோட் தங்கும் விடுதியில் நடந்தது. வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக தென் கொரியா, இந்த விளையாட்டுக்களில் இதுவரை பதக்கம் எதுவும் வெல்லாத நாடுகளுக்கு விளையாட்டு வசதிகளையும் பயிற்சிகளையும் கூட்டும் வகையில் $20 மில்லியன் நிதி தருவதாகவும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் கட்டணமின்றி பயணச்செலவையும் தங்கும் வசதிகளையும் செய்து தருவதாகவும் சமர்பித்தது. யாருமறியா வண்ணம் அனைத்து 45 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் இங்கியோன் வென்றது. வாக்கு எண்ணிக்கைகள் அலுவல்முறையாக அறிவிக்கப்படாவிடினும் இங்கியோன் 32–13 வாக்குகளில் வென்றதாக தகவல் வெளியானது.
அப்போதைய இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், டில்லி இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்களே டில்லி ஏலத்தில் தோற்றதற்கான முதன்மைக் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கூறினார்.
டில்லியின் மாசுநிலையும் போக்குவரத்து நெரிசலும் பிற காரணங்களாக அமைந்தன. இங்கியோனின் கடைசிநேர நிதி உதவியும் இத்தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா முடிவு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முடிவு செய்துள்ளார்.
தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக ஆசிய போட்டியில் பங்கேற்பதை விரும்பவில்லை.
சோம்தேவைத் தொடர்ந்து லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஆகியோர் ஆசிய போட்டியில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்தை இந்திய டென்னிஸ் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டது.
எனவே, அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு பதக்க வாய்ப்பு குறைவு என்று விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட சானியா மிர்சா முடிவு செய்துள்ளார். இதனை அகில இந்திய டென்னிஸ் சங்கம் இன்று உறுதி செய்துள்ளது.
முன்னதாக, சானியா மிர்சா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் அவரது தாயார் நசீமாவும் உடனிருந்தார். அப்போது, அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முடிவு செய்துள்ளார்.
தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக ஆசிய போட்டியில் பங்கேற்பதை விரும்பவில்லை.
சோம்தேவைத் தொடர்ந்து லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஆகியோர் ஆசிய போட்டியில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்தை இந்திய டென்னிஸ் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டது.
எனவே, அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு பதக்க வாய்ப்பு குறைவு என்று விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட சானியா மிர்சா முடிவு செய்துள்ளார். இதனை அகில இந்திய டென்னிஸ் சங்கம் இன்று உறுதி செய்துள்ளது.
முன்னதாக, சானியா மிர்சா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் அவரது தாயார் நசீமாவும் உடனிருந்தார். அப்போது, அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்தது.
இன்சியானில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக விளையாடின. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்று டிரா செய்ய ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பாகிஸ்தான் அடித்த 2 பெனால்டி ஷூட் அவுட் ஷாட்களை அபாரமாகத் தடுத்தார்.
1998ஆம் ஆண்டு பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தன்ராஜ் பிள்ளை தலைமையில் இந்தியா தங்கம் வென்ற பிறகு இப்போது தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது.
பெனால்டி ஷூட் அவுட்:
பென்லாடி ஷூட் அவுட்டை இந்திய வீரர் குர்விந்தர் சிங் எடுத்தார். நேராக பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிற்கு போக்குக் காட்டி பந்தை கோலுக்குள் அடித்தார். இந்தியா 1-0.
பாகிஸ்தானுக்காக ஹசீம் அப்துல் கான் ஷூட் அவுட்டிற்கு வந்தார். இவர் பந்தை அடிக்க சரியாகக் கணித்த இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்துவிட்டார்.
அடுத்ததாக இந்திய அணிக்காக பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் ருபிந்தர் பால் பந்தை இம்ரான் பட்டைத் தாண்டி அபார கோலாக மாற்ற இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.
பாகிஸ்தான் அணி வீரர் வகாஸ் இயல்பாக கோல் அடிக்க இந்தியா 2-1 என்று முன்னிலையைத் தொடர்ந்தது.
அடுத்ததாக மன்பிரீத் அடித்த கோல் ஏனோ மறுக்கப்பட்டது. இந்திய வீரர்கள் நம்ப முடியாமல் எதிர்ப்பு காட்டினர். இந்த கோல் மறுக்கப்பட்டது நிச்சயம் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக பாகிஸ்தான் வீரர் உமர் புட்டா அடித்த ஷாட்டையும் ஸ்ரீஜேஷ் தடுத்தார்.
ஆனால் இந்திய வீரர்கள் 4 மற்றும் 5வது பெனால்டி ஷூட் அவுட்டை அபாரமாக கோலாக மாற்ற இந்திய வீரர்களின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. பாகிஸ்தான் கடும் ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது. இந்தியா பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்று வெற்றி பெற்றது. மொத்தமாக 5-3 என்று வென்றுள்ளது.
ஷூட் அவுட் இல்லாமலேயே இந்தியா வென்றிருக்கலாம்:
தொடக்கத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டம் தொடுத்தன. ஆட்டம் தொடங்கி 4வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலது புறத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்த் தாக்குதல் தொடுத்தனர். பந்து இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் கோலுக்குள் செலுத்தினார். இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இடது புறமாக பாய்ந்தார் ஆனால் கோலை தடுக்க முடியவில்லை.
ஆட்டத்தின் முதல் கால் பகுதி இறுதியில் வலது புறத்திலிருந்து அருமையான பாஸ் ஒன்றைப் பெற்ற இந்திய வீர்ர் சுனில் கோலுக்கு 6 அடிக்கு முன்னால் இருந்து கோலுக்கு வெளியே அடித்து வாய்ப்பை கோட்டை விட்டார்.
இரண்டாவது பாதியில் 8வது நிமிடத்தில் இந்தியா ஒரு அபாரத் தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் வீரர்களின் தடுப்பாட்டம் அபாரமாக அமைந்தது. பிறகுதான் ஆட்டத்தின் முதல் பெனால்டி வாய்ப்பை இந்தியா பெற்றது. பாகிஸ்தான் அதிருப்தி அடைந்தனர். இரண்டாவது கால் பகுதி ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் போது பெனால்டி கார்னர் ஷாட்டை எடுத்த ருபிந்தர் பால் அபாரமாக அடித்தார் ஆனால் பாகிஸ்தான் கோல் கீப்பர் அதனை அதைவிட அற்புதமாகத் தடுத்தார்.
இந்தியா சமன்:
அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து இந்திய அணியினர் லாங் பாஸில் ஈடுபட வலது புறத்திலிருந்து இந்திய வீரர் ஒருவர் அபார ஷாட் ஒன்றை அடிக்க அதனை மிக அபாரமாக இந்திய வீரர் கோதாஜித் கோல் நோக்கித் திருப்பினார் இந்தியா சமன் செய்தது.
பிறகு 3வது கால்பகுதி ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் நடுக்களத்தில் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்துக் கொண்டு சென்றார். தரம் வீர் அடித்த அற்புதமான பாஸ் கோலாக முடியவில்லை. பாகிஸ்தான் தப்பிப்பிழைத்தது.
பாகிஸ்தானுக்கு உடனே ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. முகமது இம்ரான் வலுவான ஷாட் ஒன்றை அடித்தார் ஆனால் இந்தியாவின் இரும்பு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது.
இது நடந்து 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்தியாவின் ராம்தீப் பாகிஸ்தான் கோலை நோக்கி ஒரு அற்புதமான ரிவர்ஸ் ஷாட்டை அடித்தார். ஆனால் இம்ரான் பட் அதனை ஊதினார்.
4வது மற்றும் இறுதி கால்பகுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் மின்னல் வீரர் மற்றும் அனுபவ வீரர் ஷகீல் அப்பாஸியைத் தடுக்க இந்திய வீரர்கள் அபார வியூகம் அமைத்தனர். இதனால் பாகிஸ்தான் முயற்சிகள் பயனளிக்காமல் போனது. ஆனாலும் ஆட்டத்தின் உரிய நேரம் முடிய 8 நிமிடங்களுக்கு முன்னால் வலது புறம் பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை.
மேலும் கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ருபிந்தர் பால் பந்தை நேராக பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிடம் அடித்து கோட்டை விட்டார்.
அதன் பிறகே பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் அபாரத் தடுப்புத் திறமையின் முன்பு பாகிஸ்தான் தோற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
தென் கொரியா அணிக்கு வெண்கலம்.
ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்தது.
இன்சியானில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக விளையாடின. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்று டிரா செய்ய ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பாகிஸ்தான் அடித்த 2 பெனால்டி ஷூட் அவுட் ஷாட்களை அபாரமாகத் தடுத்தார்.
1998ஆம் ஆண்டு பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தன்ராஜ் பிள்ளை தலைமையில் இந்தியா தங்கம் வென்ற பிறகு இப்போது தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது.
பெனால்டி ஷூட் அவுட்:
பென்லாடி ஷூட் அவுட்டை இந்திய வீரர் குர்விந்தர் சிங் எடுத்தார். நேராக பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிற்கு போக்குக் காட்டி பந்தை கோலுக்குள் அடித்தார். இந்தியா 1-0.
பாகிஸ்தானுக்காக ஹசீம் அப்துல் கான் ஷூட் அவுட்டிற்கு வந்தார். இவர் பந்தை அடிக்க சரியாகக் கணித்த இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்துவிட்டார்.
அடுத்ததாக இந்திய அணிக்காக பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் ருபிந்தர் பால் பந்தை இம்ரான் பட்டைத் தாண்டி அபார கோலாக மாற்ற இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.
பாகிஸ்தான் அணி வீரர் வகாஸ் இயல்பாக கோல் அடிக்க இந்தியா 2-1 என்று முன்னிலையைத் தொடர்ந்தது.
அடுத்ததாக மன்பிரீத் அடித்த கோல் ஏனோ மறுக்கப்பட்டது. இந்திய வீரர்கள் நம்ப முடியாமல் எதிர்ப்பு காட்டினர். இந்த கோல் மறுக்கப்பட்டது நிச்சயம் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக பாகிஸ்தான் வீரர் உமர் புட்டா அடித்த ஷாட்டையும் ஸ்ரீஜேஷ் தடுத்தார்.
ஆனால் இந்திய வீரர்கள் 4 மற்றும் 5வது பெனால்டி ஷூட் அவுட்டை அபாரமாக கோலாக மாற்ற இந்திய வீரர்களின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. பாகிஸ்தான் கடும் ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது. இந்தியா பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்று வெற்றி பெற்றது. மொத்தமாக 5-3 என்று வென்றுள்ளது.
ஷூட் அவுட் இல்லாமலேயே இந்தியா வென்றிருக்கலாம்:
தொடக்கத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டம் தொடுத்தன. ஆட்டம் தொடங்கி 4வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலது புறத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்த் தாக்குதல் தொடுத்தனர். பந்து இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் கோலுக்குள் செலுத்தினார். இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இடது புறமாக பாய்ந்தார் ஆனால் கோலை தடுக்க முடியவில்லை.
ஆட்டத்தின் முதல் கால் பகுதி இறுதியில் வலது புறத்திலிருந்து அருமையான பாஸ் ஒன்றைப் பெற்ற இந்திய வீர்ர் சுனில் கோலுக்கு 6 அடிக்கு முன்னால் இருந்து கோலுக்கு வெளியே அடித்து வாய்ப்பை கோட்டை விட்டார்.
இரண்டாவது பாதியில் 8வது நிமிடத்தில் இந்தியா ஒரு அபாரத் தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் வீரர்களின் தடுப்பாட்டம் அபாரமாக அமைந்தது. பிறகுதான் ஆட்டத்தின் முதல் பெனால்டி வாய்ப்பை இந்தியா பெற்றது. பாகிஸ்தான் அதிருப்தி அடைந்தனர். இரண்டாவது கால் பகுதி ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் போது பெனால்டி கார்னர் ஷாட்டை எடுத்த ருபிந்தர் பால் அபாரமாக அடித்தார் ஆனால் பாகிஸ்தான் கோல் கீப்பர் அதனை அதைவிட அற்புதமாகத் தடுத்தார்.
இந்தியா சமன்:
அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து இந்திய அணியினர் லாங் பாஸில் ஈடுபட வலது புறத்திலிருந்து இந்திய வீரர் ஒருவர் அபார ஷாட் ஒன்றை அடிக்க அதனை மிக அபாரமாக இந்திய வீரர் கோதாஜித் கோல் நோக்கித் திருப்பினார் இந்தியா சமன் செய்தது.
பிறகு 3வது கால்பகுதி ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் நடுக்களத்தில் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்துக் கொண்டு சென்றார். தரம் வீர் அடித்த அற்புதமான பாஸ் கோலாக முடியவில்லை. பாகிஸ்தான் தப்பிப்பிழைத்தது.
பாகிஸ்தானுக்கு உடனே ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. முகமது இம்ரான் வலுவான ஷாட் ஒன்றை அடித்தார் ஆனால் இந்தியாவின் இரும்பு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது.
இது நடந்து 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்தியாவின் ராம்தீப் பாகிஸ்தான் கோலை நோக்கி ஒரு அற்புதமான ரிவர்ஸ் ஷாட்டை அடித்தார். ஆனால் இம்ரான் பட் அதனை ஊதினார்.
4வது மற்றும் இறுதி கால்பகுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் மின்னல் வீரர் மற்றும் அனுபவ வீரர் ஷகீல் அப்பாஸியைத் தடுக்க இந்திய வீரர்கள் அபார வியூகம் அமைத்தனர். இதனால் பாகிஸ்தான் முயற்சிகள் பயனளிக்காமல் போனது. ஆனாலும் ஆட்டத்தின் உரிய நேரம் முடிய 8 நிமிடங்களுக்கு முன்னால் வலது புறம் பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை.
மேலும் கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ருபிந்தர் பால் பந்தை நேராக பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிடம் அடித்து கோட்டை விட்டார்.
அதன் பிறகே பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் அபாரத் தடுப்புத் திறமையின் முன்பு பாகிஸ்தான் தோற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
தென் கொரியா அணிக்கு வெண்கலம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உச்சக்கட்ட மகிழ்ச்சி உற்சாகத்தில் இப்படியும் குதிக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4X400மீ. ரிலே: இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது
இன்சியானில் இன்று இந்தியாவுக்கு தங்க மழை! ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் இந்திய மகளிர் ரிலே அணி தங்கம் வென்றது.
4X400 ரிலேயில் பிரியங்கா பவார், டின்ட்டு லுகா, மந்தீப் கவுர், மசேத்திரா பூவம்மா ராஜூ ஆகிய இந்திய வீராங்கனைகள் கொண்ட அணி தங்கம் வென்று சாதனை படைத்தது.
3:28.68 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றதோடு புதிய ஆசிய விளையாட்டுச் சாதனையையும் புரிந்தனர்.
இன்சியானில் இன்று இந்தியாவுக்கு தங்க மழை! ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் இந்திய மகளிர் ரிலே அணி தங்கம் வென்றது.
4X400 ரிலேயில் பிரியங்கா பவார், டின்ட்டு லுகா, மந்தீப் கவுர், மசேத்திரா பூவம்மா ராஜூ ஆகிய இந்திய வீராங்கனைகள் கொண்ட அணி தங்கம் வென்று சாதனை படைத்தது.
3:28.68 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றதோடு புதிய ஆசிய விளையாட்டுச் சாதனையையும் புரிந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆசிய போட்டியில் 'அநீதி': கதறி அழுது பதக்கத்தைப் புறக்கணித்த சரிதா தேவி!
மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டார் நடுவர். இதனால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.
மேலும் பதக்கம் அளிக்கும் மேடையில் நின்று கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
அரையிறுதியில் ஜினா பார்க் என்ற கொரிய வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி அபாரமாக விளையாடினார். ஜினா பார்க் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையில் சரிதா தேவி வெற்றிப் பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்த்தார்.
ஆனால் நடுவர் சற்றும் எதிர்பாராத வகையில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க் வென்றதாக அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து சரிதா தேவியின் கணவர் தோய்பா சிங் கடும் கோபமடைந்து நடுவரை நோக்கி திட்டியபடியே குத்துச் சண்டை வளையத்திற்குள் நுழைய முயன்றார்.
சரிதா தேவி பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அழுதபடியே கூறும்போது, “எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது என முன் கூட்டியே முடிவெடுத்து விட்டார்கள். இப்படித்தான் தீர்ப்பு என்றால் எங்களை ஏன் விளையாட விட்டிருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம் சரிதா தேவி அநீதி முடிவை எதிர்த்து முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் நீதி கிடைக்கவில்லை. நடுவர் தீர்ப்பை மாற்ற முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இன்று பதக்க நிகழ்ச்சிக்கு கண்ணீருடன் வந்த சரிதா தேவி பதக்க மேடையில் கதறி அழுதார். வெண்கலப் பதக்கத்தை அணிய அவர் மறுத்து விட்டார். கொரிய வீராங்கனையை அழுதபடியே தழுவிய சரிதா தேவி பதக்கத்தை அவரிடம் கொடுத்தார்.
முன்னாள் ஆசிய மற்றும் உலக சாம்பியனான சரிதா தேவி மனமுடைந்த நிலையில் பதக்கமளிப்பு நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
சரிதா தேவியின் குத்துச் சண்டை ஆட்டத்திறனுக்கு முன்பாக அன்று ஜினா பார்க் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் சரிதா தேவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில் நடுவர் சற்றும் எதிர்பாராத விதமாக ஜினா பார்க் வென்றதாக அராஜக அறிவிப்பை வெளியிட அனைவரும் திகைத்துப் போயினர்.
அனைத்திற்கும் மேலாக மிகவும் வெளிப்படையாக இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டும் மேல் முறையீட்டிலும் நீதி கிடைக்கவில்லை என்பது நடப்பு ஆசிய போட்டிகள் நடத்தப்படும் நேர்மை மீது கடும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனிடையே, சரிதா தேவிக்கு ஆதரவாக இணையத்தில் ஆதரவு குரல் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் #saritadevi என்ற ஹேஷ்டேக்கில் நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டார் நடுவர். இதனால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.
மேலும் பதக்கம் அளிக்கும் மேடையில் நின்று கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
அரையிறுதியில் ஜினா பார்க் என்ற கொரிய வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி அபாரமாக விளையாடினார். ஜினா பார்க் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையில் சரிதா தேவி வெற்றிப் பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்த்தார்.
ஆனால் நடுவர் சற்றும் எதிர்பாராத வகையில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க் வென்றதாக அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து சரிதா தேவியின் கணவர் தோய்பா சிங் கடும் கோபமடைந்து நடுவரை நோக்கி திட்டியபடியே குத்துச் சண்டை வளையத்திற்குள் நுழைய முயன்றார்.
சரிதா தேவி பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அழுதபடியே கூறும்போது, “எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது என முன் கூட்டியே முடிவெடுத்து விட்டார்கள். இப்படித்தான் தீர்ப்பு என்றால் எங்களை ஏன் விளையாட விட்டிருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம் சரிதா தேவி அநீதி முடிவை எதிர்த்து முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் நீதி கிடைக்கவில்லை. நடுவர் தீர்ப்பை மாற்ற முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இன்று பதக்க நிகழ்ச்சிக்கு கண்ணீருடன் வந்த சரிதா தேவி பதக்க மேடையில் கதறி அழுதார். வெண்கலப் பதக்கத்தை அணிய அவர் மறுத்து விட்டார். கொரிய வீராங்கனையை அழுதபடியே தழுவிய சரிதா தேவி பதக்கத்தை அவரிடம் கொடுத்தார்.
முன்னாள் ஆசிய மற்றும் உலக சாம்பியனான சரிதா தேவி மனமுடைந்த நிலையில் பதக்கமளிப்பு நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
சரிதா தேவியின் குத்துச் சண்டை ஆட்டத்திறனுக்கு முன்பாக அன்று ஜினா பார்க் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் சரிதா தேவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில் நடுவர் சற்றும் எதிர்பாராத விதமாக ஜினா பார்க் வென்றதாக அராஜக அறிவிப்பை வெளியிட அனைவரும் திகைத்துப் போயினர்.
அனைத்திற்கும் மேலாக மிகவும் வெளிப்படையாக இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டும் மேல் முறையீட்டிலும் நீதி கிடைக்கவில்லை என்பது நடப்பு ஆசிய போட்டிகள் நடத்தப்படும் நேர்மை மீது கடும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனிடையே, சரிதா தேவிக்கு ஆதரவாக இணையத்தில் ஆதரவு குரல் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் #saritadevi என்ற ஹேஷ்டேக்கில் நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எந்த இந்திய அதிகாரியும் எனக்கு நடந்த அநீதியை கண்டு கொள்ளவில்லை: சரிதா தேவி
பதக்கத்தை திருப்பி அளித்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் 60கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற சரிதா தேவி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதையடுத்து பதக்கத்தைத் திருப்பி அளித்தார்.
இதனால் அவர் மீது அனைத்திந்திய குத்துச் சண்டை கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது.
இது குறித்து சரிதா தேவி கூறும்போது, “பதக்கத்தை நான் ஏற்க விரும்பவில்லை என்பதல்ல விஷயம், நான் அதை ஏற்றுக் கொண்டு பிறகுதான் கொரிய வீராங்கனையிடம் கொடுத்தேன். எனது குத்துச் சண்டை வாழ்க்கையைத் தொடர நான் இப்படி செய்வது அவசியமாகிறது இல்லையெனில் அநீதி மீண்டும் மீண்டும் மனதில் வந்து என்னை உருக்குலையச் செய்து விடும். இப்போது எனது குழந்தையை நான் அரவணைக்கப் போகிறேன்.
நான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார். அநீதி இழைக்கப்பட்டுள்ளது, ஒரு இந்திய அதிகாரி கூட எங்களை ஆறுதல் செய்ய வரவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை.
பதக்கத்தை வாங்க மறுத்தது பற்றி ஏ.ஐ.பி.ஏ அதிகாரியான டேவிட் பி.பிரான்சிஸ் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஒட்டுமொத்த காட்சியும் சரிதா தேவி மற்றும் அவரது அணியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. போட்டியில் என்ன நடந்திருந்தாலும், பதக்கத்தை வாங்க மறுத்தது வருத்தத்திற்குரியது.
ஆகவே சரிதா தேவி ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த சம்பவத்தை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். எந்த வீரரும் நியாயமான விளையாட்டு உணர்வுடன் செயல்படுவது அவசியம். அவரை யாரும் பின்பற்றி விடக்கூடாது என்று ஒரு டெக்னிக்கல் டெலிகேட்டாக நான் கூற விரும்புகிறேன்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்ப்பு தெரிவிக்கையில் ஏ.ஐ.பி.ஏ.-வை சரிதா தேவி கலந்தாலோசிக்கவில்லை. விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை. நடுவர் தீர்ப்புகளை எதிர்ப்பது விதிமீறல் என்று கூடவா அவருக்குத் தெரியாது என்று அந்த அறிக்கையில் அநீதியை விடுத்து பாதிக்கப்பட்ட சரிதா தேவி மீது புகார் சுமத்தப்பட்டுள்ளது.
பதக்கத்தை திருப்பி அளித்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் 60கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற சரிதா தேவி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதையடுத்து பதக்கத்தைத் திருப்பி அளித்தார்.
இதனால் அவர் மீது அனைத்திந்திய குத்துச் சண்டை கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது.
இது குறித்து சரிதா தேவி கூறும்போது, “பதக்கத்தை நான் ஏற்க விரும்பவில்லை என்பதல்ல விஷயம், நான் அதை ஏற்றுக் கொண்டு பிறகுதான் கொரிய வீராங்கனையிடம் கொடுத்தேன். எனது குத்துச் சண்டை வாழ்க்கையைத் தொடர நான் இப்படி செய்வது அவசியமாகிறது இல்லையெனில் அநீதி மீண்டும் மீண்டும் மனதில் வந்து என்னை உருக்குலையச் செய்து விடும். இப்போது எனது குழந்தையை நான் அரவணைக்கப் போகிறேன்.
நான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார். அநீதி இழைக்கப்பட்டுள்ளது, ஒரு இந்திய அதிகாரி கூட எங்களை ஆறுதல் செய்ய வரவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை.
பதக்கத்தை வாங்க மறுத்தது பற்றி ஏ.ஐ.பி.ஏ அதிகாரியான டேவிட் பி.பிரான்சிஸ் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஒட்டுமொத்த காட்சியும் சரிதா தேவி மற்றும் அவரது அணியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. போட்டியில் என்ன நடந்திருந்தாலும், பதக்கத்தை வாங்க மறுத்தது வருத்தத்திற்குரியது.
ஆகவே சரிதா தேவி ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த சம்பவத்தை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். எந்த வீரரும் நியாயமான விளையாட்டு உணர்வுடன் செயல்படுவது அவசியம். அவரை யாரும் பின்பற்றி விடக்கூடாது என்று ஒரு டெக்னிக்கல் டெலிகேட்டாக நான் கூற விரும்புகிறேன்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்ப்பு தெரிவிக்கையில் ஏ.ஐ.பி.ஏ.-வை சரிதா தேவி கலந்தாலோசிக்கவில்லை. விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை. நடுவர் தீர்ப்புகளை எதிர்ப்பது விதிமீறல் என்று கூடவா அவருக்குத் தெரியாது என்று அந்த அறிக்கையில் அநீதியை விடுத்து பாதிக்கப்பட்ட சரிதா தேவி மீது புகார் சுமத்தப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் வாழ்த்துகள் நம் வீரர்களுக்கு
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
வாழ்த்துக்கள் நம் வீரர்களுக்கு
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|