ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் திருமணம்

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty தமிழர் திருமணம்

Post by சிவா Sun Feb 22, 2009 8:30 am

First topic message reminder :

1. பொற்காலம்

உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.

உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.

மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts) உருவங்களாகவும் (figures) கிரேக்கர்கள் பார்த்தார்கள்.

இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales) ( கி.மு. 640-546), அறிவு ஆசான் சாக்கரட்டிஸ் (Socrates)( கி.மு. 469-399), பிளாட்டோ ( Plato)(கி.மு. 427-347)இ அரிஸ்ரோட்டல் (Aristotle)(கி.மு. 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள்.

"வரலாற்றின் தந்தை" ("Father of History") என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர் டெமொதீனஸ் (Demosthenes) (கி.மு. 384-322), "ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு" ("every illness has a natural cause") என்று கூறிய மருத்துவத்தின் தந்தை ( "Father of Medicine") என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (Hippocrates) (கி.மு. 460-377) மகதீனஸ் (Magathenes)

இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pythagoras) , இகுலிட் (Euclid)இ ஆர்கிமிடிஸ் (Archimedes) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.

எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (Alexander the Great) காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (Dark Age) னு அறிவுடமை நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது - 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.

ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் ( democracy, aristocracy, psychology) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.

மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.

தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள்.

சங்ககாலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.

சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன.

சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள் ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறு பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by சிவா Sun Feb 22, 2009 10:23 am

தமிழமுதம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவதெங்கும் காணோம்



தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

(மகாகவி பாரதியார்)



என்னுயிர் கண்ணம்மா



சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி-கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் -புடவை

பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்

நட்சத் திரங்களடீ !

(மகாகவி பாரதியார்)



தமிழோடு இசை

"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் "

(அப்பர் தேவாரம்)



கண்ணம்மா

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !

பேசும் பொற் சித்திரமே !

அள்ளி அணைத்திடவே - என் முன்னே

ஆடி வருந் தேனே !

(மகாகவி பாரதியார்)



வெண்ணிலவு நீ எனக்கு !

மேவு கடல் நானுனக்கு !

பண்ணு சுதி நீ எனக்கு !

பாட்டினிமை நானுனக்கு !

(மகாகவி பாரதியார்)

காணி நிலம் வேண்டும் -பராசக்தி

காணி நிலம் வேண்டும் -அங்குத்

தூணில் அழகியதாய் - நனமாடங்கள்

துய்ய நிறத்தினதாய்-அந்தக்

காணிநிலத்திடையே - ஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும்- அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று இளநீரும்



பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள்

கொண்டுதர வேணும் !



(மகாகவி பாரதியார்)



எங்கள் வாழ்வு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by சிவா Sun Feb 22, 2009 10:26 am

மனோன்மணியத் தமிழ்த் தெய்வ வணக்கம்



நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்

தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துக் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும்

உன்னுதரத் உதித்தெழுந்தே யொன்றுபல ஆய்விடினும்

ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்;

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by சிவா Sun Feb 22, 2009 10:28 am

ஆயக கய முறை

ஆரியர்களுடைய கற்பியல், தொல்காப்பியர் காலத்தில் எப்படி

இருந்ததென்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கப் போனால், ஒரு பெண்ணை

அய்ந்து பேர் கூடி வருஷத்திற்கொருவராய்ப் புணர்ந்து ஆளுக்கொருவராய்ப்

புணர்ந்து ஆளுக்கொரு பிள்ளையாகப் பெறுவதும், அதற்கு இளம்

பஞ்சபாண்டவர்களென்று பெயரிட்டு அழைப்பதும் அதிலும் திருப்தி

இல்லாவிட்டால், மற்றொரு கணவன் பேரிலும் இச்சை கொள்வதுதான்

ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. மச்சகந்தி என்னும் மீன்

வலைச்சியை அவளின் கன்னிப் பருவத்திலேயே பராசரரென்ற மகரிஷி ஆற்றில்

ஓடம் விட்டுக்கொண்டு போன சமயத்தில் அந்த நடு ஆற்றிலேயே ஓடத்தில்

வைத்துக்கொண்டு அவளுடன் பலவந்தப் புணர்ச்சி செய்து உடனே வியாச

பகவானைப் பெற்றுவிட்டதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து

வந்தது. குந்திதேவியைச் சூரியன், வாயுதேவன், இந்திரன், எமன்

முதலியவர்களெல்லாம் அம்மாதைக் கன்னிப் பருவத்தில் புணர்ந்து கர்ணன் ,
தருமன், வீமன், அர்ச்சுனன் முதலிய கீர்த்தி வாய்ந்த புத்திரர்களையும்,

பாண்டுவின் மற்றொரு மனைவியாகிய மாத்திரியை அ°வினி தேவர்கள்

புணர்ந்து நகுலன், சகாதேவன் முதலிய புத்திரர்களைப் பெற்றுக்கொள்வதுதான்

ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. அம்பா, அம்பாலிகை என்ற

இரண்டு விதவைப் பெண்களைச் சதுர்வேத சம்பன்னராகிய வியாச பகவானே

புணர்ந்து திருதராட்டினன், பாண்டு முதலிய பிள்ளைகளைப் பெற்றும்,

வெள்ளாட்டியைப் புணர்ந்து விதுரனைப் பெற்றும் கௌரவ குலத்தைக்

கௌரவப்படுத்தியதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது.

பிரத்தியேகமாய்ப் பள்ளியறை ஒன்றிருக்க அதை விடுத்து காமவெறி கொண்ட

தருமன் ஆயுத சாலைக்குள் புகுந்து கொண்டு பட்டப்பகலில் துரோபதியுடன்

கூடிப் புணர்ச்சி செய்துகொண்டிருக்கவும் அதையறியாத அர்ச்சுனன் இவர்கள்

செய்கையைப் பார்த்துவிட்டுப் பாப கர்மத்தைத் தொலைக்கத் தீர்த்த யாத்திரை

போய் அல்லிராணியைத் திருட்டுத் தாலி கட்டிவிட்டு ஓடிவிடுவதும்

ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. துரோணாச்சாரியார்

மனைவி வாசுகியம்மாவை நிர்வாணமாக வந்து அமுது படைக்கச் சொல்லி

அவள் பெண் குறியின்மீது பார்வையைச் செலுத்தித் தனது இந்திரியத்தை

அந்தச் சோற்றில் ஒழுகவிட்டு, அந்தச் சோற்றைக் குதிரைக்குக் கொடுத்து

அசுவத்தாமனைப் பெற்றுக் கொள்வதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக

இருந்து வந்தது. அநுசூயை என்னும் பெண்மணியிடத்தில், மும்மூர்த்திகளும்

போய் நிர்வாண பிச்சைக் கேட்கவும், அதற்கு அந்தம்மாள் மும்மூர்த்திகளையும்

குழந்தைகளாகச் சிருஷ்டித்து, மூலையில் தள்ளி வைத்ததுதான் ஆரியர்களின்

கற்பியல் முறையாகும். நாரதனைப் பெண் ரூபமாக்கி, கிருஷ்ணபரமாத்துமா

அவருடன் புணர்ந்து அறுபது பிள்ளைகளைப் பெற்று,

அப்பிள்ளைகளுக்கெல்லாம் முறையே பிரபவ, விபவ, சுக்கில, பிரமாதூத முதலிய

அறுபது வருடங்களின் பெயரையும் இட்டழைப்பதுதான் ஆரியர்களின்

கற்பியல் முறையாகும்.



நன்றி

நக்கீரன், கனடா!

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 2:21 pm

அருமையான கட்டுரை சிவா...உங்களை மனமாரப் பாராட்டுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by கேசவன் Thu Nov 24, 2011 3:07 pm

அருமைக [You must be registered and logged in to see this image.]


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 3:07 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by சிவா Thu Sep 18, 2014 2:09 am

மீண்டும் உறவுகளுக்காக!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by ksksvt Sun Dec 28, 2014 8:22 am

அருமையான படைப்பு.  வாழ்த்துக்கள்
தமிழர் திருமணம் - Page 4 3838410834
ksksvt
ksksvt
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/08/2014

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:30 am

நன்றி தகவல்களை தந்தமைக்கு


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

தமிழர் திருமணம் - Page 4 Empty Re: தமிழர் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum