ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:17 pm

* குழந்தை வளர்ப்பில் பொறுமை மிகவும் அவசியம். நல்லவற்றை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* உன்னையே நீ அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கோபத்திற்கு ஆளாவது கூடாது.
* கொடுமைக்கு ஆளாகும் போது, நியாயம் உன் பக்கம் இருந்தாலும் கூட பொறுமையை இழந்து விடாதே.
* கள்ளம் கபடம் இல்லாத மனதுடன் செய்யும் வழிபாட்டை தெய்வம் ஏற்க மறுப்பதில்லை.
* மனிதனின் உள்ளம் முழுமையும் தெய்வ வடிவம் ஏற்கட்டும். அதனால், வாழ்வு புனிதமாகட்டும்.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:18 pm

மலர் போல் மலர்ந்திரு!

* உன் தகுதியறிந்தே கடவுள் அருள்புரிகிறார். அதனால், முதலில் உன்னை தகுதிப்படுத்திக் கொள்.
* சொல்வது யாருக்கும் சுலபமான விஷயம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமானது.
* அறிவைச் செம்மைப்படுத்து. அதே சமயத்தில் பக்தியையும் செழிப்படையச் செய்.
* எப்போதும் நேர்மையான சூழலில் இருக்கும் உறுதிப்பாட்டுடன் மனநிலையை வைத்துக் கொள்.
* புத்தம்புது மலரைப் போல இரு. வெளிப்படையான அன்புடன் இருக்க முயற்சி செய்.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:19 pm

முயற்சியைக் கைவிடாதீர்

* சில பழக்கங்களை ஒரேநாளில் கைவிடுவது கடினம். ஆனால், தளராத உறுதி இருந்தால் அதை சரி செய்து கொள்ள முடியும்.
* கடவுள் அளிக்க நினைப்பதை பறிக்கும் சக்தி உலகில் யாருக்கும் கிடையாது.
* ஆன்மிகப்பாதையில் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடியும் போராடித் தான் பெற முடியும்.
* ஒரு செயலை செய்து முடிப்பது கஷ்டம் என்பதற்காக முயற்சியைக் கைவிடுவது கூடாது.
* புறம் பேசுவதால் மனிதன் தெய்வத்தை விட்டு வெகுதொலைவிற்குச் சென்று விடுகிறான்.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:20 pm

[right]வெற்றி! வெற்றி! வெற்றி!

* சகிப்புத் தன்மையே உனது வாழ்வின் குறிக்கோளாகட்டும். மன அமைதியை ஒருபோதும் இழக்க சம்மதிக்காதே.
* சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் சிறந்த சாதனை நிகழ்த்த முடியாது.
* திட சித்தத்தோடு இரு. நம்பிக்கையை கைவிடாதே. மனத்தூய்மையுடன் செயலாற்று. வெற்றி உன்னுடையதாகி விடும்.
* யாரிடமும் வம்பளக்காதே. இது உன்னை கடவுளிடம் இருந்து வெகு தொலைவில் நிறுத்தி விடும்.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாதே. உன் கடமையில் மட்டும் கருத்தைச் செலுத்து.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:20 pm

கற்றுக் கொண்டேயிரு!

* கடவுள் ஒருவரால் மட்டுமே உனக்கு பரிபூரணமான பாதுகாப்பை வழங்க முடியும்.
* ஒரு மனிதனின் மதிப்பு, அவனுடைய மனதின் கவன சக்தியின் தன்மையைப் பொறுத்தே இருக்கிறது.
* நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து.
* ஒரு போதும் கோபம் கொள்ளாதே. பொறுமையும், அமைதியும் உன் இயல்பாகட்டும்.
* முன்னேறுவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறாய். அதனால், எப்போதும் கற்றுக் கொண்டே இரு.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:21 pm

சிந்தித்துச் செயல்படு!

* உனக்குத் தேவையான அனைத்தும் எப்போதும் கடவுளிடம் இருக்கிறது.
* ஆபத்தான சமயத்தில் அமைதி இழப்பது கூடாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படு.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதில் முழுமையான கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
* பிறருடன் சண்டை சச்சரவில் ஈடுபடாதே. அது கடவுளின் பணிக்கு எதிரான போராகும்.
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசக் கற்றுக் கொள்.

- ஸ்ரீ அன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:21 pm

பலன் கிடைப்பது உறுதி

* மன அமைதியை அக்கறையுடன் பாதுகாத்து கொள்ளுங்கள். அமைதியின் ஆற்றல் எல்லையற்ற வலிமை கொண்டது.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டாம். கடமையில் மட்டும் கருத்தைச் செலுத்துங்கள்.
* பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை சிந்திப்பவர்கள் நேரத்தை வீணில் கழிக்கிறார்கள்.
* கடவுள் துணை என்றும் உண்டு. தெய்வத்திடம் செய்யும் முறையீடு நிச்சயம் ஒருநாள் பலன் அளிக்கும்.
* சிறிய லட்சியத்தில் வெற்றி அடைவதை விட, பெரிய லட்சியத்திற்காக முயன்று தோல்வி அடைவது மேல்.

- ஸ்ரீ அன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:22 pm

வெற்றி நிச்சயம்

* ஒவ்வொரு நாளும் அன்று நடந்தவற்றை மனதில் அசை போடுங்கள்.
* தவறை மீண்டும் செய்யாமல் இருக்க மனதில் உறுதி எடுங்கள்.
* முதலில் உன்னை அடக்கி ஆள கற்றுக்கொள். வாய்ப்பை நழுவ விடாதே.
* விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபட்டு வந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே அவற்றை பிறருக்கு உன்னால் வழங்க முடியும்.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:23 pm

எல்லாம் நன்மைக்கே

* பயம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது. எதையும் நேருக்கு நேர் சந்திக்க துணிந்து விட்டால் பயம் காணாமல் ஓடி விடும்.
* மனதிற்குள் இருக்கும் குறை, அருவருக்கத் தக்க விஷயம் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பார்க்க பழகு. அப்படியானால் அதை சீர்படுத்த முடியும்.
* மனதிற்குப் போதுமான வேலை தராவிட்டால் சஞ்சலப்படத் தொடங்கிவிடும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது சிறந்த பணி.
* தன்வசமில்லாத நேரத்தில் தான் ஒருவனுக்கு கோபம் உண்டாகிறது. உன்னையே உன்னால் அடக்க முடியாவிட்டால் மற்றொருவராலும் அடக்க முடியாது.
* பிரச்னையைக் கண்டு வருந்தாதீர்கள். "எல்லாம் நன்மைக்கே' என்ற முழுநம்பிக்கை எப்போதும் மனதில் இருக்கட்டும். இந்த எண்ணம் கவசம் போல பாதுகாப்பு தரும்.
- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by M.M.SENTHIL Fri Aug 01, 2014 4:24 pm

வெற்றி அடைவது எப்படி?

* நீ விரும்பியதையெல்லாம் கடவுள்
தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு
உன்னைப் பாத்திரமாக்கிக் கொள்.
* முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை உணர முடியும்.
* "நீங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம்
உறுதிப்பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை
எப்போதுமே நேர்மையாக இருக்கச் செய்யும்படியான சூழ்நிலைகளை கடவுளே அமைத்துத்தருவார்.
* தெய்வ சக்தியை, உன்னுள் பிரதிஷ்டை செய்ய
விரும்பினால், நீ உடல் எனும் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* உங்கள் கரங்களை எதிரிகளிடம் நீட்டாதீர்கள். அவர்கள் முன் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்ளுங்கள்.
நேர்மைக்கும், நியாயத்திற்கும், அடக்கத்திற்கும்,
வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குங்கள்.
அப்போது வெற்றி உங்கள் அருகில் வரும்.

- ஸ்ரீஅன்னை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum