Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்பு!
+2
M.M.SENTHIL
krishnaamma
6 posters
Page 1 of 1
உழைப்பு!
வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, புதிதாக கட்டப்பட்டிருந்த அந்த சிறிய கடையில், மளிகைச் சாமான்களும், மற்ற பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைக்கு வரிசையாக ஆட்கள் தொடர்ந்து வர, உட்கார நேரமில்லாமல் வியாபாரத்தைக் கவனித்து கொண்டிருந்தார் சபேசன்.
''என்ன சபேசா... எப்படி இருக்கே,'' என்று, கூட்டத்தின் இடையே நின்றிருந்த நண்பர் மகாலிங்கம் கேட்டார்.
''அட மகாலிங்கமா... வாப்பா வா... நல்லா இருக்கியா?''
''எனக்கென்ன குறைச்சல் சவுக்கியமாத்தான் இருக்கேன். நேரத்துக்கு மருமக கையால மணக்க மணக்க சாப்பாடு, நல்ல தூக்கம், நாலு நாளைக்கு ஒரு தடவ, இப்படி நண்பர்களப் பாக்கிறதுன்னு, 'ரிடையர்ட் லைப்' நல்லா போயிட்டிருக்கு,'' என்றார்.
மகாலிங்கமும், சபேசனும் ஒன்றாக வேலை பார்த்து, இரண்டு மாதத்திற்கு முன், பணி ஒய்வு பெற்றனர். இவர்களின் மகன்களும் கூட நண்பர்களாக இருந்தனர்.
''அப்புறம் என்ன விசேஷம் மகாலிங்கம்... கூல்டிரிங்ஸ் சாப்பிடறியா?''
''வேண்டாம்ப்பா. ஆமாம் நீ ஏன் டல்லா இருக்கே? ரிடையர்ட் ஆகியாச்சுன்னு தான் பேரு. ஓய்வு பெற்ற மறுநாளே, இந்தக் கடைய கட்டி உன்கிட்ட பொறுப்ப கொடுத்திட்டான் உன் மகன் சரவணன். நான் கூட அவன்கிட்டே சொன்னேன்... 'ஏன் இந்த வயசான காலத்தில அப்பாவ வேலை வாங்கற... அவரை வீட்டில நிம்மதியா இருக்க வைக்கக் கூடாதா'ன்னு கேட்டேன். அவன் காதிலேயே வாங்கல. நீ இன்னும் உழைக்க வேண்டியிருக்குறத நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்றார் மகாலிங்கம்.
''வீட்டு வாசல்ல தானே கடை இருக்கு. விக்ற விலைவாசியில இந்த வருமானம் குடும்பத்துக்கு உதவியா இருக்கும்ல...'' என்றார் சபேசன்.
''நீ என்னதான் சொன்னாலும் என் மனசு கேட்கல... வேலையிலிருந்து ஓய்வு பெற்ற உன்னை, உன் மகன் இன்னும் வேலை வாங்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் அதிர்ஷ்டம் பண்ணினவன்; என் மகன் என்னை நல்லாவே பாத்துக்கிறான். சரிப்பா நீ வியாபாரத்த கவனி நான் கிளம்பறேன்.''
''உள்ளே வாப்பா... என் சம்சாரத்துக்கிட்டே சொல்லி காபி தரச் சொல்றேன்.''
''இருக்கட்டும்ப்பா இன்னொரு நாள் சாவகாசமாக வரேன்,'' என்று கூறி, விடைபெற்றார் மகாலிங்கம்.
''மாமா... சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். நீங்களும், அத்தையும் சாப்பிடுங்க; நான் கடைய பாத்துக்கிறேன்,"என்று மருமகள் கூறவும், சபேசன் வீட்டிற்குள் வந்தார்.
யோசனையாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்த சபேசனைப் பார்த்து, அவர் மனைவி, ''சாதத்தை ஏன் அளையறீங்க... குழம்பு இன்னும் கொஞ்சம் ஊத்தவா?'' என்று கேட்டாள்.
''வேண்டாம்.''
''ஏன்... என்னவோ போல் இருக்கீங்க... உடம்புக்கு முடியலையா?'' என்று கேட்டாள்.
''உடம்பு நல்லாதான் இருக்கு; மனசுதான் சரியில்ல.''
''ஏன். என்னாச்சு?''
''மகாலிங்கம் வந்திருந்தான்...''
''ஏன் அவர் என்ன சொன்னாரு?''
''ரிடையர்ட் ஆன பிறகு, வீட்டில் ஓய்வா, நிம்மதியா இருக்கிறதப் பத்தி சொன்னான். என்னை மாதிரியா... ஆபீசுக்கு போற மாதிரி, காலையில் குளிச்சு, சாப்பிட்டு, கடையைத் திறந்து வியாபாரத்தக் கவனிக்க வேண்டியிருக்கு. என் புள்ள என்னை ஓய்வெடுக்க கூட விடலயே... இன்னும் உழைச்சுட்டுதானே இருக்கேன்,'' என்றார் சலிப்புடன்.
''இதென்னங்க பெரிய வேலை; வீட்டு காம்பவுண்டுக்குள் கடை. வேணுங்கிற சாமானை நம்ம மகனே வாங்கி வந்து போடறான். மத்தியான நேரம் மருமகள் கடையப் பாத்துக்கிறா. அந்த நேரத்துல நீங்க கொஞ்சம் நேரம் ஒய்வு எடுக்கிறீங்க. ஏதோ நம்மால நம்ப பிள்ளைக்கு உதவியாக இருக்க முடியுதேன்னு சந்தோஷப்படுங்க.''
''ஓய்வெடுக்கிற வயசு வந்தாச்சுன்னுதானே, கவர்மென்டே ரிட்டயர்மென்ட் கொடுக்கிறான்; அதுக்குப் பிறகும் உழைக்கச் சொன்னா எப்படி? இந்த விஷயத்துல மகாலிங்கம் தான் கொடுத்து வச்சவன்,'' என்றார் பெருமூச்சுடன்.
அன்று காலை பேரனுக்குப் பிறந்த நாள் என்று, எல்லாரும் கோவிலுக்கு கிளம்பினர்.
''அப்பா மணி ஒன்பதாச்சு... கடையைத் திறக்கலயா?''
''இல்லப்பா... இன்னைக்கு உடம்பு முடியல.''
''சரி ரெஸ்ட் எடுங்க,"என்று கூறியவனை, மொபைல் போன் அழைத்தது. எடுத்துப் பேசியவன், ''என்ன சொல்றே... அப்பாவுக்கு என்னாச்சு... எந்த ஹாஸ்பிடல்? நான் உடனே வரேன்,'' என்றான், 'படபட'ப்புடன்.
''என்ன சரவணா யாருக்கு உடம்பு முடியல?'' என்று கோட்டார் சபேசன்.
''மகாலிங்கம் மாமாவுக்குத்தான்ப்பா... திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாராம்; ஆஸ்பத்திரியில இருக்காரு. நான் போய் பாத்துட்டு வரேன்.''
''நானும் வரேன்பா.''
''இல்லப்பா நீங்க ஒய்வு எடுங்க. பயப்படுற மாதிரி ஒண்ணும் இருக்காது; நான் போய் பாத்துட்டு வரேன். நாளைக்கு உங்கள அழைச்சுட்டு போறேன்.''
அன்று மாலை சரவணனுடன், மகாலிங்கத்தின் மகன் கோபால் வீட்டிற்கு வந்தான்.
''என்னப்பா அப்பாவுக்கு எப்படி இருக்கு?'' என்று கேட்டார் சபேசன்.
''பரவாயில்ல மாமா. இன்னும் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கிற மாதிரி இருக்கும். சாப்பாடு விஷயத்தில, கண்ட்ரோல் இல்ல அதனால, ஷுகர் அதிகமாயிருச்சாம்.''
அவசர தேவைக்கு சரவணனிடம் பணம் வாங்கிக் கொண்டு கிளம்பினான் கோபால்.
இரவு சாப்பாடு முடிந்து சபேசன், மனைவியுடன் ஹாலில் அமர்ந்திருக்க, உள்ளே சாப்பிட்டபடி மகனும், மருமகளும் பேசுவது அவர்கள் காதில் விழுந்தது.
''மகாலிங்கம் மாமா நல்லாத்தானே இருந்தாரு. திடீர்ன்னு இப்படி முடியாம வந்துடுச்சே. வயசானாலே எப்ப என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது போலிருக்கு,'' என்றாள் சரவணின் மனைவி.
''அப்படிச் சொல்லாதே. அவருக்கு ஏற்கனவே ஷுகர், பிரஷர் எல்லாம் இருக்கு. உடம்பைக் கவனிக்காம விட்டுட்டாரு; ஆபீசுக்கு போன வரைக்கும் உடம்புக்கு, உழைப்பு இருந்துச்சு. 'ரிட்டயர்ட்' ஆன பிறகு, நல்ல சாப்பாடு, தூக்கம்ன்னு உடம்பக் கவனிக்கல. அதான் ஷுகர் கூடிப் போய் உடம்புக்கு முடியாம போயிடுச்சு.''
''என்னங்க இப்படிச் சொல்றீங்க. அதுக்காக கடைசி வரை உழைச்சுக்கிட்டேவா இருக்க முடியும்?''
''நான் சொல்ல வர்றத சரியா புரிஞ்சுக்க. நம்ப உடம்ப நல்லா வச்சுக்கணும்ன்னா, உடம்புக்கு தகுந்த உழைப்பு இருக்கணும். அப்பாவ எடுத்துக்க... எப்பவுமே சுறுசுறுப்பா இருப்பார். இந்த சுறுசுறுப்பு தொடர்ந்து இருக்கணும்ன்னு தான் ஒய்வு பெற்ற பிறகும், அவருக்கு கடை வச்சுக் கொடுத்தேன். இல்லாட்டி அவரும் என்ன செய்யறதுன்னு தெரியாம சும்மாதான் இருப்பாரு. உடம்பின் இயக்கம் குறைஞ்சா, சோம்பேறித்தனம் அதிகமாயிடும்; தேவையில்லாத வியாதிகள் வந்து சேரும்,'' என்றான்.
''அப்ப நீங்க கடை ஆரம்பிச்சதே உங்கப்பாவுக்காகத்தான்னு சொல்லுங்க.''
''பின்னே இல்லையா... என் அப்பா எப்பவும் சுறுசுறுப்பா, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றான் சரவணன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சபேசனுக்கு, தன் மேல் மகனுக்கு இருக்கும் கரிசனம் புரிந்து நெகிழ்ந்தவராக தன் மனைவியிடம், ''சரி, நேரமாச்சு படுப்போம்; இன்னக்கி தான் கடைய திறக்க முடியாமப் போச்சு. நாளைக்கு சீக்கிரம் எழுந்து வியாபாரத்தைப் பாக்கணும்,'' என்றார்.
பரிமளா ராஜேந்திரன்
''என்ன சபேசா... எப்படி இருக்கே,'' என்று, கூட்டத்தின் இடையே நின்றிருந்த நண்பர் மகாலிங்கம் கேட்டார்.
''அட மகாலிங்கமா... வாப்பா வா... நல்லா இருக்கியா?''
''எனக்கென்ன குறைச்சல் சவுக்கியமாத்தான் இருக்கேன். நேரத்துக்கு மருமக கையால மணக்க மணக்க சாப்பாடு, நல்ல தூக்கம், நாலு நாளைக்கு ஒரு தடவ, இப்படி நண்பர்களப் பாக்கிறதுன்னு, 'ரிடையர்ட் லைப்' நல்லா போயிட்டிருக்கு,'' என்றார்.
மகாலிங்கமும், சபேசனும் ஒன்றாக வேலை பார்த்து, இரண்டு மாதத்திற்கு முன், பணி ஒய்வு பெற்றனர். இவர்களின் மகன்களும் கூட நண்பர்களாக இருந்தனர்.
''அப்புறம் என்ன விசேஷம் மகாலிங்கம்... கூல்டிரிங்ஸ் சாப்பிடறியா?''
''வேண்டாம்ப்பா. ஆமாம் நீ ஏன் டல்லா இருக்கே? ரிடையர்ட் ஆகியாச்சுன்னு தான் பேரு. ஓய்வு பெற்ற மறுநாளே, இந்தக் கடைய கட்டி உன்கிட்ட பொறுப்ப கொடுத்திட்டான் உன் மகன் சரவணன். நான் கூட அவன்கிட்டே சொன்னேன்... 'ஏன் இந்த வயசான காலத்தில அப்பாவ வேலை வாங்கற... அவரை வீட்டில நிம்மதியா இருக்க வைக்கக் கூடாதா'ன்னு கேட்டேன். அவன் காதிலேயே வாங்கல. நீ இன்னும் உழைக்க வேண்டியிருக்குறத நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்றார் மகாலிங்கம்.
''வீட்டு வாசல்ல தானே கடை இருக்கு. விக்ற விலைவாசியில இந்த வருமானம் குடும்பத்துக்கு உதவியா இருக்கும்ல...'' என்றார் சபேசன்.
''நீ என்னதான் சொன்னாலும் என் மனசு கேட்கல... வேலையிலிருந்து ஓய்வு பெற்ற உன்னை, உன் மகன் இன்னும் வேலை வாங்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் அதிர்ஷ்டம் பண்ணினவன்; என் மகன் என்னை நல்லாவே பாத்துக்கிறான். சரிப்பா நீ வியாபாரத்த கவனி நான் கிளம்பறேன்.''
''உள்ளே வாப்பா... என் சம்சாரத்துக்கிட்டே சொல்லி காபி தரச் சொல்றேன்.''
''இருக்கட்டும்ப்பா இன்னொரு நாள் சாவகாசமாக வரேன்,'' என்று கூறி, விடைபெற்றார் மகாலிங்கம்.
''மாமா... சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். நீங்களும், அத்தையும் சாப்பிடுங்க; நான் கடைய பாத்துக்கிறேன்,"என்று மருமகள் கூறவும், சபேசன் வீட்டிற்குள் வந்தார்.
யோசனையாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்த சபேசனைப் பார்த்து, அவர் மனைவி, ''சாதத்தை ஏன் அளையறீங்க... குழம்பு இன்னும் கொஞ்சம் ஊத்தவா?'' என்று கேட்டாள்.
''வேண்டாம்.''
''ஏன்... என்னவோ போல் இருக்கீங்க... உடம்புக்கு முடியலையா?'' என்று கேட்டாள்.
''உடம்பு நல்லாதான் இருக்கு; மனசுதான் சரியில்ல.''
''ஏன். என்னாச்சு?''
''மகாலிங்கம் வந்திருந்தான்...''
''ஏன் அவர் என்ன சொன்னாரு?''
''ரிடையர்ட் ஆன பிறகு, வீட்டில் ஓய்வா, நிம்மதியா இருக்கிறதப் பத்தி சொன்னான். என்னை மாதிரியா... ஆபீசுக்கு போற மாதிரி, காலையில் குளிச்சு, சாப்பிட்டு, கடையைத் திறந்து வியாபாரத்தக் கவனிக்க வேண்டியிருக்கு. என் புள்ள என்னை ஓய்வெடுக்க கூட விடலயே... இன்னும் உழைச்சுட்டுதானே இருக்கேன்,'' என்றார் சலிப்புடன்.
''இதென்னங்க பெரிய வேலை; வீட்டு காம்பவுண்டுக்குள் கடை. வேணுங்கிற சாமானை நம்ம மகனே வாங்கி வந்து போடறான். மத்தியான நேரம் மருமகள் கடையப் பாத்துக்கிறா. அந்த நேரத்துல நீங்க கொஞ்சம் நேரம் ஒய்வு எடுக்கிறீங்க. ஏதோ நம்மால நம்ப பிள்ளைக்கு உதவியாக இருக்க முடியுதேன்னு சந்தோஷப்படுங்க.''
''ஓய்வெடுக்கிற வயசு வந்தாச்சுன்னுதானே, கவர்மென்டே ரிட்டயர்மென்ட் கொடுக்கிறான்; அதுக்குப் பிறகும் உழைக்கச் சொன்னா எப்படி? இந்த விஷயத்துல மகாலிங்கம் தான் கொடுத்து வச்சவன்,'' என்றார் பெருமூச்சுடன்.
அன்று காலை பேரனுக்குப் பிறந்த நாள் என்று, எல்லாரும் கோவிலுக்கு கிளம்பினர்.
''அப்பா மணி ஒன்பதாச்சு... கடையைத் திறக்கலயா?''
''இல்லப்பா... இன்னைக்கு உடம்பு முடியல.''
''சரி ரெஸ்ட் எடுங்க,"என்று கூறியவனை, மொபைல் போன் அழைத்தது. எடுத்துப் பேசியவன், ''என்ன சொல்றே... அப்பாவுக்கு என்னாச்சு... எந்த ஹாஸ்பிடல்? நான் உடனே வரேன்,'' என்றான், 'படபட'ப்புடன்.
''என்ன சரவணா யாருக்கு உடம்பு முடியல?'' என்று கோட்டார் சபேசன்.
''மகாலிங்கம் மாமாவுக்குத்தான்ப்பா... திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாராம்; ஆஸ்பத்திரியில இருக்காரு. நான் போய் பாத்துட்டு வரேன்.''
''நானும் வரேன்பா.''
''இல்லப்பா நீங்க ஒய்வு எடுங்க. பயப்படுற மாதிரி ஒண்ணும் இருக்காது; நான் போய் பாத்துட்டு வரேன். நாளைக்கு உங்கள அழைச்சுட்டு போறேன்.''
அன்று மாலை சரவணனுடன், மகாலிங்கத்தின் மகன் கோபால் வீட்டிற்கு வந்தான்.
''என்னப்பா அப்பாவுக்கு எப்படி இருக்கு?'' என்று கேட்டார் சபேசன்.
''பரவாயில்ல மாமா. இன்னும் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கிற மாதிரி இருக்கும். சாப்பாடு விஷயத்தில, கண்ட்ரோல் இல்ல அதனால, ஷுகர் அதிகமாயிருச்சாம்.''
அவசர தேவைக்கு சரவணனிடம் பணம் வாங்கிக் கொண்டு கிளம்பினான் கோபால்.
இரவு சாப்பாடு முடிந்து சபேசன், மனைவியுடன் ஹாலில் அமர்ந்திருக்க, உள்ளே சாப்பிட்டபடி மகனும், மருமகளும் பேசுவது அவர்கள் காதில் விழுந்தது.
''மகாலிங்கம் மாமா நல்லாத்தானே இருந்தாரு. திடீர்ன்னு இப்படி முடியாம வந்துடுச்சே. வயசானாலே எப்ப என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது போலிருக்கு,'' என்றாள் சரவணின் மனைவி.
''அப்படிச் சொல்லாதே. அவருக்கு ஏற்கனவே ஷுகர், பிரஷர் எல்லாம் இருக்கு. உடம்பைக் கவனிக்காம விட்டுட்டாரு; ஆபீசுக்கு போன வரைக்கும் உடம்புக்கு, உழைப்பு இருந்துச்சு. 'ரிட்டயர்ட்' ஆன பிறகு, நல்ல சாப்பாடு, தூக்கம்ன்னு உடம்பக் கவனிக்கல. அதான் ஷுகர் கூடிப் போய் உடம்புக்கு முடியாம போயிடுச்சு.''
''என்னங்க இப்படிச் சொல்றீங்க. அதுக்காக கடைசி வரை உழைச்சுக்கிட்டேவா இருக்க முடியும்?''
''நான் சொல்ல வர்றத சரியா புரிஞ்சுக்க. நம்ப உடம்ப நல்லா வச்சுக்கணும்ன்னா, உடம்புக்கு தகுந்த உழைப்பு இருக்கணும். அப்பாவ எடுத்துக்க... எப்பவுமே சுறுசுறுப்பா இருப்பார். இந்த சுறுசுறுப்பு தொடர்ந்து இருக்கணும்ன்னு தான் ஒய்வு பெற்ற பிறகும், அவருக்கு கடை வச்சுக் கொடுத்தேன். இல்லாட்டி அவரும் என்ன செய்யறதுன்னு தெரியாம சும்மாதான் இருப்பாரு. உடம்பின் இயக்கம் குறைஞ்சா, சோம்பேறித்தனம் அதிகமாயிடும்; தேவையில்லாத வியாதிகள் வந்து சேரும்,'' என்றான்.
''அப்ப நீங்க கடை ஆரம்பிச்சதே உங்கப்பாவுக்காகத்தான்னு சொல்லுங்க.''
''பின்னே இல்லையா... என் அப்பா எப்பவும் சுறுசுறுப்பா, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றான் சரவணன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சபேசனுக்கு, தன் மேல் மகனுக்கு இருக்கும் கரிசனம் புரிந்து நெகிழ்ந்தவராக தன் மனைவியிடம், ''சரி, நேரமாச்சு படுப்போம்; இன்னக்கி தான் கடைய திறக்க முடியாமப் போச்சு. நாளைக்கு சீக்கிரம் எழுந்து வியாபாரத்தைப் பாக்கணும்,'' என்றார்.
பரிமளா ராஜேந்திரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உழைப்பு!
நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உழைப்பு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|